துளிர்த்து எழுதலின் சுகம்
சொல்லித் தெரிவதில்லை.
பனியில் நனைந்து
பசுமையில் குளிர்ந்து
பசளையின் செறிநிலத்தில்
முளைவிடுதலில்
ஆச்சரியம் ஏதுமில்லை.
துளிர்த்து எழுதலின் சுகம்
அங்கு இருக்கவே செய்கிறது.
அங்கு இருக்கவே செய்கிறது.
உயிரூட்டும்
மழைத்துளியில்
தரிசு நிலத்திலும்
உயிர் பிறக்கவே
செய்யும்.
செய்யும்.
ஆண்டவன்
இட்ட பிச்சை அது!
தகிக்கும் சூரிய
வெம்மையில்
தீய்ந்து
வரண்ட மண்ணில்
துலா ஓடிப் பாய்ந்த
சிலதுளி நீரிலும்
விதைகள் முளைக்கவே
செய்யும்
மனித உழைப்பின்
மகிமை அது!
ஹிரோசிமாவின்
நச்சுக் குண்டுகள்
எரித்தழித்த
மண்ணிலும் கூட
உயிரின் ஓலம்
கேட்டதில்லையா?
ஓலங்கள் அடங்கி
இன்று
ஆனந்த கீதங்களும்
பிறந்தனவே!
நம்பிக்கையும்
உறுதியும்,உழைப்பும்
திடசங்கற்பமும்
இருந்தால்
மனித நிண
வெட்கை
அனலாய் வீசும்
சுடுகாட்டிலும்
துளிர் முளைக்கும்.
துளிர்த்து எழுதலின் சுகம்
நிஜமாய் அங்கிருக்கும்.
சுயமான சுகம்
வெற்றியின் சுகம்
அது! வேகத்தின் சுகம்
வீரத்தின் சுகம்
சுட்டெரிக்கும்
அழிவிலிருந்து
மீண்டெழும் சுகம்
சொல்லித் தெரிவதில்லை.
சொல்லிப் புரியப்போவதும்
இல்லை.
– அழகு சந்தோஷ்-
>இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்…
>ஹிரோசிமாவின்நச்சுக் குண்டுகள்எரித்தழித்தமண்ணிலும் கூடஉயிரின் ஓலம்கேட்டதில்லையா?ஓலங்கள் அடங்கிஇன்றுஆனந்த கீதங்களும்பிறந்தனவே!அந்த நம்பிக்கைதான் இன்னும் வாழவைக்கிறது எங்களை..எனது மனம் நிறைந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்…
>டொக்டர் ஐயா,ஆங்கிலப் புத்தாண்டுக்கான இனிய வாழ்த்து(க்)கள்.நம்பிக்கைதான் வாழ்க்கை.
>டொக்டர் ஐயா,ஆங்கிலப் புத்தாண்டுக்கான இனிய வாழ்த்து(க்)கள்.நம்பிக்கைதான் வாழ்க்கை.
>ஜீவன் தங்கராஜா. வாழ்த்துக்கு நன்றி. வாழவைக்கும் நம்பிக்கையில் உறுதியாக இருக்க வேண்டியதுதான்.
>நன்றி. தமிழன்- கறுப்பி
>Mikka nanri !thangkalukkum enathu iniya Puththaandu vazthukkal !Uzhavan
>நல்லகவிதை , தங்களுக்கு எனது புத்தாண்டு வாழ்த்துக்கள் .அன்புடன் கண்ணன்
>தேவகிமைந்தன், வரவிற்கும் கருத்துரைக்கும் நன்றி.
>//துலா ஓடிப் பாய்ந்தசிலதுளி நீரிலும்//இந்த ஒரு வரி பழைய நினைவெல்லாத்தையும் கிளறிவிட்டுது.
>நன்றி ஆதித்தன்.