எதை எதற்குள் வைப்பது எனத் தெரியாது வைத்துத் திணறுபவர்கள் முதுவயதினர் மாத்திரமல்ல.
இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை எந்தப் பருவத்திலும் தொடர்கிறது
இவற்றில் பல ஆபத்திலும் முடிவதுண்டு
இந்தச் சுட்டிப் பையனும் வைத்துவிட்டான்.
எடுத்துவிடுகிறேன் என்று முயன்ற தாயாரால் முடியவில்லை.
இன்னும் உள்ளுக்குத் தள்ளியதுதான் மிச்சம்.
சும்மா பார்த்தால் தெரிகிறதா. இல்லவே இல்லை.
நீண்ட சுரங்கப் பாதை போல இருள் அப்பிக் கிடந்தது.
ஒளியைப் பாய்ச்சியபோது ஏதோ வெண்மையாகத் தெரிந்து.
காய்ந்த காதுக் குடுமியா, கல்லா, உருட்டிய பஞ்சா???
இதை எடுப்பதற்கு பல உபகரணங்கள் இருக்கின்றன.
இதன் நுனியை அந்நியப் பொருளின் பிற்புறமாகக் கொண்டு சென்ற பின் மறுபுறத்தில் உள்ள படியை அழுத்த நுனியில் உள்ள கொழுக்கி விரியும்
மெதுவாக பிற்புறமாக நகர்த்த அந்நியப் பொருளை இழுத்துக் கொண்டு வந்துவிடும்.
காது மென்மையான பகுதி சிறு காயம் பட்டாலும் வலி ஏற்படும். கிருமி தொற்றலாம்.
தாயின் பொறுமையும் மருத்துவத் தாதிகளின் உதவியும் சேர வெளியே வந்துவிட்டது அந்த அந்நியப் பொருள்
வேறொன்றும் இல்லை
மடித்துச் சுருட்டிய பேப்பர் துண்டு..
பெற்றோர்களே
குழந்தையின் காதிற்குள் அந்நியப் பொருள் போய்விட்டால் நீங்களாக எடுக்க முயல வேண்டாம்
பிற்புறம் துரதிஸ்டவசமாகத் தள்ளுப்பாட்டால் செவிப்பறை காயமடையலாம்.
காது கேட்பதே பாதிப்புறலாம்.
இவ்விடயம் பற்றிய மற்றொரு பதிவு
நகைச்சுவையாக எனது “steth இன் குரல்” புளக்கில் …… காது பொரியல் சட்டியல்ல
0.00.0