Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for the ‘புரவலர்கள்’ Category

>

சரஸ்வதி சிலைகள்

கல்விக்கு உரியவள் சரஸ்வதி என்பது எமது சமூகத்தின் பாரம்பரிய நம்பிக்கை. தினமும் பாடசாலை தொழுமையுடன் ஆரம்பிக்கிறது. மாணவர்கள் தேவாரம் மற்றும் துதிப் பாடல்கள் பாடி தினமும் நாளை அர்ப்பணிப்புடன் ஆரம்பிக்கும்போது அவர்கள் வணக்கத்திற்கு ஒரு சரஸ்வதி சிலை அவசியம் என சில மாதங்களுக்கு முன்னர் இங்கு குறிப்பிட்டிருந்தோம்.

இப்பொழுது எமது பாடசாலையின் இரு வளாகங்களுக்கும் தனித்தனியே ஒவ்வொரு சரஸ்வதி சிலை செய்வதற்கான நிதியுதவி கிட்டியுள்ளது.

  • பிரித்தானியாவில் (UK) வாழும் எமது பாடசாலையின் பழைய மாணவரான பத்மநாதன் சோதிநாதன் அவர்கள் ஒரு இலட்சம் பணத்தைஅன்பளிப்பாகத் தந்துள்ளார். இப் பணத்தில் பிரதான வளாகத்தில் சரஸ்வதி சிலை அமைக்கப்படுவதற்கான ஏற்பாடுகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. தனது தாயாரான திருமதி.இராசலட்சுமி பத்மநாதன் அவர்களது நினைவாக இந்தச் சிலையை செய்து தருகிறார். இளைப்பாறிய புகையிரத நிலைய அதிபரான திரு.செ.பத்மநாதன் அவர்களின் பாரியாரும், புகழ் பெற்ற உயிரியல் ஆசிரியர் நாகநாதன் அவர்களது தாயார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

  • திரு.சிவப்பிரகாசம் முகுந்தன் (USA) அவர்கள் ரூபா ஒரு இலட்சம் பணத்தை அன்பளிப்பாகத் தந்துள்ளார். இந்நிதியைக் கொண்டு பாடசாலையின் பாலர் வளாகத்தில் சரஸ்வதி சிலை அமைக்கப்பட இருக்கிறது. இது அவரது தகப்பனார் திரு.வை.கா.சிவப்பிரகாசம் அவர்களது நினைவாக அமைக்கப்பட இருக்கிறது. வை.கா.சி எனவும் A+ எனவும் அக்கால மாணவர்களால் அன்போடு அழைக்கப்பட்ட திரு.வை.கா.சிவப்பிரகாசம் எமது பாடசாலை பெற்றெடுத்த சிறந்த கல்விமான்களில் ஒருவராவார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் M.A. பட்டதாரியான இவர் காட்லிக் கல்லூரி ஆரம்பத்தில் ஆசிரியராகக் கடமையாற்றினார். கொழும்பு சஹீராக் கல்லூரியிலும் கடைமையாற்றினார். பின்னர் கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியன் அதிபராகவும் கடமையாற்றிவராவார்

நிதியுதி அளித்த திரு.சிவப்பிரகாசம் முகுந்தன் USA மற்றும் பத்மநாதன் சோதிநாதன்(UK) ஆகியோருக்கு எமது பழைய மாணவர் ஒன்றியத்தின் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந் நிதியுதிகளைப் பெற்றுக் கொடுப்பதில் ஊக்கம் செலுத்திய எமது பழைய மாணவர் ஒன்றிய கண்டிப் பிரிவின் தலைவர் திரு.சி.வாசுதேவன் அவர்களுக்கும் கண்டி பழைய மாணவர் ஒன்றிய உறுப்பினர் திரு.கந்தையா செல்வமோகன் அவர்களுக்கும் எமது நன்றிகள். அதேபோல நோர்வேயில் வாழும் திரு.இரத்தினசபாபதி கிருஸ்ணராசா அவர்களுக்கும் எமது நன்றிகள்.

இச் சிலைகளை  தம்பசட்டியைச் சார்ந்த ஆச்சாரியார் வேலுப்பிள்ளை அவர்கள்  செய்து தருவதற்கு இணங்கியுள்ளதாக அறிகிறோம்.

Read Full Post »

>

2010ம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் சிந்தியடைந்தோருக்கு பரிசில்கள் வழங்க நிதி உதவி வழங்கியோர்.

எமது பாடசாலையான மேலைப்புலோலி சைவப்பிரகாச வித்தியாலயதிலிருந்து மேற்படி புலமைப் பரிசில் பரீட்சையில் சிந்தியடைந்தோருக்கு எமது பழைய மாணவர் ஒன்றியம் வருடாவருடம் இளஞானச் சுடர் விருதினையும், பணப் பரிசிலையும் வழங்கி வருவதை அறிவீர்கள்.

இவ் வருடம் 16 மாணவ மாணவிகள் சித்தியடைந்துள்ளனர் என்பதை ஏற்கனவே அறியத் தந்தோம்.

அவர்களுக்கு எதிர் வரும் 22ம் திகதி போயா தினத்தில் நடைபெற இருக்கும் வருடாந்த பரிசளிப்பு விழாவின் போது பரிசில்கள் வழங்கப்படும். அதற்கான நிதியுதவி வழங்கியோர் விபரம் பின் வருமாறு

  1. திருமதி.கலா.சுந்தரலிங்கம் (கனடா)-  வியாபாரிமூலை அமரர்கள், பிரபல வர்த்தகர் திரு.நா.ம.பரம்சோதி, திருமதி.இராசரத்தினம் பரம்சோதி அவர்களின் ஞாபகார்த்தமாக அவர்களது இளைய மகள் – ரூபா 2000.00 (ஒருவருக்கு)
  2. திரு.இராசலிங்கம் சுந்தரலிங்கம் (கனடா)-  அமரர்கள் திரு.சு.இராசலிங்கம், திருமதி சேதுப்பிள்ளை இராசலிங்கம் அவர்களின் ஞாபகார்த்தமாக அவர்களது மகன் – ரூபா 2000.00 (ஒருவருக்கு)
  3. திரு.இராசநாதன் சுவாமிநாதன் – ரூபா 4000.00 (இருவருக்கு)
  4. திரு.முருகுப்பிள்ளை சோமசுந்தரம் – ரூபா 4000.00 (இருவருக்கு)
  5. திருமதி.கெங்கா இராமச்சந்திரன் – வியாபாரிமூலை வள்ளிவளவு அமரர்கள் பிரபல வர்த்தகர் பலாங்கொடை திரு.நடராசா, திருமதி அன்னபூரணி நடராசா ஞாபகார்த்தமாக அவர்களின் மகள் – ரூபா 4000.00 (இருவருக்கு)
  6. திரு.சிதம்பரம் வர்ணகுலசிங்கம்; – ரூபா 2000.00 (ஒருவருக்கு)
  7. திரு.கதிர்காமத்தம்பி கலாகரன் – ரூபா 2000.00 (ஒருவருக்கு)
  8. திரு.கதிர்காமத்தம்பி பிரபாகரன் – ரூபா 2000.00 (ஒருவருக்கு)
  9. திரு.ஆறுமுகநாதன்.சிவநாதன் – ரூபா 2000.00 (ஒருவருக்கு)
  10. திரு.கந்தயினார் முருகவேள் (அவுஸ்திரேலியா)- ரூபா 2000.00 (ஒருவருக்கு)
  11. திரு.கந்தயினார் பாலதாஸ் (கண்டி) – ரூபா 2000.00 (ஒருவருக்கு)
  12. திரு.சிதம்பரப்பிள்ளை வாசுதேவன்  (கண்டி) – ரூபா 2000.00 (ஒருவருக்கு)

இவர்களில் பெரும்பாலானவர்கள் மேற்படி பரிசுப் பணத்தை வருடாந்தம் வழங்குவதற்கு இணங்கியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

விசேட பரிசுகள்

இவற்றைத் தவிர கீழ்கண்டவர்களால் வங்கியில் இடப்பட்ட வைப்புப் பணத்தின் வட்டிப் பணத்திலிருந்தும் பரிசுகள் வழங்கப்படுகிறது.

  1. டொக்டர்.M.K.இரகுநாதன் அவர்களால், அதிக புள்ளிகளைப் பெற்று முதலாம் இடத்தில் வருபவருக்கு திரு திருமதி கனகசபாபதி வருடாந்த நினைவுப் பரிசிற்காக வைப்பிலிட்ட ரூபா 100,000.00 லிருந்து கிடைக்கும் வருடாந்த வட்டிப் பணம் பரிசாக வழங்கப்படும்.
  2. டொக்டர்.S.N.செல்வச்சந்திரன் அவர்களால், புள்ளிகள் அடிப்படையில் முதல், இரண்டாம், மூன்றாம் இடங்களில் வருவோருக்கு இவ்வருடப் பரிசாக டொக்டர்.செல்வச்சந்திரனின் வருடாந்த புலமைப் பரிசில் வழங்கிய ரூபா 15,000.00 முறையே 50%, 30%, 20% என்ற விகிதத்தில் பகிர்ந்து அளிக்கப்படும். அடுத்த வருடத்திலிருந்து அவர் வைப்பிலிட்ட ரூபா 200,000.00 லிருந்து கிடைக்கும் வருடாந்த வட்டிப் பணம் முதல் மூவருக்கும் அதே விகிதத்தில் பரிசாக வழங்கப்படும்.
  3. திரு.கேதீஸ்வரன் அவர்களால் அதிக புள்ளிகளைப் பெற்று முதலாம் இடத்தில் வருபவருக்கு அமரர் முன்னாள் அதிபர் ந.சிவபாதசுந்தரம் நினைவாக வைப்பிலிடப்பட்ட 15,000.00 (பதினையாயிரம்) ரூபாயிலிருந்து கிடைக்கும் வட்டிப் பணம் பரிசாக வழங்கப்படும்.

Read Full Post »