>நண்டின் காலை ஒடிக்காதே
நாயைக் கல்லால் அடிக்காதே
வண்டைப் பிடித்து வருத்தாதே
வாயில் பிராணியை வதைக்காதே
கோழிக் குஞ்சைத் திருகாதே
குருவிக் கூண்டைச் சருவாதே
ஆழி சூழுலம் உலகேத்தும்
அன்பு காட்டி வதிவாயே.
ஊனைத் தின்று வாழாதே
உயிரைக் கொன்று தாழாதே
மானைக் கொன்றால் மான் கன்று
வருந்தல் நீயும் அறிவாயோ?
கிளியைக் கூண்டில் அடைக்காதே
கேடுனை வந்து சூழ்ந்திடுமே
ஒளியே யில்லாச் சிறைதனிலே
உன்னை வைத்தாற் சகிப்பாயோ?
எல்லா உயிரும் இறைமகவே
இன்பம் நாடி உழைப்பனவே
பொல்லாப் பொன்றும் செய்யாதே
புனித வாழ்வு காண்பாயே.
இந்த இனிய பாடல் பாடலைப் பாடியவர் கவிஞர் யாழ்ப்பாணன். எனது பிறந்த ஊரான வியாபாரிமூலைச் சார்ந்தவர். இந்த கவிதை அவரது கவிதை நூலான ‘மாலைக்கு மாலை’ யிலிருந்து எடுக்கப்ட்டது. 1948 ம் ஆண்டு வெளியிடப்பட்டது.
இதற்கு முன்னுரை வழங்கியது இலங்கைப் பல்கலைப் கழகப் பேராசிரியரான க.கணவதிப்பிள்ளை ஆகும்.
நாமக்கல் கவிஞர் வெ.இராமலிங்கம் வாழ்த்துரை வழங்கியிருந்தார் என்பது குறிப்படத் தக்கது.
திரு.வே.சிவக்கொழுந்து (கவிஞர் யாழ்ப்பாணன்)
பருத்தித்துறை வியாபாரிமூலைச் சார்ந்த அறிஞர்களி் ஒருவர் திரு.வே.சிவக்கொழுந்து. கவிஞர் யாழ்ப்பாணன் என்ற பெயரில் இவரது புகழ் தமிழ் கூறும் உலகெங்கும் பரவியிருந்தது.
![]() |
திரு.வே.சிவக்கொழுந்து (யாழ்ப்பாணன்) |
-
மாலைக்கு மாலை,
-
முல்லைக் காடு,
-
கவிதைக் கன்னி
-
பாலர் பாடல்கள்
-
-
-
ஆகியன இவரது கவிதை நூல்களாகும்.
-
ஜீவ யாத்திரை இவரது நாவலாகும்