Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for the ‘உணவுக்கட்டுப்பாடு’ Category

கேள்வி:- நாயால் கடியுண்டவர்கள் ஏ.ஆர்.வி தடுப்பூசி போட்டால் முட்டை, இறைச்சி, பழவகைகள் போன்றவற்றை உண்பதைத் தவிர்க்க வேண்டுமா?
எம்.சதீஸ் நல்லூர்

பதில்:- நிச்சயமாக எதையும் உண்ணாமல் தவிர்க்க வேண்டியதில்லை. விரும்பிய உணவுகளை உண்ணலாம்.

அவை ஆரோக்கியமான உணவுகளாக இருக்கும் பட்சத்தில்.

ஏன் இவ்வாறான தவறான கருத்துகள் எம் மக்களிடையே உலாவுகிறது என்பது புரியாத புதிராக இருக்கிறது.

ஏ.ஆர்.வி தடுப்பூசி ஒரு சிலரில் ஒவ்வாமையை ஏற்படுத்தலாம். ஆயினும் அது இல்லை என்பதை அலர்ஜி பரிசோதனை ஊசி மூலம் நிச்சயப்படுத்திய பின்னரே ஏ.ஆர்.வி தடுப்பூசியை போடுவார்கள். எனவே தயக்கமின்றிப் போடலாம்.

அதேபோல முட்டை, இறைச்சியும் ஏங்காவது ஒரு சிலரில் ஒவ்வாமையை ஏற்படுத்தலாம். அதை அவர்களே அனுபத்தில் அறிந்திருப்பார்கள். அவ்வாறு அலர்ஜி உள்ளவர்கள் அவற்றை நிச்சயம் தவிர்க்க வேண்டும். ஏ.ஆர்.வி தடுப்பூசி போடும்போது மட்டுமல்ல. எப்போதும்.
எவ்வாறாயினும் ஏதாவது ஒவ்வாமை ஒருவருக்கு இருந்தால் அது பற்றி ஊசி போடு முன்னர் மருத்துவருக்கு தெரிவிக்க வேண்டும்.
போதிய பாதுகாப்புடன் தடுப்பூசியைப் போட அந்தத் தகவல் மருத்துவருக்கு உதவும்.
யாழ் லிருந்து வெளியாகும் எதிரொலி வாராந்த பத்திரிகையின் சொல்லுங்கோ டொக்டர் பகுதியில் வாசகர் கேள்விகளுக்கு நான் அளிக்கும் பதில்கள்

Read Full Post »