Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for the ‘அரசியல்’ Category

>

மதிலோர சிறுகம்பில்
மாநகர மின்விளக்கு அதன்
ஒளிவெள்ளம்
மறுகம்பம் நீளாது
அரைத் தொலைவில்
வலுவொடுங்கி மங்கிவிடும்.

ஆனாலும்
வானோங்க உயர்ந்திருந்து
வையமெல்லாம் கதிர் சிதறும்
மதியொழியை,
நாணவைக்கும்
தன் அருகிருப்பால்.

நள்ளிரவில் துயில் கலைந்து
நரக்குருதி தீய்ந்தெழ
மூச்சடங்கிப் பறவையினம்
சிறகடித்து விலகி ஓடும்.
நடுவெயில் சுட்டெரிக்க
நிறைவிழிகள் உறைந்திருக்க
சுடுகுழல் பேச்சொடுக்கிப் பெற்ற முதல்
சுளுவாக மடி சேரும்.

பனைமட்டை, பெரும் கொட்டன்
சுடுகம்பி இவையனைத்தும்
பெருந்திமிரில்
உள்வீதி உலாவரும்;.
கடிவாளப் பிடியிறுக்கி
தளராது அரசோச்ச.

அதிகார நடுப்புள்ளி நழுவாது
அழுங்காகப் பிடித்தாள
அருகாக வந்து ஒளிசெறியக் 
கற்றிடுவாய் வான்மதியே.

எம்.கே.முருகானந்தன்.

ஜீவநதி பங்குனி 2011 இதழில் வெளியான எனது கவிதை.

Read Full Post »