Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for the ‘பரிசளிப்பு விழா 2010’ Category

>வரவேற்புரை வழங்குபவர் ஆசிரியை அன்னராணி  சண்முகநாதன் ஆகும். இவர் எமது மதிப்பிற்குரிய முன்னாள் தலைமை ஆசிரியர் சுப்பிரமணியம் அவர்களின் பேத்தி என்பது குறிப்பிடத்தக்கது.

அதனைத் தொடர்ந்து எமது மதிப்பிற்குரிய அதிபர் திரு.மு.கனகலிங்கம் அவர்கள் தலைமையுரை ஆற்றுகிறார்.

பரிசளிப்பு விழாவின் போது மேடையில் அமர்ந்திருக்கும் பெரியார்கள் முறையே திரு செ.கணேசரத்தினம் (இளைப்பாறிய ஆசிரியர் காட்லிக் கல்லூரி, திரு.க.கதிரமலை (அதிபர் யாழ் கல்வியியல் கல்லூரி), திரு.ந.இரத்தினவடிவேல், டொக்டர்.எம்.கே.இரகுநாதன்(பொது மருத்துவ நிபுணர்- கொழும்பு தேசிய வைத்தியசாலை), திருமதி டொக்டர்.ரம்யா இரகுநாதன் (சருமநோய் நிபுணர் – பொது மருத்துவமனை காலி), திரு.சு.சற்குணராசா(உதவிக் கல்வி அதிகாரி யாழ்ப்பாணம்)

பிரதம விருந்தினரான டொக்டர்.எம்.கே.இரகுநாதன் அவர்களுக்கு உப அதிபர் திரு.ஆறுமுகம் கணநாதன் அவர்கள் மலர்மாலை சூட்டி கெளரவிக்கிறார்.

எமது பாடசாலையின் வளர்ச்சிக்கு குறுகிய காலத்தில் அளப்பரிய சேவை அளித்துவரும் அதிபர்.திரு.மு.கனகலிங்கம் அவர்களை கொழும்பு பழைய மாணவர் ஒன்றியத்தின் சார்பில் பாராட்டிபேசுகிறார் திரு.ந.இரத்தினவடிவேல் அவர்கள்.

அதிபருக்கு கொழும்பு பழைய மாணவர் ஒன்றியத்தின் சார்பில் சிறு அன்பளிப்பு அளித்துக் கெளரவிக்கிறார் திரு.ந.இரத்தினவடிவேல்.

பிரதம விருந்தினரான டொக்டர்.எம்.கே.இரகுநாதன்உரையாற்றுகிறார்.

அதிபரின் சேவையைப் பாராட்டு முகமாக அவருக்கு கொழும்பு பழைய மாணவர் ஒன்றியத்தின் சார்பாக பொன்னாடை போர்த்திக் கெளரவிக்கிறார் பிரதம விருந்தினர்.

கூட்டத்தில் கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ அப்பாத்துரை விநாயகமூர்த்தி சிறப்புரை ஆற்றுகிறார்.

மாணவர்களுக்கு பரிசில்களை வழங்குகிறார் டொக்டர் திருமதி.ரம்யா இரகுநாதன்.

 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி எய்திய மாணவர்களுக்கு கேடயம், இளஞானச் சுடர் விருது, பணப்பரிசு, பரிசு நூல்கள் ஆகியவற்றை வழங்குகிறார் பிரதம விருந்தினரான டொக்டர்.எம்.கே.இரகுநாதன்.

 நன்றியுரை வழங்குகிறார் ஆசிரியை திருமதி இந்துமதி பரமானந்தன்.

பரிசளிப்பு விழாவில் கலந்து கொண்ட பெற்றோர், பழைய மாணவர்கள், அபிமானிகள் மண்டபத்தில் அமர்திருக்கிறார்கள்.

மண்டபம் சிறியதாகையால் அது நிரம்பி வெளியே பலரும் நின்று பார்க்க வேண்டியநிலை ஏற்பட்டதால் அடுத்த பரிசளிப்பு விழாவை வெளியே விளையாட்டு அரங்கில் நடத்த வேண்டும் என்ற கோரிக்கைய பலரும் எழுப்பியதாகத் தெரிகிறது.

பரிசளிப்பு நிகழ்வுகள் நிறைவுற்றதும் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஒரு பெண்ணின் அபிநயத் தோற்றம் மேலே.

தொடர்ந்து குழு நடனம்

 மற்றொரு கண்கொள்ளாக் காட்சி.

 குழு நடனத்தில் பங்கேற்ற குழந்தைகள் கீழே.

மற்றும் பல கலை நினழ்வுகளும் நடைபெற்றன.

Read Full Post »