Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for the ‘நிகழ்வுகள்’ Category

ஈழத்தின் பெருமையை தமிழ் கூறும் நல்லுலகு எங்கும் நிலைநிறுத்திய பெருமை பேராசிரியர்.க.கைலாசபதிக்கு உண்டு. கடந்த  5 – 6 தசாப்தங்களுக்கு மேலாக அவரது பெயர் தமிழ் இலக்கிய விமர்சன உலகில் தொடர்ந்து பேசப்பட்டுக் கொண்டே இருக்கிறது.

அழகியலுக்கு அப்பால் சமூகப் பிரக்ஞையுடைய படைப்புகளுக்கு முக்கியத்துவமும், மார்க்சிய அடிப்படையிலான விமர்சனங்களுக்கு முன்னோடியாகவும் விளங்கியவர் அவர்.

அவர் பற்றியும் அவரது படைப்புகள், எழுதிய நூல்கள் பற்றிய விபரங்கள் தமிழ் விக்கிபீடியாவில் இவ்வாறு கூறப்படுகிறது
க. கைலாசபதி

அவர் மறைந்து 29 ஆண்டுகளுக்குப் பின்னரும் தொடர்ந்து என்றும் நினைக்கப்படுபவராக எம்மிடையே தனது ஆளுமையை நிலைநிறுத்திக் கொண்டு காலத்தோடு இணைந்து நடக்கிறார்.

கடந்த பல வருடங்களாக இலங்கை முற்போக்கு கலை இலக்கிய மன்றம் கைலாசபதி நினைவுக் குழுவுடன் இணைந்து கைலாசபதி நினைவுப் பேருரைகளை நடாத்தி வருகிறது.

இவ்வாண்டிற்கான நினைவுப் பேருரை எதிர்வரும் மார்கழி 18ம் திகதி 2011 ல் ஞாயிறு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

இலங்கை முற்போக்கு கலை இலக்கிய மன்றத்தின் ஆதரவில் வெள்ளவத்தை தர்மாராம வீதியில் உள்ள பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனத்தில் மாலை 4.30 மணிக்கு நடைபெறும்.

தலைமை:- திரு.எம்.வாமதேவன் (முன்னாள் செயலாளர் தோட்ட வீடமைப்பு உட்கட்டமைப்பு மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சு)

பேருரை:- திரு.ஏ.எஸ்.சந்திரபோஸ் (சிரேஷ்ட விரிவுரையாளர் இலங்கை திறந்த பல்கலைக் கழகம்)

குறித்த நேரத்திற்கு நிகழ்ச்சிகள் ஆரம்பமாகும் எனவும் அனைவரையும் அன்புடன் அழைப்பதாகவும் நிகழ்ச்சி அமைப்பாளர்கள் அறிவித்துள்ளனர்.

சென்ற ஆண்டிற்கான நினைவுப் பேருரை கொழும்பு பல்கலைக் கழகத்தில் விரிவுரையாளராகக் கடமையாற்றும் அவரது மகளான கலாநிதி பவித்ரா கைலாசபதி அவர்களால் ஆற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அதற்கான இணைப்பு

கணவன் மனைவி இருவரும் உழைக்கும் குடும்பத்தில் நன்மைகள் பிரச்சனைகள்.- கைலாசபதி நினைவுப் பேருரையில்

பேராசிரியர் கைலாசபதி பற்றி திரு லெனின் மதிவானம் எழுதிய ‘பேராசிரியர் க.கைலாசபதி சமூக மாற்றத்திற்கான இயங்காற்றல்’என்ற நூல் வெளியீடு பற்றி இணைப்பு

பேராசிரியர் க.கைலாசபதி சமூக மாற்றத்திற்கான இயங்காற்றல்

0.00.0.00.0

Read Full Post »

>எமது பாடசாலையின் அதிபராக சென்ற 5 வருடங்களாக பணியாற்றிய திரு.மு.கனகலிங்கம் அவர்கள் சென்ற 20.06.2011 முதல் வேறு பாடசாலைக்கு இடமாற்றம் பெற்றுச் சென்றுவிட்ட செய்தியை அறிவிக்கிறேன்.

புதிய அதிபராக திரு.பொன்னையா பொன்னம்பலம் பதவி ஏற்றுள்ளார்.  புதிய அதிபர் பற்றிய செய்திகளை அடுத்த பதிவில் தருகிறேன்.

நாடு மிகவும் இக்கட்டான நிலையில் இருந்த காலத்தில் எமது பாடசாலையில் 15.03.2006 பொறுப்பேற்றார் அதிபர். நாட்டின் நிலையைக் கருத்திற் கொள்ளாது பாடசாலையின் வளர்ச்சி ஒன்றையே நோக்காகக் கொண்டு செயற்பட ஆரம்பித்தார்.

உடனடியாக பாடசாலை சூழலில் வாழும் மக்களை அழைத்து நல்லுறவை ஏற்படுத்தியமை ஞாபகத்திற்கு வருகிறது. பழைய மாணவர் சங்கக் கூட்டம் அபிவிருத்திச் சங்கக் கூட்டம் ஆகியவற்றைக் கூட்டியபோது பருத்தித்துறையில் இருந்த என்னையும் கலந்து கொள்ள அழைத்தது நேற்று நடந்தது போலிருக்கிறது. 


திரும்பவும் நான் கொழும்பு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டதும் அவரது வேண்டுகோளுக்கு இணங்க இங்கு பழைய மாணவர் ஒன்றியத்தை ஆரம்பித்ததும் அதன் பின்னர் உங்கள் அனைவரது ஒத்துழைப்போடு பாடசாலை வளரச்சிப் பணியை தொடர முடிந்ததும் இனிய நினைவாகும்.

பாடசாலைக்கு பெரிய இரட்டைக் கதவும், அதற்கான வளைவும் அமைத்தல், வருடாந்த ஞாபகார்த்தப் பரிசுகள், புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்தோருக்கு பரிசுகள் வழங்கல், பரிசளிப்பு விழாவிற்கான பரிசில் நூல்கள் அளித்தல், தொலைபேசி இணைப்பு, மெல்லக் கற்கும் மாணவர்களுக்கான விசேட வகுப்புகள்,கணனிகொள்பனவு, கோவைகளை கணனி மயப்படுத்தல், சரஸ்வதி சிலைகள் அமைத்தல், பாலர் வளாகத்திற்கான புதிய இரும்பு வேலி, கிணறுகளுக்கு சுகாதாரமான மூடிஅமைத்தல், நூலகம் அமைத்தல், அதற்கான தளபாடங்கள் பெறுதல், சைக்கிள் தரிப்பிடம் அமைத்தல் என எழுதி முடிக்க முடியாத அளவிற்கு  பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

சென்ற வருடம் நான் பாடசாலை சென்றபோது

இவ்வளவு பணிகளைச் செய்த மனநிறைவுடன் அதிபர் இடமாற்றம் பெற்று மணற்காடு பாடசாலைக்குச் சென்றுள்ளார். உயர்தராதரம் பெற்ற அவரை, எமது சுயநலம் கருதி ஆரம்பப் பாடசாலை என்ற சிறையில் அடைத்து வைக்க முடியாது. அவரது பதவி உயர்வுகளுக்கு தடங்கல் ஏற்படாது அவரது தொழில் மேம்பாட்டிற்காக வழிவிட்டு நிற்போம்.  

உன்னதமான இலக்குகள், உறுதியான செயற்பாடு, நிலைதளராமை ஆகியன அவரது இயல்புகளாகும். ஆசிரியர்கள், பெற்றோர் பழைய மாணவர் நலன்விரும்பிகளுடன் சுமுகமான தொடர்பாடல், கல்வித் திணைக்களத்துடனான ஒத்துழைப்பு போன்ற செயற்பாடுகள் அவர் வளர்துக்கொண்ட பண்புகள்.  

இவற்றின் ஊடாக அவர் எமது பாடசாலைக்கு பல நன்மைகளைப் பெற்றுக் கொடுத்துள்ளார். இத்தகைய  செயல்பாடானது பாடசாலையை  உயர்நிலைக்குக்  கொண்டு  சென்றுள்ளது . இதையிட்டு பெற்றோரும் நலன்விரும்பிகளும் மிக்க  மகிழ்சியடைகின்றோம். 

அவருக்கு  எமது  பழைய மாணவர் ஒன்றியத்தினதும், பாடசாலை சமூகத்தினதும் மனமார்ந்த நன்றியையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

புதிதாக பொறுப்பேற்ற இடத்திலும் அவரது தன்னலமற்ற பணிகள் சிறக்க வாழ்த்துவோம். 

இடமாற்றம் பெற்றுச் செல்லும் அவர் எமக்கு அனுப்பிய நன்றிக் கடிதத்தின் பிரதியை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

இடமாற்றம் பெற்ற அதிபர்.மு.கனகலிங்கம் அவர்களது கடிதம்

அன்புடையீர்,

நன்றி நவிலல்


 தாங்கள் இளவயதில் கல்வி கற்ற   மேற்படி பாடசாலையின் மேம்பாடு கருதி பலவழிகளிலும்  உதவியுள்ளீர்கள். பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினூடாக நிதியுதவி வழங்கியும், வேண்டும்போது விரைந்து வந்து ஏனைய உதவிகளையும் செய்துள்ளீர்கள்.
     ‘………………………………………- நின்று
தளரா வளர் தெங்கு தாளுண்ட நீரைத்
தலையாலே தான் தருதலால்’     

என்ற  ஒளவையாரின் மூதுரைக்கு  ஏற்றாற்போல் இளம் வயதிலே எண்ணும் எழுத்தும் அறிய வைத்த பள்ளித்தாய்க்கு  பிரதியுபகாரமாக தாங்கள் வளர்ந்த பின்பு இயன்றவரை மனமுவந்து உதவியுள்ளீர்கள்.

  தங்களின் பாடசாலை இன்றைய நிலையிலே திருப்தியான அடைவுகளை வெளிப்படுத்தி நிற்கின்றது. அரைகுறையிலே நிற்கும் கட்டிடமும் கட்டுவதற்கு ரூபாய் இருபது இலட்சம் நிதியும் கல்வித் திணைக்களத்தால் ஒதுக்கப்பட்டுள்ளது. இவ்வருட இறுதிக்குள் கட்டிட வேலைகளும் நிறைவடையலாம் என எதிர்பார்க்கின்றேன்.

    இப்பாடசாலையில் 15.03.2006 இல் அதிபராகப் பொறுப்பெடுத்த நாள் முதல் இன்று வரை பல்வேறு செயற்றிட்டங்களுக்கும் உதவிபுரிந்து  ஊக்கப்படுத்தியுள்ளீர்கள். 20.06.2011 ஆந் திகதி தொடக்கம் புதிய பாடசாலையொன்றிற்கு இடமாற்றம் பெற்றுச் செல்வதால் இன்று வரை உதவி புரிந்த தங்கள் எல்லோருக்கும் எனது இதயம் கனிந்த நன்றிகளைத் தெரிவிப்பதோடு, புதிய அதிபருக்கும் வேண்டிய ஒத்துழைப்பை நல்கி பாடசாலையின் வளர்ச்சியின் தொடர்ச்சியைப் பேணுமாறு வேண்டிக்கொள்கின்றேன்.
 

நன்றி

TP No –  0213217205

Read Full Post »

>

எமது ஆரம்பப் பாடசாலையான மேலைப்புலோலி சைவப் பிரகாச வித்தியாலயத்தில் பாடசாலை மாணவர்களின் தினசரி காலை வழிபாட்டின்போது வணங்குவதற்கான சிலை இல்லாததை உணர்ந்திருந்தார் அதிபர்.திரு.மு.கனகலிங்கம். அவர்களின் முன் முயற்சியால் இப்பொழுது சிலைகள் பாடசாலையின் இரு வளாகங்களிலும் அமைக்கப்பட்ட செய்தியை தந்திருந்தோம்.

பாடசாலையின் பிரதான வளாகத்தின் தெற்குப் புறமாக இரு மண்டபங்களுக்கும் இடையே உள்ள பகுதியில்  சரஸ்வதி சிலை அமைக்கப்பட்டுள்ளது. பிள்ளைகள் காலையில் சிலையைப் பார்த்தபடி காலைத் துதி செய்யும்போது முற்றுக் கொற்றாவத்தை பிள்ளையார் கோவில் ஆலயமும் அத் திசையிலேயே பார்வைக்கு எட்டிய தூரத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

அமரர்களான பத்மநாதன். இராஜலட்சுமி தம்பதிகளின் நினைவாக இச் சிலை அமைக்கப்பட்டுள்ளது. அவர்களது குடும்பத்தினர்அதற்கான நிதியுதவியை வழங்கியிருந்தனர்.

அதிபர்.திரு.மு.கனகலிங்கம் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க அமைக்கப்பட்ட இச் சிலை திறப்பு விழாவின்போது பத்மநாதன். இராஜலட்சுமி தம்பதிகளின் மகளான திருமதி.மீனலோசனி  மற்றும் மருமகன் திரு. தம்பிராசா ஆகியோர் கலந்து சிறப்பித்து, திரை நீக்கம் செய்து  வைத்தனர்.


இச் சிலையை தம்பசிட்டியைச் சார்ந்த கலாபூசணம்.கோ.வேலுப்பிள்ளை வடிவமைத்துக் கொடுத்துள்ளார்.

மற்றச் சரஸ்வதி சிலையானது பாடசாலையின் சிறிய வளாகத்தின் மேற்குப் புறமாக கிணற்றடிக்கு அருகில் இரு மண்டபங்களுக்கும் இடையே உள்ள பகுதியில்   அமைக்கப்பட்டுள்ளது.

எமது பாடசாலையின் புகழ்பூத்த மாணவர்களில் ஒருவரான அமரர்.வை.கா.சிவப்பிரகாசம் (முன்னாள் அதிபர் கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை) அவர்களது ஞாபகார்த்தமாக அவரது மகன் திரு.வை.கா.சி.முகுந்தன் அவர்களது நிதியுதவில் அமைக்கப்பட்டுள்ளது.  இது பாடசாலை உபஅதிபர் கணநாதன் அவர்களது வேண்டுகோளுக்கு இணங்க அமைக்கப்பட்டுள்ளது.

இச்சிலையை அமரர் வை.கா.சிவப்பிரகாசம்அவர்களது இளைய சகோதரரான திரு.வை.கா.இராமச்சந்திரன் அவர்கள் தமது குடும்பத்தினர் சார்பாக திரை நீக்கம் செய்து திறந்து வைத்தார்.

பாலர் வளாகத்தில் உள்ள சிலையை தென்னிந்தியாவைச் சார்ந்த சிற்பக் கலைஞர்கள் வடிவமைத்துக் கொடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இரு சிலைகளுமே மிக அழகாக கலைஅம்சம் நிறைந்தனவாக அமைந்தமை மிகவும் மகிழ்ச்சி ஊட்டுகிறது. அவற்றில் உள்ள தெய்வீகக் களை மாணவர்கள் தம் மனத்தை ஒருமனப்படுத்தி, கற்கைச் செயற்பாட்டில் ஈடுபட வைக்கும் என நம்பலாம்.

இரண்டு சரஸ்வதி சிலைகளையும் அருகருகே வைத்துப் பார்க்கும்போது பிரதான வளாகத்து சிலையானது எமது பாரம்பரிய சிற்பக் கலையை நினைவூட்டுவதாக அமைந்திருப்பதாக என் மனத்தில் பட்டது.

பாலர் வளாகத்துச் சிலை அழகில் அதற்குச் சற்றும் குறைந்ததல்ல. இது நவீன சிறப்பக்கலையி்ன் நுணுக்கங்களை உள்வாங்கிப் படைக்கப்பட்டதாக மனதில் படுகிறது.


எவ்வாறாயினும் எமது பாடசாலை மாணவர்களின் நீண்ட காலத் தேவை பூர்த்தி செய்யப்பட்டமை மகிழ்ச்சியளிக்கிறது.

இச்சிலை நிறுவுவதற்கான முயற்சிகளை எடுத்த அதிபர்.திரு.மு.கனகலிங்கம், முழு ஒத்துழைப்பு வழங்கிய உப அதிபர் திரு கணநாதன், மற்றும் ஆசிரியர்களுக்கு எமது பாராட்டுகளையும் நன்றிகளையும் எமது பழைய மாணவர் ஒன்றியத்தின் சார்பில் தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.

இதற்கான நிதியுதவையை அளித்து, எமது பாடசாலை மாணவர்களின் கனவை நனவாக்கிய அமரர்களான பத்மநாதன். இராஜலட்சுமி தம்பதிகளின் குடும்பத்தினருக்கும், அமரர்.வை.கா.சிவப்பிரகாசம்குடும்பத்தினருக்கும் எமது மனமார்ந்த நன்றிகள்.

மற்றும் சிலைகளை வடிவமைத்த சிற்பிகள், விழாவில் கலந்து கொண்ட பாடசாலை நலன் விரும்பிகள் அனைவருக்கும் எமது பழைய மாணவர் ஒன்றியத்தின் சார்பில் நன்றி தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.


0.0.0.0.0.0.0

Read Full Post »

>

எமது பாடசாலையின் இரு பிரிவுகளிலும் சரஸ்வதி சிலை அமைக்கும் பணி நடை பெற்று வந்ததை அறிந்திருப்பீர்கள்.

இச் சிலைகளின் திறப்பு விழா இன்று காலை நடை பெற்றது. அது பற்றிய தகவலை மேற் கண்ட அழைப்பிதழில் காணுங்கள். விழா கல்லூரி அதிபர் திரு.மு.கனகலிங்கம் தலைமையில் நடைபெற்றது.

பாடசாலை பெரிய வழாகத்தின் சிலையானது அமரர்களான பத்மநாதன் இராசலஸ்மி தம்பதிகளின் நினைவாக அவர்களின் குடும்ப அங்கத்தவர்கள் நிதியுதவியுடன் அமைக்கப்பட்டது.

அதே வேளை சிறிய வளாகத்திற்கான சிலையானது அமரர்  வை.கா.சிவப்பிரகாசம் அவர்களது நினைவாக அமைக்கப்படுவதற்கு அவரது மகன் திரு.சிவப்பிரகாசம் முகுந்தன் நிதியுதவி அளித்துள்ளார்கள்.

சிலையை அமைத்த சிற்பக் கலைஞர் கலாபூசணம் கோ.வேலுப்பிள்ளை அவர்கள் விழாவில் கெளரவிக்கப்பட்டார்.

சிலை அமைப்பதற்கு நிதியுதவி வழங்கியவர்களுக்கும், சிலையை அமைத்த கலைஞர்களுக்கும், சிலை அமைப்பதற்கு முன்முயற்சி எடுத்த அதிபர் திரு.மு.கனகலிங்கம, சக ஆசிரியர்கள், விழாவில் கலந்து கொண்ட அன்பர்கள் அனைவருக்கும் எமது ஒன்றித்தின் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

Read Full Post »

>

மேலைப்புலோலி சைவப்பிரகாச வித்தியாலயம் – பருத்தித்துறை                      பழைய மாணவர் ஒன்றிய பொதுக்கூட்டம் 2011 – 01 – 14ல்  பம்பலப்பிட்டி இந்துக் கல்லுர்ரியில் நடைபெற்ற போது தெரிவு செய்யப்பட்ட செயற்குழு விபரம்

Office bearers-2011

Patron:                        Mr.S.Balachandran

President                    Dr.  M.K.Ragunathan

Senior Vice President: Dr.M.K.Murugananthan

Vice Presidents:         M/s M.Somasundaram                                                                 
                                        R.Raveendran

                                 Dr.  G.Ketheeswaranathan
                                 M/s S.Vasudevan
                                        A.Sivanathan

Joint Secretaries        M/s K.Prabakaran
                                      S.K.Shanmugasundaram

Treasurer:                  Ms.Valli Prabagar
Asst.Treasurer                 S.Ratnasingam

Committee members:       Dr. S.Mahalingam
                                     M/s    Sritharan
                                           K.Thillainathan
                                           S.Jeevakumar
                                           U.Varatharajan
                                     Ms.Vigna Selvanayagam
                                     M/s A.K.Nadarajah
                                           K.Sithamparanathan
                                            T.Balendran
                                           A.Srinathan
                                     Ms.Neelambikai Gopalakrishnan
                                     Ms.Yogeswari shanmugasundaram

Advisory Committee:      M/s.Raj. Subramaniam
                                          K.Kalakaran
                                          K.Satchithanantham
                                          S.Varnakulasingam
                                    Ms.Rajeswari Parameswaran
                                    M/s.K.Sriskandarajah
                                    Ms.Genga Ramachandran
                                    M/sT.Selvamohan
                                         S.Vasanthan
                                         S.Thayaparan
                                    Ms.Manimadevi Murugananthan
                                    Mr. R.Mohan
Auditor:                         Mr.S.Thayalingam

Read Full Post »

>

எமது பாடசாலையான மேலைப்புலோலி சைவப்பிரகாச வித்தியாலயத்தின் வருடாந்த மெய்வன்மைப் போட்டி இன்று 12.02.2011 சனிக்கிழமை நடை பெற இருக்கிறது.

பாடசாலை அதிபர் மு.கனகலிங்கத்தின் தலைமையில் மாலை 2.00 மணிக்கு விழா ஆரம்பமாகிறது.

பாடசாலை மைதானத்தில் நடைபெறும் இவ் மெய்வன்மைப் போட்டிக்கு யாழ் பல்கலைக்கழக நிதியியல் முகாமைத்துவத்துறைத் தலைவர் பேராசிரியர்.மா.நடராஜசுந்தரம் பிரதம விருந்தினராகக் கலந்து கொள்கிறார்.

அனைவரையும் அன்புடன் அழைக்கிறார்கள் அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினர்.

Read Full Post »

>மேலைப்புலோலி சைவப்பிரகாச வித்தியாலய கொழும்பு பழைய மாணவர் ஒன்றியத்தின் வருடாந்தப் பொதுக் கூட்டம் 2011

எமது  ஒன்றியத்தின் வருடாந்தப் பொதுக் கூட்டம் தைப்பொங்கல் தினமாகிய இன்று 15.01.2011 பம்பலப்பிட்டிய இந்துக் கல்லூரியில் நடை பெற்ற போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள்.

இறை தியானத்துடன் கூட்டம் ஆரம்பமாகியது.

அங்கத்தவர்கள் மெளனமாக  எழுந்து நின்று இறை தியானம் செய்தனர்.

தொடர்ந்து தலைவர் டொக்டர்.எம்.கே.இரகுநாதன் தலைமையில் கூட்டம் நடை பெற்றது.



தலைமையுரையைத் தொடர்ந்து பதில் செயலாளர் திரு.க.பிரபாகரன் தனது அறிக்கைகளை வாசித்தார்.

கலந்துகொண்ட பெண்களில் ஒரு பகுதியினர்.

ஆண்களில் சிலர்.

உபபொருளாளர் திருமதி வள்ளி பிரபாகர் சென்ற ஆண்டிற்கான கணக்கறிக்கையச் சமர்ப்பித்தார். 

ஆற்றிய பணிகள் பற்றியும், பூர்த்தி செய்ய வேண்டிய தேவைகள் பற்றியும் கருத்துரை வழங்கிய எம்.கே.முருகானந்தன்.

சிற்றுண்டிகள் பரிமாறப்பட்டது.


மீண்டும் தலைவராகத் தெரியப்பட்ட டொக்டர்.எம்.கே.இரகுநாதன் ஏற்புரை வழங்குகிறார்.

கூட்டம் மாலை 6 மணியளவில் நிறைவுற்றது.

புதிய செயற்குழு பற்றிய விபரத்தை விரைவில் இத் தளத்தில் காணலாம்.

Read Full Post »

>

மேலைப்புலோலி சைவப்பிரகாச வித்தியாலய கொழும்பு பழைய மாணவர் ஒன்றியத்தின் வருடாந்தப் பொதுக் கூட்டம் 2011

 மேலைப்புலோலி சைவப்பிரகாச வித்தியாலய கொழும்பு பழைய மாணவர் ஒன்றியத்தினரின் வருடாந்தப் பொதுக் கூட்டம் எதிர் வரும் தைப்பொங்கல் தினத்தன்று (15.01.2011) மாலை 4 மணிக்கு பம்பலப்பிட்டி இந்துக் கல்லாரியில் டொக்டர்.எம்.கே.இரகுநாதன் தலைமையில் நடைபெற உள்ளது.

தலைமையுரை, செயலாளரின் ஆண்டறிக்கை, பொருளாளர் அறிக்கை, ஆகியவற்றைத் தொடர்ந்து புதிய நிர்வாகக் குழு தெரிவும் இடம்பெறும்.

பெற்றோர், பழைய மாணவ மாணவிகள், ஆசிரியர்கள், நலன் விரும்பிகள் உட்பட மேலைப் புலோலி சமூகத்தைச் சேர்ந்த அனைவரையும் கூட்டத்தில் பங்கு பற்றி பாடசாலையின் எதிர்கால அபிவிருத்தி தொடர்பாக ஆலோசனைகளை வழங்கி ஒத்துழைக்குமாறு அன்புடன் அழைக்கிறோம்.

புதிய அங்கத்தவர்களின் வருகையையும் எதிர்பார்க்கிறோம்.

எம்.கே.இரகுநாதன்                                                  க.பிரபாகரன்
    தலைவர்                                                              பதில் செயலாளர்

Read Full Post »

>வரவேற்புரை வழங்குபவர் ஆசிரியை அன்னராணி  சண்முகநாதன் ஆகும். இவர் எமது மதிப்பிற்குரிய முன்னாள் தலைமை ஆசிரியர் சுப்பிரமணியம் அவர்களின் பேத்தி என்பது குறிப்பிடத்தக்கது.

அதனைத் தொடர்ந்து எமது மதிப்பிற்குரிய அதிபர் திரு.மு.கனகலிங்கம் அவர்கள் தலைமையுரை ஆற்றுகிறார்.

பரிசளிப்பு விழாவின் போது மேடையில் அமர்ந்திருக்கும் பெரியார்கள் முறையே திரு செ.கணேசரத்தினம் (இளைப்பாறிய ஆசிரியர் காட்லிக் கல்லூரி, திரு.க.கதிரமலை (அதிபர் யாழ் கல்வியியல் கல்லூரி), திரு.ந.இரத்தினவடிவேல், டொக்டர்.எம்.கே.இரகுநாதன்(பொது மருத்துவ நிபுணர்- கொழும்பு தேசிய வைத்தியசாலை), திருமதி டொக்டர்.ரம்யா இரகுநாதன் (சருமநோய் நிபுணர் – பொது மருத்துவமனை காலி), திரு.சு.சற்குணராசா(உதவிக் கல்வி அதிகாரி யாழ்ப்பாணம்)

பிரதம விருந்தினரான டொக்டர்.எம்.கே.இரகுநாதன் அவர்களுக்கு உப அதிபர் திரு.ஆறுமுகம் கணநாதன் அவர்கள் மலர்மாலை சூட்டி கெளரவிக்கிறார்.

எமது பாடசாலையின் வளர்ச்சிக்கு குறுகிய காலத்தில் அளப்பரிய சேவை அளித்துவரும் அதிபர்.திரு.மு.கனகலிங்கம் அவர்களை கொழும்பு பழைய மாணவர் ஒன்றியத்தின் சார்பில் பாராட்டிபேசுகிறார் திரு.ந.இரத்தினவடிவேல் அவர்கள்.

அதிபருக்கு கொழும்பு பழைய மாணவர் ஒன்றியத்தின் சார்பில் சிறு அன்பளிப்பு அளித்துக் கெளரவிக்கிறார் திரு.ந.இரத்தினவடிவேல்.

பிரதம விருந்தினரான டொக்டர்.எம்.கே.இரகுநாதன்உரையாற்றுகிறார்.

அதிபரின் சேவையைப் பாராட்டு முகமாக அவருக்கு கொழும்பு பழைய மாணவர் ஒன்றியத்தின் சார்பாக பொன்னாடை போர்த்திக் கெளரவிக்கிறார் பிரதம விருந்தினர்.

கூட்டத்தில் கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ அப்பாத்துரை விநாயகமூர்த்தி சிறப்புரை ஆற்றுகிறார்.

மாணவர்களுக்கு பரிசில்களை வழங்குகிறார் டொக்டர் திருமதி.ரம்யா இரகுநாதன்.

 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி எய்திய மாணவர்களுக்கு கேடயம், இளஞானச் சுடர் விருது, பணப்பரிசு, பரிசு நூல்கள் ஆகியவற்றை வழங்குகிறார் பிரதம விருந்தினரான டொக்டர்.எம்.கே.இரகுநாதன்.

 நன்றியுரை வழங்குகிறார் ஆசிரியை திருமதி இந்துமதி பரமானந்தன்.

பரிசளிப்பு விழாவில் கலந்து கொண்ட பெற்றோர், பழைய மாணவர்கள், அபிமானிகள் மண்டபத்தில் அமர்திருக்கிறார்கள்.

மண்டபம் சிறியதாகையால் அது நிரம்பி வெளியே பலரும் நின்று பார்க்க வேண்டியநிலை ஏற்பட்டதால் அடுத்த பரிசளிப்பு விழாவை வெளியே விளையாட்டு அரங்கில் நடத்த வேண்டும் என்ற கோரிக்கைய பலரும் எழுப்பியதாகத் தெரிகிறது.

பரிசளிப்பு நிகழ்வுகள் நிறைவுற்றதும் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஒரு பெண்ணின் அபிநயத் தோற்றம் மேலே.

தொடர்ந்து குழு நடனம்

 மற்றொரு கண்கொள்ளாக் காட்சி.

 குழு நடனத்தில் பங்கேற்ற குழந்தைகள் கீழே.

மற்றும் பல கலை நினழ்வுகளும் நடைபெற்றன.

Read Full Post »

>மேலைப்புலோலி சைவப் பிரகாச வித்தியாலயத்தின் பரசிளிப்பு விழா அண்மையில் நடைபெற்றதை அறிவீர்கள்.

விழாவின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சில.

பரிசளிப்பு மேசையில் நூல்களும் கேடயங்களும்.

பிரதம விருந்தினரான டொக்டர்.எம்.கே.இரகுநாதனும், திருமதி ரம்யா இரகுநாதனும் மலர் மாலை அணிவித்து வரவேற்கப்படுகின்றனர்.

வாயிலிலிருந்து அழைத்துச் செல்லப்படுகையில்..

மாணவர்களிடையே பிரதம விருந்தினரும் பாரியாரும்

பிரதான மண்டபத்தினுள் ….

மேடையில் பரிசளிப்பு கேடயங்களுக்கு அருகில் ….

குத்து விளக்கு ஏற்றுகிறார் பிரதம விருந்தினரான டொக்டர்.எம்.கே.இரகுநாதன்.

இன்னும் பல புகைப்படங்கள் மற்றொரு பதிவில்.

Read Full Post »

Older Posts »