Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for the ‘சரஸ்வதி சிலை’ Category

>

எமது ஆரம்பப் பாடசாலையான மேலைப்புலோலி சைவப் பிரகாச வித்தியாலயத்தில் பாடசாலை மாணவர்களின் தினசரி காலை வழிபாட்டின்போது வணங்குவதற்கான சிலை இல்லாததை உணர்ந்திருந்தார் அதிபர்.திரு.மு.கனகலிங்கம். அவர்களின் முன் முயற்சியால் இப்பொழுது சிலைகள் பாடசாலையின் இரு வளாகங்களிலும் அமைக்கப்பட்ட செய்தியை தந்திருந்தோம்.

பாடசாலையின் பிரதான வளாகத்தின் தெற்குப் புறமாக இரு மண்டபங்களுக்கும் இடையே உள்ள பகுதியில்  சரஸ்வதி சிலை அமைக்கப்பட்டுள்ளது. பிள்ளைகள் காலையில் சிலையைப் பார்த்தபடி காலைத் துதி செய்யும்போது முற்றுக் கொற்றாவத்தை பிள்ளையார் கோவில் ஆலயமும் அத் திசையிலேயே பார்வைக்கு எட்டிய தூரத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

அமரர்களான பத்மநாதன். இராஜலட்சுமி தம்பதிகளின் நினைவாக இச் சிலை அமைக்கப்பட்டுள்ளது. அவர்களது குடும்பத்தினர்அதற்கான நிதியுதவியை வழங்கியிருந்தனர்.

அதிபர்.திரு.மு.கனகலிங்கம் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க அமைக்கப்பட்ட இச் சிலை திறப்பு விழாவின்போது பத்மநாதன். இராஜலட்சுமி தம்பதிகளின் மகளான திருமதி.மீனலோசனி  மற்றும் மருமகன் திரு. தம்பிராசா ஆகியோர் கலந்து சிறப்பித்து, திரை நீக்கம் செய்து  வைத்தனர்.


இச் சிலையை தம்பசிட்டியைச் சார்ந்த கலாபூசணம்.கோ.வேலுப்பிள்ளை வடிவமைத்துக் கொடுத்துள்ளார்.

மற்றச் சரஸ்வதி சிலையானது பாடசாலையின் சிறிய வளாகத்தின் மேற்குப் புறமாக கிணற்றடிக்கு அருகில் இரு மண்டபங்களுக்கும் இடையே உள்ள பகுதியில்   அமைக்கப்பட்டுள்ளது.

எமது பாடசாலையின் புகழ்பூத்த மாணவர்களில் ஒருவரான அமரர்.வை.கா.சிவப்பிரகாசம் (முன்னாள் அதிபர் கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை) அவர்களது ஞாபகார்த்தமாக அவரது மகன் திரு.வை.கா.சி.முகுந்தன் அவர்களது நிதியுதவில் அமைக்கப்பட்டுள்ளது.  இது பாடசாலை உபஅதிபர் கணநாதன் அவர்களது வேண்டுகோளுக்கு இணங்க அமைக்கப்பட்டுள்ளது.

இச்சிலையை அமரர் வை.கா.சிவப்பிரகாசம்அவர்களது இளைய சகோதரரான திரு.வை.கா.இராமச்சந்திரன் அவர்கள் தமது குடும்பத்தினர் சார்பாக திரை நீக்கம் செய்து திறந்து வைத்தார்.

பாலர் வளாகத்தில் உள்ள சிலையை தென்னிந்தியாவைச் சார்ந்த சிற்பக் கலைஞர்கள் வடிவமைத்துக் கொடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இரு சிலைகளுமே மிக அழகாக கலைஅம்சம் நிறைந்தனவாக அமைந்தமை மிகவும் மகிழ்ச்சி ஊட்டுகிறது. அவற்றில் உள்ள தெய்வீகக் களை மாணவர்கள் தம் மனத்தை ஒருமனப்படுத்தி, கற்கைச் செயற்பாட்டில் ஈடுபட வைக்கும் என நம்பலாம்.

இரண்டு சரஸ்வதி சிலைகளையும் அருகருகே வைத்துப் பார்க்கும்போது பிரதான வளாகத்து சிலையானது எமது பாரம்பரிய சிற்பக் கலையை நினைவூட்டுவதாக அமைந்திருப்பதாக என் மனத்தில் பட்டது.

பாலர் வளாகத்துச் சிலை அழகில் அதற்குச் சற்றும் குறைந்ததல்ல. இது நவீன சிறப்பக்கலையி்ன் நுணுக்கங்களை உள்வாங்கிப் படைக்கப்பட்டதாக மனதில் படுகிறது.


எவ்வாறாயினும் எமது பாடசாலை மாணவர்களின் நீண்ட காலத் தேவை பூர்த்தி செய்யப்பட்டமை மகிழ்ச்சியளிக்கிறது.

இச்சிலை நிறுவுவதற்கான முயற்சிகளை எடுத்த அதிபர்.திரு.மு.கனகலிங்கம், முழு ஒத்துழைப்பு வழங்கிய உப அதிபர் திரு கணநாதன், மற்றும் ஆசிரியர்களுக்கு எமது பாராட்டுகளையும் நன்றிகளையும் எமது பழைய மாணவர் ஒன்றியத்தின் சார்பில் தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.

இதற்கான நிதியுதவையை அளித்து, எமது பாடசாலை மாணவர்களின் கனவை நனவாக்கிய அமரர்களான பத்மநாதன். இராஜலட்சுமி தம்பதிகளின் குடும்பத்தினருக்கும், அமரர்.வை.கா.சிவப்பிரகாசம்குடும்பத்தினருக்கும் எமது மனமார்ந்த நன்றிகள்.

மற்றும் சிலைகளை வடிவமைத்த சிற்பிகள், விழாவில் கலந்து கொண்ட பாடசாலை நலன் விரும்பிகள் அனைவருக்கும் எமது பழைய மாணவர் ஒன்றியத்தின் சார்பில் நன்றி தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.


0.0.0.0.0.0.0

Read Full Post »

>

எமது பாடசாலையின் இரு பிரிவுகளிலும் சரஸ்வதி சிலை அமைக்கும் பணி நடை பெற்று வந்ததை அறிந்திருப்பீர்கள்.

இச் சிலைகளின் திறப்பு விழா இன்று காலை நடை பெற்றது. அது பற்றிய தகவலை மேற் கண்ட அழைப்பிதழில் காணுங்கள். விழா கல்லூரி அதிபர் திரு.மு.கனகலிங்கம் தலைமையில் நடைபெற்றது.

பாடசாலை பெரிய வழாகத்தின் சிலையானது அமரர்களான பத்மநாதன் இராசலஸ்மி தம்பதிகளின் நினைவாக அவர்களின் குடும்ப அங்கத்தவர்கள் நிதியுதவியுடன் அமைக்கப்பட்டது.

அதே வேளை சிறிய வளாகத்திற்கான சிலையானது அமரர்  வை.கா.சிவப்பிரகாசம் அவர்களது நினைவாக அமைக்கப்படுவதற்கு அவரது மகன் திரு.சிவப்பிரகாசம் முகுந்தன் நிதியுதவி அளித்துள்ளார்கள்.

சிலையை அமைத்த சிற்பக் கலைஞர் கலாபூசணம் கோ.வேலுப்பிள்ளை அவர்கள் விழாவில் கெளரவிக்கப்பட்டார்.

சிலை அமைப்பதற்கு நிதியுதவி வழங்கியவர்களுக்கும், சிலையை அமைத்த கலைஞர்களுக்கும், சிலை அமைப்பதற்கு முன்முயற்சி எடுத்த அதிபர் திரு.மு.கனகலிங்கம, சக ஆசிரியர்கள், விழாவில் கலந்து கொண்ட அன்பர்கள் அனைவருக்கும் எமது ஒன்றித்தின் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

Read Full Post »

>

சரஸ்வதி சிலைகள்

கல்விக்கு உரியவள் சரஸ்வதி என்பது எமது சமூகத்தின் பாரம்பரிய நம்பிக்கை. தினமும் பாடசாலை தொழுமையுடன் ஆரம்பிக்கிறது. மாணவர்கள் தேவாரம் மற்றும் துதிப் பாடல்கள் பாடி தினமும் நாளை அர்ப்பணிப்புடன் ஆரம்பிக்கும்போது அவர்கள் வணக்கத்திற்கு ஒரு சரஸ்வதி சிலை அவசியம் என சில மாதங்களுக்கு முன்னர் இங்கு குறிப்பிட்டிருந்தோம்.

இப்பொழுது எமது பாடசாலையின் இரு வளாகங்களுக்கும் தனித்தனியே ஒவ்வொரு சரஸ்வதி சிலை செய்வதற்கான நிதியுதவி கிட்டியுள்ளது.

  • பிரித்தானியாவில் (UK) வாழும் எமது பாடசாலையின் பழைய மாணவரான பத்மநாதன் சோதிநாதன் அவர்கள் ஒரு இலட்சம் பணத்தைஅன்பளிப்பாகத் தந்துள்ளார். இப் பணத்தில் பிரதான வளாகத்தில் சரஸ்வதி சிலை அமைக்கப்படுவதற்கான ஏற்பாடுகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. தனது தாயாரான திருமதி.இராசலட்சுமி பத்மநாதன் அவர்களது நினைவாக இந்தச் சிலையை செய்து தருகிறார். இளைப்பாறிய புகையிரத நிலைய அதிபரான திரு.செ.பத்மநாதன் அவர்களின் பாரியாரும், புகழ் பெற்ற உயிரியல் ஆசிரியர் நாகநாதன் அவர்களது தாயார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

  • திரு.சிவப்பிரகாசம் முகுந்தன் (USA) அவர்கள் ரூபா ஒரு இலட்சம் பணத்தை அன்பளிப்பாகத் தந்துள்ளார். இந்நிதியைக் கொண்டு பாடசாலையின் பாலர் வளாகத்தில் சரஸ்வதி சிலை அமைக்கப்பட இருக்கிறது. இது அவரது தகப்பனார் திரு.வை.கா.சிவப்பிரகாசம் அவர்களது நினைவாக அமைக்கப்பட இருக்கிறது. வை.கா.சி எனவும் A+ எனவும் அக்கால மாணவர்களால் அன்போடு அழைக்கப்பட்ட திரு.வை.கா.சிவப்பிரகாசம் எமது பாடசாலை பெற்றெடுத்த சிறந்த கல்விமான்களில் ஒருவராவார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் M.A. பட்டதாரியான இவர் காட்லிக் கல்லூரி ஆரம்பத்தில் ஆசிரியராகக் கடமையாற்றினார். கொழும்பு சஹீராக் கல்லூரியிலும் கடைமையாற்றினார். பின்னர் கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியன் அதிபராகவும் கடமையாற்றிவராவார்

நிதியுதி அளித்த திரு.சிவப்பிரகாசம் முகுந்தன் USA மற்றும் பத்மநாதன் சோதிநாதன்(UK) ஆகியோருக்கு எமது பழைய மாணவர் ஒன்றியத்தின் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந் நிதியுதிகளைப் பெற்றுக் கொடுப்பதில் ஊக்கம் செலுத்திய எமது பழைய மாணவர் ஒன்றிய கண்டிப் பிரிவின் தலைவர் திரு.சி.வாசுதேவன் அவர்களுக்கும் கண்டி பழைய மாணவர் ஒன்றிய உறுப்பினர் திரு.கந்தையா செல்வமோகன் அவர்களுக்கும் எமது நன்றிகள். அதேபோல நோர்வேயில் வாழும் திரு.இரத்தினசபாபதி கிருஸ்ணராசா அவர்களுக்கும் எமது நன்றிகள்.

இச் சிலைகளை  தம்பசட்டியைச் சார்ந்த ஆச்சாரியார் வேலுப்பிள்ளை அவர்கள்  செய்து தருவதற்கு இணங்கியுள்ளதாக அறிகிறோம்.

Read Full Post »