Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for the ‘கேள்வி பதில்கள்’ Category

மார்பகப் புற்றுநோய் எதனால் ஏற்படுகிறது?

கவிதா, பளை

பதில்: மார்பகப் புற்றுநோய்க்கு இதுதான் காரணம் என்று ஒன்றைச் சுட்டிக் காட்டுவது என்பது இயலாத காரியம். மார்பகப் புற்றுநோய்க்கு மட்டுமல்ல ஏனைய புற்று நோய்களுக்கும் அவ்வாறுதான்.

ஆனால் அந்த ஆபத்தை ஏற்படுத்தக் கூடிய காரணிகள் எனப் பலவற்றை சொல்லலாம். இத்தகைய ஆபத்தான காரணிகள் உள்ள எல்லோருக்கும் புற்றுநோய் எதிர்காலத்தில் நிச்சயம் புற்றுநோய் வரும் என அர்த்தப்படுத்தக் கூடாது. வுரக் கூடிய ஆபத்து அல்லது சாத்தியம் அதிகம் என்றே கொள்ள வேண்டும்.

முக்கிய காரணியாக பரம்பரை அம்சத்தைக் கூறலாம். பரம்பரையில் யாருக்காவது மார்பகப் புற்றுநோய் இருந்தால் அவர்களது வழித்தோன்றல்களுக்கு வரக் கூடிய சாத்தியம் அதிகம்.

அத்தகையவர்களுக்கு பரம்பரை அலகு பரிசோதனை மூலம் இது வரக் கூடிய ஆபத்து இருக்கிறதா என்பதை இப்பொழுது கண்டறிய முடியும்.

மார்பகத்தில் புற்றுநோயல்லாத வேறு சில வகை கட்டிகள் ஏற்கனவே வந்தவர்களுக்கும் எதிர்கலத்தில் மார்பகப் புற்றுநோய்க்கான சாத்தியம் அதிகம்.

மிகக் குறைந்த வயதில் (12க்கு முதல்) பெரியவளானவர்களுக்கும், 55 வயதாகியும் மாதவிடாய் முற்றாக நிற்காதவர்களுக்கும் மார்பகப் புற்றுநோய் வருவதற்கான சாத்தியம் அதிகமாகும்.

குழந்தைகள் பெறாத பெண்களுக்கும் முதற் குழந்தையை 30 வயதிற்கு பின்னரே பெற்றவர்களுக்கும் இதற்கான ஆபத்து அதிகமாகும்.

அதீத எடை உள்ள பெண்களுக்கும் மார்பக புற்றுநோய் வரக் கூடிய ஆபத்து அதிகம்.

அதேபோல வேறு நோய்களுக்காக மார்பில் ரேடியம் கதிர்சிகிச்சை செய்தவர்களுக்கும் ஆபத்து ஆதிகம் எனப்படுகிறது.

கடந்த பத்து வருட காலத்திற்குள் குடும்ப கட்டுப்பாட்டு மாத்திரைகள் உபயோகித்தவர்களுக்கும் மார்பக புற்றுநோய் வருவதற்கான சாத்தியம் சற்று அதிகமாகும்.

மாறாக குழந்தைக்கு ஒன்றரை முதல் இரண்டு வருடங்கள் வரை பாலூட்டிய தாய்மாருக்கு மார்பக புற்றுநோய் வருவதற்கான சாத்தியம் குறைவாகும். தினசரி உடற்பயிற்சி செய்பவர்களுக்கும் அவ்வாறே குறைவாகும்.

மமோகிராம் பரிசோதனையின் போது மார்பக திசுக்களின் அடர்த்தி அதிகமாக இருப்பதாக காணப்பட்டவர்களுக்கும் ஆபத்து ஆதிகம் எனப்படுகிறது.

எனவே இத்தகைய சாத்தியக் கூறுகள் உள்ளவர்கள் செய்ய வேண்டியது என்ன? ஒழுங்கான முறையில் சுய மார்பகப் பரிசோதனை செய்ய வேண்டும்.

சிறிய சந்தேகம் இருந்தாலும் மருத்துவ ஆலோசனை பெறுவது அவசியமாகும்.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்
குடும்ப மருத்துவர்

0.00.0

Read Full Post »

கேள்வி:- கே.சு…..  மட்டுவல
எனது நண்பனுக்கு வயது 18. வாரத்துக்கு 5 தடவைகளாவது சுய இன்பத்தில் ஈடுபடுகின்றான். அத்தோடு அவனைவிட வயதில் மூத்த ஆண்களோடு தவறான உறவில் ஈடுபடுகின்றான். இதற்கு காரணம் என்ன? இதற்கான தீர்வு என்ன?


பதில்:- சுயஇன்பத்தில் ஈடுபடுவது அவன் மாத்திரமல்ல. ஆண் பெண் என்ற வேறுபாடு இன்றியும் வயது வேறுபாடு இன்றியும் பெரும்பாலனவர்கள் இதில் ஈடுபடுகிறார்கள். அல்லது முன்பு ஈடுபட்டிருப்பார்கள்.

இதை நான் வெளிப்படையாகச் சொல்வது பல தூய்மைவாதிகளுக்கு கோபத்தை ஏற்படுத்தலாம். இருந்தாலும் அதுதான் உண்மை. அமெரிக்காவில் செய்யப்பட்ட ஆய்வில் 95% சதவிகிதமான ஆண்களும் 89% மான பெண்களும் தாங்கள் சுயஇன்பத்தில் ஈடுபட்டுள்ளதாகச் சொல்லியுள்ளார்கள். எனவே உங்கள் நண்பன் ஏதோ தவறு செய்ததாக எண்ணாதீர்கள்.

ஒருவரது தனது பாலியல் தொடர்பான உளநெருக்கீட்டை தணிப்பதற்கான வடிகாலாகவே சுயஇன்பம் இருக்கிறது. பதின்ம வயதுகளில் பாலியல் எழுச்சி ஏற்படுவது அதிகம். அது இயற்கையின் நியதி. ஆயினும் கல்வி தொழில் வாய்ப்பு போன்ற காரணங்களால் அதை ஆண் பெண் உறவு மூலம் தீர்க்க சமூக ரீதியாக முடிவதில்லை. பதின்ம இதைத் தீர்ப்பதற்கு எதிர்பாலினர் கிடைப்பது சாத்தியம் இல்லை. திருமணம்கள் மிகவும் காலதாமதமாகின்றன. எனவேதான் தாமே தீர்த்துக் கொள்ள நேர்கிறது. உங்கள் நண்பரின் நிலையும் அதுதான்.

சுயஇன்பத்தால் உங்கள் நண்பருக்கு உடல்நலக்கேடு ஏற்பட வாய்ப்பில்லை. இரவில் தானே ஸ்கலதமாபவர்கள் நேய்ப்வாய்ப்படுகிறார்களா? இல்லையே!!!

இருந்தபோதும் அவரது கல்வி தொழில் போன்ற நாளந்த செயற்பாடுகளை அசட்டை செய்யும் அளவிற்கு அவரது சுயஇன்ப நாட்டம் அதிகமானால் உளவளத் துணையை நாட வேண்டும்.

உங்களது நண்பரது மற்ற பழக்கம் ஆபத்தானது.

மற்ற ஆண்களுடன் ஒருபால் புணர்ச்சியில் ஈடுபடுவதானது பாலியல் நோய்த் தொற்றுக்கு இட்டுச் செல்லலாம். சிபிலிஸ், கொனரியா, எச் ஐ வி, வைரஸ் வோர்ட் போன்ற பலவும் பாலியல் உறவுகளால் தொற்றும் நோய்களாகும்.

எயிட்ஸ் நோய் கண்டு பிடிக்கப்பட்ட 80களில் அந்நோய் தொற்றுவதற்க்கு ஒருபால் புணர்ச்சியே முக்கிய காரணமாக இருந்தது என்பதை அறிவீர்களா?

எந்த வயதுள்ள பிறருடன் உறவு வைத்தாலும் பாலியல் நோய்கள் தொற்றுவதற்கான வாய்ப்பு உண்டு.

அவரை விட மூத்த வயதுள்ளவர்கள் என நீங்கள் குறிப்பிட்டவர்கள் யார் யாருடன் எல்லாம் உறவு வைத்து நோய்க் காவிகளாக திரிகிறார்களோ தெரியாது. எனவே அதை நிறுத்துமாறு ஆலோசனை சொல்லுங்கள்.

பிகு

ஓரினப் புணர்ச்சி சரியானதா தவறானதா?
இயற்கையானதா இயற்கைக்கு மாறானதா? என்பது பற்றி
இங்கு நான் ஆராய முற்படவில்லை.

அது பற்றிய வாதப்பிரதிவாதங்கள் நடந்து கொண்டே இருக்கின்றன.

ஆனால் பல சிறார்களை ஓரின உறவிற்கு பல நெறிகெட்ட மனிதர்கள் ஆசை ஊட்டியோ அன்றி அதிகாரத்தைப் பயன்படுத்தியோ உட்படுத்தப்படுவதை
ஊடகங்கள் மூலமும் தொழில் ரீதியாகவும் அறிய முடிகிறது.

இது தவறான நெறிமுறை என்பதை எவரும் ஏற்றுக் கொள்வர்.

ஆனால் அதற்கு மேலாக அது பாலியல் தொற்று நோய்களுக்கும் வித்திடும்.

எனவே இது பற்றிய விழிப்புணர்வை இளம் சமூதாயத்தினருக்கு ஏற்படுத்துவது அவசியம்.
கேள்வி:- எனது உடல் தினசரி சோர்வாகவே உள்ளது. அடிக்கடி தாகம் (15 நிமிடத்திற்கு ஒரு தடவை) வருகிறது. அடிக்கடி சிறுநீர் வருகிறது. தோன்றுகிறது. சளி தொடர்ந்துள்ளது. தொடர் வயிற்றுவலியும் இருக்கின்றது. காரணம் என்ன?

பதில்:- உங்கள் வயதைச் சொல்லவில்லை. இருந்தாலும் உங்கள் நண்பரின் வயது 18 என்பதால் உங்களுக்கும் அதை ஒட்டியே இருக்கும் என எண்ணலாம். எவ்வளவு காலமாக இந்த அறிகுறிகள் உள்ளன என்பதும் தெரியவில்லை. சிறுநீர் மற்றும் இரத்தப் பரிசோதனைகள் செய்து பார்த்தாலே நோயைத் தெளிவாகக் கண்டறிய முடியும்.

உடற் சோர்வு, தண்ணீர் தாகம் மற்றும் அடிக்கடி சிறுநீர் கழிதல் என்றால் உடனடியாக நினைவிற்கு வருவது நீரிழிவு நோய்தான். இரத்தத்தில் சீனியின் அளவு அதிகரித்திருந்தால் உங்கள் சிறுநீரகம் கூடுதலாக தொழிற்பட்டு சீனி சிறுநீருடன் வெளியேறுவதைத் தடுக்க முயலும். இதனால் சிறுநீர் உற்பத்திஅதிகமாகி நீங்கள் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டிய நிலை ஏற்படலாம்.

எனவே உடனடியாக குருதிச் சீனியின் அளவைப் பரிசோதித்துப் பாருங்கள். குயளவiபெ டிடழழன ளுரபயச செய்து பார்ப்பது அவசியம்.
அத்துடன் சிறுநீர்ப் பரிசோதனை (ருசiநெ குரடட சநிழசவ) செய்து பார்க்கவும் வேண்டும். ஏனெனில் சிறுநீரில் கிருமித் தொற்று ஏற்பட்டிருந்தால் அடிக்கடி சிறுநீர் கழிவதுடன் அடிவயிற்றில் வலியும் ஏற்படலாம். ஆனால் பொதுவாகச் சலக் கடுப்பும் சேர்ந்திருக்கலாம்.

சளித்தொல்லையும் இருப்பதாகச் சொன்னீர்கள். சளி மூக்கடைப்பு, மற்றும் சைனஸ் தொல்லை இருந்தாலும் உடற் சோர்வு, தண்ணீர் தாகம் ஆகியவை ஏற்படும்.

இவற்றைத் தவிர மனப் பதற்றம், உளநெருக்கீடு, மனச் சோர்வு போன்ற பிரச்சனைகள் இருந்தாலும் உடற்சோர்வும் அடிக்கடி சிறுநீர் கழிதலும் ஏற்படலாம்.

அடிக்கடி கோப்பி குடிப்பவர்கள், தூக்கக் குறைபாடு, கபால வலி எனப்படும் மைக்கிரேன் தலைவலி என இன்னும் பல காரணங்களும் இருக்கலாம்.

எனவே இது ஏன்ன நோய் என நீங்களே யோசித்து மனப்பதற்றம் அடைவதைத் தவிர்த்து உங்கள் மருத்துவருடன் நேரில் சென்று கதைத்து வேண்டிய பரிசோதனைகள் செய்வதன் மூலம் நோயை சரியயாகக் கண்டறிவதே உசிதமானதாகும்.

0.00.0
இது போன்ற பல கேள்வி பதில்கள் எனது ஹாய் நலமா புளக்கில் வெளியாகின்றன

Read Full Post »

கேள்வி 1 :- எனது பத்து வயது மகனுக்கு கடுமையான காய்ச்சல் வந்தபோது மருத்துவரிடம் கொண்டு சென்றோம். 103, 104 என ஏறிக் காய்ந்தது. உடம்பு நோகுது என அனுங்கிக் கொண்டு கிடந்தான். இரத்தம் சோதித்துப் பார்த்து வைரஸ் காய்ச்சல் என்று மருந்துகள் கொடுத்தார். ஒவ்வொரு நாளும் கொண்டு வரச் சொல்லிப் மகனைப் பார்த்தவர் நாலாவது நாள் திரும்பவும் இரத்தம் சோதித்துப் பார்த்துவிட்டு டெங்கு என்று சொல்லி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கச் சொன்னார். ஆஸ்பத்திரையிலை நல்ல வைத்தியம் செய்தவையள். இப்ப சுகம்;. ஆரம்பத்திலையே டெங்கு என்று சொல்லியிருந்தால் பிரச்சனை இல்லாமல் மாத்தியிருக்கலாம்தானே.

விடை:- சற்று விபரமாகச் சொன்னால்தான் ஏன் அவ்வாறு செய்தார் என்பதற்கான காரணம் புரியும். பொறுமையோடு படியுங்கள்.

டெங்குக் காய்ச்சலும் ஒரு வகை வைரஸ் காய்ச்சல்தான். உண்மையில் எல்லா டெங்குக் காய்ச்சலும் ஆபத்தானவை அல்ல.

50 சதவிகிதமானவர்களில் டெங்குக் காய்ச்சலானது சாதாரண வைரஸ் காய்ச்சல் போல எந்தப் பிரச்சனையும் இன்றி தானாகவே மாறிவிடும். அவ்வாறு சாதாரணமாக மாறும் டெங்குவாக இருக்கும் இடத்து, இது டெங்குவாக இருக்கலாம் என முதல்நாளே மருத்துவர் யாருக்காவது சொன்னால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாக நேரும். தேவையற்ற பரிசோதனைகளைச் செய்வதுடன் சிலர் அவசரப்பட்டு தனியார் மருத்துமனையில் அனுமதித்து வீண் செலவுகள் செய்யவும் நேரும்.

ஆனால் இரத்தப் பெருக்கு டெங்கு சற்று ஆபத்தானது. மூக்கால் இரத்தம் வடிதல், இரத்த வாந்தி போன்ற திகிலூட்டும் அறிகுறிகளுடன் வந்தாலும் பெரும்பாலனவர்கள் உயிர் தப்பிவிடுவார்கள்.

மிகவும் ஆபத்தான ‘டெங்கு அதிர்ச்சி நிலை’ காய்ச்சலால் மிகக் குறைந்த 2 சதவிகிதமானவர்கள் மட்டுமே பாதிக்கப்படுவார்கள். இவர்களை ஆரம்ப நிலையில் கண்டறிந்து மருத்துவமனைகளில் அனுமதித்துப் பாரமரிப்பதற்கே குருதிப் பரிசோதனைகள் அவசியம் ஆகிறது. எனவே காய்ச்சல் வரும் ஒவ்வொருரிலும் அவ்வாறு செய்வது பொருளாதார ரீதியயாகச் சாத்தியமானதல்ல.

முதல் நாளில் (White blood cell count – WBC) என்ற பரிசோதனையையே பெரும்பாலும் செய்வார்கள். குருதியில் உள்ள வெண்குருதிக் கலங்களின் எண்ணிக்கையையின் அளவைக் கொண்டு காயய்ச்சலானது வைரஸ் கிருமியால் ஏற்பட்டதா பக்றீரியா கிருமியால் ஏற்பட்டதா என்பதைக் கண்டறிய முடியும்.

அதனைக் கொண்டு நுண்ணுயிர் கொல்லி மருந்துகள் கொடுக்கப்பட வேண்டுமா இல்லையா என்பதை மருத்துவர் தீர்மானிப்பார்.

நோயாளியின் உடல் நிலையில் முன்னேற்றம் இல்லாவிடில் மூன்றாம் அல்லது நான்காம் நாளில் இதே பரிசோதனையை மீண்டும் செய்வார்கள். அதில் வெண்குருதிக் (White cell)  கல மற்றும் சிறுதுணிக்கை (Platelet)  எண்ணிக்கை ஆகியவற்றைக் கொண்டு அது டெங்குவான இருக்குமா என்பதை அறிய முடியும்.

டெங்குதான் என்பதை முற்றுமுழுதாக நிச்சயப்படுத்த காய்ச்சல் ஆரம்பித்த நான்காம் நாளில் (Dengue antibody test)  செய்யலாம். இருந்த போதும் சிகிச்சையைப் பொறுத்த வரையில் இது அவசியம் தேவையானது அல்ல.

அதேபோல காய்ச்சல் ஆரம்பித்த முதல் நாளிலிலேயே (Dengue antigen test)  செய்யலாம். இருந்தபோதும் இப் பரிசோதனை மூலம் அது எந்தப் பிரச்சனையும் இன்றி தானாகவே மாறும் சாதாரண டெங்குக் காய்ச்சலா அல்லது கடுமையான ‘டெங்கு அதிர்ச்சி நிலை’ என்பதைக் கண்டறிய முடியாது.

Dengue antibody test, Dengue antigen test ஆகியவை விலை கூடிய பரிசோதனைகள். ஓவ்வொன்றும் சுமார் ரூபா 2500 ற்கு மேல் வரும்.

உங்கள் குழந்தைக்கு சாதாரணWBC பரிசோதனையை மட்டும் செய்திருப்பார் என ஊகிக்க முடிகிறது. அதைக் கொண்டு சரியான நேரத்தில் உங்கள் குழந்தையை மருத்து மனையில் அனுமதித்த மருத்துவர் பாராட்டுக்குரியவர்.
1907867_10154781071405268_137329397327526091_n

0.00.0

கேள்வி:- எனக்கு நித்திரையில் குளறுபடி உண்டு. கனடாவில்; உள்ள வாழ்க்கைச் சூழல் எம் சமுதாயமக்கள் பலருக்கு நள்ளிரவு 12 மணிக்கு முன் நித்திரைக்குச் செல்வதென்பது நடக்கக் கூடிய விடயமல்ல.
பலர் அதிகாலை 5 மணிக்கு எழும்ப வேண்டியவர்களாகவே உள்ளனர். வேலை முடிந்து வந்ததும் 6.30 மணிக்கே நித்திரை போட்டு ஆட்டும், ஆனால் அதைச் சமாளித்து விடடால் அதிகாலை 1- 2 மணிவரை பின் நித்திரை வருவதில்லை.

அதன் பின் உலகில் என்ன, நடக்கிறதெனத் தெரியாது. 7 மணிவரை படுப்பேன். அதன்பின் வேலைக்குச் செல்ல தாராளமாக நேரமுண்டு.

60 வயதான எனக்கு ஒரு வைத்தியராக உங்கள் அறிவுரை என்ன? சிலர் என்னைப் பயமுறுத்துகிறார்கள்.

விடை:- பொதுவாக வளர்ந்தவர்களுக்கு 7 முதல் 8 மணி நேரத் தூக்கம் தேவைப்படும். ஆயினும் இப்பொழுது பெரும்பாலனவர்கள் 6 மணி நேரத் தூக்கத்துடன் நலமாக உள்ளனர். 9 மணி நேரத் தூக்கம் தேவைப்படுபவர்களும் உள்ளனர்.

மறுநாள் வேலையைக் குளப்பமின்றிச் செய்வதற்குத் தேவையான தூக்கம் தேவை. இது ஆளுக்கு ஆள் மாறுபடும். மரணபணுக் காரணிகளும் பரம்பரைக் காரணங்களும் இதைத் தீர்மானிக்கக் கூடும்.

வாழ்க்கை முறைகளுக்கு ஏற்ப தூங்கும் காலத்தையும் மாற்ற வேண்டிய காலத்தில் இருக்கிறோம். 60 – 70களில் மனிதர்களின் சராசரித் தூக்கம் 8 முதல் 9 மணிவரை இருந்தது. இப்பொழுது 7 முதல் 7.5 மணிநேரம் மட்டுமே தூங்குகிறார்கள்.

இருந்தபோதும் பிறந்த சில காலத்திற்கு குழந்தைகள் 20 மணிநேரம் தூங்கக் கூடும் வளரிளம் பருவத்திலும் தூக்கம் சற்று அதிகம்.

ஊங்களைப் பொறுத்த வரையில் 1 மணி முதல் 7 மணி வரை தூங்குகிறீர்கள். மொத்தம் 6 மணிநேரம் தூக்கம் எனலாம். சற்றுக் குறைவுதான். இருந்தாலும் உங்கள் வாழ்க்கை முறையயைப் பாதிக்கவில்லை என்பதால் ஓரளவு போதும் என எண்ணுகிறேன். முடிந்தால் அரை மணி நேரம் முன்னரே தூங்குங்கள். போதுமாக இருக்கும்.

02.11.204 ஞாயிறு தினக்குரல் பத்திரிகையில்
வாசகர் கேள்விகளுக்கு எனது பதில்கள்

Read Full Post »