உங்களில் எத்தனை பேர் யாழ்தேவி புகைரதத்தில் கொழும்பு முதல் காங்கேசன்துறை வரை பிரயாணம் செய்திருக்கிறீர்களோ தெரியாது.
பயணித்தவர்களுக்கு அது ஒரு இனிய அனுபவம்.
அதுவும் பதின்ம வயதில் பயணித்திருந்தால் அதன் சந்தோசம் சொல்லி மாளாது.
நண்பர்களுடன் கூடி, அரட்டை அடித்து, புட் போட்டில் தொங்கி, பைலாப் பாட்டுப்பாடி, ஆட்டம் போட்டு….
இன்னும் இன்னும் எவ்வளவோ!
இன்று அவற்றை நினைத்துப் பெரு மூச்சு விடத்தான் முடியும்.
ஆயினும் நம்பிக்கை தளர வேண்டியதில்லை. தொலைந்த பொற்காலம் மீண்டும் வரும்.
அதற்கிடையில் இந்த வீடியோவைப் பார்த்து நினைவுகளை மீட்கலாமே.
இது மீண்டும் நண்பன் வரதன் கொடுத்த இணைப்பு