Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for the ‘செய்தி’ Category

>
வியாபாரிமூலையைச் சேரந்தவரும் தற்போது சென்னையில் வசித்து வந்தவரும் ஆன பாலா அசோகன் (பாலசுந்தரம் அசோகன்) நேற்று (06.10.2009) காலமானார்.

எமது ஊரின் முன்னேற்றம், வளரச்சி பற்றி ஆரம்பம் முதல் சிந்தித்த ஒருவர் அவர்.

தொழில் நுட்பக் கல்லூரியில் படிக்கும் போது திடீரென ஏற்பட்ட நரம்பு நோய் காரணமாக அவரது கால்கள் இயங்காது விட்ட போதும் மனஉறுதி தளராது செயற்பட்டவர் அவர்.

கலைமணி சனசமூக நிலையத்தோடு சேர்ந்து செயற்பட்டவர். அதன் மாதாந்த கையெழுத்து சஞ்சிகையான கலைமணியின் ஆசிரியராகச் செயற்பட்டவர்.

எமது ஊரில் முதன் முதலாக பாடசாலையில் மூன்று நாள் கண்காட்சி நடப்பதற்கு காரணமாக இருந்தது அவர்தான். பாடசாலையின் ஆரம்பப் பிரிவில் (பொம்பிளைப் பள்ளிக் கூடம்) இது நடைபெற்றமை பலருக்கு ஞாபகம் இருக்கலாம்.

எமது ஊர் மாணவர்களின் கல்வி வளர்ச்சியை நோக்கமாகக் கொண்டு சுப்பிரமணிய வாத்தியார் உட்பட பல இளைப்பாறிய ஆசிரியர்களை முன்னிலைப்படுத்தி ரியூசன் வகுப்புகளை ஆரம்பித்து வைத்த பெருமையும் இவரையே சாரும்.

ஊரில் தொழில் வளர்ச்சியை மேம்படுத்தும் நோக்கில் ஒரு மரத் தளபாட தொழிலகத்தை ஆரம்பித்து வைத்ததும் அவரே. அவர் செய்து தந்த புத்தக அலுமாரி எனது பருத்தித்துறை வீட்டில் என்றும் அவர் ஞாபகமாக இருக்கும்.

அருமை நண்பனே உன்னை இழந்த துயர் என்னையும் நண்பர்கள் வட்டத்தையும் மட்டுமின்றி எமது ஊர் முழுவதையும் கண்ணீர்க் கடலில் ஆழத்தியுள்ளதை உன்னால் காண முடிகிறதா.

அவரது ஆன்மா சாந்தியடையப் பிரார்த்திப்போம்.

பகவான் சத்தியசாயி பாபாவின் தீவிர பக்தர் அவர்.

ஓம் சாந்நி சாந்தி சாந்தி.

Read Full Post »