Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for the ‘தொலைவிட வலி’ Category

‘எச்சிலே விழுங்க முடியவில்லை வலி தாங்க முடியவில்லை’ என்று தனது தொண்டையின் இடது புறத்தைப் பிடித்துக் கொண்டு வந்தவள் ஒரு இளம் பெண்.

சாப்பிடும்போது ஏதோ சிக்கிவிட்டதாம்.

 

 

‘வாயைத் திறவுங்கள்’ என்றேன். வெளிச்சத்தில் பார்த்தபோது எச்சில்தான் நிறைந்திருந்தது, வேறு எதையும் காண முடியவில்லை.

எச்சிலை விழுங்கு என்ற போது விழுங்க முடியாது சிரமப்பட்டாள். கொஞ்ச எச்சிலையே விழுங்கினாள் மீதி தொண்டையை மறைத்து நின்றது.

பல முறை முயற்சிக்குப் பின்னர் உட்புறம் தெளிவாகத் தெரிந்தது.

இடது புற டொன்சிலின் மீது ஆடை படர்ந்த மாதிரி ஏதோ சற்று ஆடுவது போலத் தெரிந்தது.

தெளிவாகத் தெரியும் மற்றொரு கணத்திற்காகக் காத்திருந்தேன்.

 



வளைந்த நீண்ட forceps தேவைப்பட்டது .. Nasal forceps பயன்படுத்தினேன்.

துரிதமாக தொண்டைப் பகுதிக்குள் forcrps நுழைத்து எடுத்தபோது ஏதோ வந்தது
மீன் முள்ளுப் போல.

ஆனால் மீன் முள் அல்ல.

 சிக்கன் சாப்பிடும்போது ஒரு சிறிய எலும்புத் துண்டு மாட்டியிருந்தது.

ஒரு கணத்தில் அவளது வலி மறைந்தது

எச்சிலை முழுங்க முடிந்தது.

முகம் மலர்ந்தாள். 

தாயின் முக மலர்ச்சியும் இணைந்து கொண்டது.

இத்தகைய தருணங்கள்தான் மருத்துவப் பணியில் மிகவும் திருப்தியான மனநிறைவைத் தரும் கணங்கள்.

உடனடியாக நோயாளியின் துயர் தீர்ப்பதைவிட வேறு என்ன வெகுமதி மருத்துவனுக்கு கிடைக்கக் கூடும்.

தொண்டையில் அந்நியப் பொருள் சிக்குவது ஒரு மருத்துவ அவசர நிலையாகும். ஏனெனில் அது வழுவி சுவாசக் குழாயினுள் விழுந்துவிட்டால் மூச்சுத் திணறல் ஏற்படும் ஆபத்து உண்டு. 

பொதுவாக குழந்தைகள் பிளாஸடிக் துண்டுகள், சட்டைப் பின்கள், ஸ்டப்ளர் பின், விதைகள், போன்றவற்றை விழுங்கி அவஸ்தைப்படுவார்கள்

பெரியவர்களில் மீன் முள்ளு, எலும்புத் துண்டுகள் சிக்குவதுண்டு.

எதுவானாலும் இருமல் மூச்சுத் திணறல் இருந்தால் உடனடியாக மருத்துவமனைக்கச் செல்ல வேண்டும்.

0.0.0

சில நாட்களுக்குப் பின்னர் வேறெருவர் வந்திருந்தார்.
இவருக்கும் ஏதோ தொண்டையில் சிக்கிவிட்டது. மாத்திரை சாப்பிடும்போது கவலையீனமாக இருந்ததில் மாத்திரை அடைத்து வந்திருந்து foil packல் சிறு துண்டு சிக்கிவிட்டதாம்
எவ்வளவோ தேடிப் பார்த்தும் கண்டு பிடிக்க முடியவில்லை.
சாதாரண வெளிநோயார் பிரிவில் வைத்து பார்க்க முடியாது.ENT நிபுணரிடம் அனுப்ப நேர்ந்தது.. சத்திரசிகிச்சை அறையில் வைத்து எடுக்க வேண்டியதாயிற்று

அவதானம் நண்பர்களே.

எதையும் விழுங்கும்போது கவனமான இருங்கள். குத்தக் கூடியவை, ஒட்டக் கூடியவை தொண்டையில் சிக்கினால் சிரமம்தான்.

 0.00.0

 

Read Full Post »

பதற்றத்துடன் வந்தார் அவர்.

“எனக்கு ஹார்ட் அட்டக்(Heart Attack) ஆக இருக்குமோ?” என்று கேட்டார்.

‘ஏன் அப்படிக் கேட்கிறீர்கள்’ என வினவினேன்.

`இடது கை உளைஞ்சால் ஹார்ட் அட்டக் என நண்பன் சொன்னான். எனக்கு கொஞ்ச நாளா இடது கை உளையுது’ என்றார்.

உண்மைதான்! மாரடைப்பிற்கான வலி பெரும்பாலும் நடு நெஞ்சில்தான் வந்தாலும் இடது தோள்மூட்டிற்கும், முதுகுப் புறத்திற்கும் சிலவேளைகளில்  கைக்கும் பரவுவதுண்டு. கழுத்திற்கும் பரவுவது அதிகம்.

நோய் ஒரிடத்தில் இருக்க வலி மற்றோர் இடத்தில் வெளிப்பட்டிருக்கிறது. இதற்குக் காரணம் வலி எற்படும் இடத்தைப் பகுத்தறிவதில் மூளைக்கு எற்பட்ட குழப்பம்தான்.

மூளைக்குக் குழப்பம் என்றதும் மனநோயாக  இருக்குமோ என நீங்கள் குழம்பிவிடாதிர்கள்.

ஆயினும் இவரது வலி நீண்ட காலமாக நீடிப்பதாலும் வியர்வை, களைப்பு போன்ற ஏனைய அறிகுறிகள் இல்லாததாலும் மாரடைப்பாக இருக்க வாய்ப்பில்லை என்பது தெரிந்தது.

மேலும் விபரமாகக் கேட்ட போது, வலி இரவில் மோசமாக இருப்பதும் வலிப்புள்ள கையில் விறைப்பு ஏற்படுவதும் தெரிய வந்தது. கழுத்தின் முண்நாண் எலும்புகள் தேய்ந்து நரம்புகளை அழுத்துவதால் ஏற்படக் கூடிய Cervical Spondylosis ஆக இருக்கலாம் என எண்ணினேன்.

“உங்கள் கழுத்து எலும்பை எக்ஸ்ரே எடுத்துப் பார்க்க வேண்டும்” என்றேன்.

“கை உளையிறதுக்கு ஏன் கழுத்தை படம் எடுக்க வேண்டும்” என அப்பாவியாகக் கேட்டார். அவர் அப்படிக் கேட்பதில் தவறில்லைத்தான்.

கழுத்து எலும்புகள் தேய்ந்ததால், அதனூடாக வரும் நரம்புகளை அழுத்துகிறது. இதனால், அந்த நரம்பு பரவுகிற இடங்களான கையில் உளைவு, விறைப்பு போன்ற அறிகுறிகள் தோன்றும். ஆனால், நோயுள்ள இடமான கழுத்தில் அறிகுறிகள் ஏதும் இல்லாமலிருக்கலாம்.

இன்னொருவருக்கு நீண்ட நாட்களாக காதுவலி. காதுக்கு துளி மருந்துகள் விட்டுப் பார்த்தார். வலி நிவாரணிகள் சாப்பிட்டுப்பார்த்தார். எதுவும் பலனளிக்காமல் வலி மோசமான போதுதான் வைத்தியரை நாடும் எண்ணம் வந்தது. பரிசோதித்துப் பார்த்ததில் தொண்டையில் புற்றுநோய் தெரிய வந்தது.

மற்றொருவருக்கு சிறுநீரகக் குழாயில் கல் (Ureteric Calculai) ஆனால் விதையில் வலிக்கிறது என்று சொல்லி மருந்தெடுக்க வந்தார்.

பற்சொத்தைக்கு காது வலிப்பது, நாரி முண்நாண் எலும்பு நோய்க்கு காலில் வலிப்பது இப்படி நிறையச் சொல்லிக் கொண்டே போகலாம்.

நோய் ஓரிடம் இருக்க வலி இன்னொரு இடத்தில் தோன்றுவதை Reffered pain என மருத்துவத்தில் சொல்வார்கள். இதனைத் `தொலைவிட வலி’ என சொல்லலாம் அல்லவா?

“சூத்தில் அடிக்க பல்லுக் கொட்டுப்படுவது”,

“எய்தவன் இருக்க அம்பை நோவது”,

“பழி ஓரிடம் பாவம் வேறிடம்”, எனப் பலவாறு சொல்வது அதை ஒத்த கருத்துகள் தானே?

எனவே அறிகுறிகள் எங்கிருந்தாலும் அடிப்படை நோய் எங்கிருக்கிறது என்பதைக் கண்டறிந்து செய்வதே சிறந்த வைத்தியமாகும்.

டாக்டர். எம்.கே. முருகானந்தன்
நன்றி:- தினக்குரல் 12.09.2007

Read Full Post »

>பதற்றத்துடன் வந்தார் அவர். “எனக்கு ஹார்ட் அட்டக்(Heart Attack) ஆக இருக்குமோ?” என்று கேட்டார். ஏன் அப்படிக் கேட்கிறீர்கள் என வினவினேன். `இடது கை உளைஞ்சால் ஹார்ட் அட்டக் என நண்பன் சொன்னான். எனக்கு கொஞ்ச நாளா இடது கை உளையுது’ என்று சொன்னார்.

உண்மைதான்! மாரடைப்பிற்கான வலி பெரும்பாலும் நடு நெஞ்சில்தான் வந்தாலும் இடது கைக்கும் பரவுவதுண்டு. ஆயினும் இவரது வலி நீண்ட காலமாக நீடிப்பதாலும் வியர்வை, களைப்பு போன்ற ஏனைய அறிகுறிகள் இல்லாததாலும் மாரடைப்பாக இருக்க வாய்ப்பில்லை என்பது தெரிந்தது.

மேலும் விபரமாகக் கேட்ட போது, வலி இரவில் மோசமாக இருப்பதும் வலிப்புள்ள கையில் விறைப்பு ஏற்படுவதும் தெரிய வந்தது. கழுத்தின் முண்நாண் எலும்புகள் தேய்ந்து நரம்புகளை அழுத்துவதால் ஏற்படக் கூடிய Cervical Spondylosis ஆக இருக்கலாம் என எண்ணினேன். உங்கள் கழுத்து எலும்பை எக்ஸ்ரே எடுத்துப் பார்க்க வேண்டும் என்றேன். கை உளையிறதுக்கு ஏன் கழுத்தை படம் எடுக்க வேண்டும் என அப்பாவியாகக் கேட்டார்.

கழுத்து எலும்புகள் தேய்ந்ததால், அதனூடாக வரும் நரம்புகளை அழுத்துகிறது. இதனால், அந்த நரம்பு பரவுகிற இடங்களான கையில் உளைவு, விறைப்பு போன்ற அறிகுறிகள் தோன்றும். ஆனால், நோயுள்ள இடமான கழுத்தில் அறிகுறிகள் ஏதும் இல்லாமலிருக்கலாம்.

இன்னொருவருக்கு நீண்ட நாட்களாக காதுவலி. காதுக்கு துளி மருந்துகள் விட்டுப் பார்த்தார். வலி நிவாரணிகள் சாப்பிட்டுப்பார்த்தார். எதுவும் பலனளிக்காமல் வலி மோசமான போதுதான் வைத்தியரை நாடும் எண்ணம் வந்தது. பரிசோதித்துப் பார்த்ததில் தொண்டையில் புற்றுநோய் தெரிய வந்தது.

மற்றொருவருக்கு சிறுநீரகக் குழாயில் கல் (Ureteric Calculai) ஆனால் விதையில் வலிக்கு மருந்தெடுக்க வந்தார். பற்சொத்தைக்கு காது வலிப்பது, நாரி முண்நாண் எலும்பு நோய்க்கு காலில் வலிப்பது இப்படி நிறையச் சொல்லிக் கொண்டே போகலாம். நோய் ஓரிடம் இருக்க வலி இன்னொரு இடத்தில் தோன்றுவதை Reffered pain என மருத்துவத்தில் சொல்வார்கள். இதனைத் `தொலைவிட வலி’ என சொல்லலாம் அல்லவா?

`சூத்தில் அடிக்க பல்லுக் கொட்டுப்படுவது, எய்தவன் இருக்க அம்பை நோவது, பழி ஓரிடம் பாவம் வேறிடம், எனப் பலவாறு சொல்வது அதை ஒத்த கருத்துகள் தானே? எனவே அறிகுறிகள் எங்கிருந்தாலும் அடிப்படை நோய் எங்கிருக்கிறது என்பதைக் கண்டறிந்து செய்வதே சிறந்த வைத்தியமாகும்.

டாக்டர். எம்.கே. முருகானந்தன்
நன்றி:- தினக்குரல் 12.09.2007

Read Full Post »