Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for the ‘பழைய மாணவர் விபரக்கொத்து’ Category

>எமது பாடசாலை பல பெரியார்களுக்கு ஆரம்பக் கல்வியை அளித்த பாடசாலையாக இருந்திருக்கிறது. அவர்களில் பலர் செய்த சமூக, பாடசாலைத் தொண்டுகள் மறக்கவெண்ணாதவை.

அத்தகையவர்கள் பற்றிய புகைப்படங்களையும் தகவல்களையும் எதிர்காலச் சந்ததியினருக்காக ஆவணப்படுத்த வேண்டிய கட்டாயம் இருக்கிறது. அவற்றை நினை கூர்வது எமக்கும் உற்சாகத்தையும் ஊக்கத்தையும் அளிக்கும்.

தம்மிடம் இருக்கும் தகவல்களையும் புகைப்படங்களையும் பழைய மாணவர்களும் நலன் விரும்பிகளும் பகிர்ந்து கொள்வது காலத்தின் தேவையாகும்.

திரு.ஆ.சி.நாகலிங்கம்பிள்ளை (மனேஜர்)

எமது பாடசாலையின் முகாமையாளராக (மனேஜர்) ஆக இருந்த திரு.ஆ.சி.நாகலிங்கம்பிள்ளை அவர்களது புகைப்படம். அதற்கு முன்னர் அவரது தகப்பனாரான திரு.ஆ.ஆ.சிதம்பரப்பிள்ளை அவர்களது பராபரிப்பில் 1884ம் ஆண்டு முதல் இயங்கியதாக ஆவணங்கள் குறிப்பிடப்படுகின்றன.

இப் புகைப்படத்தை  ஜெனி (Geni) ஊடாகப் பகிர்ந்து கொண்ட டொக்டர்.பா.கனகசபை அவர்களுக்கு நன்றி.

திரு.ஆ.சி.நாகலிங்கம்பிள்ளை (மனேஜர்)


திருமதி பாக்கியம் முருகேசு

மேலைப்புலோலி சைவ பாலிகா பாடசாலை 1893ம் ஆண்டு முதல் இயங்கி வந்தது.

திருமதி பாக்கியம் முருகேசு அப்பாடசாலையின் ஆசிரியராகவும் பின்னர் அதன் அதிபராகவும் 1965ம் ஆண்டு வரை திறமையோடு பணியாற்றினார்.

திருமதி.முருகேசு பாக்கியம் (முன்னைநாள் அதிபர்)

நான் முதல் முதலாக பாடசாலைக்குச் சென்ற போது அவர்தான் அதிபராகக் கடமையாற்றிக் கொண்டிருந்தார். அவரின் கீழ் கற்கும் பாக்கியம் எனக்கும் கிட்டியது.

அவரது புகைப்படத்தை அளித்த பாக்கியக்காவின் மகளான ஜெயகெளரி அவரது கணவன் ராஜா முருகதாஸ் ஆகியோருக்கு நன்றி.

பொன்னம்மா அக்கா (ரீச்சர்)

திருமதி.பொன்னம்மா (முன்னைநாள் ஆசிரியர்)

எமது பாடசாலையின் பெண்கள் பிரிவாக இருந்த பாலிகா பாடசாலையில் ஆசிரியராக இருந்த பொன்னம்மா ரீச்சரை அண்மையில் ஊருக்கு சென்ற போது சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.

அன்று போவே இன்றும் அதே தோற்றத்தில் இருக்கும் அவர் என்னைக் கண்டதும் பழைய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார். நான் முருகன் வேடம் இட்டு நடித்ததாகச் சொன்னார். ஆயினும் எனக்கு ஞாபகம் இல்லை.

அவர் பாதம் பணிந்து ஆசீர்வாதம் பெறும் பாக்கியம் கிடைத்தது.

திரு.வே.சிவக்கொழுந்து (கவிஞர் யாழ்ப்பாணன்)

அடுத்து வருவது எமது பாடசாலையின் புகழ் பூத்த மாணவர்களில் ஒருவரான திரு.வே.சிவக்கொழுந்து. கவிஞர் யாழ்ப்பாணன் என்ற பெயரில் இவரது புகழ் தமிழ் கூறும் உலகெங்கும் பரவியிருந்தது.

திரு.வே.சிவக்கொழுந்து (யாழ்ப்பாணன்)

 மாலைக்கு மாலை, முல்லைக் காடு, கவிதைக் கன்னி ஆகியன இவரது கவிதை நூல்களாகும்.

இவை தவிர பூமிசாத்திரம், மனக்கணிதம் போன்ற பல பாட நூல்களையும் இயற்றி அன்றைய  மாணவர்களின் கல்வி வளரச்சிக்கு அரும் தொண்டாற்றினார்.

இவர் ஆரம்பித்து நடாத்தி வந்த ‘வடலங்கா புத்கசாலை’ அன்று எமது வாசிப்புத் தீனிக்கு அன்றைய காலகட்டத்தில் தீனி போட்டதை மறக்க முடியாது. 

அதே போல அவரது கலாபவனம் அச்சகமும் அன்றைய காலகட்டத்தில் ஆற்றிய அச்சக சேவை மிகவும் பிரபலமானது.

மேலும் தகவல்கள் கிடைக்கும் போது  ‘பாடசாலை சரித்திரத்தில் இவர்கள்’.. தொடரும்.

Read Full Post »

>எமது ஆரம்பப் பாடசாலையானது அண்மைக் காலங்களில் துரித முன்னேற்றம் அடைந்து வருகிறது. ஆனால் ஒரு பாடசாலையின் சமூகப் பெறுமதியானது அதன் இன்றைய மாணவர் தொகை, அவர்களின் கல்வித் திறன், அதிபர், ஆசிரியர், பெற்றோர்கள் ஆகியோரின் பங்களிப்புகள், அதன் பௌதீக வளம் போன்ற இன்றைய நிலையை மட்டும் கருத்தில் கொள்வதில்லை.

முன்னாள் அதிபர் திரு.சிவபாதசுந்தரம் அவர்களின் புகைப்படம்.



கீழே உள்ளது சிறந்த கல்விமானாகிய V.துரைச்சாமிப்பிள்ளை அவர்களின் போட்டோ.



அதன் ஆரம்பமும் வளர்ச்சியும் முக்கியமானது. அதன் வளரச்சிக்கு அத்திவாரம் இட்டு வளர்த்த ஒவ்வொருவரும் முக்கியமானவர்கள். அவர்களை மறக்கக் கூடாது. முன்னோடியாகப் பங்களித்தவர்கள் பொன்னெழுத்தால் பொறிக்கப்பட வேண்டியவர்கள்.

இது S.P.M.கனகசபாபதி அவர்களின் போட்டோ.



அதேபோல அங்கு கல்வி கற்று முன்னேறியவர்கள் அனைவருமே நினைவில் வைக்க வேண்டியவர்களே. கல்வி அறிவால் சிறந்து மதிப்பைப் பெற்றவர்களும், தொழிற்துறை, மற்றும் சமூகப் பணிகள் மூலம் சிறந்து விளங்கியவர்களும் கௌரவிக்கப்பட வேண்டியவர்களே.

அத்தகைய விபரங்களைச் சேகரித்து, பழைய மாணவர் பற்றிய விபரக்கொத்து ஒன்றை பேணுவதற்கான ஆர்வத்தை அதிபர் மு.கனகலிங்கம் முன்மொழிந்தார். அது மிக முக்கியமானது என்பதை உணர்ந்து எமது பழைய மாணவர் ஒன்றியம் அதனைத் தயாரிப்பதற்கான முயற்சியில் இறங்கியுள்ளது.

உதவி வைத்திய அதிகாரியான டொக்டர்.த.பரமகுருநாதன் அவர்களின் போட்டோ.



அதனைத் தயாரிப்பதற்கு பழைய மாணவர்கள் ஒவ்வொருவரினதும் பங்களிப்பு முக்கியமானதாகும். எமது பாடசாலை சமூகத்தின் வளர்ச்சிக்கு உதவிய உங்கள் உறிவினர்கள் பற்றிய சிறிய குறிப்பைத் தந்து உதவினால் மிகவும் பெறுமதியாக இருக்கும். அவர்களின் புகைப்படப் பிரதியும் இருந்தால் மிகவும் சிறப்பாக அமையும். (உதாரணமாக பெற்றோர் சகோதரங்கள், மூதாதையர்கள் போன்றோர்)

அதற்கான ஒரு மாதிரிப் படிவம் கீழே இணைக்கப்பட்டுள்ளது. அதனைப் பூர்த்தி செய்து கிடைக்கச் செய்து இப் பெரும் பணியை சிறப்பாக நிறைவேற்ற உதவுங்கள்.

கீழ்கண்ட ஈ மெயில் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்,

mkmurug@sltnet.lk



அல்லது கீழ்கண்ட முகவரிக்கு தபால் மூலம் அனுப்பி வையுங்கள்

Dr.M.Muruganandan

Mediquick

48/1,Dharmarama Road

Colombo 06

Sri Lanka






மேலைப் புலோலி சைவப் பிரகாச வித்தியாலய பழைய மாணவர் பற்றிய விபரக் கொத்து

1. முழுப் பெயர்:

2. பிறந்த திகதி: ………….ஆண்டு …………….மாதம் ………………………திகதி

3. முகவரி (அ) (மே.பு.சை.பி.வித்தியாலத்தில் கல்வி கற்ற காலத்தில்);:……………….

…………………………………………………………………………………………….

…………………………………………………………………………………………….

(ஆ) (தற்போதையது):………………………………………………………….

……………………………………………………………………………………………

4. ஈ மெயில் முகவரி: …………………………………………………………………….

5. தொலைபேசி இல.: (1)…………………………………………………………….

(2)…………………………………………………………….

6. மே.பு.சை.பி.வித்தியாலயத்தில் கல்வி கற்ற காலம்: ……………………… ஆண்டு

முதல் ………………ஆண்டு வரை

7. தொழில்ஃபதவி: …………………………………………………………………………..

8. தகைமைகள்ஃசிறப்புகள்ஃசமூகப் பணிகள்: ………………………………………………….

…………………………………………………………………………………………

…………………………………………………………………………………………

9. மேலதிக தகவல்கள் குறிப்பிட விரும்பின்: …………………………………………..

…………………………………………………………………………………………

சிறிய அளவிலான புகைப்படம் இணைத்தல் விரும்பத்தக்கது. மே.பு.சை.பி.வித்தியாலத்தில் கல்வி கற்ற நெருங்கிய உறவினர்கள் பற்றிய விபரங்களை வழங்குவதற்கும் இக் கேள்விக்கொத்தைப் பயன்படுத்தலாம்.

Read Full Post »