Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for the ‘மருத்துவ ஜோக்ஸ்’ Category

>

படம் பாருங்கள்.
பார்த்து சிரிப்பு வந்தால் சிரிக்கலாம் வாங்க!
முடியாவிட்டால்
திட்டிவிட்டுப் போங்கள்.
ஓவியங்கள் இணையத்தில் கிடைத்தவை.

இவர் அதற்கு எதிர்மாறான மருத்துவர்.
எந்த ஓசையும் அவரை உசுப்ப முடியாது.
தனது நோயைச்
சொல்லிச் சொல்லி வாயுளைந்த
நோயாளியால்
வேறு என்ன செய்ய முடியும்?
அதுதான்
ஸ்டெதஸ்கோப்பிற்கு மாற்றுப் பணி
கொடுத்துள்ளார்.

சுட்டிப் பையனும் மட்டி மருத்துவனும்

50 வருடங்களுக்கு முன்னர்
பட்டப்படிப்பிற்காக
புத்கங்களைத் திறந்ததற்கு பின்னர்

படிப்பே அறியாவர்
இந்த மருத்துவர்.

பையன்
குட்டியானாலும் சுட்டி
இன்றரநெட், வெப் என உலகளந்தவன்
அதனால்தான் அவனுக்கு
இந்தச் சந்தேகம்.
Waiter with a different menu

இவ்வாறு கேட்பது மருத்துவர் அல்ல
மருத்துவருக்கு மேலாக
மன உணர்வுகளைப் புரிந்து கொண்ட
ஹோட்டல் பணியாளி.
கெளரவ டாக்டர் பட்டம்
இவருக்கல்லவோ பொருத்தமானது

பேசாதவனையும் பேச வைக்கும்
மந்திரக் கோல்காரன்

எதுக்கெடுத்தாலும் கத்தியா?
சின்னவங்க உணர்வுகளையும்
சற்றுப்
புரிந்து கொள்ளுங்களேன்.

சொன்னதைச் செய்யும் சுப்பன்
அல்ல
காரியக்காரன்.
இந்த நோயாளி!

சொல்லிறாங்கய்யா
சொல்லிறாங்கய்யா

சிரிப்பே வருகுதில்லை என்று
சொல்லிறாங்கய்யா
.

இந்தப் படத்திற்கு
நீங்களாவது ஏதாவது சொல்லுங்கய்யா
சிரிக்கத்தக்கதாய்

Read Full Post »

>மருத்துவம் செய்வது என்பது வெறுமனே விஞ்ஞான பூர்வமான தொழில் அல்ல. அதில் கலைநயமும் சேர்ந்திருக்க வேண்டும்
என்பார்கள்.

விபத்தில் மாட்டிய இவருக்கு இவருக்கு மருத்துவம் செய்த டொக்டர் சற்று
அதிகமாகவே கலை உணர்வு கொண்டவர்.








நோயாளி:- " டொக்டர் எனக்கு
மிகவும் கவலையாக இருக்கு. இப்பொழுதும் தினமும்
மாலையில் வேலையால் வீட்டிற்கு வந்ததும் உடல் ஓய்ந்தது
போலக் களைப்பாக இருக்கிறது.

டொக்டர்:- இது மிகச் சாதாரண விடயம்தானே.
கவலைப்படாதீர்கள். இரவு உணவுக்கு முன்னர்
சற்று டிரிங் எடுங்கள். எல்லாம் சரியாகிவிடும்.

நோயாளி:- நன்றி டொக்டர். மிகவும் சந்தோஸம்.
ஆனால் நான் சென்ற முறை உங்களிடம்
வந்தபோது மதுபானத்தை தொடவே கூடாது என்றீர்களே!

டொக்டர்:- ஆம் சென்னேன்தான்.
ஆனால் அது சென்ற வாரம். அதற்குள் மருத்துவ
விஞ்ஞானம் மிகவும் முன்னேறிவிட்டதே.

மருத்துவம் முன்னேறிவிட்டதா அல்லது
மருத்துவர் சென்ற ஒரு வாரத்தில்
'புதுப் பழக்கத்திற்கு'
அடிமையாகிவிட்டாரா?

...................................

அந்த மூதாட்டிக்கு வயது தொண்ணூறுக்கு
மேலாகிவிட்டது. வங்கியில் நடந்த ஒரு
சீட்டிழுப்பில் பத்து லட்சம் ரூபா பணப்பரிசு
விழுந்தது. இதை எப்படிப பாட்டடிக்கு சொல்வது.
அதிர்ச்சியில் மேலுலகம் பயணமாகிவிடுவாரா
என வீட்டில உள்ளவர்கள் பயந்தனர்.

இந்தச் செய்தியை பக்குவமாக பாட்டிக்கு வெளியிட
ஒரு மருத்துவரை அழைத்தனர்.

"நீங்கள் எதற்கும் கவலைப்பட வேண்டாம்.
இத்தகைய விடயங்களைக் கையாள்வதில்
எனக்கு பயிற்சி இருக்கிறது. விடயத்தை
என்னிடம் விட்டுவிடுங்கள். பாட்டியின் உடல்நலத்திற்கு
நான் பொறுப்பு. நான் செய்கிறேன்" என்றார் டொக்டர்.

பாட்டியிடம் சென்ற டொக்டர் கதையைப்
படிப்படியாக வளர்த்து இறுதியில் வங்கிப் பரிசளிப்பு
விடயத்திற்கு வந்தார்.

" ஒருவேளை அந்தப் பரிசு. பத்து லட்சம் ரூபா பணப்பரிசு
உங்களுக்கு விழுந்தால் அதை என்ன
செய்வீர்கள்"

"ஏன்? நான் நிச்சயம் அதில் பாதியை உங்களுக்குத் தருவேன்"

ஆள் விழுந்த சத்தம் கேட்ட உறவினர்கள் பக்கத்து
அறையிலிருந்து ஓடி வந்தனர்.

பாட்டி அவர்களை ஆச்சரியமாகப் பார்த்தார்.

டொக்டர் சவமாகக் கீழே விழுந்து கிடப்பதைக் கண்டனர்.

மெக்கானிக்குகளுக்கு தமது காரில் இருக்கும்
பிழை தெரியாது என்பார்கள்.

மருத்துவர்களுக்கு ?

.................................................

"தூக்கம் வருகுது இல்லையே டொக்டர்"
என அந்த அரச உயர்அதிகாரி மருத்துவரிடம்
முறையிட்டார்.

"அப்படியா? உங்களுக்கு இரவில் தூக்கம்
வருவதில்லையா?"

" இரவில் நன்றாகத் தூக்கம் வருகிறது.
காலை வேளைகளில் கூட ஆழ்ந்த உறக்கம்
கொள்ள முடிகிறது. ஆனால் மதியத்திற்கு
பின்னர்தான் தூங்குவது சிரமமாக இருக்கிறது"

உதாரணம் காட்டக் கூடிய ஒரு அரச அதிகாரி
இப்டித்தான் ஆபீஸில் அக்கறையோடு
பணியாற்றுகிறார்.



Read Full Post »

>இரத்தத்தைக் கண்டு துளியும் அஞ்சாத சத்திரசிகிச்சை நிபுணர் மிக அவசரமாக சத்திரசிகிச்சை அறைக்குள் நுழைகிறார்.

“தலை உடைந்து விட்டதா? ஒரு சில தையல் போட்டால் சரி”

Sorry சொல்லக் கூட அவருக்கு பழக்கமில்லை.

மிக நுணுக்கமாகவும் அவதானமாகவும் நோயாளிகளின் அறிகுறிகளைக் கேட்கும் பரிவுள்ள டாக்டர் இவர்.

நோயாளிக்கு வலிக்கக் கூடும் என்பதைக் கூட முதலிலேயே கூறி நோயாளியை எச்சரிக்கும் கருணை மிகுந்த வைத்தியர் இவர்.

சற்று வேகமாக ஊசியைக் குத்திவிட்டாரோ?

தனது டயக்னோசிலில் எந்த சந்தேகமும் இல்லாத மிகத் திறமை வாய்ந்த இந்த மருத்துவ நிபுணரிடம் வீணாக சந்தேகத்துடன் கேள்விகளை எழுப்பாதீர்கள்.

சற்றுக் கண்பார்வை குறைவுதான் ஆனாலும் மிகத் திறமான டாக்டர். நோயாளியின் கழுத்துப்பட்டியிலேயே நாடித் துடிப்பைத் தேடுகிறார்.

டொக்டரின் எச்சரிக்கைக்குள்ளும் சுவை தேடும் உல்லாசப் பிரிய நோயாளி இவர்.

நம்பிக்கையூட்டும் அவசரசிகிச்சைப் பிரிவு இது.

கில்லாடி டாக்டரும் அதிகில்லாடி நோயாளியும்.

இது டாக்டர் அல்ல. நோயாளிக்கு உடற்பயிற்சி சிகிச்சை அளிக்கும் Phsiotherapist. அசையக் கூட முடியாத நோயாளியை எவ்வளவு நாகரீகமாக விசாரிக்கிறார். பார்த்தீர்களா?

Read Full Post »

>

Thanks:- http://s50.photobucket.com/albums/f336/willmcclain/?action=view&current=glass-a-day.jpg

அந்தக் குடும்ப மருத்துவர் தனது வைத்தியசாலையிலிருந்து வெளியே வந்தபோது, பாதையில் மூன்று பையன்கள் கைநிறைய நாணயங்களை வைத்துக் கொண்டிருப்பதைக் கண்டார்.

“என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்.” என ஆவலோடு வினவினார்.

“எங்களிடையே ஒரு போட்டி. எவன் மிகப் பெரிய பொய்யைச் சொல்கிறானோ அவனுக்கே இந்தப் பணம் அவ்வளவும்” என்றான் ஒரு பையன்.

“மாணவனாக இருந்தபோது நான் பொய்யே பேசுவதில்லை” உதாரணம் சொல்லக் கூடிய நல்ல மாணவனாக தான் முன்பு இருந்ததாக பெருமையடித்துக் கொண்டார் மருத்துவர்.

“சரி ….. நீங்கள் வென்றுவிட்டீர்கள்” என்று சொல்லியபடி பணத்தை அவரிடம் கொடுத்தான் அந்தப் பையன்.

…………………….

“உடம்பு கை கால் எல்லாம் உழையுது. அலுப்பாக இருக்கு” என்றார் நோயாளி.

அவரைப் பரிசோதித்த மருத்துவர், வாயிற்குள் தேர்மாமீட்டரையும் வைத்துப் பார்த்துவிட்டு “உங்களுக்கு காச்சல் 101லை அடிக்கிது” என்றார்.

“சீ எனக்குக் காச்சல் கிடையாது. இப்பத்தான் வெய்யிலுக்காலை வந்தனான்” என்றார்.

“வாயை ஆவென்று திறந்து கொண்டு வெய்யிலில் நடந்து வந்தீர்களா” என்றார் மருத்துவர்.

…………………….

அடங்காத, வாய்த்துடுக்குள்ள மகளை மருத்துவரிடம் அழைத்து வந்திருந்தாள் தாய்.

பாடசாலைக்கு இப்பதான் போகத் தொடங்கியிருக்கிறாளாம். படிப்பில் அக்கறை இல்லை. புத்தி சொல்லும்படி மருத்துவரைக் கேட்டிருந்தாள்.

“பிள்ளை கெட்டிக்காரியல்லோ? நல்லாப் படிப்பாளாம். படிச்சு டொக்டரா வந்து எனக்கு நீங்கள்தான் மருந்து தரவேணும்” என்றார் டொக்டர்.

“நான் படிச்சு டொக்டரா வாறதுக்கு முந்தி நீங்கள் செத்துப் போவீங்களே!” மருத்துவரின் நரைத்த தலைமுடியைப் பார்த்தபடி சொன்னாள் சின்னப் பெண்.

…………………….

இரண்டு பெண் மருத்துவர்கள் சந்தித்துக் கொண்டனர்.

‘எப்படியிருக்கிறார்கள் உன் பிள்ளைகள்’

‘உண்மையைச் சொல்லப்போனால் எனது மகன் கட்டியிருப்பது ஒரு சக்கட்டைச் சோம்பேறிப் பெண்ணை… அவள் காலையில் எழுந்திருக்கப் 11மணியாகும். வேலைவெட்டி கிடையாது நாள் முழுக்கக் கடைத்தெருவெங்கும் சுத்தி அவனது பணத்தை செலவழிப்பாள்…’

‘…அது மட்டுமல்ல, அவன் மாலையில் வேலையால் களைத்து வீடு திரும்பும்போது நல்ல உணவு செய்து கொடுப்பாளா? கிடையாது. பகட்டான ஹொட்டேலுக்கு தன்னை அழைத்துப் போக வைப்பாள்’

‘என்ன வெட்கக் கேடு! சரி விடு. உனது மகள் எப்படி இருக்கிறாள்’

‘அவள் ஒரு அதிர்ஷ்டக்காரி. அவள் மணந்திருப்பது ஒரு குணமான பையனை. அவள் காலையில் எழுந்திருக்கு முன்னரே காலை உணவைத் தயாரித்துவிடுவான். படுக்கையிலேயே காப்பி கொடுத்துவிடுவான். அவள் விரும்பியவற்றை வாங்கப் போதிய பணம் கொடுத்துவிடுவான். இரவில் நவநாகரீகமான ஹொட்டேல்களுக்கு சாப்பாட்டிற்கு கூட்டிச் செல்வான்.’

…………………….

ஜெர்ரி ஒரு காரிலுள்ள எஜ்ஜின் வால்வுகளைக் கழற்றிக் கொண்டிருந்தபோது, சேவைத்தள மனேஜருக்காகக் காத்துக் கொண்டிருந்த பிரபல இருதய சத்திரசிகிச்சை நிபுணரான டொக்டர் சாமுவல் கெஸ்சரை இனங் கண்டான்.

வாய்த்துடுக்குள்ள ஜெர்ரி “ஹாய் கெஸ்சர், சற்று இப்படி வாங்களேன்” எனச் சத்தமிட்டு அழைத்தான். சற்று ஆச்சரியமடைந்த போதும் பிரபல சர்ஜன், ஜெர்ரி காரில் வேலை செய்து கொண்டிருந்த இடத்திற்குச் சென்றார்.

ஜெர்ரி எல்லோருக்கும் கேட்டுக்கும்படியாக “டொக்டர். எனது வேலையயைப் பாரும். நானும் வால்வுகளைக் கழற்றுகிறேன். அவற்றை திருத்துகிறேன். புதிய பாகங்களையும் பொருத்துகிறேன். முடிந்ததும் கார் பூனைக் குட்டிபோல சத்தமிடாமல் அனுங்காமல் நகர்கிறது. ஏறத்தாள இதே போன்ற வேலையைத்தான் செய்யும் உங்களுக்கு மட்டும் ஏன் அவ்வளவு பெரிய சம்பளம்” என விவாதத்திற்கு இழுப்பது போலச் சத்தமிட்டுப் பேசினான்.

மிகவும் சங்கடப்படார் டொக்டர் கெஸ்சர்.

“எஜ்ஜின் ஓடிக் கொண்டிருக்கும் போது உனது வேலையைச் செய் பார்ப்போம்” என்றார் மெல்லிய குரலில்.

…………………….

“ஆம் இதற்கு முன் நீர் ஒரு மனநல மருத்துவருடன் வேலை பார்த்ததாக அறிகிறேன். ஏன் அதனை விட்டு விலகி இங்கு வந்தீர்?” என வேலை கேட்டு வந்த இளம் பெண்ணை நேர்முக விசாரணையின் போது கேட்டார் குடும்ப மருத்துவர்.

” என்னால் அங்கு தாக்குப் பிடிக்க முடியவில்லை…”

“….வேலைக்கு நேரங்கடந்து சென்றால் எதிர்ப்புணர்பு கொண்டவள் என்கிறார்கள். நேரத்திற்கு முன்பே சென்றால் மனப்பதற்றம் என்கிறார்கள். சரியான நேரத்திற்கு சென்றாலும் விடாப்பிடியாளன் என்கிறார்கள். சைக்கியாரிஸ்டை சமாளிக்க முடியவில்லை” என்றாள்.

…………………….

ஒரு குறுக்கு விசாரணை
சட்டத்தரணி:- டொக்டர். பிரேத பரிசோதனையை ஆரம்பிக்கும் முன்னர் நாடித்துடிப்பைப் பார்த்தீர்களா?
சாட்சி:- இல்லை
சட்டத்தரணி:- பிரசரை அளந்து பார்த்தீர்களா?
சாட்சி:- இல்லை
சட்டத்தரணி:- சுவாசம் இருக்கிறதா எனப் பாரத்தீர்களா?
சாட்சி:- இல்லை
சட்டத்தரணி:- எனவே நீங்கள் பிரேத பரிசோதனையை ஆரம்பித்தபோது நோயாளி உயிருடன் இருந்திருப்பது சாத்தியமல்லவா?
சாட்சி:- இல்லை
சட்டத்தரணி:- எப்படி நீங்கள் நிச்சயமாகச் சொல்ல முடியும்?
சாட்சி:- ஏனெனில் அவரது மூளை எனது மேசையில் இருந்த சாடிக்குள் இருந்தது.
சட்டத்தரணி:- அப்படியா? இருந்தபோதும் நோயாளி அப்பொழுதும் உயிருடன் இருந்திருக்கலாம் அல்லவா?
சாட்சி:- ஆம். உயிருடன் இருந்திருப்பது சாத்தியம்தான்… சட்டத் தொழிலும் செய்து கொண்டிருந்தால்..

…………………….

இவற்றில் சில நான் அனுபவித்தவை. பல மருத்துவ நண்பர்களால் ஈ மெயில் செய்யப்பட்டவை.

படித்துவிட்டீர்களா?

சிரிப்பு வராவிடால் நான் பொறுப்பில்லை.

எம்.கே.முருகானந்தன்.

Read Full Post »