Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for the ‘சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு’ Category

>

சென்ற தை மாதம் 6,7,8,9  திகதிகளில் கொழும்பில் நடை பெற்ற சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு 2011 மிகச் சிறப்பாக நடைபெற்றது.

பல சலசலப்புகள் எழுந்தபோதும் அவற்றை மேவி மிகச் சிறப்பாக நடைபெற்ற மாநாடு அதுவாகும். பல பயனுள்ள கட்டுரைகள் படிக்கப்பட்டன.

இது விழாவின் நிகழ்சிநிரல் நூலாக..

பல எழுத்தாளர்கள் ஒருவரை ஒருவர் நேரில் சந்திக்கக் கிடைத்தமை மிக அரிய அனுபவமாகும்.

தெணியான், செங்கை ஆழியான் மேடையில்

 அதிலும் வெளியூர்களில் இருந்து வந்திருந்த பல இளம் எழுத்தாளர்கள் தங்கள் முன்னோடிகளைக் கண்டும் அவர்களுடன் நேரில் பேசியும் மகிழ்ந்ததை நேரில் காணக் கூடியதாக இருந்தது.

கூட்டத்தில் இரண்டாம் நிகழ்வு ஒன்றின்போது பார்வையாளர் சிலர்

ஒரே நேரத்தில் மூன்று அரங்குகளில் எனப் பல ஆய்வரங்குகள் நடைபெற்றன. அனைத்தும் சிறப்பாக இருக்கும் என்றபோதும் எதில் கலந்து கொள்வது எனத் தீர்மானிக்கப் பலராலும் முடிவெடுப்பதில் சிரமம் இருந்தது. இத்தகைய மநாடுகளில் இது தவிர்க்க முடியாததே.

நிகழ்வுகள் நேரத்திற்கு ஆரம்பமாகி குறித்த நேரத்தில் முடிவுற்றமைக்கு அமைப்பாளர்களையும் பங்கு பற்றியோரையும் ஒரே நேரத்தில் பாராட்ட வேண்டும்.

விழாவை ஒட்டி பல நூல்கள் வெளிடப்பட்டன.

1. கட்டுரைக் கோவை

2. விழா தொடர்பான சிறப்பு மலர்.

3. பேராளர்களுக்கு வழங்கப்பட்ட நூல்களில் முகங்கள் என்ற தலைப்பிலான புலம் பெயர்  பற்றிய சிறுகதைத் தொகுதி.

3. டொக்டர் சிவதாஸ் எழுதிய மகிழ்வுடன் என்ற உளவியல் நூல்.

பல சஞ்சிகைகள் தங்கள் அம்மாத இதழ்களை மாநாட்டுச் சிறப்பிதழ்களாக வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது.

1. மல்லிகை ஆண்டு மலர் விழாச் சிறப்பிதழாக

2. ஞானம் சர்வதேச எழுத்தாளர் மாநாட்டு சிறப்பிதழ்.

 நூல் விற்பனை நிலையம் வாயிலருகே அமைந்திருந்தது. பலரும் அவற்றைப் பார்ப்பதும், தமக்குப் பிரியமானவற்றை வாங்குவதுமாக இருந்தனர்.

3. ஜீவநதி சர்வதேச எழுத்தாளர் மாநாட்டு சிறப்பிதழ்

இதற்காக அயராது உழைத்த திரு.ஞானசேகரன், அஸ்ரப் சிஹாப்தீன், ஜின்னாஹ் ஷரிபுத்தீன், முருகபூபதி போன்ற அனைவரும் பாராட்டுக்கு உரியவர்களாவர். ஆனால் இவர்களைத் தவிர ஒரு பெரும் படைப்பாளி உலகமே அவர்கள் பின் நின்று ஒத்தாசை வழங்கியதை மறக்க முடியாது.

மாநாட்டில் நானும் கலந்து கொண்டேன்.எஸ்.டி.சிவநாயம் அரங்கில் முதல் நாள் நடைபெற்ற ‘கணினியும் வலைப்பதிவுகளும்’ என்ற ஆய்வரங்கில் இணைத் தலைவராக.

இணைப்பேராசிரியை மு.சு.தங்கம்(இந்தியா) என்னுடன்  இணைத் தலைமையை  ஏற்றிருந்தார்.

அதற்காக ஒரு சான்றிதழ் எனக்கும் வழங்கப்பட்டது.

இணைத்தலைமை, கட்டுரை படித்தல் என பங்கு பற்றிய அனைவருக்குமே அவ்வாறான சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

கூட்டம் நடந்த உருத்திரா மாவத்தையில் உள்ள தமிழ் சங்க வாயில் முன்னே நான்.

0.0.0.0.0.0

Read Full Post »

>சர்வதேச தமிழ் எழுத்தாளர் ஒன்றியம் நடத்தும் சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு 2011 கொழும்புவில் நடைபெற இருக்கிறது.

வெள்ளவத்தை உருத்திரா மாவததையின் 57 ஆம் ஒழுங்கை 7ம் நம்பரில் உள்ள கொழும்பு தமிழ்ச் சங்க மண்டபத்தில் எதிர் வரும் 2011 ஜனவரி, 06, 07, 08 திகதிகளில் நடை பெறும்.

ஆய்வரங்குகள் கொழும்பு தமிழ்ச் சங்க மண்டபத்தில் காலை 8.30 மணி முதல் பி்.ப 01.00 மணிவரை நடைபெறும்.
ஆய்வரங்கம் பின்வரும் விடயங்களில் நடைபெறு இருக்கின்றன.

  • கணினி வலைப்பதிவு
  • ஈழத்து தமிழ் இலக்கியம்
  • ஆவணப்படுத்தல்
  • சிறுவர் இலக்கியம்
  • மொழிபெயர்ப்பு
  • சிற்றிதழ்
  • மகளிர் அரங்கு
  • உலகத் தமிழ் இலக்கியம்
  • செவ்விதாக்கம்
  • நிகழ்த்து கலைகள்
  • பல்துறை

கலை நிகழ்வுகள் மாலை 05.00 மணியிலிருந்து இரவு 08.00 மணிவரை நடை பெறும்.

நிறைவு நாள் நிகழ்வு 09.01.2011 ஞாயிறு மாலை 4.30 மணி முதல் 08.00 மணிவரை வெள்ளவத்தை இராமகிருஷ்ண மிஷன் மண்டபத்தில் நடைபெறும்.

Read Full Post »