Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for ஏப்ரல், 2013

“தூங்காத கண் ஒன்று உண்டு.
துடிக்கின்ற சுகம் ஒன்று உண்டு
தாங்காத மனமென்று ஒன்று”

காதலினால் தூங்காதவர்களுக்கு மனம் துடிப்பதில் சுகம் இருக்கக் கூடும்.

மனம் துடிப்பது மட்டுமின்றி தூக்கமின்மையால் பல்வேறு நோய்களும் வந்து குடிகொள்ளும்.

தூக்கமில்லாத பலர் இன்று இருக்கிறார்கள். போதிய தூக்கம் இல்லாமல் போவதற்கு இரண்டு முக்கிய காரணங்கள்.

  1. தானாகத் தேடிக்கொள்ளும் தூக்கமின்மை ஒரு வகை. படிப்பென்றும் வேலையென்றும் நீண்ட நேரம் விழித்தருப்பதால் போதிய தூக்கம் இல்லாதவர்கள் இவர்கள்.
  2. தேடாமலே வந்து ஒட்டிக் கொள்ளும் தூக்கமின்மை மற்றொரு வகை. எவ்வளவுதான் நேரம் கிடந்தாலும், எவ்வளவு நெரம்தான் படுத்துக்கிடந்தாலும் தூங்கம் வராதவர்கள் மற்றவர்கள்

காரணம் எதுவாக இருந்தாலும் போதிய தூக்கம் இல்லாவிட்டால்

  • உடல் சோர்வாக இருக்கும்.
  • வாழ்க்கை சினமாக இருக்கும்,
  • வேலைகளில் மூளையைச் செலுத்த முடியாது.
  • வினைத்திறன் குறைந்துவிடும்,
  • தூக்கமின்றி எரிச்சல் பட்டுக் கொண்டிருந்தால் மற்றவர்களும் இனிமையாகப் பழக முடியாது. உற்வுகள் சிதைந்து மற்றவர் வெறுப்பைத் தேட நேரலாம்.

ஆனால் இவை எல்லாவிற்கும் மேலாக தூக்கமில்லாதவர்களின் இருதயமும் பாதிப்பிற்கு ஆளாகுவதற்கான சாத்தியம் அதிகம்.

வேறு என்னென்ன பாதிப்புகள் ஏற்படும்.

  • வாழ்க்கை நெருக்குவாரம் stress மிக்கதாக மாறிவிடும்.
  • தூக்கமின்மைக்கும் பசிக்கும் தொடர்புண்டு. அடிக்கடி பசிப்பது போல இருக்கும் எதையாவது தின்ன அல்லது குடிக்க வைக்கும். இவ்வாறு மேலதிக கலோரிகள் சேர்வதால் எடை அதிகரிக்கும்.
  • தூக்கக் குழப்பம் உள்ளவர்களுக்கு பக்கவாதம் வருவதற்கான சாத்தியம் அதிகம். தூக்கமின்மையால் தூக்க சுவாச நிறுத்தம் ளடநநி யிநெய ஏற்படுவதே இதற்குகு; காரணம்.
  • இதே தூக்க சுவாச நிறுத்தம் காரணமாக இருதய நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்பும் அதிகம்.
  • உயர் இரத்த அழுத்தம், இருதயம் வேகமாகத் துடித்தல், இருதயத் துடிப்பின் லய மாறுபாடுகள்.

இவ்வாறு பல பிரச்சனைகள் தூக்கம் குறைபாட்டினால் ஏற்படுவதால் போதியளவு நேரம் அமைதியாகத் தூங்குங்கள்.

உங்கள் தூக்கக் குழப்பத்திற்கான காரணம் உங்களுக்குத் தெரியவில்லை எனின் மருத்துவ ஆலோசனை மூலம் காரணத்தைக் கண்டறிந்து அதற்கேற்ற பரிகாரம் காணுங்கள்.

தூக்கம் பற்றிய எனது பதிவுகள்

இரவிரவாகப் படித்தும் சோதனையில் கோட்டை

வயதானவர்களைப் பாதிக்கும் தூக்கக் குறைபாடு

தூக்கம், மினித்தூக்கம் …..

‘தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே
அமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே ..’

எனக் கண்ணாதாசனுடன் கூடி உங்களை வாழ்த்துகிறேன்.
அமைதியுடன் ஆலோக்கியமும் கிட்டும்.

ஹாய் நலமா புளக்கில் வெளியான கட்டுரை இது.

தூக்கமின்மையால் சில பிரச்சனைகள்

0…0…0

Read Full Post »

அந்த மூதாட்டியைப் பார்த்ததும் மனம் கனத்தது. வாழ்க்கைச் சக்கரத்தின ஆரம்கட்டமான கருப்பையில் இருந்ததுபோல அவளது உடல் சுருண்டு கிடந்தது. முதுகு கூனிக் குறுகியிருந்தது.

old-age-2

கால்கள் குந்தியிருக்கும்போது மடிந்திருப்பதுபோல மடிந்திருந்தன. அவற்றை நீட்ட முடியவில்லை. அவளால் செய்ய முடியாதது மட்டுமல்ல நான் முயன்றும் முடியவில்லை. முழங்கால் மூட்டுக்கள் இறுகிக் கிடந்தன. அவளால் நடக்க முடியாது. பம்போரிஸ் கட்டித்தான் அவளது மலம் கழிவதைச் சமாளிக்கிறார்கள்.

100_1818-1

ஆனால் அவளால் சாப்பிட முடிகிறது. நீராகாரம் அருந்த முடிகிறது. மாறாட்டம் சற்று இருந்தாலும் நினைவு நல்ல நிலையில் இருந்தது. அவளது வயது 91 மட்டுமே.

‘வயசாகிபோய் உடம்பு தளர்ந்து போச்சு’ என்றாள் தட்டுத் தடுமாறி வந்தவள். 70 வயதுகளை அண்டிக் கொண்டிருக்கும் அவளது மகள் இவள்.

வயதானவர்களின் துன்பங்கள் பற்றிய ஒரு அனுபவப் பதிவு ‘எனக்குச் சாக ஏதும் மருந்துதாங்கோ’ துயரக் குரல் பின் கதவில் கேட்கிறது.

மூப்படைதல்

முதுமையாவதின் பிரச்சனைகளை எமது நாட்டிலும் இப்பொழுது பரவலாகக் காணக் கிடைக்கிறது. மிகவும் முதுமையடைந்த பெற்றோர்களை பராமரிக்க முடியாது முதுமையின் ஆரம்பப் படியிலிருக்கும் பிள்ளைகள் சிரமப்படுகிறார்கள். மேல்நாடுகளைப் போல இங்கும் அரச ரீதியான ஆதரவும் பராமரப்பும் தேவையென்பதை உணர முடிகிறது.

மூப்படைவது உடலைத் தளரச் செய்கிறது என்கிறார்கள். எலும்புகள் மூட்டுகள், தசைகள் எனப் பலவும் வயது அதிகரிப்பின்போது பாதிப்படையவே செய்கின்றன. மூட்டு எலும்புகளின் தேய்வு (Osteoarthritis),தேய்வடையும் எலும்புகள் (Osteoporosis) , ரூமட்ரோயிட் மூட்டுவாதம் போன்ற பல நோய்களும் வயதானவர்களைப் பாதிப்பது அதிகமானாலும் மேற்கூறிய எலும்புகள் மூட்டுகள், தசைகள் ஆகியவற்றின் பாதிப்பிற்கு அவை மட்டுமே காரணமல்ல.

arthritis-hand

வயதாகும் போது சருமம் சுருங்குவதுபோல, தலைமுடி நரைப்பதுபோல, தசைகள் வலுவிழக்கும், எலும்புகள் கோதாகும் மூட்டுக்கள் பாதிப்புற்று மடங்க முனையும். இவை தவிர்க்க முடியாதது என்றே பலரும் எண்ணுகிறார்கள். அவ்வாறே நீண்டகாலம் மருத்துவர்களும் எண்ணினார்கள்.  வயது காரணமல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

அப்படியானால் காரணம் என்ன? செயற்பாட்டின்மை என்கிறார்கள். மூப்படையும்போது இயலாமை ஆட்கொள்கிறது. நாளாந்த செயற்பாடுகள் குறைகின்றன. நடமாட்டமும் குறைகிறது. இதனால்தான் அவ்வாறு நிகழ்கிறது எனக் கருதுகிறார்கள்.

தசைகளில் ஏற்படும் மாற்றஙகள்

வயதாகும்போது உருண்டு திரண்டு வலுவுடன் இருந்த தசைகள் தளர்ந்து சுருங்குகின்றன. இதனால் இலகுவில் களைப்படைகின்றன. வழமைபோல இயங்க முடியாது சோர்வுற வைக்கின்றன. இதற்குப் பல காரணங்கள் இருக்கலாம்.

  • முக்கியமானது தசை நார்களின் எண்ணிக்கையும் திண்ம அளவும் குறைகிறது.
  • அவ்வாறு குறையும் இடத்தை அவற்றின் இடத்தை நிரப்புபவைfibrous tissueஆகும். இவை tough,கடினமானவை, நெகிழ்சி குறைந்தவை. அதனால் சுரங்கி விரிந்து செயற்படுவது சிரமம்.
  • நரம்பு மண்ணடலத்தில் ஏற்படும் மாற்றங்கள் காரணமான அவற்றின்tone குறையும். இதனால் சுருங்கும் (contract) ஆற்றல் குறையும்.

எலும்புகளில் ஏற்படும் மாற்றஙகள்

எலும்புகள் கல்லுகள் போலத் தோன்றினாலும் அவையும் உயிருள்ள இழையங்களே. வயதாகும் போது அவற்றின் கட்டமைப்பில் (Structure of bone) மாற்றங்கள் ஏற்படுகின்றன. அவற்றின் திண்மம் குறைகிறது. வலுவிழக்கின்றன. எலும்புகள் சிறிய தாக்கத்தினாலும் உடைகின்றன.

17285

இவற்றிற்கான காரணங்கள் என்ன?

  • செயலூக்கமற்ற வாழ்க்கை முறை.
  • ஹோர்மோன் அளவுகளில் வீழ்ச்சி ஏற்படுதல் – முக்கியமாகப் பெண்களில் மாதவிடாய் முற்றாக நின்ற பின்னர் எலும்புகளின் அடர்த்தி நலிவடையத் தொடங்கி ஒஸ்டியோபொரொசிஸ் நோயைக் கொண்டு வருகிகறது. அதேபோல ஆண்களில் இம் மாற்றம் படிப்படியாக ஏற்படுகிறது.
  • எலும்புகளிலுள்ள கல்சியம் ஏனைய தாதுப் பொருட்கள் வீழ்ச்சியடைகின்றன. ஆதனால் அவை நலிவடைகின்றன.

மூட்டுகளில் ஏற்படும் மாற்றஙகள்

எமது உடலில் முழங்கால் மணிக்கட்டு, இடுப்பு, தோள் மூட்டு எனப் பல்வேறு மூட்டுகள் இருக்கின்றன. இவற்றில் எலும்புகள் ஒன்றோடு ஒன்று முட்டி உரசுவதில்லை. குருத்தெலும்புகள் (cartilage) அவற்றை மூடி மூட்டுக்குரிய சவ்வுகள் (synovial membranes)> அவை உராசிதிருக்க மூட்டுக்குரிய திரவம் (synovial fluid) என வழுவழுப்புடன் உராய்வின்றி, நழுவி இயங்குமாறு பொறியலாளருக்கான நிபுணத்துவத்துடன் படைக்கப்பட்டுள்ளன.

வயதாகும்போது மூட்டுக்குரிய திரவம் குறைவடைகிறது, குருத்தெலும்புகள் தேய்கின்றன. இதனால்தான் அவை இறுகி அதன் அசைவுகளில் நெகிழ்சித்தன்மை குறைகிறது. மூட்டுகளை இணைக்கும் சவ்வுகள் குறுகுகின்றன. ஆவற்றால்தான் வயதானவர்கள் தமது மூட்டுகளை அசைப்பது சிரமமாக இருக்கிறது.

ஆனால் இவற்றில் பெரும்பாலனவற்றிற்கு வயது மட்டும் காரணமல்ல. போதிய பயிற்சி இல்லாமை காரணமாகும். இயங்கிக் கொண்டிருக்கும்போது மூட்டுக்குரிய திரவம் சுரந்து பரவிக் கொண்டிருக்கும். செயலற்றிருக்கும்போது திரம் சுரப்பது குறைந்து குருத்தெலும்புகள் தேய்ந்து மூட்டு இறுகிவிடுகிறது.

தடுக்கும் வழி என்ன?

ஒரே வழி தொடர்ந்து இயங்குவதும் மூட்டுகளுக்கு பயிற்சிகள் கொடுப்பதும் மட்டுமே. இதை பல மருத்துவ ஆய்வுகள் உறுதிப்படுதியுமுள்ளன.

OldCoupleWalking

  • பயிற்சிகள் எலுத்புகளை வலுவுடையதாக்கும். எலும்புத் தேய்வு ஏற்படுவது குறைவடையும்.
  • தசைகளை வலுப்படுத்தும் பயிற்சிகளை வயதாகும்போது தொடர்ந்து செய்வது அவசியம்.
  • உடலின் சமநிலையைப் பேணுவதற்கும் அவற்றின் செயற்பாடுகளை ஒருங்கிணைப்பதற்குமான பயிற்சிகளும் அவசிமாகும்.
  • முடியுமானவர்கள் நீந்துவதும் நல்லது. இது அவர்களது தசைகள் தேயாதிருக்க உதவும்.
  • தசைகளை நீட்டி மடக்கும் பயிற்சிகளும் மூட்டுகள் இயங்குவதற்கு உதவும்.
  • ஓய்ந்து சோம்பிப் படுத்துக் கிடக்காது தொடர்ந்து இயங்கிக் கொண்டிருப்பது எலும்புகள் தேய்வுற்று ஒஸ்டியோபொரோசிஸ் ஏற்பாது தடுக்க உதவும்.

எனவே முதியவர்களே நீங்கள் எதிர்காலத்தில் அடங்கி முடங்கிப் படுக்கையில் கிடக்க வேண்டிய நிலை ஏற்படாதிருக்க வேண்டுமெனில் இயங்குங்கள், இயங்குங்கள், இயங்கிக் கொண்டேயிருங்கள்.

விட்டிலுள்ள ஏனையவர்களே உங்கள் வீட்டில் உள்ள முதியவர்களுக்காக சில மணித்துளிகளை ஒதுக்குங்கள். அவர்கள் படுக்கையில் வீழ்ந்துவிடாதிருக்க வேண்டுமாயின் உங்கள் ஒத்தாசையும் ஊக்குவிப்பும் அவசியம்.அவர்களை விட்டிற்கு வெளியே அழைத்துச் செல்லுங்கள். நடக்கவும் பயிற்சிகள் செய்யவும் உதவுங்கள். இல்லையேல் படுக்கையில் வைத்துப் பராமரித்து அல்லாடப் போவது நீங்கள்தான்.

மற்றொரு வயோதிபரின் பரிதாபமான பாடுகள் வயது போனவர்தானே. வைத்தியம் செய்தும் என்னத்தைக் ….

A young hand touches and holds an old wrinkled hand

அதுமட்டுமல்ல நீங்களும் ஒருநாள் முதுமையிடைவீர்கள் என்பதை நினைவில் வைத்திருங்கள். அவர்களுக்கு உதவுவதுடன் நின்றுவிடாது எதிர்காலத்தில் நீங்கள் துன்புறாதிருக்க உற்சாகமாக இருங்கள். சுறுசுறுப்பான வாழ்க்கை முறையைக் கடைப்பிடியுங்கள். பயிற்சிகளை இப்பொழுதிருந்தே ஆரம்பியுங்கள்.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன். 

MBBS(Cey), DFM (Col), MCGP (col)

குடும்ப மருத்துவர்

எனது ஹாய் நலமா புளக்கில் ஏற்கனவே வெளியான கட்டுரை கூனிக் குறுகி வலுவிழப்பது மூப்படைவதின் நியதியா?

0.0.0.0.0.0.0

Read Full Post »

சூலகம் உண்டு கருமுட்டையில்லை
கருப்பையுண்டு குழந்தைப் பேறில்லை
ஏங்கித் துடிப்போர் கண்ணீர் அகற்ற
வாடகைத் தாய்மார் வேண்டியதில்லை
உங்கள் முட்டையில்
உங்கள் வாரிசு
உங்கள் வயிற்றில் உருவாகும்;

Mouse-pups-created-by-tra-010

இவ் இனிய செய்தி….
எப்போது?

“சுண்டெலிக் குஞ்சுகளை  ஸ்டெம் செல்சிலிருந்து (stem cells – மூலக்கலம் மூல உயிரணு) உருவாக்குவதில் விஞ்ஞானிகள் வெற்றி பெற்றுள்ளார்கள்’ என்ற செய்தியை ஊடகங்கள் வழி நீங்கள் அறிந்திருக்கக்; கூடும். குளோனிங், ஸ்டெம் செல்ஸ் போன்ற இன்றைய அறிவியல் பாய்ச்சல்களுடன் பரிச்சயம் உள்ளவர்கள் கூட பத்தோடு பதினொன்றென அசண்டையாக ஒதுக்கக் கூடிய செய்தியல்ல இது.

ஸ்டெம் செல் என்றால் என்ன?

எமது உடலானது கோடிக்கணக்கான கலங்களால் ஆனாது. மனிதனது மட்டுமன்றி எல்லா உயிரினங்களும் அவ்வாறே. உதாரணமாக 200 வகையான சிறப்பான பணிகளை ஆற்றும் கலங்கள் மனித உடலில் உள்ளன. சருமக் கலங்கள், எலும்புக் கலங்கள், நரம்புக் கலங்கள், ஈரல் கலங்கள், நோயெதிர்புக் கலங்கள் எனப் பல உதாரணங்களைச் சொல்லலாம்.Mouse_embryonic_stem_cells

இவை ஒவ்வொன்றிற்கும் தனித்தனியான சிறப்பியல்புகள் உள்ளன. அவ்வாறே தனித்தனியான விசேட பணிகளும் உள்ளன. நரம்புகக் கலங்கள் செய்திகளைக் கடத்துகின்றன. நோயெதிர்புக் கலங்கள் நோயைக் கொண்டு வரும் கிருமிகளை அழிக்கின்றன. அதேபோல சூலகத்தில் உள்ள கலங்கள் முட்டைகளை உற்பத்தி செய்கின்றன.

ஸ்டெம் செல்கள் வேறொரு விதத்தில் விதந்து குறிப்பிட வேண்டிய கலங்கள் ஆகும். இவை நிரந்தரமாக தனியொரு பணிக்கானவை அல்ல. ஆனால் பல்வேறு வகைப்பட்ட கலங்களாக வேறுபாடடைந்து பெருகும் ஆற்றல் பெற்றவை. அதாவது இவை ஈரல் கலங்களாகவோ, எலும்புக் கலங்களாகவே அல்லது வேறெந்தக் கலங்களாகவும் மாற்றமுற்று பெருகக் கூடியவை.
பொதுவாக, ஸ்டெம் செல்கள் இரண்டு முக்கிய ஆதாரங்களில் இருந்து வருகின்றன. இவை பற்றி பின்னர் பார்ப்போம்.

ஸ்டெம் செல்லிலிருந்து கரு முட்டை

விஞ்ஞானிகள் ஸ்டெம் செல்லிலிருந்து முதலில் சுண்டெலியின் கரு முட்டையை (நபப) உருவாக்கினார்கள். அதனை ஆண் சுண்டெலியின் விந்தணுவுடன் (ளுpநசஅ) இணைத்து ஆரோக்கியமான சுண்டெலிக் குஞ்சுகளைப் பெற்றெடுக்க வைத்தார்கள்.

250px-Human_embryonic_stem_cell_colony_phaseKyoto University  யில் பணியாற்றும் Mitinori Saitou தலைமையிலான ஜப்பானிய விஞ்ஞானிகளே இந்த புதிய சாதனையைச் செய்தவர்கள் ஆவர். மலட்டுத்தன்மை பற்றிய நுண் அறிவு, நெறிமுறைகளுடன் முரண்படாத தன்மை, இயற்கையுடன் இசைவான நவீன சிகிச்சை முறைகள் போன்ற விடயங்களில் ஆய்வாளர்களுக்கு புதிய எல்லைகளை இந்த ஆய்வு திறந்து விட்டிருக்கிறது.

முட்டை எவ்வாறு உருவாகி வளர்கிறது என்பதன் சூட்சுமங்களைக் கண்டறிந்து குழந்தையில்லா பெண்களில் இதனைப் பயன்படுத்த முடியும். ஸ்டெம் செல்களிலிருந்து அவர்களுக்கான முட்டைகளை உருவாக்கலாம். அதிலிருந்து அவர்களது பாரம்பரிய அம்சங்களுடன், அவர்களது ஊனும் உடலும் போன்ற சொந்தக் குழந்தைகளை உருவாக்குவதற்கான வழிவகைகளை புதிய தொழில் நுட்பங்களுடன் செயற்படுத்த முடியும் என விஞ்ஞானிகள் நம்புகிறார்கள்.

Mitinori Saitou  தலைமையிலான குழுவினர் சுண்டெலியிலிருந்து கலங்களை எடுத்து அவற்றை மரபியல் ரீதியாக மீள் நிரலாக்கம் (Reprogramme) செய்ததன் மூலம், அதனை முட்டையின் முன்னோடிக் கலங்களாக (egg precursor cells) மாற்றினர். பெண் சுண்டெலியின் பொருத்தமான உடற்கலங்களுடன் அவற்றைக் கலப்பதன் மூலம் மாற்றியமைக்கபட்ட சூலகங்களை உருவாக்கினர்.

சுண்டெலியின் உடலிற்குள் இவற்றை உட்செலுத்தியபோது காலகதியில் இவை முட்டைகளாகப் பரிமணித்தன. இவ்வாறு கிடைத்த முட்டைகளை பிரித்தெடுத்து செயற்கை முறையில் ஆய்வகத்தில் கருத்தரிக்க  (invitro fertilisation IVF) வைத்தனர். டெஸ்ட் ரியூப் முறை என்போமே, அது போலக் கருத்தரிப்பு நிகழ்த்தப்பட்டது.

இதன் மூலம் பெற்றெடுத்த சுண்டெலிக் குஞ்சுகள் நல் ஆரோக்கியமானவை.

புதிய முயற்சியல்ல

இவ்வாறு ஸ்டெம் செல்சிலிருந்து முட்டையை உருவாக்கும் முயற்சி இப்பொழுதுதான் புத்தம் புதிதாகச் செய்யப்பட்டது எனச் சொல்ல முடியாது. ஏனெனில் ஏற்கனவே 2003ம் ஆண்டளவில் பெனிசில்வேனியா பல்கலைக்கழகத்தில் (University of Pennsylvania) செய்யப்பட்டிருந்தது. ஆனாலும் அது குட்டியைப் பெற வைக்கும் அளவிற்கு செல்லவில்லை.

இப்பொழுது செய்யப்பட்ட செயன்முறையின் வளர்ச்சியானது பாலூட்டிகளில் மட்டுமின்றி மனிதர்களிலும் பெண்களின் கரு ஆற்றலை உடலுக்கு வெளியே வளர்த்து உள்ளே வைக்கும் பொறிமுறைக்கு வலுவான அடித்தளமாக அமைகிறது என விஞ்ஞானிகள் நம்புகிறார்கள்.

இந்த ஆராச்சிய்க்கு சைட்டு குழவினர் இரண்டு வகையான ஸ்டெம் செல்ஸ்களைப் (மூலக் கலங்கள்) பயன்படுத்தினர்.

  1. முதலாவது கருவுரு அல்லது முளையம் என்று சொல்லப்படுவதிலிருந்து பெறப்பட்ட ஆதி ஸ்டெம் செல்ஸ் (embryonic stem cells) ஆகும். இவை உடலின் எந்தப் பகுதியின் கலங்களாகவும் மாற்றமடையக் கூடியவையாகும்.
  2. தூண்டுதலால் பெறப்பட்ட பன்முறை ஆற்றலுள்ள ஸ்டெம் செல்ஸ்induced pluripotent stem cells ஆகும். உதாரணமாக சருமத்திலிருந்து பெறப்பட்ட கலத்தை மறுநிரலாக்கம் செய்து முளையஸ்டெம் செல்களின் நிலைக்கு மாற்றிப் பெறப்படுவை.

குருதிப் புற்று நோய்க்கு எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை 1968 ஆம் ஆண்டு முதலில் செய்யப்பட்டது. இதற்கும் அடிப்படை ஸ்டெம் செல்களே. நீரிழிவு, இருதய நோய்களில் இதைப் பயன்படுத்துவது பற்றிய ஆய்வுகள் நடைபெறுகின்றன. பக்டிரியா பங்கஸ் மூலம் மருந்துகள் மற்றும் தடுப்பு மருந்துகள் தயாரிப்பதில் ஏற்கனவே ஸ்டெம் செல் பயன்படுகிறது

ஸ்டெம் செல்லிலிருந்து விந்தணுவும்

இதே கியோட்டோ பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் குழுவானது ஸ்டெம் செல்லிலிருந்து விந்தணுவை ஒரு வருடத்திற்கு முன்னரே உருவாக்கியுள்ளார்கள். அதனை இயற்கையாக எலியிலிருந்து பெறப்பட்ட முட்டையுடன் செயற்கை முறையில் கருக்கட்டச் செய்து, எலிகளை உருவாக்கியுள்ளனர்.

ஒப்பீட்டளவில் ஸ்டெம் செல்லிருந்து விந்து (Sperm) உருவாக்கல் சுலபமானது. ஏனெனில் விந்தணுவானது எளிமையான கலங்கள் ஆகும். ஆனால் முட்டையினது கலம் (egg) மிகவும் சிக்கலானவை. எனவேதான் இப்புதிய செயன்முறையானது அசாதாரணமான வெற்றியாகக் கருதப்படுகிறது.

பெறுபேறுகளின் விகிதாசாரம் குறைந்தளவே

இருந்தபோதும் ஸ்டெம் செல்லிருந்து பெறப்பட்ட முட்டையிலிருந்து ஆரோக்கியமான சுண்டெலிகளை உருவாக்கிய விகிதாசாரம் விகிதம் குறைவாக இருந்தது. சாதாரண முட்டையிலிருந்து 17.9% விகிதம் உருவாக்க முடிந்தபோது ஸ்டெம் செல் முட்டையிலிருந்து 3.9% சதவிகிதமே உருவாக்க முடிந்தது. ஆனாலும் இதை ஒரு பின்னடைவாகக் கருத முடியாது

குழந்தைப் பேறற்ற பெண்களில் முட்டைகளை உருவாக்கக் கூடிய இம்முயற்சி மிக வரவேற்கத்தக்கது. அறிவியல் பாய்ச்சலுடன் கூடிய மிக முன்னேற்றகரமான தொழில் நுட்ப வளர்ச்சி இதுவாகும். இந்தச் செயல்முறை விகிதாசார ரீதியில் பெரு வெற்றியல்ல என்ற போதும், குஞ்சுகள் ஆரோக்கியமாகப் பிறந்து வளர்ந்தன என்பதும், அவை வளர்ந்த பின்னர் மலட்டுத்தன்மையின்றி கருவளம் கொண்டவையாக இருந்தன என்பதும் மிக முக்கியமான முன்னேற்றங்கள் ஆகும்.

புதிய எல்லைகள் வகுக்கப்படும்

நீண்ட காலம் எடுப்பதும் அர்ப்பணிப்புடன் கூடியதுமான இச்செயன்முறை, புத்தறிவியல் ரீதியில் ஒரு முக்கியமான மைற்கல் என்பதில் சந்தேகம் இல்லை. ஆயினும் இவை மேலும் முன்னேற்றம் அடைந்து மனிதர்களில் களஆய்வு ரீதியாகச் செய்யப்படுவதற்கு இன்னமும் நீண்ட தூரம் பயணப்பட வேண்டும் என்பதை மனதில் வைத்திருக்க வேண்டும்.

ஸ்டெம் செல்களிலிருந்து ஆய்வகத்தில் முட்டைகளை உருவாக்க முடிவதானது மலட்டுத்தன்மைக்கான காரணங்களைப் புரிந்து கொள்ளவும் புதிய சிகிச்சைமுறைகளை அறிமுகப்படுத்தவும் உதவும். அதற்கு மேலாக முட்டையின் வளர்ச்சி, அவை முதிர்ச்சியடையும் விதம், ஏன் அவை சிலரில் தவறாக உருவாகின்றன, அவற்றை நிவர்த்தி செய்வது எப்படி போன்ற விடயங்களில் ஆழமான நுண்ணறிவு பெற உதவும். இது மலட்டுத்தன்மைக்கான சிகிச்சையில் பாரிய முன்னேற்றங்களுக்கு வழிவகுக்கும் என நம்பலாம்.

இதனால் முட்டைகளை அல்லது விந்தணுவை வேற்று நபரிலிருந்து தானமாகப் பெறுவது போலன்றி, அல்லது வாடகைத் தாய்மார் பெற்றுக் கொடுப்பது போலன்றி, அவர்களுக்கு அவர்களது சொந்த மரபணுத் தொடர்புடைய குழந்தைகளைப் பெற்றெடுக்கும் வாய்ப்பை எதிர்காலத்தில் பெற்றுத் தரும்.

நம்பிக்கையுடன் காத்திருப்போம்.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.
MBBS(Cey), DFM (Col), MCGP (col)

குடும்ப மருத்துவர்

எனது ஹாய் நலமா புளக்கில் 2013 ஜனவரியில் வெளியான கட்டுரை

0.0.0.0.0.0.

Read Full Post »