Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for the ‘நேரடி விஜயம்’ Category

>எனது ஊர் பயணத்தின் முக்கிய அம்சமாக அமைந்தது நான் எனது ஆரம்பப் பாடசாலைக்கு சென்ற தினமாகும். அறிஞர்கள் பலரும் கல்வியால் பெருமை பெற்று தலை நிமிர்ந்து நிற்பதற்கு அடித்தளம் இட்டது அந்தச் சிறிய பாடசாலையான மேலைப்புலோலி சைவப்பிரகாச வித்தியாலயம் தான் என்பதை நினைக்கும்போது ஆச்சரியம் மேலிடுகிறது.

பாரதியின் ஞானகுருவான அருளம்பல சுவாமிகள் , சதாவதானி கதிரவேற்பிள்ளை ஆகியோரின் புனித பிஞ்சுப் பாதங்கள் பதிந்த மண் அது.

பாரதி போற்றிய
அருளம்பல சுவாமிகள்
(Arulampala Swamy)

எத்தனை கல்விமான்கள் அந்தப் பாடசாலை மாணாக்கர்களாக இருந்திருக்கிறார்கள்.

Thuraisamipillai

பரமேஸ்வராக் கல்லூரியில் அத்தக் காலத்தில் அதிபராக இருந்த துரைச்சாமிப்பிள்ளை,

திரு.வே.தா.சி.சிவகுருநாதன்.

 ஆனந்தக் கல்லூரி ஹெட் மாஸ்டராகவும், Raja’s Picture Lessons என்ற ஆங்கில பாடசாலை நூலாசரியருமான தே.தா.சி.சிவகுருநாதன்,

Raja’s Picture lessons by
V.T.S.Sivagurunathan

கவிஞர் யாழ்ப்பாணன், கற்கண்டுப் பண்டிதரான பொன்.கிருஸ்ணபிள்ளை, பலாலி ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை அதிபர்.வை.கா.சிவப்பிரகாசம், என அடுக்கிக் கொண்டே போகலாம்.

திரு.வை.கா.சிவப்பிரகாசம்

இன்றைய தலைமுறையில் பல வைத்தியர்கள், பொறியிலாளர்கள், கணக்காளர்கள், தொழிலதிபர்கள், ஆசரியர்கள் எனப் பலரின் ஆற்றல் வெளிப்படுவதற்கு உந்துகோலாக இருந்திருக்கிறது. நானும் அங்கு படித்தேன் என்பது என்னைப் பெருமை கொள்ள வைக்கிறது.

புதிதாகக் கட்டப்பட்ட வாகனத் தரிப்பிடத்தில் சைக்கிள்கள் ஒழுங்காக விடப்பட்டிருக்கின்றன.

புதிய வானத் தரிப்பிடம்

பாடசாலைக்கு சென்ற 04.08.2010 அன்று செல்லக் கிடைத்தது.

அதிபருடன் நான் அவரது அலுவலகத்தில்

சுமார் 50 வருடங்களுக்கு முன் படித்த அதே பாடசாலைதானா இது ஆச்சரியாக இருந்தது. அந்தக காலக்கதையை விட்டாலும் சுமார் 15 வருடங்களுக்கு முன் நான் பார்த்த பாடசாலையாகவும் இது இல்லை. முற்றாகப் புதுப் பொலிவு அடைந்திருக்கிறது. இவை கடந்த 5 வருடங்களுக்குள் நடந்த அதிசய மாற்றங்கள். அதற்கான மந்திரக்கோல் அதிபர் கனகலிங்கம் கையில் இருந்தது.

வாசலில் வரவேற்கிறது வண்ணச் சுவர். தொடர்ந்து இரண்டை வாசல் பெரிய கதவு. கார் லொறி ஈடாகச் சுலபமாக உள்ளே நுழைக் கூடியளவு பெரிதாக, மேலே பாடசாலைப் பெயர் வளைவுடன்.

பாடசாலை மண்டபங்கள் வகுப்பறைகள் மண்டபங்கள் யாவும் வண்ணப் பொலிவுடன் கண்களுக்கு இதமாக இருக்கின்றன. பாடசாலைச் சூழல் குப்பை கூளமின்றி மிகத் துப்பரவாக இருக்கினறன.

ஓவ்வொரு மரத்தின் மீதும் அதன் பெயர் எழுதப்பட்டு மாணவர்களை சூழலுடன் இணைத்துக் கல்வி புகட்டுகின்றன.

மண்டபங்களுக்கு வெளியே பூஞ்செடிகள் அழகாகக் காட்சியளிக்கின்றன. போதிய நீரும் கவனிப்பிலும் ஆனந்தமாகத் தலையசைத்து எங்களுக்கு வணக்கம் கூறுகின்றன.

ஒவ்வொரு வகுப்பிலும் மாணவர்கள் உற்சாகமாக இருக்கிறார்கள்.

வகுப்பறைச் சுவரில் வகுப்பாசிரின் பெயர் பதிக்கப்பட்டுள்ளது. வசதியான தளபாடங்கள் சிறார்களுக்குக் கிடைத்துள்ளன.

சமைலறை சுத்தமாக இருந்தது. பணியாளர்கள் சீருடையணிந்து சமையல் செய்கிறார்கள்.

பயிற்றங்காய் வெட்டப்பட்டு நீரில் கழுவிச் சமைப்பதற்குத் தயாராக இருப்பதை காணக் கூடியதாக இருந்தது.

கணனி அறை நவீனமயப்பட்டுத்தப்பட்டுள்ளது.

கணனி அறையில் அதிபர்.மு.கனகலிங்கம்.

புதிய கம்பியூட்டர்களுடனும் வசதியான தளபாடங்களுடன் மாணவர்களுக்கு கல்வியூட்டத் தயாராக இருக்கிறது.

போதிய இடவசதி இல்லாததால் விளையாட்டு மைதான அரங்கில் மாணவர்களுக்கான ஒரு வகுப்பு நடைபெறுவதை அவதானிக்கலாம்.

விளையாட்டு மைதான அரங்கில் வகுப்பு

பாடசாலையின் பாலர் பிரிவு புதிய கம்பிவலை வேலியுடன் அழகாகக் காட்சியளிக்கிறது.

கிணறு அசுத்தப் பாமதவாறு கம்பி வலையால் மூடப்பட்டுள்ளது. தண்ணீர்த் தாங்கியும், அதை நிரப்ப மோட்டாரும் இருப்பதால் நீர் வசதிக்குக் குறைவில்லை.

பாலர் பிரிவின் நவீன மலசல கூடம்

 பாலர் பிரிவிற்கு நவீன மலசல கூடம் கிடைத்திருக்கிறது.

பிரதான பாடசாலையின் பழைய சிறுநீர்க் கூடம்

ஆயினும் பிரதான பாடசாலையின் சிறுநீர் கழிப்பிடம் மிகப் பழையது. சிறந்த நவீன மலசல கூடம் புதிதாக அமைக்க வேண்டியது அவசியமாக இருக்கிறது.

புலமைப் பரிசில் அளித்தவர்களினதும் பாடசாலை வளர்ச்சிக்குப் பங்களிப்பு செய்த ஏனையவர்களின் தரவுகளும் சுவர்களில் விளம்பரப்படுத்தப்பட்டுள்ளன.

 
அதிபர் அறை கணனிமயப்படுத்தப்பட்டு தரவுகள் மிக ஒழுங்காக பேணப்படுகின்றன.

பாடசாலையில் கல்வி கற்கும் ஒவ்வொரு மாணவனதும் தரவுகள் புகைப்படத்துடன் கணனி  ஏற்றபட்டுள்தை பார்க்கும்போது ஆச்சரியமாக இருந்தது.

மதிய போசனம் அளிப்பதற்காக தரவுகன் தினமும் Excel ல் செய்யப்பட்ட மென்பொருள் மூலம் கணக்கிடப்பட்டுப் பேணப்படுகின்றன. தினமும் பாடசாலைக்கு வந்த மாணவர்களின் தொகையை உள்ளீடு செய்தால். இன்றைக்குத் தேவையான அரிசி, மரக்கறி, எரிபொருள், சமையல் கூலி போன்ற சகல விடயமும் கணக்கிடப்படுகிறது.

மாத முடிவில் மாதாந்தச் செலவுக் கணக்கு விபரம் உடனடியாகக் கிடைக்கிறது. ஆனால் பெரும்பாலான பாடசாலைகளில் அத் தரவுகளை எழுதிக் கணுக்கிட்டுப் பேணுவதற்கு ஒரு ஆசிரியரின் வேலை நேரம் ஒதுக்கப்படுவதைக் காணலாம்.

இவ்வாறு நவீன வசதிகளை எமது சினஞ்ச் சிறு பாடசாலைக்குக் கொண்டு வந்த அதிபரும், அவருக்கு வலது கையாக நின்று உதவும் உபஅதிபர்,  மற்றும் ஆசிரியர்கள் அனைவரும் பாராட்டுக்குரியவராவார்கள்.

பாடசாலைக்கு அவசியம் தேவைப்படும் ஏனைய வசதிகள் பற்றி மற்றொரு கட்டுரையில் தருகிறேன்.

Read Full Post »