Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for the ‘மு.சிவலிஙகம்’ Category

பஞ்சம் பிழைக்க வந்த சீமை

மு.சிவலிஙகம் எழுதிய மலையக மக்களின் வரவாற்று நாவல்.

அண்மையில் வந்த மிக முக்கியமான ஒரு நூல் என நம்புகிறேன்.

ஏனெனில் அந்த மக்கள் இங்கு ஆரம்பத்தில் வந்த வரலாற்றையும் இங்கு அந்நேரத்தில் மலைகளை சுத்தம் செய்து ஆரம்பத்தில் கோப்பி தோட்டங்கள் அமைத்தது பற்றியும், பின்னர் தேயிலை தோட்டங்கள் ஆரம்பித்த போது அவற்றில் வேலை செய்தது பற்றியும் மிக விரிவாகப் பேசுகின்றது.

ஆனால் அவர்கள் பட்ட துன்பங்கள் சொல்ல முடியாதவை.

1820-30 காலப்பகுதியில் தமிழகத்தில் ஏற்பட்ட பஞ்சம் காரணமாக அவர்கள் எங்காவது போய் உழைத்து உயிரைக் காக்க முயல்கிறார்கள்.

திருச்சியிலிருந்து பாம்பனுக்கு காடுகள் வழியே நடையாகவே வருகிறார்.

வழியில் பசியாலும். களையாலும் இறந்து மடிகிறார்கள். பாம்பன் தலைமன்னார் கப்பல் பயணத்தில் கப்பலே தாண்டு மடிகிறார்கள். மன்னாரிலிருந்து மதவாச்சி வரை பாதை காட்டுப்பாதை. அங்கும் பசி பட்டினியாலும் சிநுத்தை போன்ற காட்டு மிருகங்களால் பலர் மடிகிறார்கள். நோய்வாய்ப்பட்டும் மடிகிறார்கள்

இங்கு வந்து அவர்கள் கங்காணிமார்களாலும் துரைமார்களாலும் அடக்கப்படுவது. அவர்களது உழைப்பு சுரண்டப்படுவது. பெண்கள பலாத்காரம் செய்யப்படுவத என மிகவும் விஸ்தாரமாகவும் மனதைத் தொடும்படி சொல்லியுள்ளார்.

உண்மையில் அவர்கள் இங்கு வந்த வரலாற்றை சொல்லும் முதல் படைப்பு என்று சொல்லலாம். அதனால் மிகவும் கவனத்தில் எடுக்கப்பட வேண்டிய நூலாக இருக்கிறது. இதற்கான பாரிய தேடல் செய்த அவரது உழைப்பு பாரட்டப்பட வேண்டியதாகும்.

துன்பத்தில் உழலும் மலையக தோட்ட தொழிலாளி மக்கள் பற்றி புதுமைப் பித்தன் தனது துன்பக்கேணியில் எழுதியுள்ளார் தூரத்துப் பச்சையையும் வாசித்திருக்கிறோம்.

ஆனால் இது அவற்றையெல்லாம் விட ஒரு பரந்த பார்வையைத் தருகிறது

கிட்டத்தட்ட 400 பக்கங்கள் நீளும் நூல் இது.

பேராசிரியர் செ.யோகராசா மிகவும் காத்திரமான முன்னுரை தந்திருக்கிறார்.

அதே போல பேராசிரியர்.சோ.சந்திரசேகரம் சிறந்த அணிந்துரையையும் தந்துள்ளார்.

இது ஒரு கொடகே வெளியீடு. விலை ருபா 1000/=
661, 665, 675, மருதானை வீதி கொழும்பு 10
Tel:- 011 2685369, 2686925

Read Full Post »