>யாரைப்பார்த்தாலும் விற்றமின் மாத்திரைகள் சாப்பிடுகிறார்கள். மருத்துவர்களிடம் போனாலும்”நல்ல விற்றமின் மாத்திரைகள் எழுதித் தாருங்கோ’ என்றே கேட்கிறார்கள். சாதாரணமாக மூன்று ரூபா முதல் முப்பது ரூபா வரை என இவை பலவகைகளில் தாராளமாகக் கிடைக்கின்றன. தாராளமாக வாங்கிப் போடுகிறார்கள். தாராளமாக செலவு செய்கிறார்கள் ஆனால் செலவழிக்கும் பணத்திற்கு பலன் கிடைக்கிறதா?
இன்னொரு முறையில் சிந்தித்துப் பார்த்தால் இது ஒருவகை நாகரிக மோஸ்தர் போலாகிவிட்டதோ எனவும் தோன்றுகிறது.
ஏனைய பலரையும் விட, மாதவிடாய் நின்ற பின் பெண்கள் விற்றமின்களை நாடுவது அதிகம். மாதவிடாய் நின்ற பின் மாரடைப்பு புற்றுநோய் போன்றவை வருவதற்கான வாய்ப்பு அதிகமென கருதப்படுகிறது. அதைத் தடுக்க மாத்திரைகளை நாடுகிறார்கள்.
இதனால் அவர்கள் நோய்வாய்ப்படுவதற்கான வாய்ப்புகள் குறைகிறதா மாரடைப்பு போன்ற நோய்கள் வராமல் தடுக்கிறதா, புற்றுநோய் வராமல் காப்பாற்றுகிறதா?
இல்லை என்கிறது Archives of Internal Medicine என்ற மருத்துவ இதழ். ஒன்றரை இலட்சத்திற்கு அதிகமான பெண்களை உள்ளடக்கிய ஆய்வின் முடிவு என 2009 ஆம் ஆண்டு பெப்ரவரி 9 ஆம் திகதி இதழ் கூறுகிறது.
ஆனால் இவற்றை உட்கொள்வதால் வேறு நோய்கள் வருகிறதா என்று கேட்டால் அதற்கும் ஆதாரம் இல்லை. அதாவது அத்தகைய மல்ரி விற்றமின் மாத்திரைகளால் நன்மை ஏற்படுவதாகவும் தெரியவில்லை. தீமைகள் ஏற்படுவதாகவும் தெரியவில்லை. எனவே கொடுக்கும் பணத்திற்கான பலன் கிடைக்கிறதா என அவற்றின் பாவனையாளர்கள் தாங்களே தீர்மானித்துக்கொள்ள வேண்டியதுதான்.
ஆனால் மருந்துகளை விட சாதாரணமாகக் கடைப்பிடிக்கக் கூடிய பல ஆரோக்கியமான வாழ்க்கை முறைகள் இத்தகைய நோய்கள் வராமல் தடுக்கின்றன என்பதை மறக்கக் கூடாது.
உதாரணமாக புற்றுநோய்களையும் அழுத்தங்களையும் தடுக்க கூடிய ஒட்சிசன் (Antioxidents) எதிரிகள் காய்கறிகளிலும் பழங்களிலும் தாராளமாகக் கிடைக்கின்றன. இவை இயற்கையானவை என்பதால் உடலுக்கு தீங்கற்றவை என கருதலாம். இவற்றைத் தாராளமாக உணவில் சேர்த்துக் கொண்டால் மல்ரி விற்றமின் மாத்திரைகளை நாட வேண்டியதில்லை.
அடுத்ததாக இந் நோய்களைத் தடுக்க ஒருவர் செய்ய வேண்டியது உடல் உழைப்பு அல்லது உடற்பயிற்சியாகும். உடலுக்கு வேலை கொடுக்காது சோம்பேறியாக இருந்தால் என்ன நடக்கும் ?
எடை கூடும், நீரிழிவு, பிரஸர், கொலஸ்டரோல் போன்ற நோய்கள் தேடி வரும்.
காலத்திற்கு முன்பே நோயுற்று “இறைவனடி’ சேர நேரிடும். உடலுளைப்பற்ற வாழ்க்கை முறையானது தசைகளைப் பலவீனப்படுத்தும் எலும்புகளை தேய்வடையச் செய்யும் என்பதையும் மறக்கக் கூடாது.
பெரும்பாலான மல்ரி விற்றமின் மாத்திரைகள், மருந்துகளாக அன்றி மேலதிக உணவு (Supplimentary Food) என்றே வகைப்படுத்தப்படுகின்றன. இதனால் மருந்துகள் மீது இருப்பது போல அரசின் இறுக்கமான கட்டுப்பாடுகளோ, கண்காணிப்போ குறைவு. அத்துடன் விலைகளும் அதிகமாக இருக்கின்றன. பத்திரிகை, வானொலி, தொலைக்காட்சிகளிலும் விளம்பரப்படுத்தக் கூடியன. எனவே கவர்ச்சியான விளம்பரங்களாலும் ஏமாந்து வீணாகச் செலவு செய்யும் நிலைமை நிலவுகிறது.
எனவே அடுத்த தடவை நீங்கள் விற்றமின் மல்ரி விற்றமின் போன்ற மருந்துகளை வாங்க முன் இரண்டு தடவை சிந்தியுங்கள். உங்கள் பணத்திற்கான பலன் கிடைக்கிறதா என்பதை முதலில் உறுதிப்படுத்துங்கள். மாத்திரைகளுக்குப் பதிலாக உணவின் மூலம் அவற்றை எடுக்க முடியுமா என மீள் பரீசிலனை செய்யுங்கள்.
மாதவிடாய் நின்ற பெண்கள் ஓஸ்டியோபொரோசிஸ் நோயைத் தடுப்பதற்காக மேலதிக கல்சியம் எடுப்பது வேறு விடயம் அதை நிறுத்த வேண்டாம்.
-டாக்டர் எம்.கே. முருகானந்தன்-
>ஐயா!பலர் அறிய வேண்டிய சங்கதி இது.”விற்றமின் விழுங்குவது” இது ஒரு மோடியாகி விட்டது.பணச் செழிப்பின் அடையாளமும் ஆகிவிட்டது. இந்த மோடியை துரதிஸ்டவசமாக சில வைத்தியர்களும்தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துகிறார்கள் என்பது ஒரு கசப்பான உண்மை.இந்தக் கட்டுரையைப் படித்தால் “இது இவருக்குத் தேவையில்லாத வேலை” என அவர்கள் கோவித்தாலும்ஆச்சரியமில்லை.அத்துடன் நமது நாடுகளில் பலர் வாசிப்பின் மூலம் மருந்துவ விடயங்களை அறிவதில்லை. கற்றோரிலேயே இக்குறைபாடு உண்டு; சாதாரண குடிமகன் பற்றிச் சொல்லத் தேவையில்லை.அதனால் துண்டு நிறைய மருந்து அதுவும் நிறம் நிறமாக எழுதினால்; அவர் நல்ல வைத்தியர்; கெட்டிக்காரன் என்ற தவறான புரிதலும் உண்டு.எனக்குத் தெரிய பலர் ” அவர் குழல் வைச்சுப் பாக்காமல்” ஒன்ணுமில்லை என்கிறார். வேற டாக்குத்தரிட்ட போகவேணும்” என்பார்கள்.நமது நாடுகளில் மருத்துவம் என்பது; மனம் சார்ந்த பிரச்சனையாகவும் உள்ளது.எனினும் இனியாவது எல்லோரும் நமது உடலில் இயற்கையான உயிர்ச் சத்துக்கள் சேரக்கூடியவகையில் உணவு முறையையும்;வாழ்க்கைச் சூழலையும் அமைப்பதே சிறப்பு.அதற்கு உங்களைப் போன்றோரின் இவ் எளிய கட்டுரைகள் பரவலாக வாசிக்கப்படவேண்டும்.மற்றும் இப்படி ஒரு இலவச சேவையை நீங்கள் செய்கிறீர்கள்.இன்னும் பலர் இதைப் பயன்படுத்த வேண்டுமென்பதே என் ஆசை.
>உங்கள் விரிவான கருத்திற்கு நன்றி யோகன் பாரிஸ்(Johan-Paris)
>நம்மவர்கள் மாதிரிரை சாப்பிடுவதையே ஒரு கவுரவமாக நினைத்து செயல்படுகிறார்கள்.. 😦
>அன்பின் டொக்டர்,இங்கு இப்பொழுது மல்டி விட்டமின் மாத்திரைகள் போலவே சோயா மாத்திரைகள் உலாவருகின்றன. மெலிந்தவர்கள் உடல் பருமனாக நல்ல மாத்திரைகளென அறியக்கிடைத்தது.மீனெண்ணைய்க்குளிசைகளின் பலன் என்ன? சிறுவயதினருக்கு சிபாரிசு செய்யப்படுகிறதே ?
>தங்கள் சொல்வது சரி,தாத்தாவுக்கு கண்ணாடி வாங்க போனப்ப, கண்ணாடி வாங்குறத்துக்கு முன்னாடி வெறும் பிரேமை(கண்ணாடி இல்லாத) எடுத்து தாத்தாவிற்கு சரியா வருதான்னு போட்டிருக்கிறார்கள். இப்ப கண்ணு நல்லாத் தெரியுதுன்னு சொன்னாராம் தாத்தா!அப்படித்தான் இருக்கு.
>உண்மைதான் கிரி. விற்றமின் மாத்திரைகளை பெருமளவு சாப்பிடுபவர்கள் அதற்கு அவசியமே அற்ற வசதியுள்ளவர்கள். அதிலும் தேவை இல்லாவிட்டால் கூட விலை அதிகமானதையே நாடுவார்கள். ஆனால் பாவம் விற்றமின் குறைபாடுடைய ஏழை எளியவர்களுக்கு அவற்றை வாங்க வசதியேயிருக்காது.
>ரிஷான் ஷெரீப், சோயாவையே அதிகம் சாப்பிடலாமே. அதைவிடுத்து ஏன் மாத்திரைகளாக எடுக்க வேண்டும். ஆயினும் மாதவிடாய் முற்றாக நின்ற பெண்களின் சில பிரச்சனைகளுக்கு அவை உதவக் கூடும்.மீனெண்ணைய்க் குளிசையில் உள்ள Vitamin A & D குழந்தைகளுக்கு உதவும்.மீனெண்ணையில் உள்ள Omeg 3 Fatty acids வளர்ந்தவர்களின் கொலஸ்டரோல் குறைப்பு, இருதய பாதுகாப்பு மற்றும் மூட்டு வலிகளுக்கும் உதவும் என நம்பப்படுகிறது.
>மிக அருமையாகச் சொன்னீர்கள் ஜோதிபாரதி.
>டொக்டர் நான் முன்பு சும்மாவே விட்டமின் சி (C) அதிகமாக வாங்கி சாபிடுவதுண்டு. ஆனால் இப்போது இல்லை. அதே மாதிரி தற்போது கணக்கே இல்லாமல் டய்ஜின் (Digene) போடுவதுண்டு காரணம் கேஸ்ட்ரிக் இது சரியா?
>நன்றி கலை இராகலை. விட்டமின் C சாப்பிடுவதால் பெரும் பிழை எதுவும் இருக்காது. ஆயினும் அதிகளவு Digene சாப்பிடுவது நல்லதல்ல. வயிற்றோட்டம், மலச்சிக்கல் போன்ற விளைவுகள் ஏற்படலாம். ‘கேஸ்ட்ரிக்” என நீங்கள் கருதுவுது உண்மையில் குடற் புண்தானா அல்லது Stress காரணமாக தோன்றுகிறதா என்பதை நிச்சயப்படுத்திக் கொண்டு மருந்தைத் உபயோகிக்கவும்.
>நன்றி சார்Stress என்றால் என்னானு தெரியாதே!
>Stress என்றால் அழுத்தம் எனலாம். பெரும்பாலும் மனஅழுத்தம். ஓரளவு அழுத்தம் இருப்பது வாழ்க்கையில் முன்னேறுவதற்கு அவசியம். ஆயினும் மிக அதிகமாகிவிட்டால் நோயாகி துன்பம் கொடுக்கும். சிலர் tension எனவும் பேசுவர்.
>கலை, stress மன அழுத்தத்தைக் குறிக்கும் !
>வணக்கம் சார், இந்தியாவில் தவிற மற்ற அனைத்து நாடுகளிலும் Hepatitis B உள்ளவர்கள் அவர்களின் நாடுகளில் வேலை செய்யவோ அல்லது குடியுரிமையோ வழங்குவதில்லை. அது ஏன்? அவ்வாறு Hepatitis B உள்ளவர்களுக்கு என்னென்ன பிரச்சனைகள் வரும்? அதை எவ்வாறு நீக்குவது பற்றி கொஞ்சம் விரிவகா ஒரு பதிபோடவும். நன்றி.
>டொக்டர் மற்றும் ரிஷான் அண்ணா இருவருக்கும் நன்றிகள்
>டாக்டர்,உங்கள் பதிவுகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.நன்றி!ஹெர்னியா என்றால் என்ன? அது எதனால் வருகிறது? அதனால் ஏற்படும் விளைவுகள் என்ன?பெண் குழந்தைகளுக்கும் ஹெர்னியா வருமா?மூன்று வயது குழந்தைக்கு அருவை சிகிச்சை செய்யலாமா?அறுவைசிகிச்சை இல்லாமல் குணப்படுத்தமுடியுமா? இதுமாதிரியான அருவை சிகிச்சை அவளது குழந்தைபேரு காலத்தில் அவளுக்கு பிறச்சனைகளை ஏற்படுத்துமா? தயவு செய்து விளக்கமளிக்கவும் டாக்டர்.
>ஹெர்னியாவில் பலவகைகள் உண்டு. மூன்று வயதுப் பெண் என்றால் அது பெரும்பாலும் பிறப்பிலேயே இருந்திருக்கக் கூடும். வயிற்றுத் தசையில் நொய்வு ஏற்பட்டு அதனூடாக வயிற்றில் உள்ள குடல் அல்லது ஏனைய உறுப்புகள் பிதுங்கி வருவதாலேயே இது ஏற்படுகிறது. இதைக் குணப்படுத்த அறுவை சிகிச்சை செய்வதே ஒரே வழி. இச்சிகிச்சை முறை மிகவும் பாதுகாப்பானது. குழந்தைகளுக்கும் செய்யலாம். பிற்பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பில்லை.
>டாக்டர் அவர்களுக்கு நன்றி!
>ஓஸ்டியோபொரோசிஸ் நோய் என்றால் என்ன ?மேலும் தற்போது கான்செர் நோயினால் பாதிக்கப்பட்டு நிறைய பேர் இறக்கிறார்கள் .ஒருவரை இந்த நோய் கிருமி தாக்கி இருக்கிறது என்பதை ஆரம்பத்தில் எப்படி கண்டறிவது ? உடம்பில் உன்னி போன்றவைகளிலும் தாகும் அபாயம் உள்ளது என்று சொல்கிறார்கள் .உன்னியை நீக்க மருத்துவமுறைகள் உண்டா ?யாரிடம் செல்ல வேண்டும் .?
>நல்ல தகவலை முன் வைத்திருக்கிறீர்கள் டாக்டர். விட்டமின்கள் பெரும்பாலான சமயங்களில் ஒரு placebo effect மட்டுமே அளிப்பதாக கருதுகிறேன்.நன்றிஎட்வின்,Paramedic
>சரியாகச் சொன்னீர்கள் எட்வின். விட்டமின்கள் பெரும்பாலான சமயங்களில் ஒரு placebo effect மட்டுமே அளிக்கின்றன என்பது உண்மையே.
>டாக்டர்,தினசரி தேவைப்படும் வைட்டமின்களின் உணவின் மூலம் பெறுவது அத்தனை சுலபமானது அல்ல.அதற்கு மிகவும் சிரமப்படவேண்டும்.உதாரணத்துக்கு தினசரி தேவைப்படும் கால்ஷியத்தை உணவிலிருந்து பெற சுமார் முக்கால் லிட்டர் பாலை ஒருவரே குடிக்கவேண்டும்.சைவர்களுக்கு பி12 கிடைக்க பாலை விட்டால் வழியில்லை.குளிர் பிரதேசத்தில் வசிக்கும் எனக்கு வருடத்தில் பாதிநாள் சூரியனே கண்ணுக்கு தெரியாது.ஆக வைடமின் டி இயற்கையாக கிடைப்பது தடைபடுகிறது.நம் நாட்டு பெண்களில் பெரும்பாலனோர் அனீமிக்காக இருக்கின்றனர்.அன்றாடம் ஒரு மல்டிவைடமினை உட்கொள்வது பயனுள்ளதாகவே இருக்கும்.செலவும் குறைவு.உணவின் மூலம் இத்தனை வைடமின்களையும் அடைவது என்பது செலவுபிடிக்கும் விஷயம்..அதுபோக உணவின் மூலம் அனைத்து மினரல் வைடமின்களையும் அடைய நிறைய நியூட்ரிஷனல் அறிவும் வேண்டும்.பொதுமக்களுக்கு இது அத்தனைதூரம் சாத்தியமானது அல்ல.
>டாக்டர் அனைவரும் அறிய வேண்டிய தகவல். அதுவும் எந்த மாத்திரை எதுக்கு என்று தெரியாமல் போடும் பலர் கட்டாயம் படிக்க வேண்டும்.ஒரு சிலர் தாங்கலாகவே கடைக்கு சென்று மாத்திரை, மருந்து என்று வாங்கி சாப்பிடுவது இன்னும் எத்தனை நாள் தொடருமே!!!!!
>கருத்துரைக்கு நன்றி prabhadamu.
>விவாதத்து உரிய கருத்தை முன்வைத்தமைக்கு நன்றி.செல்வன்