இன்றைய உணவு முறையானது இயற்கையிலிருந்து நிறையவே விலகிச் சென்றுவிட்டது.
சமையலுக்கு அதிக நேரம் செலவிடாததாக துரித உணவுகளை நோக்கி நகர்ந்துவிட்டது
தவிடு நீக்காத அரிசி, கோதுமை காய்கறிகள் போன்றவற்றிலிருந்து விலகி துரித உணுவகளையே நாடுகிறது
குத்தரிசி சோறு சாப்பிட்ட நம் இனம் நூடில்ஸ் பர்க்ர், மக்ரோனி, ரோல்ஸ், பற்றிஸ் என துரித உணவுகளை நாடி வருகிறது.
இதனால் எம்மிடையே அதீத எடை, நீரிழிவு, பிரசர், கொலஸ்டரோல், இருதய நோய்கள் எனப் பலவும் இளவயதிலேயே ஆட்டிப்ப டைக்கத் தொடங்கிவிட்டன.
உணவை நம்பி வாழ்ந்த மனிதர்கள் மருந்துகளை நம்பி வாழ வேண்டிய காலமாகிவிட்டது.
அண்மையில் செய்யப்பட்ட ஒரு ஆய்வானது பக்கற்றில் அடைக்கப்பட்ட பாண் வகைகள், பதப்படுத்தப்பட்ட இறைச்சி வகைகள்,
நொட்டை தீனிகள்
போன்றவற்றை அதிகம் உண்பவர்களுக்கு புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு அதிகம் என்கிறது
புற்று நோய்களைக் கொண்டுவரும் ஏனைய காரணிகளான
உடலுழைப்பு அற்ற வாழ்க்கை முறை,
அதிக கொழுப்பு உணவுகளை உட்கொள்ளல். புகைத்தல்
போன்றவற்றை நீக்கி கணக்கிட்டபோதும் இந்தப் பாதிப்பு உள்ளதாக ஆய்வு கூறுகிறது.
எனவே உங்கள் தேர்வு என்ன?
இயற்கையோடு .இசைந்த உணவுகளா
அதீதமாக பதப்படுத்தப்பட்ட உணவுகளா?
எம்.கே.முருகானந்தன்
https://www.jwatch.org/…/ultra-processed-foods-tied-potenti…