Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for the ‘நகைச்சுவை’ Category

மருத்துவர் தருகின்ற மருந்தச் சிட்டைகளை வீசிவிடாதீர்கள். கவனமாகப் பாதுகாத்து வைத்திருங்கள். அவை எதிர்காலத்திலும் உங்களுக்கு உதவக் கூடும்.

மறதி மிகுந்த வயதான அந்த மனிதர்.

elderly-man-in-robe-with-doctor-598-x-298

தனது வழமையான செக் அப்பிற்காக மருத்துவரிடம் சென்றார். அவரைப் பரிசோதித்த மருத்துவர் மருந்துப் பட்டியலை சிட்டையாக எழுதிக் கொடுத்தார். தொடர்ந்து பார்மசியில் வாங்கிப் போடுவதற்காக எழுதிக் கொடுக்கப்பட்டது.

எல்லா மருத்துவர்களின் கையெழுத்துப் போலவே அவரதும் யாருக்கும் புரியாத கிரந்த எழுத்துக்களாக அமைந்திருந்தன.

photo

சிட்டையை வாங்கித் தனது பொக்கெட்டுக்குள் வைத்த வயதானவர் மருந்தை வாங்க மறந்த விட்டார்.

ஆனால் அது அவரது பொக்கெற்றுக்கள் இருந்தவாறு அவருடன் எப்பொழுதும் பயணித்த வண்ணம் இருந்தது.

அவர் தினமும் பஸ்சில் பயணித்தே கோவிலுக்குப் போவார். பஸ் கண்டக்டரிடம் இதைக் காட்டியதும் இலவசமாகப் பயணிக்க ஒவ்வொரு நாளும் அனுமதி கிடைத்தது.

கோவிலில் செருப்பு பாதுகாப்பவர் அந்தச் சிட்டையைக் கண்டதும் சலாம் போட்டபடி செருப்பை பாதுகாத்து ஒப்படைப்பார்.

ஒரு நாள் பொழுது போகவில்லை எனத் சினிமாத் தியேட்டர் பக்கம் போனார். அங்கு இது அவருக்கு விசேட பாசாகப் பயன்பட்டது.

வாகனத்தில் போய்க் கொண்டிருக்கும்போது சோதனைச் சாவடியில் நிறுத்தப்பட்டார். இவர் தனது ஆஸ்தான சிட்டையைக் காட்டியதும் ‘சொறி சேர்’ எனச் சலூட் அடித்து மரியாதையுடன் மேற் செல்ல அனுமதிக்கப்பட்டார்.

திடீரென ஒருநாள் மயங்கி விழுந்தபோது இறந்து விட்டார்.

மருந்தை ஒழங்காகப் பாவிக்கததால் வந்த பிரச்சனை என அதே மருத்துவரிடம் உறவினர்கள் ஏச்சு வாங்க வேண்டியதாயிற்று.

அவர் மருந்துகளை போடத் தவறியது ஏன் என்பது உறவினர்களுக்குப் புரியவில்லை என்பதால் மருத்துவர் தப்பித்தார்.

அவரது பொக்கற்றுக்கள் இருந்த சிட்டையைக் கண்டெடுத்த மகள் “அது அப்பா எழுதிய கடைசி விருபப் பத்திரம்” என்று சொன்னாள்.

அப்பாவின் சொத்துக்களைத் தனது பெயருக்கு மாற்றிக் கொள்ள அது உதவியது.

எம்.கே.முருகானந்தன்.

இணையத்தில் படித்ததற்கு கைச் சரக்குச் சேர்த்தது

0.00.0

Read Full Post »

“இந்தப் பிள்ளைக்கு சரியான வயிற்று வலி” சிங்களத்தில் சொன்னார்.

நான்கே வயதான குட்டிப் பையனை இரு கைகளாலும் கிடையாகத் தூக்கி கொண்டு வந்தார்.

ஓட்டமா நடையா என்று சொல்ல முடியாத வேகம். அந்தரப்பட்டு  வந்திருந்தார்.


குழந்தை படுக்கவும் முடியாமல் இருக்கவும் முடியாமல் வேதனையில் முனங்கியபடி திணறிக் கொண்டிருந்தது.

“ஒண்டுமே சாப்பிடுதும் இல்லை. குடிக்கிதும் இல்லை.” என்றாள் தொடர்ந்து வந்த பெண்.
பின்னால் ஒரு பெரிய கூட்டம்.

எனது கொன்சல்டேசன் அறைக்கு அப்பால், நடைபாதை, வரவேற்பறை எல்லாம் நிறைந்ததால், வாசலில் தெருவோரத்திலும் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது.

பொது கழிப்பறையில் நிலமெல்லாம் பரவும் மூத்திர வெள்ளம் தோற்றுப்போகும்

தேசத்தின் தென்கோடியிலிருந்து சுற்றுலா வந்திருந்தார்கள். பஸ் நிறையச் சனம். நேற்று இரவு புறப்பட்ட பயணம். இரவிரவாகப் பயணித்து கொழும்பு வந்திருந்தார்கள்.

அதனால்தான் பட்டியிலிருந்து திறந்துவிட்ட மாடுகள் போல, சாலை விதிகளை மதிக்காது சிதறிக் கிடந்தார்கள்.

மிருகக் காட்சிசாலை, நூதனசாலை எனக் காலையில் சுற்றியடிக்கும்போது குழந்தைக்கு வலி தொடங்கிவிட்டது. என்னிடம் வரும்போது மதியம் தாண்டிவிட்டது. குழந்தை வலியால் மயங்காத குறை.

“படுக்கையில் கிடந்துங்கோ. சோதித்துப் பாப்பம்”

தகப்பன் கிடத்த முயன்றபோது சிவபெருமான் கழுத்தில் பாம்பாக குழந்தை கைகளால் சுற்றிக் கொண்டது.

தூக்குக் கயிறாகி தகப்பனை கைலாசத்திற்கு அனுப்பிவிடும் என்ற பயத்தில் பரிசோதிக்கும் முயற்சியைக் கைவிட வேண்டியதாயிற்று.

“குழந்தை என்ன சாப்பிட்டது”

“காலையிலை பணிஸ் சாப்பிட்டு பாலும் குடிச்சது. பிறகு சோடாவும் குடிச்சது. இப்ப இரண்டு மணித்தியாலமாகத்தான் இந்தக் குத்து.”

வந்த இடத்திலை கண்ட சாப்பாட்டையும் பிள்ளைக்குச் சாப்பிடக் கொடுத்திருக்குங்கள். செமியாமல் இருக்கும். அல்லது உணவு நஞ்சானதால் ஏற்பட்டிருக்கும்.

“சத்தியும் இருக்கோ?” எனக் கேட்டேன்.

“இல்லை” எனப் பதில் வந்தது.

காய்ச்சல் இருக்கோ எனத் தொட்டுப்பார்க்க முயன்றேன்.

தொற்றாட் சுருங்கிபோல என்னைக் கண்டதும் சோர்ந்தது குழந்தை.எனது கையில் தனக்கெதிரான ஆயுதங்கள் எதுவும் இல்லை என அறிந்ததும் நிம்மதியடைந்தது. ஊசி, காய்ச்சல் கம்பி, ஸ்டெதஸ்கோப் எதுவும் என் கையில் இருக்கவில்லை!!.

தொட்டபோது உடல் வியர்திருந்ததே ஒழிய காய்ச்சல், குளிர் எதுவும் இல்லை.

கடுமையான வலியாக இருப்பதாலும், குழந்தை படுக்க முடியாமல் குறண்டியபடி தகப்பன் கைகளில் சுருண்டு கிடப்பதால் குடல் கொழுவல், அப்பன்டிசைடிஸ், பெரிடனைடிஸ் என ஏதாவது ஏடாகூடமான நோயாக இருக்கலாம்.

தீவிரமாக யோசிக்க வேண்டியிருந்து.

நோயைப் பற்றி அல்ல! எவ்வாறு குழந்தையை படுக்கையில் விட்டுப் பரிசோதிப்பது என்பதையிட்டு.
அப்பொழுது சுவீப் எனக்கு விழுந்தது.

பிள்ளையைதை் தொடாமலே நோயை ஊகிக்க முடிவதைவிட வேறென்ன சுவீப் எனக்குக் கிடைக்க முடியும்?

குழந்தை சற்று அமைதியாகி தனது தகப்பனின் கைகளில் சற்று உடலை நிமிர்த்திப் படுத்தது. குறண்டிக் கிடந்த உடல் நிமிர அதன் வயிற்று பகுதி தெளிவாகத் தெரிந்தது.

“பிள்ளையை பாத்ரூமிற்கு கொண்டு போய் காலை நன்கு குளிரக் கழுவிட்டு மூத்திரம் கழிக்க விடுங்கோ”
ஆச்சரியம் தகப்பன் முகத்தில் படர்ந்தது.

குழந்தை பரிசோதிக்காமல், வேதனையைத் தணிக்க மருந்தும் தராமல் பாத்ரூமிற்குக் கலைக்கிறாரே என்றதில் சிறிது கோபமும் தெறித்தது போலிருந்தது.

மறுக்க முடியாமல், வெறுப்போடு குழந்தையைத் தூக்கிக் கொண்டு சென்றார்.

திரும்பி வந்தபோது குழந்தையின் முகத்தில் வேதனையின் சுவட்டையே காண முடியவில்லை.

கட்டிலில் கிடத்தியபோது மறுப்பின்றி நீட்டி நிமிர்ந்து படுத்து, ஆயாசம் அடங்க கண்ணை மூடியது.

வயிற்றைப் பார்த்தேன்.

அடிவயிற்றில் இருந்த முட்டி காணமல் போயிருந்தது. தொட்டபோது வேதனை இல்லை.

வேறொன்றும் இல்லை. இரவிரவாகப் பயணம், பகல் முழுவதும் ஊர் சுற்றிப் பொழுதுபோக்கு. முதல் நாள் இரவிலிருந்து சிறுநீர் கழியாததால், அடைத்து வயிறு வீங்கி வலி எடுத்திருந்தது.

காலைக் கழுவி உடலைச் குளிர வைத்ததும் அடைத்த பைப் திறந்துவிட்டது.

திறந்து மூத்திரம் வெளியேற்றியதும் முட்டி போல வீங்கியிருந்த மூத்திரப்பை காலியாகிவிட்டது.

வலி குணமாகிவிட்டது.

அடுத்த முறை இரவு பஸ்சில் யாழ்ப்பாணம் போகும்போது எனக்கு வயிற்றுக் குத்து வந்தால் என்ன செய்வது என்ற பயம் வந்தது.


பாவி பஸ்காரர்!

வெள்ளவத்தையில் வெளிக்கிட்டு ‘நொன் ஸ்டொப் டிரைவிங்’ செய்தால் வயது போன ஆம்பிளையள், அதுவும் புரஸ்ரேட் வீக்கக்காரர் பாடு அதோகதிதான்.


கணவன் கழிப்பதற்கு மனிசிமாரால் தூக்கிக் கொண்டு போக முடியுமா?

எலக்சன் காலத்திலை அரசாங்கக் கட்சி வேட்பாளருக்குத் தெரிந்திருந்தால், வீதி எங்கும் கக்கூஸ் (பாத்ரூம்) கட்டுவதாக வாக்களித்திருப்பார்கள்.

பிறகென்ன?

தோற்றவுடன் காணாமல் போயிருப்பார்.

ஞாயிறு வீரகேசரியில் நான் எழுதிய கட்டுரை

எனது அனுபவப் பகிர்வு புளக்கான Steth இன் குரல் ல் ஏற்கனவே வெளியான கட்டுரை

Read Full Post »

மனதுக்குள் இருந்தது போஸ்டர் அடித்தது போல அவளது முகத்தில் பளிச்சென ஒட்டிக் கிடந்தது.

‘நீ செய்த பிழையான வேலையால் வந்த வினைதான்’ என்று சுட்டு விரலை நீட்டி நேரடியாக குற்றம் சொல்லாததுதான் மிச்சம்.

நல்ல புஸ்டியான உடம்பு. வட்டாரி வைத்துக் கீறிய வட்டம் போல முகம் ஊளைச் சதைகளால் நிரம்பிக் கனத்தது. ஆடு மாடுகள் இரை மீட்டு அசை போடுவது போல வாய் எதனையோ சப்பிச் சுவைத்துக் கொண்டேயிருந்தது.

பாரத்தை இறக்கி வைத்துவிட்டு களை தீர ஆயாசப் பெரு மூச்சு விட்டாள்.
இறக்கி வைத்தது பை நிறைந்த பொருட்களை அல்ல. 80 கிலோ ஆன தனது உடலைத்தான்.

‘டொக்டர் நீங்கள் தந்த மருந்து எனக்கு ஒத்துக் கொள்ளவில்லை. ரா ராவா சலம் அடிக்குது. நான் மருந்தைக் குறைச்சுப் போட்டன்.’

பார்த்துப் பல நாட்களாகிவிட்டதால் கொடுத்த மருந்துகள் சட்டென ஞாபகத்திற்கு வரவில்லை.

வழமையாக உச்ச வேகத்தில் சுற்றும் பானை (Fan) நிறுத்திய பின்னும் குளிர் கலையாத தினத்தில் இவளது சிறுநீர் அதிகம் போவதற்குக் காரணம் என்ன?

‘மருந்துக்காக இருக்காது. குளிராக இருக்குமா? காய்ச்சலாக இருக்கலாம். இந்த பனிக் குளிருக்கு காச்சலும் சேர்ந்தால் சலம் கூடப் போகும்தானே’ என்ற சந்தேகம் எழுந்தது. டெம்பரேச்சரைப் பார்த்தேன். டிஜிட்டல் தேர்மாமீற்றர்  ‘நீ சொல்வது பிழை’ என மறுத்து 98.4 நோர்மல் என்றது.

‘வேறு என்னவாக இருக்கும்? லசிக்ஸ் (Lasix) மருந்து கொடுத்திருப்பேனோ?’

லசிக்ஸ் என்பது உடலில் தேங்கிவிட்ட மிதமிஞ்சிய நீரை வெளியேற்றுவதற்காக் கொடுக்கும் மருந்து. பொதுவாக இருதய வழுவல் ;(Heart Failure)> ஈரல்சிதைவு (Cirrhosis)> சிறுநீரக நோய்கள் போன்றவற்றால் சிறுநீர் வெளியேறுவது குறைந்தால் அதைச் சீர்செய்யக் கொடுக்கப்படும் மருந்து.

ஆனால் 40 வயதேயான இவளுக்கு அப்படியான நோய் வருவதற்கு வாய்ப்பில்லை. ஒரு வேளை அப்படி இருந்தாலும் அத்தகைய தீவிர பிரச்சனையான நோயுள்ளவர்களை நான் மறப்பதில்லை. இவள் அவர்களுள் ஒருத்தியல்ல.

‘சலம் போகைக்கை எரியுதோ’ சிறுநீர்த் தொற்றாக இருக்குமோ என்ற எண்ணம் எழுந்ததில் கேட்டேன்.

‘ஒரு எரிவும் கிடையாது. பைப் திறந்தது போல வீச்சாகப் போகிறது’ என்றாள்.

காலையில் வந்த நோயாளி தான் குளிப்பதற்கு பைப்பைத் திறந்ததும், சிறுநீர் சிந்துவதுபோல முக்கி முனகிக்கொண்டு வந்ததாகச் சொன்னது நினைவுக்கு வந்தது. அவர் புரஸ்ரேட் நோயாளி. இவர் பெண் என்பதால் புரஸ்ரேட் நோய் அல்ல என்பதும் நிச்சயம்.

சிறுநீர்த் தொற்று இருக்காது எனத் தோன்றினாலும் சிறுநீர்ப் பரிசோதனை அவசியம்.

கணனியைத் தட்டி இவளது பதிவுகளைப் பார்த்தபோது அவளது சல அடிப்பிற்கு நான் கொடுத்த மருந்துகள் எவையும் காரணமல்ல என்பது தெளிவாயிற்று.

மருத்துமனையில் கணனியில் குறிப்பு   பற்றிய முன்னைய பதிவு.

இருப்பினும் தெளிவாக அவளுக்கு விளக்குவதற்கு இரத்தப் பரிசோதனையும் அவசியம். மருந்துவமனையிலேயே இருந்த ஆய்வு கூடத்திற்கு அனுப்பிவைத்தேன்.

ரிப்போட் வந்தபோது இரத்தத்திலும் சிறுநீரிலும் சீனியின் அளவு அமோகமாக விளைச்சல் கண்டிருந்தது தெரிய வந்தது.

சீனி விலை நாளுக்கு நாள் எகிறிக் கொண்டிருக்கையில் இவ்வளவு சீனியை வீணாக்குகிறாளே என கவலைப்படத்தான் முடிந்தது.

கொமோட்டில் கழியும் சீனியை வாயில் அள்ளிப் போடவா முடியும்?

சென்ற முறைதான் நீரிழிவு நோய் என முதன்முறையாக இனங்காணப்பட்டு அதற்கான சிகிச்சை ஆரம்பித்து இருந்தோம். மருந்து வேலை செய்து நோயைக் குணமாக்கு முன்னரே, மருந்தால்தான் தனக்கு நோய் என்று கருதிய இந்த அதிவிவேக பூரண சிந்தாமணி மருந்து எடுப்பதைக் குறைத்துவிட்டாள்.

உண்மையில் குறைத்தாளா அல்லது மருந்தைப் போடாமலே நிறுத்திவிட்டாளா என்பது அவளுக்கு மட்டும் தெரிந்த ரகசியமாகும்.

நீரிழிவு நோயாளிகளுக்கு சிறுநீர் அதிகமாகப் போகும். நோயைக் கட்டுப்படுத்த கொடுக்கப்படும் மாத்திரைகள் இரத்தத்தில் உள்ள சீனியின் அளவைக் குறைக்கும். அவ்வாறு நீரிழிவு கட்டுப்பட்டதும் சிறுநீர் அதிகமாக வெளியேறுவது குறைந்து வழமைபோலப் போகும்.

இது புரியாத இவளும் இவளை ஒத்த வேறுபலரும் தங்கள் பிரச்சனைகளுக்கு மருந்துகள் தான் காரணம் என எண்ணுகிறார்கள். நீரிழிவுக்கு மட்டுமல்ல அல்சர், பிரசர், மூட்டுவாதம் என எந்த நோயை எடுத்தாலும் இப்படியாக மருந்தையே குற்றவாளியாகக் கருதுகிறார்கள்.

இவர்கள் இவ்வாறு எண்ணுவதற்குக் காரணம் என்ன?

பாரம்பரிய மருந்து முறைகளின் ரகசியம் பேணும் ‘மூடு மருத்துவம்’ போலன்றி இன்றைய நவீன மருத்துத்தில் நோய்கள் பற்றி மட்டுமன்றி மருந்துகளைப் பற்றியும் அவற்றால் ஏற்படக்;கூடிய பக்கவிளைவுகள் பற்றியும் வெளிப்படையாக பேசப்படுகின்றன. பல நோயாளிகளும் இணையம் முதல் தொலைக்காட்சி வரை கேட்டும் படித்தும் கிரகித்துக் கொள்கிறார்கள்.

சிலர் தவறாகப் புரிந்து கொள்வதும் உண்டு. எதிலும் மறைமுகத்தை மட்டும் பார்ப்பவர்கள் இவர்கள்.

இவர்கள்தான் மருந்தே வேண்டாம் என்கிறார்கள். காலனுக்கு விரைவில் விருந்து வைக்க முனைகிறார்கள்.

உண்மையில் நோயாளிகளை விட மருத்துவர்களே பக்கவிளைவுகள் பற்றி முழுமையாக அறிந்திருக்கிறார்கள். நினைவில் வைத்துக்கொண்டே இருக்கிறார்கள். எந்த மருந்தைக் கொடுக்கும்போதும் அதன் சாதக பாதக விளைவுகளைக் கருத்தில் கொண்டே கொடுப்பார்கள்.

அப் பெண்ணிற்கு ‘சல அடிப்பிற்கான’ காரணத்தை விளக்கினேன்.

சிறுநீர் கழிப்பது பற்றிய மற்றொரு பதிவு… லைட் போஸ்டைக் கண்டதும் நாய்கள் போல …

அவளது முகத்தில் இருந்த போஸ்டர் திடீரென மாறிவிட்டது!

எலக்சன் நேரத்திலை சரத் பொன்சேகா, மற்றும் மஹிந்த ராஜபக்சவின் போஸ்டர்கள் சுவர் முழுக்க ஒன்று கிழிய மற்றது வருமே அதுபோல.

ஆனாலும் குற்றம் சாட்டும் சுட்டு விரலை தன்னை நோக்கித் திருப்பவில்லை.

அரசியல்வாதிகளுக்குச் சற்றும் சளைத்தவள் அல்ல!

வீரகேசரி Steth இன் குரல் பத்தியில் நான் எழுதிய கட்டுரை.  எனது Steth இன் குரல் வலைப்பக்கத்திலும்  வெளியானது
டொக்டர்.எம்.கே.முருகானந்தன்
0.0.0.0.0.0.

Read Full Post »

குடிகாரனின் முரட்டுக் கோபம்

ஞானிகளின் மோனக் கண்கள் போல அரைவாசி மூடிக் கிடந்தற்குக் காரணம் யோகநிலை அல்ல. கண்கள் கோவைப் பழம்போல சிவந்திருந்தன. அதற்குக் காரணம் மது போதையும் அல்ல.

அடிபட்ட மனைவி

இடது பக்க நெற்றி கண்டி வீங்கியிருந்தது. அதற்குக் கிழே கண் மடலும் மொழுமொழுவென நீர்க்கட்டி போல அதைத்திருந்தது.

இவற்றை எமது மனத்தில் அகற்றிவிட்டுப் பார்த்தால் வழமையான அழகான முகமாக பிரகாசிக்கும் எனத் தோன்றியது.

பார்க்கப் பரிதாபமாக தோற்றமளித்தாள். ரத்தக்களரியாகச் சிவந்திருந்த முகத்தில் சோகம் அப்பியிருந்தது. அதையும் மீறிய வன்மம் அவளது கண்களில் உறைந்திருப்பதை என்னால் உணர முடிந்தது.

கண்களைக் கீழே இறக்கிப் பார்த்தபோது கழுத்தில் கருமையாகக் கண்டல். கைகளில் அங்காங்கே சிறு கீறல்கள்.

“என்ன நடந்தது?”

உடன் பதில் வரவில்லை. வாய் திறப்பதற்கு முன் எதைச் சொல்வது எப்படிச் சொல்வது எனக் கூட்டிக் கழித்துப் பார்க்கிறாள் என்பதை உணர்ந்து கொண்டேன். தானகவே பேசட்டும் எனக் காத்திருந்தேன்.

வழமையில் அவள் அப்படியானவள் அல்ல. மிகவும் துடிப்பானவள். கேட்பதற்கு முன் பட்பட்டெனப் பதில் வரும். எதிர்க் கேள்விகளும், சந்தேகங்களும் சரமாரியாகப் பாய்ந்து வந்து என்னைத் திணறடிக்கும்.

திருமணமாகி ஓரிரு வருடங்கள்தான். காதல் கலியாணம். அவனும் நல்ல வேலையில் இருக்கிறான். பண்பாகப் பழகுபவன். இன்னும் குழந்தைகள் இல்லை. இன்று தனியே வந்திருக்கிறாள்.

மனதில் அவளது சரித்திரப் பக்களைப் புரட்டிக் கொண்டிருந்தேன்.

“எனக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை…” ஆரம்பித்தவள் சற்று நிதானித்தாள்.

“இதெல்லாம் இவராலைதான். குடிச்சுப் போட்டு வந்தார் என்றால் என்ன செய்யிறம் என்று அவருக்குப் புரியுதில்லை. அடிச்சு உதைச்சு என்னைச் சம்பலாக்கிப் போடுகிறார்”

எனக்கு ஆச்சரியாக இருந்தது. குடிப்பானா அவன்?

“குடிக்கிறவரே. அடிக்கடி குடிக்கிறவரோ. கூடுதலாகவும் குடிக்கிறவரோ” என விசார்த்தேன்.

“அதிகம் குடிக்கிறதில்லை. எப்பெண்டாலும்தான். பார்ட்டி, பிரண்ட்ஸ் என்று சேர்ந்தால் குடிப்பார்…”

குடிச்சால் பிரச்சனை

“…ஆனால் குடிச்சிட்டு வந்தால் பிரச்சனைதான். கண் மண் தெரியாது, கோபம் பொத்துக் கொண்டு வரும். தேவையில்லாமல் என்னோடை சண்டை போடுவார்.”

காயங்களுக்கு பண்டேச் பண்ணி, உடல் வலிகள் தீர மருந்துகள் கொடுத்தேன்.
ஆனாலும் அவளது அடிப்படைப் பிரச்சனை தீரவில்லை என்பது நன்றாகவே புரிந்தது. தீராவிட்டால் மீண்டும் அடிகாயங்களுடன் வந்து நிற்பது நிச்சயம்.
பேச்சை ஆரம்பித்தேன்.

“ அவரது குடிக்கும் பழக்கத்தை நிறுத்த முடியாதா?”

“அடிக்கடி குடிக்கிறவரில்லை…

“..எப்பெண்டாலும்தான் குடிப்பார். அந்த நேரத்திலை அவர் அடியாமலிருக்க ஏதாவது செய்ய முடியுமா டொக்டர்”

சற்று சிக்கலான விடயமாக இருந்தது. மருத்துவ ரீதியில் குடித்துவிட்டு வருபரை உணர்ச்சி வயப்படாமல் தடுக்க முடியமா?

அதனால் எனக்கு ஒரு சவாலாக இருந்தது. சற்று யோசித்தேன்.

“நீங்கள் ஒரு முயற்சி செய்து பாருங்கள். அவர் குடித்துவிட்டு வரும் நேரங்களில் உங்களது வாயில் கிறீன் ரீயை விட்டு அலசிக் கொப்பளித்துக் கொண்டே இருங்கள்…
…குடிக்கக் கூடாது,

….வெளியே துப்பவும் கூடாது.

…வாயில் வைத்து அலசிக் கொண்டே இருங்கள்.”

கிறீன் டீயை அலசுங்கள்

அவளுக்கு ஆச்சரியாக இருந்தது.

கிறீன் ரீயை குடியாமல் அலசிக் கொண்டே இருப்பதா. அதுவும் அடிக்கும் அவரல்ல! அடி வாங்கும் தான்!

அரை நம்பிக்கையோடு சென்றாள்.

சுமார் இரண்டு மாதங்களுக்குப் பின் வந்தாள். அடி, காயம் எதுவும் இல்லை. தடிமன் காய்ச்சலுக்கு மருந்தெடுக்க வந்திருந்தாள்.

“இப்ப அவர் குடித்தால் அடிக்கிறதில்லையோ”

“இல்லை…..” முழுமதியாக முகம் பூரித்தாள்.

“…என்ன அற்புதமான ஐடியா சொன்னீர்கள். அவர் குடிச்சிட்டு வந்தால் நான் நீங்கள் சொன்னபடி வாயில் கிறீன் ரீயை என்ரை வாயில் விட்டு அலசிக் கொண்டே இருப்பேன். அவர் அடிப்பதேயில்லை…
.
…என்ன அதிசயம். எப்படி நடக்குது டொக்டர்? அந்த கிறீன் ரீ மணத்திற்கு கோபம் வராமல் தடுக்கிற குணம் இருக்கிதா?”

நான் மறுமொழி சொல்லவில்லை. உண்மையைச் எப்படி முகத்துக்கு நேரே சொல்வது?

இரு கை தட்டினால்தானே ஓசை எழும் என்ற சிம்பிள் தத்துவம்தான்.

ஒரு கையோசை

‘நீ வாயை மூடிக்காண்டிருந்தால் அவரது கை நீளாது’ என்பதை அவளுக்குக் கூறவில்லை.

வெறுமனே புன்னகைத்தேன்.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

Steth இன் குரல் புளக்கில் நான் எழுதிய கட்டுரை

0.0.0.0.0.0

Read Full Post »

>

மனதுக்குள் இருந்தது போஸ்டர் அடித்தது போல அவளது முகத்தில் பளிச்சென ஒட்டிக் கிடந்தது.

‘நீ செய்த பிழையான வேலையால் வந்த வினைதான்’ என்று சுட்டு விரலை நீட்டி நேரடியாக குற்றம் சொல்லாததுதான் மிச்சம்.

நல்ல புஸ்டியான உடம்பு. வட்டாரி வைத்துக் கீறிய வட்டம் போல முகம் ஊளைச் சதைகளால் நிரம்பிக் கனத்தது. ஆடு மாடுகள் இரை மீட்டு அசை போடுவது போல வாய் எதனையோ சப்பிச் சுவைத்துக் கொண்டேயிருந்தது.

பாரத்தை இறக்கி வைத்துவிட்டு களை தீர ஆயாசப் பெரு மூச்சு விட்டாள்.
இறக்கி வைத்தது பை நிறைந்த பொருட்களை அல்ல. 80 கிலோ ஆன தனது உடலைத்தான்.

‘டொக்டர் நீங்கள் தந்த மருந்து எனக்கு ஒத்துக் கொள்ளவில்லை. ரா ராவா சலம் அடிக்குது. நான் மருந்தைக் குறைச்சுப் போட்டன்.’

பார்த்துப் பல நாட்களாகிவிட்டதால் கொடுத்த மருந்துகள் சட்டென ஞாபகத்திற்கு வரவில்லை.

வழமையாக உச்ச வேகத்தில் சுற்றும் பானை நிறுத்திய பின்னும் குளிர் கலையாத தினத்தில் இவளது சிறுநீர் அதிகம் போவதற்குக் காரணம் என்ன?

‘மருந்துக்காக இருக்காது. குளிராக இருக்குமா? காய்ச்சலாக இருக்கலாம். இந்த பனிக் குளிருக்கு காச்சலும் சேர்ந்தால் சலம் கூடப் போகும்தானே’ என்ற சந்தேகம் எழுந்தது. டெம்பரேச்சரைப் பார்த்தேன். டிஜிட்டல் தேர்மாமீற்றர்  ‘நீ சொல்வது பிழை’ என மறுத்து 98.4 நோர்மல் என்றது.

‘வேறு என்னவாக இருக்கும்? லசிக்ஸ் (Lasix) மருந்து கொடுத்திருப்பேனோ?’

லசிக்ஸ் என்பது உடலில் தேங்கிவிட்ட மிதமிஞ்சிய நீரை வெளியேற்றுவதற்காக் கொடுக்கும் மருந்து. பொதுவாக இருதய வழுவல் ;(Heart Failure)> ஈரல்சிதைவு (Cirrhosis)> சிறுநீரக நோய்கள் போன்றவற்றால் சிறுநீர் வெளியேறுவது குறைந்தால் அதைச் சீர்செய்யக் கொடுக்கப்படும் மருந்து.

ஆனால் 40 வயதேயான இவளுக்கு அப்படியான நோய் வருவதற்கு வாய்ப்பில்லை. ஒரு வேளை அப்படி இருந்தாலும் அத்தகைய தீவிர பிரச்சனையான நோயுள்ளவர்களை நான் மறப்பதில்லை. இவள் அவர்களுள் ஒருத்தியல்ல.

‘சலம் போகைக்கை எரியுதோ’ சிறுநீர்த் தொற்றாக இருக்குமோ என்ற எண்ணம் எழுந்ததில் கேட்டேன்.

 ‘ஒரு எரிவும் கிடையாது. பைப் திறந்தது போல வீச்சாகப் போகிறது’ என்றாள்.

காலையில் வந்த நோயாளி தான் குளிப்பதற்கு பைப்பைத் திறந்ததும், சிறுநீர் சிந்துவதுபோல முக்கி முனகிக்கொண்டு வந்ததாகச் சொன்னது நினைவுக்கு வந்தது. அவர் புரஸ்ரேட் நோயாளி. இவர் பெண் என்பதால் புரஸ்ரேட் நோய் அல்ல என்பதும் நிச்சயம்.

சிறுநீர்த் தொற்று இருக்காது எனத் தோன்றினாலும் சிறுநீர்ப் பரிசோதனை அவசியம்.

கணனியைத் தட்டி இவளது பதிவுகளைப் பார்த்தபோது அவளது சல அடிப்பிற்கு நான் கொடுத்த மருந்துகள் எவையும் காரணமல்ல என்பது தெளிவாயிற்று.

 
மருத்துமனையில் கணனியில் குறிப்பு   பற்றிய முன்னைய பதிவு.

இருப்பினும் தெளிவாக அவளுக்கு விளக்குவதற்கு இரத்தப் பரிசோதனையும் அவசியம். மருந்துவமனையிலேயே இருந்த ஆய்வு கூடத்திற்கு அனுப்பிவைத்தேன்.

ரிப்போட் வந்தபோது இரத்தத்திலும் சிறுநீரிலும் சீனியின் அளவு அமோகமாக விளைச்சல் கண்டிருந்தது தெரிய வந்தது.

சீனி விலை நாளுக்கு நாள் எகிறிக் கொண்டிருக்கையில் இவ்வளவு சீனியை வீணாக்குகிறாளே என கவலைப்படத்தான் முடிந்தது.

கொமோட்டில் கழியும் சீனியை வாயில் அள்ளிப் போடவா முடியும்?

சென்ற முறைதான் நீரிழிவு நோய் என முதன்முறையாக இனங்காணப்பட்டு அதற்கான சிகிச்சை ஆரம்பித்து இருந்தோம். மருந்து வேலை செய்து நோயைக் குணமாக்கு முன்னரே, மருந்தால்தான் தனக்கு நோய் என்று கருதிய இந்த அதிவிவேக பூரண சிந்தாமணி மருந்து எடுப்பதைக் குறைத்துவிட்டாள்.

உண்மையில் குறைத்தாளா அல்லது மருந்தைப் போடாமலே நிறுத்திவிட்டாளா என்பது அவளுக்கு மட்டும் தெரிந்த ரகசியமாகும்.

நீரிழிவு நோயாளிகளுக்கு சிறுநீர் அதிகமாகப் போகும். நோயைக் கட்டுப்படுத்த கொடுக்கப்படும் மாத்திரைகள் இரத்தத்தில் உள்ள சீனியின் அளவைக் குறைக்கும். அவ்வாறு நீரிழிவு கட்டுப்பட்டதும் சிறுநீர் அதிகமாக வெளியேறுவது குறைந்து வழமைபோலப் போகும்.

இது புரியாத இவளும் இவளை ஒத்த வேறுபலரும் தங்கள் பிரச்சனைகளுக்கு மருந்துகள் தான் காரணம் என எண்ணுகிறார்கள். நீரிழிவுக்கு மட்டுமல்ல அல்சர், பிரசர், மூட்டுவாதம் என எந்த நோயை எடுத்தாலும் இப்படியாக மருந்தையே குற்றவாளியாகக் கருதுகிறார்கள்.

இவர்கள் இவ்வாறு எண்ணுவதற்குக் காரணம் என்ன?

பாரம்பரிய மருந்து முறைகளின் ரகசியம் பேணும் ‘மூடு மருத்துவம்’ போலன்றி இன்றைய நவீன மருத்துத்தில் நோய்கள் பற்றி மட்டுமன்றி மருந்துகளைப் பற்றியும் அவற்றால் ஏற்படக்;கூடிய பக்கவிளைவுகள் பற்றியும் வெளிப்படையாக பேசப்படுகின்றன. பல நோயாளிகளும் இணையம் முதல் தொலைக்காட்சி வரை கேட்டும் படித்தும் கிரகித்துக் கொள்கிறார்கள்.

சிலர் தவறாகப் புரிந்து கொள்வதும் உண்டு. எதிலும் மறைமுகத்தை மட்டும் பார்ப்பவர்கள் இவர்கள்.

இவர்கள்தான் மருந்தே வேண்டாம் என்கிறார்கள். காலனுக்கு விரைவில் விருந்து வைக்க முனைகிறார்கள்.

உண்மையில் நோயாளிகளை விட மருத்துவர்களே பக்கவிளைவுகள் பற்றி முழுமையாக அறிந்திருக்கிறார்கள். நினைவில் வைத்துக்கொண்டே இருக்கிறார்கள். எந்த மருந்தைக் கொடுக்கும்போதும் அதன் சாதக பாதக விளைவுகளைக் கருத்தில் கொண்டே கொடுப்பார்கள்.

அப் பெண்ணிற்கு ‘சல அடிப்பிற்கான’ காரணத்தை விளக்கினேன்.

சிறுநீர் கழிப்பது பற்றிய மற்றொரு பதிவு… லைட் போஸ்டைக் கண்டதும் நாய்கள் போல …

அவளது முகத்தில் இருந்த போஸ்டர் திடீரென மாறிவிட்டது!

எலக்சன் நேரத்திலை சரத் பொன்சேகா, மற்றும் மஹிந்த ராஜபக்சவின் போஸ்டர்கள் சுவர் முழுக்க ஒன்று கிழிய மற்றது வருமே அதுபோல.

ஆனாலும் குற்றம் சாட்டும் சுட்டு விரலை தன்னை நோக்கித் திருப்பவில்லை.

அரசியல்வாதிகளுக்குச் சற்றும் சளைத்தவள் அல்ல!

வீரகேசரி Steth இன் குரல் பத்தியில் நான் எழுதிய கட்டுரை

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்
0.0.0.0.0.0.

Read Full Post »

>

ஞானிகளின் மோனக் கண்கள் போல அரைவாசி மூடிக் கிடந்தற்குக் காரணம் யோகநிலை அல்ல. கண்கள் கோவைப் பழம்போல சிவந்திருந்தன. அதற்குக் காரணம் மது போதையும் அல்ல.

இடது பக்க நெற்றி கண்டி வீங்கியிருந்தது. அதற்குக் கிழே கண் மடலும் மொழுமொழுவென நீர்க்கட்டி போல அதைத்திருந்தது.

இவற்றை எமது மனத்தில் அகற்றிவிட்டுப் பார்த்தால் வழமையான அழகான முகமாக பிரகாசிக்கும் எனத் தோன்றியது.

பார்க்கப் பரிதாபமாக தோற்றமளித்தாள். ரத்தக்களரியாகச் சிவந்திருந்த முகத்தில் சோகம் அப்பியிருந்தது. அதையும் மீறிய வன்மம் அவளது கண்களில் உறைந்திருப்பதை என்னால் உணர முடிந்தது.

கண்களைக் கீழே இறக்கிப் பார்த்தபோது கழுத்தில் கருமையாகக் கண்டல். கைகளில் அங்காங்கே சிறு கீறல்கள்.

“என்ன நடந்தது?”

உடன் பதில் வரவில்லை. வாய் திறப்பதற்கு முன் எதைச் சொல்வது எப்படிச் சொல்வது எனக் கூட்டிக் கழித்துப் பார்க்கிறாள் என்பதை உணர்ந்து கொண்டேன். தானகவே பேசட்டும் எனக் காத்திருந்தேன்.

வழமையில் அவள் அப்படியானவள் அல்ல. மிகவும் துடிப்பானவள். கேட்பதற்கு முன் பட்பட்டெனப் பதில் வரும். எதிர்க் கேள்விகளும், சந்தேகங்களும் சரமாரியாகப் பாய்ந்து வந்து என்னைத் திணறடிக்கும்.

திருமணமாகி ஓரிரு வருடங்கள்தான். காதல் கலியாணம். அவனும் நல்ல வேலையில் இருக்கிறான். பண்பாகப் பழகுபவன். இன்னும் குழந்தைகள் இல்லை. இன்று தனியே வந்திருக்கிறாள்.

மனதில் அவளது சரித்திரப் பக்களைப் புரட்டிக் கொண்டிருந்தேன்.

“எனக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை…” ஆரம்பித்தவள் சற்று நிதானித்தாள்.

“இதெல்லாம் இவராலைதான். குடிச்சுப் போட்டு வந்தார் என்றால் என்ன செய்யிறம் என்று அவருக்குப் புரியுதில்லை. அடிச்சு உதைச்சு என்னைச் சம்பலாக்கிப் போடுகிறார்”

எனக்கு ஆச்சரியாக இருந்தது. குடிப்பானா அவன்?

“குடிக்கிறவரே. அடிக்கடி குடிக்கிறவரோ. கூடுதலாகவும் குடிக்கிறவரோ” என விசார்த்தேன்.

“அதிகம் குடிக்கிறதில்லை. எப்பெண்டாலும்தான். பார்ட்டி, பிரண்ட்ஸ் என்று சேர்ந்தால் குடிப்பார்…”

“…ஆனால் குடிச்சிட்டு வந்தால் பிரச்சனைதான். கண் மண் தெரியாது, கோபம் பொத்துக் கொண்டு வரும். தேவையில்லாமல் என்னோடை சண்டை போடுவார்.”

காயங்களுக்கு பண்டேச் பண்ணி, உடல் வலிகள் தீர மருந்துகள் கொடுத்தேன்.

ஆனாலும் அவளது அடிப்படைப் பிரச்சனை தீரவில்லை என்பது நன்றாகவே புரிந்தது. தீராவிட்டால் மீண்டும் அடிகாயங்களுடன் வந்து நிற்பது நிச்சயம்.
பேச்சை ஆரம்பித்தேன்.

“ அவரது குடிக்கும் பழக்கத்தை நிறுத்த முடியாதா?”

“அடிக்கடி குடிக்கிறவரில்லை…

“..எப்பெண்டாலும்தான் குடிப்பார். அந்த நேரத்திலை அவர் அடியாமலிருக்க ஏதாவது செய்ய முடியுமா டொக்டர்”

சற்று சிக்கலான விடயமாக இருந்தது. மருத்துவ ரீதியில் குடித்துவிட்டு வருபரை உணர்ச்சி வயப்படாமல் தடுக்க முடியமா?

அதனால் எனக்கு ஒரு சவாலாக இருந்தது. சற்று யோசித்தேன்.

“நீங்கள் ஒரு முயற்சி செய்து பாருங்கள். அவர் குடித்துவிட்டு வரும் நேரங்களில் உங்களது வாயில் கிறீன் ரீயை விட்டு அலசிக் கொண்டே இருங்கள்…

…குடிக்கக் கூடாது,

….வெளியே துப்பவும் கூடாது.

…வாயில் வைத்து அலசிக் கொண்டே இருங்கள்.”

அவளுக்கு ஆச்சரியாக இருந்தது.

கிறீன் ரீயை குடியாமல் அலசிக் கொண்டே இருப்பதா. அதுவும் அடிக்கும் அவரல்ல! அடி வாங்கும் தான்!

அரை நம்பிக்கையோடு சென்றாள்.

சுமார் இரண்டு மாதங்களுக்குப் பின் வந்தாள். அடி, காயம் எதுவும் இல்லை. தடிமன் காய்ச்சலுக்கு மருந்தெடுக்க வந்திருந்தாள்.

“இப்ப அவர் குடித்தால் அடிக்கிறதில்லையோ”

“இல்லை…..” முழுமதியாக முகம் பூரித்தாள்.

“…என்ன அற்புதமான ஐடியா சொன்னீர்கள். அவர் குடிச்சிட்டு வந்தால் நான் நீங்கள் சொன்னபடி வாயில் கிறீன் ரீயை என்ரை வாயில் விட்டு அலசிக் கொண்டே இருப்பேன். அவர் அடிப்பதேயில்லை…
.
…என்ன அதிசயம். எப்படி நடக்குது டொக்டர்? அந்த கிறீன் ரீ மணத்திற்கு கோபம் வராமல் தடுக்கிற குணம் இருக்கிதா?”

நான் மறுமொழி சொல்லவில்லை. உண்மையைச் எப்படி முகத்துக்கு நேரே சொல்வது?

இரு கை தட்டினால்தானே ஓசை எழும் என்ற சிம்பிள் தத்துவம்தான்.

‘நீ வாயை மூடிக்காண்டிருந்தால் அவரது கை நீளாது’ என்பதை அவளுக்குக் கூறவில்லை.

வெறுமனே புன்னகைத்தேன்.

எனது வேறுசில ஆலோசனைகள் பற்றி அறியக் கீழே கிளிக் பண்ணுங்கள்.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

வீரகேசரி Steth இன் குரல் பத்தியில் நான் எழுதிய கட்டுரை

0.0.0.0.0.0

Read Full Post »

>

“விலை போகாத இந்த மருந்தை என்ரை தலையிலை கட்டியிருக்கிறார் அந்த டொக்டர்” ஆத்திரத்தில் அவரது முகம் சிவத்துத் துடித்தது.

கிட்ட இருந்திருந்தால் அந்த டொக்டரின் முகம் பப்படம் போல சுக்கு நூறாகியிருக்கும். அடித்து நொறுக்கியிருப்பார் என்பது நிச்சயம்.

கொழும்பின் மறு எல்லையிலிருந்து வந்திருந்தார் அவர். அந்த டொக்டரும் அங்குதான். நான் மறு எல்லையில்.

நீண்டகாலமாக, பரம்பரை பரம்பரையாக என்னிடம் மருந்து எடுக்கும் குடும்பத்தினர். அவரது குடும்ப வைத்தியார் நான். இப்பொழுது நெடும்தொலைவில் இருக்கிறார். ‘எடுத்ததற்கெல்லாம்’ என்னிடம் ஓடி வருவது முடியாத காரியம். அவசரத்திற்கு பக்கத்தில் உள்ள டொக்டரிடம் காட்டுவார். சற்றுத் தீவிரமான பிரச்சனை என்றால் என்னிடம் வருவார்.

இப்பொழுது வந்தது பெரிய பிரச்சனை அல்ல. நேர நெருக்கடியால் அருகில் மருந்தெடுத்தும் குறையாத பிரச்சனை. சாதாரண சளி இருமல்தான்.

ஆனால் முக்கியமான பல வேலைகள் இருப்பதால் விரைவில் சுகமாக வேண்டும் என்ற அவசரத்தில் என்னைத் தேடி வந்திருந்தார். இப்பொழுதும் வழமையாக அருகில் இருக்கும் டொக்டரிடமே காட்டியிருக்கிறார். அவரும் திறமையான பெயர் பெற்ற மருத்துவர்தான். இவர்; அவசரப்பட்டு என்னிடம் வந்துவிட்டார் என எண்ணிக் கொண்டேன்.

“என்னெண்டாலும் உங்களிட்டை காட்டினால்தான் எனக்கு சுகம் வரும்” என்ற பாராட்டுரை நீரிழிவுக்காரனுக்கு ஐஸ்கிறீம் கிடைத்தது போல இனித்தது.

“என்ன மருந்து தந்தவர்” எனக் கேட்டேன்.

மறுமொழி சொல்லவில்லை!

பட்டென எழுந்தார். எழுந்த வேகம் என்னை அசர வைத்தது.

இவர் கோபப்படும்படி நான் எதுவும் சொல்லவில்லையே, ஏன் இப்படி வீராவேசமாக எழுகிறார்.

அவரது அடுத்த செய்கை என்னைத் திகைக்க வைத்தது.

எழுந்த வேகத்தில் பக்கென ரௌசர் பொக்கற்றில் கையை வைத்து எதையோ சிரமப்பட்டு இழுத்தார். மூச்சடைத்த நான் அவரது கையிலிருந்து வரப்போவதை உன்னிப்பாகக் கவனித்துக்கொண்டே இருந்தேன்.

உள்ளுர ஒரு அச்சம் இருந்ததை மறுப்பதற்கில்லை.

கை நிறைய ஒரு கட்டு என்வலப்புகள் வெளி வந்தன.

நல்லவேளை துப்பாக்கி அல்ல.

அவருக்கு வந்த காதல் கடிதங்களும் அல்ல. மருந்து போட்ட என்வலப்புகள்.
அவ்வளவும் அவருக்குக் கொடுக்கப்பட்ட மருந்துகள்.

‘ஒரு சாதாரண இருமலுக்கு இவ்வளவு மருந்துகளா’

கேட்பது நாகரீகம் அல்ல என்பதால் வாய் பொத்தியிருந்தேன்.

ஓவ்வொன்றாக எடுத்துப் பார்க்க வேண்டிய துன்பம் எனக்காயிற்று.

தடிமனுக்கு, சளிவெட்ட, அன்ரிபயடிக், விட்டமின்கள் என இன்னும் இன்னும் ….

ஒரு மருந்து மட்டும் வித்தியாசமாக இருந்தது. Fefol விலையுயர்ந்த இரும்புச் சத்து மருந்து. அதுவும் கொஞ்சநஞ்சம் அல்ல. 30 மாத்திரைகள். 

குருதியில் ஹீமோகுளோபின் அளவு குறைந்து உள்ளவர்களுக்குக் கொடுப்பார்கள். சாதாரண வார்த்தைகளில் சொன்னால் இரத்தசோகை உள்ளவர்களுக்கு கொடுப்பதாகும்.

இவர் நல்ல ஆரோக்கியமானவர். வயதும் 40-45தைத் தாண்டாது. தனது உடலில் அக்கறையுள்ளவர். கீரை, மீன், பழவகைள், கோழியிறைச்சி எனஆரோக்கியமான உணவுப் பழக்கம் உள்ளவர். தினசரி நடைப் பயிற்ச்சி செய்பவர். இவற்றின் மூலம் தனது எடையையும் மிகவும் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பவர். குடி, புகைத்தல் போன்ற பழக்கங்களும் இல்லாதவர். எனவே இரத்தசோகை வருவதற்கு வாய்ப்பில்லை என்பது புரிந்தது.

ஆயினும் மூலத்தால் இரத்தம் போதல், நடந்தால் இளைப்பு போன்ற ஏதாவது குணங்குறிகள் இருக்றிறதா என விசாரித்தேன்.

“அப்படி ஒன்றும் இல்லை” என்று சொன்னவர் சற்று யோசித்தார். “விலையான மருந்து! இதுக்கு மாத்திரம் 300 சொச்சம் அவற்ரை பார்மஸியிலை எடுத்தவை…”

“..இந்த மருந்துக்கு expiary date இன்னும் ஒரு மாதத்திலை வருகிது…” எனச் சொல்லிப் போட்டுத்தான் அந்த அதிர்ச்சி தரும் வார்த்தைகளை ஆவேசமாக உதிர்த்திருந்தார்.
 
 -விலை போகாத இந்த மருந்தை என்ரை தலையிலை கட்டியிருக்கிறார் அந்த டொக்டர்-.

மருத்துவர்களைக் கடவுள்களாகக் கருதிய காலம் உண்டு. “ஐயா கடவுள் முதல், அடுத்தது நீங்கள்” எனப் பலர் கூறியதைக் கேட்ட அனுபவம் எனக்குண்டு.

இத்தகைய சூழலில் ‘விலையாகாத மருந்தைத் தலையில் கட்டுபவர்;’ என்ற சொல்லு என்னைப் பற்றியல்ல வேறு ஒரு டொக்டரைப் பற்றி என்ற போதும் மனத்தை உறுத்தியது.

மருத்துவம் என்பது கூட சேவை என்பதற்கு அப்பால் உழைப்பிற்கான ஒர் வழியென்ற நிலை ஏற்பட்டுவிட்டது.

காசேதான் கடவுள் அப்பா என்ற காலம் இது.

இருந்த போதும் எந்த ஒரு டொக்டரும் ஒரு நோயில்லாத ஒருவருக்கு அல்லது வேறு நோயுள்ள ஒருவருக்கு அதற்கு சம்பந்தம் இல்லாத மருந்தை விற்பனை செய்வதற்காகக் கொடுத்தார் என்பது தவறான குற்றச் சாட்டாகவே எனக்குப் பட்டது.

என்ன நடந்திருக்கலாம். பல கோணங்களில் யோசித்துப் பார்த்தேன்.
நோயாளி அன்று ஏதாவது ஒரு களைப்பு இளைப்பு என்று ஏதாவது சொல்லிவிட்டு இப்பொழுது மறந்திருப்பார்.

அல்லது மருத்துவரின் சிட்டையை, சரியாகப் படிக்காத மருந்து கொடுப்பவர் தவறான மருந்தைக் கொடுத்திருக்கலாம்.

ஆயினும் மனம் திருப்திப்படவில்லை எங்கோ எதோ தவறு நடந்திருக்கிறது என மனம் அழுத்திச் சொல்லியது. அவரது மருந்துப் பைக்கற்றை வாங்கி கவனமாகப் பரிசோதித்தேன்.

எல்லாம் சரியாகத்தான் இருப்பதுபோல் இருந்தது. ஆனால்

பக்கற்றில் மருந்து கொடுக்கப்பட்டவரின் பெயர் திருமதி என ஆரம்பித்திருந்தது….

….அந்தப் பைக்கற்றில் மாத்திரம்….

மனைவி கொடுக்கும் சாப்பாட்டை மட்டுமல்ல மனைவிக்கான மருந்தையும் இவரே சாப்பிட்டுவிட்டார்.

மருத்தவர்களின் சிகிச்சை அறைகளில் நடக்கும் சில சிரிப்பான சம்பவங்களுக்கு கீழே கிளிக் பண்ணுங்கள்

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்

வீரகேசரி பத்திரிகையின் ஞாயிறு பதிப்பில் நான் எழுதிய கட்டுரை

0.0.0.0.0.0

Read Full Post »

>

சாதாரண தொலைபேசியால் தான்  தொல்லை என்றால் இப்பொழுது செல்லுலர் தொலைபேசிகள் வேறு வந்து விட்டன.
எவரைப் பார்த்தாலும் கைகளுக்குள் கைக்குண்டு வைத்திருப்பது போலப் பற்றிக் கொண்டு வீரநடை போடுகிறார்கள்.
கையில் இருக்கும், இல்லாவிட்டால்
ஷேட் பொக்கற்றுக்குள்ளால் எட்டிப் பார்க்கும்.
அல்லது இடுப்பில் தொங்கும்.

ரெஸ்ராரன்டில் நண்பர்களுடன் குளிர் ஊட்டப்பட்ட பியர் அடித்துக் கொண்டிருந்த கந்தசாமியாருக்கு முடுக்கிக் கொண்டு வந்தது.
கொஞ்சம் தாமதித்தால் முட்டி வழிந்து மார்பிள் தரையில் சிந்தி
தன்னையும் மற்றவர்களையும் சறுக்கீஸ் விளையாட வைத்துவிடும். 

பயம் கிளம்ப கழிவறையைத்
தேடிக் கண்டு பிடித்தார்.

முதல் கூடு மூடிக்கிடந்ததால் அடுத்ததை நோக்கி விரைந்தார்.
நல்ல காலம் அதற்குள் யாருமில்லை.
உள்ளே நுழைந்த அவர் சிப்பை திறந்து
வெளியில் எடுத்து,
பாரம் இறக்கத் தொடங்கினார்.

“எப்படிப் போகுது”
அமானுசக் குரல் எழுந்தது.
யாராவது எட்டிப் பார்க்கிறார்களா என்ற திகைப்பு எழுந்தது,
சுற்றும் முற்றும் பார்த்தார். யாருமில்லை.
குரல் முதலாவது கூடத்திலிருந்து வருவது புரிந்ததும் திகைப்பு அடங்கியது.
ஆயினும் பொதுக் கழிப்பறையிலிருந்து
மற்றவர்களுடன் பேசுவது
இவருக்கு உவப்பானதல்ல.
வெட்கமாகவும் கோபமாகவும் இருந்தது.
“என்ன சத்தத்தைக் காணவில்லையே”
மற்றவர் திரும்பவும் கேட்டார்.
“கேடுகெட்ட மனிதன்.
என்ன பேசுவது என்று தெரியாமல்
கதைக்கிறான்.”
கந்தசாமியாருக்கு என்ன மறுமொழி சொல்வது
என்று தெரியவில்லை.
“நல்லாப் போகுது”
எரிச்சலை அடக்கிக் கொண்டு பதிலளித்தார்.
உண்மையிலேயே எரிச்சல் இன்றி
குழாயைத் திறந்தது போல
பீறிட்டுப் பாய்ந்து கொண்டிருந்தது.
“எனக்கு வேலை முடிஞ்சுது.
நான் புறப்படப் போறன். நீயும் வாறியா”
மற்றவர் கேட்டார்.
இவருக்கு இன்னமும் அரைவாசி மீதமிருந்தது.
முழுவதையும் இறக்கினால்தான்
நிம்மதியாகும்.
அதோடை இவன்ரை பேச்சுத் தொல்லையையும்
வெட்ட நினைத்தார்.
“எனக்கு முடியவில்லை.
நான் முடிச்சுக் கொண்டு வாரன் நீ போ”
இவர் பதிலளித்தார்.
“மடையன்”
பக்கத்துக் கூட்டிலிருந்து கோபமாகக் குரல் எழுந்தது.
இதைக் கேட்டதும் கந்தசாமியாரின்
கையும் மனமும் சேர்ந்து பதறின.
“டார்லிங்!
…நான் உன்னோடை செல்லில் பேசுறதுக்கு
 பக்கத்து யூரினலில் நிற்பவன்
தானே மறுமாழி சொல்லுறான்….
இடியட்”
விசயம் புரிவதற்கிடையில் 
நடுங்கிய கை விட்டுப் போனதால் 
கந்தசாமியாரின் ரவுஸ்சர் 
நனைந்துவிட்டது.
0.0.0.0.0.0

Read Full Post »

>

இறுக்கமான ஆடைகள்

ஆசிரியர்:- “இறுக்கமான ஆடைகள் குருதிச் சுற்றோட்டத்தைக் குறைக்கும்.”

ஒரு மாணவன் எழுந்தான்.

அவன் தனது ஜீன்ஸ்சின் முற்புறத்தை அழுத்திப் பிடித்தபடி  நின்றதை ஆசிரியர் கவனிக்கவில்லை. அவன் சொன்னான்…

“ஆனால் பெண்கள் இறுக்கமான ஜீன்ஸ்சும், சுருக்கமான ரீ சேட்டும் அணிந்தால் எனது குருதிச் சுற்றோட்டத்தை அதிகரிக்கிறதே”

அடுத்த வரிசையில் இருந்த மாணவிகளை கடைக்கண்ணால் விழுங்கியபடி சொன்னான்.

0.0.0.0.0.0
கடவுள் அவதானிக்கிறார்.

மாணவர்களுக்கான ஒன்று கூடல் நடந்துகொண்டிருந்தது.

உணவுகள் ஒரு பக்கத்தில் அடுக்கி வைக்கப்ட்டிருந்தன.

ஒரு கூடை நிறைய கொய்யாப் பழம் வைக்கப்பட்டிருந்தது.

“ஒன்றுக்கு மேல் எடுக்க வேண்டாம். கடவுள் கவனித்துக் கொண்டிருக்கிறார்” என்ற வாசகம் அதன் மேல் ஆசிரியரால் எழுதப்பட்டிருந்து.

சற்றுத் தள்ளி மற்றொரு கோப்பையில் மோதகம் வைக்கப்பட்டிருந்தது.

“தேவையான அளவு எடுத்துக் கொள்ளுங்கள்” என்று எழுதிய பையன்
அதன் கீழே ….

“கடவுள் கொய்யாப் பழக் கூடையை அவதானித்துக் கொண்டிருக்கிறார்” என எழுதி முடித்தான்.

 0.0.0.0.0.0

 
“அப்பா Sex என்றால் என்ன?”தகப்பனுக்கு கையும் ஓடவில்லை, காலும் ஓடவில்லை.

பாடசாலை செல்ல ஆரம்பித்த பையன் இவ்வாறு கேட்டதால் எவ்வாறு புரிய வைப்பது என அறியாது திணறிவிட்டார்.

தன்னைச் சுதாகரித்துக் கொண்டு பாலுறுப்புகள், பாலுணர்வு பற்றியெல்லாம் மிக விபரமாக அவனுக்குப் புரியும் விதத்தில் விளக்கிக் கொண்டே போனார்.

“அப்பா நீங்கள் சொல்வதையெல்லாம் எழுத இதில் போதிய இடம் இல்லையே.. என்ன செய்ய?” என்று சொல்லி கையிலிருந்த பாடசாலை நுளைவுப் பத்திரத்தைக் (Admission form) காட்டினான்.

0.0.0.0.0.0

அந்தப் பையன் ஆழ்ந்த துயரத்தில் மூழ்கியிருந்தான்.

நாடியில் கை வைத்தபடி விகாரமஹாதேவி பார்க் வாங்கில் அமர்ந்திருந்தபோது  அவனருகே ஒருவர் வந்து உற்கார்ந்தார்.

அவனது துயருக்கான காரணத்தை வினவினார்.

“ஒரு காதலியைத் தொலைப்பதைவிட வேறு பெரும் துயர் ஏதும் இருக்க முடியுமா?” விம்மி அழாத குறையாகக் கேட்டான்.

“நிச்சமாக இருக்க முடியாது.”..

“என்னைப் போல மற்றொரு புதுக் காதலியைப் பெறும் முயற்சியில் இறங்காவிட்டால்!.

மறுமொழி சொன்னவரை இவன் ஏறிட்டுப் பார்த்தான்.

புற்தரைப் பாதையால் சென்ற பெண்ணுக்கு
சைகை மொழி பேசி
வளைக்கும் முயற்சியில்
ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.

அவரது வெண்முடி மாலைச் சூரிய ஒளியில் பளபளத்தது.

0.0.0.0.0.0

அவள் தனது போய் பிரண்டின் நெருங்கிய நண்பனுடன் படுக்கையில் இருந்தாள்.

செல்போன் அனுங்கியது.

“ஓகே நல்லா விளையாடு Bye” என்று சொல்லி போனை அணைத்தாள்.

“யார் பேசியது”

“எனது போய் பிரண்ட் …
தான் உன்னுடன் செஸ் விளையாடிக் கொண்டிருப்பதாகச் சொன்னான்”

இணையத்தில் பொறுக்கிய சில கடி ஜோக்ஸ்

Read Full Post »

>‘இரண்டாயிரம் ஆண்டுச் சுமை எமக்கு’ எனப் பாடினார் எமது மூத்த கவிஞர்.

இரண்டாயிரம் ஆண்டுகள் என்ன அதற்கும் மேலான காலாச்சார பாரம்பரியம் எமக்கு உண்டு. இன்றும் எங்கள் கலாசாரம் செழுமையாக இருப்பதற்கு அதுவே முக்கிய காரணமாகும்.

ஆனால் சில தடவைகளில் அது சுமையாகவும் இருக்கும் என்பதையே அவர் அவ்வாறு பாடினார்.

இரண்டாயிரம் என்ன,
ஐயாயிரம் ஆண்டுப் பெருமையைப் பறையடித்து சங்கு ஊதி
மேலும் சுமை ஏற்றத்
தயங்காதவர்கள் நாம்.

எமது சுமை கலாசாரத்தில் மட்டுமல்ல. விஞ்ஞானம் சுகாதாரம் என மேலும் பல துறைகளுக்கும் விஸ்தரிக்கிறது.

இல்லாத சுமைகளையெல்லாம் தேடிக் கண்டுபிடித்து எம்மினத்தின் முதுகெலும்பை ஒடிக்க எம்மில் பலர் துடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஒளவையார் காலத்திலேயே


‘அணுவைப் பிளந்து ஏழ் கடலைப் புகுத்தியவர்கள்’

நாம் எனப் பெருமையடித்துக் கொள்கிறோம்.

ஆனால் அவர் பாடிய காலத்தில்
அணு என்ற சொல்லின் அர்த்தம் என்ன?
இன்று அதன் புதிய அர்த்தம்
என்னவெனச் சிந்திக்கிறோமா?

அப்படியான நாம் சுகாதாரத் துறையை மட்டும் விட்டு வைப்போமா?

தமிழர்களாகிய நாம் சங்க காலத்திலேயே சுத்தத்தைக் கடைப்பிடித்தவர்கள், சுகாதாரத்தைப் பேணியவர்கள் என்று பெருமை அடித்துக் கொள்வோம்.

‘அன்றே ஆசாரக்கோவை எழுதப்பட்டுள்ளமை அதற்குச் சான்று’ எனப் பழம் பண்டிதர்கள் ஆதாரம் தேடுவார்கள்.

‘அதிகாலை நித்திரை விட்டெழுந்து கடற்கரை ஓரமாக அல்லது நீர் நிலையை அண்மித்த இடங்களில் தெற்குத் திசையை நோக்கி மூக்கு நுனியைப் பார்த்தபடி மலசலம் கழிக்கவேண்டும் என்று எமக்குச் சைவ வினாவிடையில் போதிக்கப்பட்டுள்ளது.

ஆனால் நாம் வடலிகளுக்கும், ஈச்சம் பற்றைகளுக்கும், வயல்களுக்கும் மனித எருக்களைப் பசளையிட்டு காடு வளர்த்துச் சூழலைப் பாதுகாக்க அவ்வாறு செய்தோமா?

அதன்பின் குளக்கரையில் அடிக்கழுவி, அதே நீரால் வாய் கொப்பளித்து, முகம் கழுவி, தலைக்கு நீராடி, ஆடை துவைத்துச் சுத்தமாக ஆலயம் சென்று தரிசனம் செய்த எமது கலாசாரப் பாரம்பரியம் போற்றுதற்குரியது!

 புண்ணிய ஸ்தலம் ஒன்றைத் தரிசிக்கும் வாய்ப்பு பல வருடங்களுக்கு முன் கிடைத்தது. அதிகாலையி லேயே பொழுது புலருமுன் அரையிருட்டில் எம்மை புண்ணிய தீர்த்தத் திற்கு அழைத்துச் சென்றார் எமது கைட்.

கடற்கரையில் நாற்றம் தாங்க முடியவில்லை. சேற்று நாற்றமாக்கும் என மூக்கைப் பிடித்துக் கொண்டு நீரினுள் தலையை மூழ்கிவிட்டுத் தலையை வெளியே எடுத்தேன்.

லேசான வெளிச்சத்தில் லட்டு மாதிரி ஏதோ மிதந்து வருகிறது.


கடவுளின் அருட்பிரசாதமாக்கும் எனப்
பக்தி யோடு அள்ளியெடுக்கக்
கையை நீட்டினால்
அருகிலிருந்தவர்
நமுட்டுச் சிரிப்போடு எழுகிறார்.

லுங்கியை உயர்த்திக் கொண்டு ‘பாரம் கழிந்து’ விட்ட திருப்தியோடு காலை அகட்டி வைத்து நடந்து செல்கிறார்.

சிறுவயது ஞாபகம் வருகிறது. எனது மாமாவிற்கு என்னிலும் ஒருசில வயதுகளே அதிகம். அதனால் அவர் எனது விளையாட்டுத் தோழனும் கூட.

அவருக்குக் ‘கிரந்தி’ உடம்பு என்று பாட்டி அடிக்கடி சொல்லுவா.

சிறு காயமானாலும் புண் அவியத் தொடங்கிவிடும்.
அவரின் ஐயா, எனது பாட்டானாருக்கு பட்டணத்தில் வேலை. ஞாயிற்றுக்கிழமைகளில் தான் வீட்டுக்கு வருவார்.

வந்ததும் இவரது புண் அவரது கண்ணைக் குத்தும்.
உடனடியாகவே அதனைச் சுத்தம் செய்யச் சித்தமாவார்.

மாட்டுக் கொட்டிலுக்குப் போய் புதுச்சாணமாக எடுத்து,
ஒரு உருண்டை உருட்டி
ஆடுகால் மரத்தடி ஈரலிப்பு மண்ணில்
ஒளித்து வைப்பார்.


பின்புதான் மாமனை கிணத்தடிக்கு இழுத்துக் கொண்டு போய் சோப் போட்டுக் குளிக்க வார்க்கும் சடங்கு தொடங்கும்.

அதனைத் தொடர்வதுதான் உச்சக்கட்டம்.

கண்ணுக்குப் சோப் போட்டுவிட்டு பொடிப்பிள்ளை கண் திறக்க முடியாது அந்தரித்து நிற்கும் நேரம் பார்த்து மறைத்து வைத்திருந்த சாணிக்கட்டியை எடுக்க மெல்ல நழுவுவார்.

புண்ணில் தேய்த்துச் சுத்தப் படுத்துவதற்காக.

மாமனுக்குத் தெரியாதா இவர் செய்யப் போவது.
கண்ணைத் துடைத்துவிட்டுப் பிடிப்பார் ஓட்டம்.
இவர் விட்டுக் கலைப்பார்.
அவர் தப்பியோடுவார்.

கிணற்றுக்கட்டைச் சுற்றி,
வீட்டைச் சுற்றி,
பாட்டியைச் சுற்றி
என ஓட்டப்போட்டி தொடரும்.

ஓடிக் களைத்துப்போன பாட்டா, தப்பிப் போட்டாய் என்ன, அடுத்த கிழமை பார்க்கிறேன் என பல்லில்லாத வாயால் கறுவுவார்.

அன்று ஓடித் தப்பியதால்தான் ஏற்புவலியால் (Tetanus) சாகாமல் இன்று தலைநரைத்தும், இறைசேவை செய்து கொண்டு உயிர் பிழைத்து வாழ்ந்து கொண்டிருக்கிறார் மாமா.

பசுவின் சாணியில் ஏற்புவலிக் கிருமிகள் நிறைய இருப்பது
இப்பொழுது எல்லோருக்கும் தெரிந்த விடயம் தானே.
அவரது காலத்திலும் தெரிந்து தான் இருந்தது.
ஆயினும் பாட்டா மூதறிஞர் ராஜாஜியின் விசிறி.
கசத் தடுப்பு (TB) ஊசியான பி.சி.ஜி. போடக்கூடாது எனப் போராட்டம் நடத்தியவரல்லவா அந்த மூதறிஞர்.

தினமும் கைராட்ணம் சுத்துமளவிற்கு அவர் சொற்கேட்டு நடந்த சீடப்பிள்ளையான பாட்டா சாணியைத் தேடாமல் வேறு என்ன செய்திருப்பார்.

படித்தவர்கள் கூட அறிவியலை விட
வாழையடி வாழையாக வந்த
பழக்கவழக்கங்களையும் சம்பிரதாயங்களையும்
நம்பிக் கடைப்பிடித்து வந்த காலம் அது.

பாட்டாவும் எப்படி விதிவிலக்காக முடியும்.

முன்பெல்லாம் பிறந்த சில நாட்களுக்குள்ளேயே குழந்தைகள் ஏற்புவலியால் துடித்துச் சாவது சர்வசாதாரணம்.

பிறந்தவுடன் பொக்குள் புண்ணுக்குச் சாணி வைத்து மருந்து கட்டும் வழக்கம் அப்போதிருந்தது தான் காரணம்.

இன்றும்கூட சாணியால் குழந்தைகளின் உயிர் குடிக்கும் கைங்கரியம் உலகின் சில பகுதிகளில் நடக்கிறதோ நான் அறியேன்.

உலகெங்கும் இன்னும் குழந்தைகள் பிறந்த சில நாட்களுக்குள் ஏற்பு நோயால் இறப்பதாக உலக சுகாதார ஸ்தாபனம் கூறுகிறது. 2008ற்கான அறிக்கைப்படி  6658 இவ்வாறு இறந்தமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஆயினும் 2000-2003 காலப்பகுதியில் 257,000 அவ்வாறான சிசு இறப்புகள் நிகழ்ந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது.

இது பற்றி விபரமாக அறிய உலக சுகாதார ஸ்தாபனத்தின அறிக்கையைப் படிக்க கிளிக் பண்ணுங்கள் 

பிறப்புக் கால சிசு ஏற்பு வலி நோயின் (Neonatal Tetanus) அறிகுறிகளாக

  • தசைஇறுக்கம்
  • சினப்பு
  • தாய்ப்பாலை உறிஞ்ச முடியாமை
  • விழுங்கவும்  முடியாமை
  • தொட்டவுடன் தசைகள் இறுகி வலிப்பு போல ஏற்படல் எனப் பலவாகும்.

ஆனாலும் இன்னமும் பசும்சாணி எமக்குப் புனிதமானதாகத்தான் இருக்கிறது.

வீட்டைப் பசுஞ்சாணியால் மெழுகித் தான் புனிதப்படுத்துவோம்.

பிள்ளையார் பிடிப்பதும் சாணியால்தான்.

சுளகைச் சாணியால் மெழுகி அதில் உணவு தயாரித்து உண்ட மலந்தின்னிகள் நாம்.


மனித மலத்தைக் கண்டாலே
மூக்கைப் பொத்தி
மறுபக்கம் திரும்பும் நாம்
மாட்டின் மலத்தைப் புனிதமாக,
பெருமையாக கையால் தொட்டு அளையவும் தயங்காத
‘புதுமை’ மனிதர்களாக இருக்கிறோம்.

கைப்புண்ணோடு
சாணியைக் கையளைந்து கதிமோட்சம் அடைந்த கோடானுகோடி முன்னோர்கள் இறந்தும் பிறவா வரம் பெற்றனரோ?

இவ்வளவு செய்தும் எமது முன்னோர்கள் நோய் நொடியின்றி ஆரோக்கியமாக திடகாத்திரமாக நீண்ட நாள் வாழ்ந்தார்கள் என்றால் அதற்கு ‘கடவுள் அருளன்றி’ வேறு காரணம் எதுவும் இருக்க முடியுமா?

ஆசாரக்கோவைகளும் சைவவினாவிடைகளும் பாரம்பரியமாக நாம் பேணி வந்தமை எமது சுகாதாரப் பண்புகளைக் காட்டுகிறதா
அல்லது
கேடு கெட்ட சனங்கள் இவற்றைப் படித்தாவது திருந்தாதா என்ற தமிழறிஞர்களின் அங்கலாய்ப்பைக் காட்டுகிறதா?

எனது பாட்டியும் சுத்தத்தில் சற்றும் குறைந்தவரல்ல.
அவ எப்பவாவது ஆஸ்பத்திரிக்குப் போய் வந்தாவென்றால்
பெரும் எடுப்புகள் எடுக்க வேண்டியிருக்கும்.

தலைவாசலிலேயே வாளியில் தண்ணீர் வைத்திருக்க வேண்டும்.
வந்ததும் அவ கூப்பாடு போடுவா.
அம்மா வாசலுக்கு ஓடிப்போய் தலையில் நீரூற்றுவா.

பிள்ளைகளாகிய நாங்கள் முன்னே போனால் செப்பல் பேச்சுத்தான் கிடைக்கும். உடுப்பையும் கழற்றி வாளியில் போட்டுவிட்டு கிணத்தடியில் போய் முழுகிவிட்டுத்தான் வீட்டுக்குள் காலடி வைப்பா.

செத்த வீட்டுக்குப் போய்வந்தால் சொல்லவே தேவையில்லை. இரண்டும் தீட்டுத்தான் அவவுக்கு.
‘கண்ட கண்ட சனங்களெல்லாம்’ பிளங்கிற இடத்துக்குப் போட்டு வந்த அசூசைக்காகக் குளிப்பாவோ
அல்லது
ஆஸ்பத்திரி அசுத்தம், கிருமிகள் தொற்றுமிடம் என்று உணர்ந்துதான் குளிப்பாவோ எனக்குத் தெரியாது.

எப்படியிருந்த போதும் அது எமது மூதாதையரின்
நல்ல புத்திசாலித்தன மான பழக்கம் என்றுதான் சொல்ல வேண்டும்.

ஆஸ்பத்திரிகளுக்குப் பல்வேறு விதமான நோய்களுடன் பலரும் வருவார்கள். அவற்றில் பல தொற்று நோய்களாக இருக்கும். காய்ச்சல், இருமல், வயிற்றோட்டம், நெருப்புக்காச்சல், செங்கண்மாரி என இப்படி எத்தனையோ இலகுவில் தொற்றக்கூடியன.

அதுவும் ஹொஸ்பிட்டல் இன்பெக்சன் (Hospital acquired infecions) என்பது அதி தீவிரமானது. கடுமையாகத் தாக்கக்கூடியதாகும்.
எனவே வைத்திய சாலைக்குப் போய்வந்தால் குளிப்பது மிக நல்ல பழக்கம்தான்.

டொக்டருடைய கைபட்டாலும் கிருமி பரவிவிடும் எனக் கையைக் கொடுக்கப் பயப்படுகிற அதிதீவிர சுகாதாரச் சிந்தனையாளர்களும் இருக்கவே செய்கிறார்கள்.

‘டொக்டர்களே கேடுகெட்டவர்கள்’ அருவருப்பு என்பதே கிடையாது.
பார்த்தாலே சத்தி எடுக்க வரும் அசிங்கங்களுக்குள் எல்லாம் கையை அசூசையின்றி நுழைப்பார்கள்.
அழுகிச் சீழ் வடியும் புண்களை மூக்குச் சுழிக்காமல் சுத்தம் செய்வார்கள்.
குருதி சிந்தும் உறுப்புகளுக்குள் கையை நுழைப் பார்கள்.
நாற்றமடிக்கும் வாய்களுக்குள் விரலைச் சொருகுவார்கள்.
பிறகு நாடியைப் பார்க்கிறோம் என்று எமது கையையும் பிடிப்பார்கள்

என்பது பலரின் அங்கலாய்ப்பு.

நாங்கள் கையுறைகள் உபயோகிப்பதும்,
அது இல்லாவிடில் ஒவ்வொரு தடவையும்
கைகழுவியே
எமது கைகள் சுருங்கிவிட்டதும்
ஒருவர் கண்களிலும்படுவதில்லை.

  
மல்லிகை சஞ்சிகையில் நான் பல வருடங்களுக்கு முன் எழுதி 
டொக்டரின் டயறி நூலிலும் வெளியான கட்டுரை 
சில மாற்றங்களுடன் மீள் பிரசுரமாகிறது.

Read Full Post »

Older Posts »