>எமது பாடசாலையின் தோற்றம் எப்படி இருக்கும்? உங்கள் உள்ளத்தில் உறைந்திருக்கும் பிம்பம் எது?
வெளிச் சுவர் வர்ணப் பூச்சின்றி காணப்படும் தோற்றம் இது. ஆயினும் உட்பகுதிக்கு வர்ணப் பூச்சு தெரிகிறது.
தொலைவில் வேப்பமர நிழலில், புதிய இரு வாசல் காதவு நீல நிறத்தில் மங்கலாகத் தெரிகிறது.
பாடசாலை மண்டபம் மட்டுமின்றி வெளிச் சுற்று மதிலும் வர்ணப் பூச்சுடன் அழகாககத் தென்படும் அண்மைய தோற்றம் இது. பாடசாலை சுற்று வட்ட இளைஞர்கள் சிரமதானம் மூலம் வர்ணம் அடித்து பாடசாலைக்கு புதுத் தோற்றம் கொடுத்துள்ளனர்.
அதேபோல பாடசாலை மண்டபமும் வண்ணப் பூச்சுடன் புதுப் பொலிவுடன் தென்படுகிறது.
மண்டபத்தைச் சுற்றி அழகிய பூச்செடிகள் நாட்டப்பட்டு ள்ளன. பாடசாலை அழகாகத் தோற்றமளிக்கிறது. இது மாணவர்களின் கல்விக்கு ஏற்ற குளிர்மையான தோற்றத்தையும் சூழலையும் கொடுத்துள்ளதைக் காணலாம்.
இது ஒரு வகுப்பறைத் தோற்றம். பாராளுமன்ற உறுப்பினர்களின் நிதி உதவியால் புதிதாகச் செய்யப்பட்ட கதிரை மேசைகள் வகுப்பறைகளை அலங்கரிக்கி்னறன. மாணவர்கள் வசதியாக உட்கார்ந்து படிக்கக் கூடிய வாய்ப்பு இப்பொழுது கிட்டியுள்ளது.
இது புதிதாக அமைக்கப்பட்டுள்ள பெரிய இரட்டைக் கதவு கொண்ட வாசல். சைக்கிள், மோட்டார் சைக்கிள், கார் போன்ற வாகனங்களையும் இப்பொழுது பாடசாலை வளவிற்குள் ஓட்டிச் செல்ல முடியும். திருமதி பரமேஸ்வரி கதிரவேற்பிள்ளை ஞாபகமாக டொக்டர் எம்.கே.முருகானந்தன் நிதியுதவியில் அமைக்கப்பட்டது.
இது புதிதாக அமைக்கப்பட்டுள்ள பாடசாலைப் பெயர் வளைவு. முன்பிருந்த சிறிய வாசலுக்குப் பதிலாக அதற்கு மேற்குப் புறமாக வேப்ப மரங்கள் நிற்கும் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள இரடடை வாசல் கதவிற்கு மேலாக இந்த பாடசாலைப் பெயர் வளைவு அமைக்கப்பட்டுள்ளது. இந்த வளைவைச் செய்வதற்கான செலவை திரு க.மோகனதாஸ் தனது பெற்றோர்களான திரு.திருமதி கனகசபாபதி அவர்களின் ஞாபகார்த்தமாக அமைத்துக் கொடுத்துள்ளார்.
இது ஆரம்ப்ப் பாடசாலையின் தோற்றம். அங்கிருந்த பழைய கட்டிடங்கள் இடிக்கப்பட்டு புதிய மண்டபங்கள் பல வருடங்களுக்கு முன்னரே அமைக்கப்பட்டுள்ளது. ஆயினும் அதனைச் சூழ சுற்றுமதில் இல்லாதது பெருங்குறையாக உள்ளது