>
தெருவோரப் பூவெல்லாம்
பறித்தெடுத்து இறைவனுக்கு
அர்ப்பணித்தல் அடாத செயலென்பர்.
அதனையே மொபைல் போனில்
அமுக்கி வைத்து இணையத்தில்
பகிர்ந்து கொண்டால்
கலைப் படைப்பெனத்
திமிர் கொள்வர்.
வெண்மையும் இளம் சிகப்பும்
இன்னும் பெயர் தெரியா நிறமனைத்தும்
தெருவோரம் தான்தோன்றி புன்னகைக்கும்
செடிகளில் விதவிதமாய்
இதழ் விரிக்கும்.
மதராசப் பட்டினத்தில்
படகோட்டும்
கூவம் நதியல்ல
கொழும்பு நகரின் கனால் (Canal)
கழிவு நீரின் நாற்றம்
காத தூரம் ஓட வைக்கும்
ஆயினும் அதன் போசாக்கு
அதன் கரை ஜனனிக்கும்
கொடி செடியைப் போசிக்கும்.
கதிரவனின் கரம் வாட்ட
சென்ட் பீற்றர்ஸ் மாணவர்கள்
நீண்டுழைத்து
நீரிழப்பால் உடல் தளர்வர்.
விளையாடும் மைதானத்தில்.
மறுகரையில்
நீரோரம் நிதமிருந்தும்
சிறு செடிகள் அனல் காற்றில்
அலையாடி சருகாவர்.
தடைபோட்ட தாழ்வாரத்தில்
அடைந்திருக்க மனதின்றி
கொட்டும் மழையில்
குதித்துக் கும்மாளமிட
தெருவோரம் தலை நீட்டி
உடல் நனைக்கும் ஆனந்தம்
தொடர்மாடி வீட்டு
முகப்போர அலங்காரச் செடிக்கு
சிலவேளை கை கூடும்..
வானத்தின் நீலத்தை
தன்னிதழில் வர்ணமிட்டு
கோலம் வரைந்திருக்கும்,
வானத்தைத் தன்வாழ்வில்
சிறுபொழுதும் காணாத
உள்வீட்டு குறும் செடி.
ஆண்டி, ஆண்டகை
இழிசனர், உயர்சாதி
உழைப்பவன், சுரண்டல்காரன்
என வர்க்க பேதமில்லா
பூக்களின்
சாம்ராஜ்யம் இது.
பூக்கள், செடிகள் பற்றிய கவிதையுடனான முன்னைய புகைப்படப் பதிவுகளுக்கு கீழே கிளிக்குங்கள்.:-
எம்.கே.முருகானந்தன்.
>Good poem, Sir.My Appreciations.
>எல்லா வித பூக்களும் அழகுதான். மனிதப்பூக்களும் இதில் அடக்கம். ”முன் வீட்டு அயல் வீட்டுதெருவோரப் பூவெல்லாம்பறித்தெடுத்து இறைவனுக்குஅர்ப்பணித்தல் அடாத செயலென்பர்.அதனையே மொபைல் போனில்அமுக்கி வைத்து இணையத்தில்பகிர்ந்து கொண்டால்கலைப் படைப்பெனத்திமிர் கொள்வர்” என்பது மிக அருமை.
>வைத்தியரு க்குள் மறைந்திருக்கும் கலையார்வ்ம் கண்டு கவித்துவம்..கண்டு ..ஆகா பிரமித்துபோனேன்.
>கருத்துரைகளுக்கு நன்றி Rathnavel, சஞ்சயன் (விசரன்), மற்றும் நிலாமதி
>பூக்களின் மனம் அறிந்து எழுதியுள்ளீர்கள் வரிகளில் மணம் வீசுகிறது
>அருமை!
>அருமையான ஆக்கம் தோழி உங்கள் தமிழ் வளர வாழ்த்துக்கள்