எறி குண்டு வீசி
நீசர்களை அழிப்பதில்
ஏன் இன்னும் தயக்கம்
அரச யந்திரத்துடன்
வம்பு ஏனெனத் தயக்கமோ?
ஒடுக்கபட்டுக் கொண்டே
இருப்பவர்களின்
ஈனக் குரல் கேட்கவில்லையா
அன்றி
கேட்காதது போல
பாவனையோ !
சம்பந்தரும் சுந்தரரும்
பாடினர் பதிகம்
சரித்திர நாயகன் இராவணன்
துதித்த தலமும் அதன்
சூழலும்,
கிழக்கு மண்ணும்
கபளீகரமாகிறதே
மாற்று இனத்தவரிடம்..
அரச அனுசரணையுடன்..
மண்ணின் அரசியல்வாதிகளும்
கண் பொத்தி காதடைத்து
வாழா மடந்தையானரே
கடைசி மனிதனும்
ஓரடி நிலமும் பறிபோன பின்தான்
வாய் திறப்பாயோ.
பொறுத்து போதும்
வீசி எறி
கணைகளை
நீசர்களை அழி
மண்ணின் மைந்தர்களை
வாழ வை
தலை நிமிர்ந்து முன் செல்ல
பாதையைத் திற…
நீசர்களை அழித்து…..
( கோணேசர் கோவிலுக்கு செல்லும் வழியில் கோட்டை வாயிலில் எடுத்த படம்.)
எம்.கே.முருகானந்தன்
மறுமொழியொன்றை இடுங்கள்