Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for the ‘அ.யேசுராசா’ Category

நூலும் இலக்கிய ஆளுமையும் – ‘நிழல்கள்’ அ.யேசுராசா
எம்.கே.முருகானந்தன்

41385865_2337750349573977_4098471305257418752_n

ஈழத்தின் மிக முக்கியமான இலக்கிய ஆளுமைகளில் ஒருவரான யேசுராசாவின் புதிய நூலான நிழல்கள் வெளியாகியுள்ளது.
அது அவரின் தற்போதைய முழு ஆர்வத்தையும் வேண்டி நிற்கும் துறையான சினிமா பற்றிய நூல் என்பது கவனத்திற்கு உரியது. சினிமாவுடன் நீண்டகாலம் ஈடுபாடுடையவர் யேசுராசா. எனவே அனுபவத்துடன் கூடிய நூல் என்பதால் நல்ல சினிமாவை நாடுபவர்களுக்கு மிகவும் பயனுள்ள நூலாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

யேசுராசா திரைப்படங்கள் பார்க்கும் வேகமும் அவை பற்றிய நுணுக்கங்களை நினைவில் நிறைத்து வைத்திருப்பதும் அதிசயப்பட வைக்கும். அவர் தேர்ந்தெடுக்கும் படங்கள் அற்புதமானவை. தினமும் 2-3 திரைப்படங்களை அவரால் பாரக்க முடிகிறது, அவை பற்றிய தேடல்களையும் தொடர்கிறார். இணைய வசதியையும் Youtube பையும் உச்ச அளவில் பயன்படுத்தல்.
எமது வயதொத்த பலருக்கு அந்நியமாக இருக்கும் நேரத்தில் இவர் அதை பயனுறுமுறையில் பயன்படுத்துவது மட்டுமின்றி மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதும் மகிழ்ச்சியானது.

யாழ் நூலக வாசகர் வட்டம் ஒழுங்கு செய்யும் மாதாந்த திரைப்படங்கள் பற்றி நீங்கள் அறிந்திருக்கிறீர்களோ தெரியாது. மிக அற்புதமான திரைப்படங்கள் மாதாந்தம் திரையிடப்படுகின்றன. தமிழ் ஆங்கில படங்கள் மட்டுமின்றி
ரஸ்ய இத்தாலிய பிரெசூ;சு சீன போன்ற பல்வேறு மொழிப்படங்களையும் பார்க்கக் கூடிய வாய்ப்பைப் பெறுகிறோம். அவற்றை தேர்ந்தெடுப்பதுடன் அவை பற்றி அவர் கொடுக்கும் சிறிய அறிமுகமும் எங்களுக்கு அந்த
திரைப்படம் பற்றிய புதிய தரிசனங்களைக் கொடுககிறது. ஆர்வத்தோடு அணுவணுவாக இரசித்து பார்க்க வைக்கிறது. நானும் நிறையவே பயன்பெற்றிருக்கிறேன்.

பல பழைய திரைப்படங்கள் பற்றிய தகவல்கள்,  காட்சிப்படுத்தல் நுணுக்கங்கள்,  கூர்மையான வசன அமைப்பு, நெறியாளர்கள்,  அவர்களது ஏனைய படங்கள் போன்ற நிறைய தகவல்களை இந்த திரைப்பட வட்ட படங்கள் மூலமும் யேசுராசாவின் உரைகள் மூலம் பெற்றிருக்கிறேன்.

அங்கு காட்டப்பட்ட சில படங்கள் மற்றும் அவர் பார்த்த ஏனைய திரைப்படங்கள் பற்றிய 10 கட்டுரைகள் இந்த நூலை அலங்கரிக்கின்றன. இவற்றில் பல கட்டுரைகள் ஜீவநதியில் வெளிவந்த போது நான் ஏற்கனவே படித்ததும் உண்டு.

யாழ் மண்ணில் கலை இலக்கிய சினிமா ஈடுபாடுள்ள இளைஞர்கள் நிறையவே இருக்கிறார்கள். ஆனால் அவர்களில் ஒரு சிலரைத் தவிர மற்றவர்களை அந்த இலவச திரைக் காட்சிகளில் காணவும் கிடைப்பதில்லை. குறும்பட தயாரிப்பில் ஈடுபடும் பலருக்கும் கூட இத்திரைப்படங்கள் நிச்சயம் உதவும். ஆனால் அவர்கள் எவரும் இதனைப் பயன்படுத்துவதில்லை என்பது கவலையே..

திரைப்படம் பார்க்கும் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். தேர்ந்தெடுத்த படங்களை தேடிப் பார்ப்பவர்கள் ஒரு சிலர் இருக்கிறார்கள். ஆனால் தாம் பார்ப்பது மாத்திரமின்றி மற்றவர்களையும் இரசனையோடு பார்க்க வைக்கும் ஆற்றல் கொண்டவர்கள் ஓரிருவர்தான். அவர்களில் முக்கியமானவர் யேசுராசா. அவற்றை அவருடனான தனிப்படஉரையாடல்கள் மூலம்
பெறமுடிகிறது. பரந்த மட்டத்தில் திரைப்படவட்டங்கள் ஊடான இலவச திரைப்பட காட்சிகள்.மூலமும்,  அவரது கட்டுரைகள் ஊடாகவும்
பயன்பெற முடிகிறது.

எனக்கும் எல்லோரையும் போலவே திரைப்பட ஆவல் இருக்கிறது. சாதாரண பொழுதுபோக்கு திரைப்படங்கள் முதல் – சிவாஜி. கமல். மம்முட்டி எனத் தொடர்கிறது. கலைப்படங்கள்,  ஆங்கில,  சிங்கள மலையாளப் படங்கள் செம்மீன்,  சுயம்வரம், எலிப்பத்தாயம் என ஆரம்பித்தது. ஈழத்து தமிழ் திரைப்படங்களையும் தேடிப் பார்ப்பதுண்டு.

நல்ல திரைப்படங்கள் பற்றிய உணர்வுகளை என்னில் எழுப்பியவர்களில் நண்பர் கே.எஸ்.சிவகுமாரன் மற்றும் யேசுராசா,  கேதாரநாதன் ஆகியோரும் அடங்குவர். கொழுப்பில் பல சர்வதேச படக் காட்சிகளை காணும் வாய்ப்பு
கிடைத்திருக்கிறது. ஆரம்பத்தில் திரைப்பட கூட்டுத்தாபன திரையில்,  BMICH ல் பார்த்திருக்கிறேன். BMICH ல் படம் பார்த்துவிட்டு ஜேசுராசா கேதாரநாதன் போன்றவர்களுடன் அவை பற்றிப் பேசியபடி நடந்து வந்த ஞாபகங்கள் பசுமையாக இருக்கின்றன.

அ. யேசுராசா (1946ரூபவ் டிசம்பர் 30ரூபவ் குருநகர்ரூபவ் யாழ்ப்பாணம்) ஈழத்தின் குறிப்பிடத்தக்க இலக்கிய ஆளுமை ஆவார். பல்துறை ஆற்றல் மிக்கவர். கவிஞர்ரூபவ் சிறுகதையாசிரியர்ரூபவ் விமர்சகர்,  மொழிபெயர்ப்பு,  பத்தி எழுத்து இதழாசிரியர் மற்றும் பதிப்பாளர் திரைப்பட ஆர்வலர் என பல தளங்களில் இயங்கிவருகிறார்.

1968 முதல் இலக்கிய ஈடுபாடு கொண்டு இயங்கத் தொடங்கிய அவர் கடந்த 50 வருடங்களாக தீவிரமாக இயங்கிவருகின்றமை குறிப்படத்தக்கது. வருகிறார். ஆனால் 80களின் நடுக் கூறுகளிலிருந்தான் அவருடனான அறிமுகமும் நட்பும் எனக்கு ஏற்பட்டது.

ஆனால் ஆச்சரியம் என்னவென்றால் இவர் இலக்கிய ஈடுபாடு கொண்டு இயங்கத் தொடங்கிய அந்தக் காலத்திலேயே எனக்கும் நல்ல புத்தகங்கங்கள் சஞ்சிகைகள் நல்ல சினிமா போன்றவற்றில் ஆர்வமும் ஈடுபாடும் இருந்தன. ஆயினும் அந்நேரத்தில் கொழும்பில் இருந்த யேசுராசா,  குப்பிளான் போன்றவர்கள் இணைந்து இயங்கிய கொழும்பு கலை இலக்கிய நண்பர் கழகம் பற்றி அறிந்திருக்கவோ அவர்கள் எவரையும் சந்திக்கும் வாய்ப்பு கிட்டியதில்லை. காரணம் மருத்துவ மாணவன் என்ற கூண்டுக்குள் அகப்பட்டிருந்ததால் வாசிப்புக்கு அப்பால் இலக்கிய சந்திப்புகள் கூட்டங்கள் எனக்கு எட்டாதவையாகவே இருந்தன.
80 யாழ் வந்த பின்னர்தான் இலக்கிய அறிமுகங்கள் ஏற்பட்டன. அலை வாசகன் ஆனேன். ஈழத்து இலக்கியப் பரப்பில் ஒரு புதிய வாசல் திறந்திருப்பதாக உணர்ந்தேன். அலையையும் யேசுராசாவையும் அறிமுகப்படுத்தி வைத்தது நண்பர் குலசிங்கம் ஆவார். எனது முதல் நூல்களில் ஒன்றான ‘தாயாகப் போகும் உங்களுக்கு’ பதிப்பிக்கப்பட்டது நியூ ஈரா அச்சகத்தில். அதன் வடிவமைப்பு பற்றிய பல ஆலோசனைகள் எனக்கு யேசுராசா தான் வழங்கினார்.அந்த நேரத்தில் திசை அங்கிருந்துதான் வெளியாகியது. அதன் துணை ஆசிரியராக யேசுராசா பணியாற்றிக் கொண்டிருந்தமை நினைவுக்கு
வருகிறது.

41517400_2337764502905895_2716414759992819712_n

தொழில் ரீதியாக ஓய்வுபெற்ற அஞ்சல்துறை அதிகாரியான இவர் காலத்திற்கு முன்பே ஓய்வு பெற்றிருக்கிருந்தார். ஆதன் சூட்சுமம் இப்பொழுதுதான் புரிகிறது. முழுநேர இலக்கியச் செயற்பாட்டளராக வாழ்கிறார். இவ்வாறு தனக்கு பிடித்த வாழ்வைத் தொடரும் வாய்ப்பு பலருக்கும் இருந்தாலும் வேலை வேலை என ஓடித் திரிகிறார்கள். நானும் அவர்களில் ஒருவன். எழுபது வயதாகியும் எனது தொழிலைக் கைவிட முடியவில்லை. எனக்கு ஈடுபாடுள்ள
கலைத் துறைகளில் ஈடுபட முடியவில்லையே என்ற ஏக்கம் நிறைவேறாத கனவாக மாயாஜாலம் காட்டுகிறது.
யாழ் மண் ஏராளமான இலக்கியவாதிகளின் களமாக இருந்து வருகிறது. இவர்களிடேயே யேசுராசா தனித்தன்மை கொண்டவராக
மற்றவர்களிடமிருந்து வேறுபட்டவராக இருப்பதாக நான் உணர்கிறேன். பொதுவாக இலக்கிய உலகில் நிலவும் கருத்தும் அதுதான். இலக்கியத்தில் செழுமையும் தரமும் பேணப்பட வேண்டும் என்பதில் அக்கறை கொண்டவர். படைப்புகள் அனுபவ வெளிப்பாடாக இருக்க வேண்டும் என்பதில் நம்பிக்கை கொண்டவர் முகத்திற்காக பாராட்டுபவர் அல்ல. நல்லனவற்றை நல்லன எனவும் தரமற்றவற்றை தரமற்றவை எனவும் முகத்துக்கு நேரே
சொல்லக் கூடியவர்.

இலக்கியத்துறையில் அவரது முழுமையான பங்களிப்புடன் பல சஞ்சிகைகள் வெளியாகியுள்ளன. ‘அலை’ ஆசிரியராக அவரது பங்களிப்பு  ஈழத்து இலக்கிய வளர்ச்சியில் ஒரு முக்கிய பங்கை வகிக்கிறது. இலக்கியத்தில் தரம் பேணப்படுவதற்கு அலை முக்கிய முன்னுதாரணமாகும். புpன்பு ‘கவிதை’ இதழ், தெரிதல் சஞ்சிகை ஆகியனவும் அவரால் வெளியிடப்பட்டன. ‘திசை’ யின்
துணை ஆசிரியராக பணியாற்றியமையும் முக்கிய பங்களிப்பாகும்.

இதுவரை நிழல்கள் உட்பட 8 நூல்களை வெளியிடுள்ளார்.
தொலைவும் இருப்பும் ஏனைய கதைகளும் சிறுகதைத் தொகுதி – 1975ம் ஆண்டு இலங்கை சாஹித்திய மண்டலத்தின் சிறுகதைக்கான
பரிசினைப் பெற்றது.
அறியப்படாதவர்கள் நினைவாக கவிதைத் தொகுப்பு.
பனிமழை மொழியாக்க கவிதை நூல்.
தூவானம் பத்தி எழுத்து தொகுப்பு 2001
பதிவுகள் பத்தி எழுத்து தொகுப்பு 2003
குறிப்பேட்டிலிருந்து இலக்கிய கட்டுரைகள் 2007
நினைவுக் குறிப்புகள் கட்டுரைகள் 2016
திரையும் அரங்கும் கலைவெளயில் ஒரு பயணம் 2013

இதைத் தவிர பல முக்கிய தொகுப்பு நூல்கள் இவரது இலக்கிய பங்களிப்புக்கு சான்றாக அமைந்திருக்கின்றன. இவற்றின் தொகுப்பாசிரியர்களில் முக்கிய பங்காளியாக இருந்திருக்கிறார்.

‘பதினொரு ரூடவ்ழத்துக் கவிஞர்கள்’, ‘மரணத்துள் வாழ்வோம’, ‘காலம் எழுதிய வரிகள்’ அகிய கவிதைத் தொகுப்புகள்
தேடலும் படைப்புலகமும் ஓவியர் மார்க்கு பற்றிய நூல்

இவ்வாறு பல்வேறு அறுவடைகளையும் பங்களிப்புகளையும் சினிமா கலை இலக்கிய துறையில் ஆற்றிய யேசுராசாவின் புதிய நூல்தான் நிழல்கள் 104 பக்கங்கள் நீளும் இந்த நூலில் 10 சினிமா கட்டுரைகள் உள்ளங்கியுள்ளன.

முதலாவது கட்டுரையாக அமைவது 2015 ம் ஆண்டு கொழும்பில் நடந்த சிங்கள் தமிழ் குறுப்படவிழா விழா பற்றியும் அங்கு காட்டப்பட்ட முக்கிய குறுப்படங்கள் பற்றியதுமான கட்டுரை.

எல்டர் றியஸனோவ் இயக்கிய ரஸ்ய திரைப்படமான ‘இரக்கமற்ற ஒரு காதல் கதை’,

ஜிறி வொயிஸ் இயக்கிய ‘ரோமியோ ஜீலியற் மற்றும் இருள்’, என்ற செக்கோஸ்லோவாக்கிய திரைப்படம்,

‘சொராயவுக்குக் கல்லெறிதல்’ சைரஸ் நொவ்ரஸ்தெஹ் கின் ஈரானியப்படம்,

லூசினோ விஸ்கொன்ரியின் ‘நிலம் நடுங்குகவிறது’ இத்தாலியப்படம்.

கோவிந் நிஹாலினியின் ‘விருந்து’ ஹிந்தி திரைப்படம்,

அந்த்ரேஜ் வாஜ்தா வின் ‘ஒரு தலைமுறை’ போலந்து திரைப்படம்,

எரான் ரிக்லிஸ் சின் ‘எலுமிச்சை மரம்’ இஸ்ரேலிய திரைப்படம்,

பேர்ன்ஹாட் விக்கியின் ‘பாலம்’ ஜேர்மனிய திரைப்படம்,

அம்ஷன்குமாரின் ‘ஒருத்தி’ தமிழ் திரைப்படம் ஆகியன அடங்குகின்றன.

ஒவ்வொரு கட்டுரையும் நல்ல சினிமா பார்த்த உணர்வைக் கொடுக்கிறது. மேலோட்டமான கதையோட்டம் முக்கிய உரையாடல்கள், காட்சி அமைப்பு, கமரா கோணங்கள்ரூபவ் இசை என யாவற்றையும் தொட்டுச் செல்கிறது. ஒவ்வொரு கட்டுரையும் திரைப்படத்தை பார்த்தது போன்ற உணர்வைக் கொடுப்பதுடன், நாங்களும் நேரடியாகப் பார்த்து இரசிக்க வேண்டும் என்ற ஆசையையும் தூண்டுகின்றன. பல படங்களை நானும் பார்க்க முடிந்ததல் இரசித்து வாசிக்க முடிந்தது.

இதில் பல கட்ரைகளை நூல் உருப்பெறு முன்னரே சஞ்சிகைகளில் படித்ததை ஏற்கனவே குறிபிட்டிருந்தேன். படிக்கப்படிக்க தெவிடாத கட்டுகைள், ஊறித் திளைக்க வைக்கின்றன. திரைப்பட ரசனையும் ஆர்வமும் உள்ளவர்கள் கட்டாயம் படிக்க வேண்டிய நூல்.

அவரது தேடல்களும் படைப்பு மற்றும் பதிப்பாக்க முயற்சிகளும் தொடர வாழ்த்துகிறேன்

நூல் வெளியீட்டு விழாவில் நான் ஆற்றிய உரையின் கட்டுரை வடிவம்

0.00.0

Read Full Post »