Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for the ‘வருடாந்த பொதுக் கூட்டம் 2009’ Category

>மேலைப்புலோலி சைவப்பிரகாச வித்தியாலய கொழும்பு பழைய மாணவர் ஒன்றியத்தின் வருடாந்தப் பொதுக் கூட்டம் 2011

எமது  ஒன்றியத்தின் வருடாந்தப் பொதுக் கூட்டம் தைப்பொங்கல் தினமாகிய இன்று 15.01.2011 பம்பலப்பிட்டிய இந்துக் கல்லூரியில் நடை பெற்ற போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள்.

இறை தியானத்துடன் கூட்டம் ஆரம்பமாகியது.

அங்கத்தவர்கள் மெளனமாக  எழுந்து நின்று இறை தியானம் செய்தனர்.

தொடர்ந்து தலைவர் டொக்டர்.எம்.கே.இரகுநாதன் தலைமையில் கூட்டம் நடை பெற்றது.



தலைமையுரையைத் தொடர்ந்து பதில் செயலாளர் திரு.க.பிரபாகரன் தனது அறிக்கைகளை வாசித்தார்.

கலந்துகொண்ட பெண்களில் ஒரு பகுதியினர்.

ஆண்களில் சிலர்.

உபபொருளாளர் திருமதி வள்ளி பிரபாகர் சென்ற ஆண்டிற்கான கணக்கறிக்கையச் சமர்ப்பித்தார். 

ஆற்றிய பணிகள் பற்றியும், பூர்த்தி செய்ய வேண்டிய தேவைகள் பற்றியும் கருத்துரை வழங்கிய எம்.கே.முருகானந்தன்.

சிற்றுண்டிகள் பரிமாறப்பட்டது.


மீண்டும் தலைவராகத் தெரியப்பட்ட டொக்டர்.எம்.கே.இரகுநாதன் ஏற்புரை வழங்குகிறார்.

கூட்டம் மாலை 6 மணியளவில் நிறைவுற்றது.

புதிய செயற்குழு பற்றிய விபரத்தை விரைவில் இத் தளத்தில் காணலாம்.

Read Full Post »

>

மேலைப்புலோலி சைவப்பிரகாச வித்தியாலய கொழும்பு பழைய மாணவர் ஒன்றியத்தின் வருடாந்தப் பொதுக் கூட்டம் 2011

 மேலைப்புலோலி சைவப்பிரகாச வித்தியாலய கொழும்பு பழைய மாணவர் ஒன்றியத்தினரின் வருடாந்தப் பொதுக் கூட்டம் எதிர் வரும் தைப்பொங்கல் தினத்தன்று (15.01.2011) மாலை 4 மணிக்கு பம்பலப்பிட்டி இந்துக் கல்லாரியில் டொக்டர்.எம்.கே.இரகுநாதன் தலைமையில் நடைபெற உள்ளது.

தலைமையுரை, செயலாளரின் ஆண்டறிக்கை, பொருளாளர் அறிக்கை, ஆகியவற்றைத் தொடர்ந்து புதிய நிர்வாகக் குழு தெரிவும் இடம்பெறும்.

பெற்றோர், பழைய மாணவ மாணவிகள், ஆசிரியர்கள், நலன் விரும்பிகள் உட்பட மேலைப் புலோலி சமூகத்தைச் சேர்ந்த அனைவரையும் கூட்டத்தில் பங்கு பற்றி பாடசாலையின் எதிர்கால அபிவிருத்தி தொடர்பாக ஆலோசனைகளை வழங்கி ஒத்துழைக்குமாறு அன்புடன் அழைக்கிறோம்.

புதிய அங்கத்தவர்களின் வருகையையும் எதிர்பார்க்கிறோம்.

எம்.கே.இரகுநாதன்                                                  க.பிரபாகரன்
    தலைவர்                                                              பதில் செயலாளர்

Read Full Post »

>


யா|மேலைப் புலோலி சைவப்பிரகாச வித்தியாலய
பழைய மாணவர் ஒன்றியம் – கொழும்பு

வரவு செலவு அறிக்கை 2008

பரிசளிப்பு விழா நன்கொடைகள் 2008

வரவு

சென்ற வருட மீதி முற்கொணர்ந்தது 5,500.00
அங்கத்துவப் பணம் 3,000.00
2008ம் ஆண்டு பரிசளிப்பு விழாவிற்காகக் கிடைத்த நன்னொடை 17,500.00
மொத்தம் 26,000.00

செலவுகள்

2008ம் ஆண்டு பரிசளிப்பு விழாவிற்காகக் அனுப்பிய நன்னொடை 12,000.00
நினைவுப் பரிசில் விளம்பரப் பலகை 1,400.00
மீதி 12,600.00

2008 டிசம்பர் 31ம் திகதி அன்றுள்ளவாறான ஐந்தொகை

திரண்ட நிதி சொத்துக்கள்
ஆரம்ப மீதி 5,500.00 ரொக்கம் 12,600.00
கூட்டு சேகரிப்புகள் 20,500
கழி:
கொடுப்பனவுகள் 13,400.00
12,600.00 12,600.00

பரிசளிப்பு விழா நன்கொடைகள்
திரு.சுவாமிநாதன் 5,000.00
திரு.மு.சோமசுந்தரம் 2,000.00
டொக்டர்.எம்.கே.முருகானந்தன் 2,000.00
திரு.இராஜ் சுப்பிரமணியம் 2,000.00
திருமதி வள்ளி பிரபாகர் 1,000.00
திரு.எஸ்.கே.சண்முகசுந்தரம் 1,000.00
திரு.கே.சிதம்பரநாதன் 1,000.00
திரு.எஸ்.சற்குளராஜா 1,000.00
திரு.எஸ்.இரட்ணசிங்கம். 1,000.00
திரு.எஸ்.வர்ணகுலசிங்கம் 1,000.00
மொத்தம் 17,5000.00

நினைவுப்பரிசில் நன்கொடைகள்

திருமதி. கதிரவேற்பிள்ளை அவர்களது ஞாபகார்த்தமாக
திரு. .க. மகேஸ்ஸவரன் வழங்கியது 15000.00
திருமதி. செல்லாட்சி இராஜரட்ணம் ஞாபகார்த்தமாக
திரு. ராஜ்சப்பிரமணியம் வழங்கியது 15000.00
திருமதி. மனோன்மணி சுவாமிநாதன் ஞாபகார்த்தமாக
திரு. எஸ். சிவபாலன் வழங்கியது 20000.00
திரு. வ. துரைசாமிபபிள்ளை ஞாபகார்த்தமாக
திரு. து. ராஜசேகரன் மற்றும்
திருமதி. இராஜேஸ்வரி பரமெஸ்வரன் வழங்கியது 20000.00
திரு. சி. சிதம்பரம் ஞாபகார்த்தமாக
திரு. வர்ணகுலசிங்கம் வழங்கியது 15000.00
திரு. திருமதி. கனகசபாபதி ஞாபகார்த்தமாக
திரு.க. இரகுநாதன் வழங்கியது 100000.00
திரு. திரு.நாவுக்கரசு ஞாபகார்த்தமாக
திருமதி. கௌரிமனோகரி வழங்கியது 15000.00
திரு. காசி விஸ்வநாதன் ஞாபகார்த்தமாக
திருமதி. கா. தேவாம்பிகை வழங்கியது 15000.00
திரு. நா. சிவபாதசுந்தரம் ஞாபகார்த்தமாக
திரு. பொ. குகதீஸ்வரன் வழங்கியது 15000.00
திரு. மூ. பொன்னையா ஞாபகார்த்தமாக
திரு. வேல். நந்தகுமார் வழங்கியது 15000.00
னுச. த. பரமகுருநாதன் ஞாபகார்த்தமாக
திருமதி. ப. தங்கம்மா வழங்கியது 15000.00
திரு. க. நாகப்பர் ஞாபகார்த்தமாக
திரு. நா. சண்முகதாசன் வழங்கியது 20000.00

Read Full Post »

>

மேலைப் புலோலி சைவப்பிரகாச வித்தியாலயம் கொழும்பு
பழைய மாணவர் ஒன்றியம் கொழும்பு

 
2009ம் ஆண்டிற்கான செயலாளர் அறிக்கை

மேலைப் புலோலி சைவப்பிரகாச வித்தியாலய கொழும்பு பழைய மாணவர் ஒன்றியத்தின் 2009ம் ஆண்டிற்கான செயலாளர் அறிக்கையைச் சமர்ப்பிப்பதில் பெரு மகிழ்ச்சியடைகின்றேன். முதலில் இன்றைய கூட்டத்தில் கலந்து கொண்ட பாடசாலை வளர்ச்சியில் அக்கறை கொண்ட பழைய மாணவர்கள் அனைவருக்கும் நன்றி கலந்த பொங்கல் வாழ்த்துக்கள். அத்துடன் இப்பாடசாலை மண்டபத்தை எமக்குத் தந்துதவிய பாடசாலை அதிபருக்கும் எமது உளமார்ந்த நன்றிகள்.

எமது ஆரம்பப் பாடசாலையான மேலைப்புலோலி சைவப்பிரகாச வித்தியாலயத்திற்கான பல அபிவிருத்திப் பணிகள் நடப்பு ஆண்டில் நிறைவு செய்யப்பட்டுள்ளன. எமது ஒன்றிய அங்கத்தவர்களாகிய உங்களது ஒத்தழைப்பாலும், பொருள் உதவியாலும் இவற்றை நிறைவேற்ற முடிந்துள்ளது. பாடசாலையின் அபிவிருத்தி மற்றும் வளர்ச்சிப் பணிகளைப் பொறுத்த வரை இது மிகவும் திருப்தியான ஆண்டாகக் கருதலாம்.

அண்மையில் ஆரம்பிக்கப்பட்டுள்ள மற்றும் செய்து முடிக்கப்பட்டுள்ள சில பணிகள் பற்றிய தகவல்களை தருவதில் மகிழ்ச்சியடைகிறேன்.

முற்புற பெரிய கதவு

    வடக்குப்புறமாக பெரியவாசற்கதவு டாக்டர் மு.க.முருகானந்தன் அவர்களினால் தனது தாயாரான கதிரவேற்பிள்ளை பரமேஸ்வரி ஞாபகமாக வழங்கப்பட்ட ரூபா 25000 நிதியினைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. அதற்கு மேலுள்ள பாடசாலைப் பெயர் வளைவு திரு.கனகசாபதி மோகன் அவர்களால் அமைத்துக் கொடுக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

டெலிபோன் இணைப்பு

    எமது பாடசாலைக்கு இவ்வருட ஆரம்பம்வரை தொலைபேசி வசதி இல்லாதிருந்தது. இதனால் பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், கல்வி இலாகா அதிகாரிகள் பெற்றோர்கள் அனைவருமே தொடர்புகளுக்கு காலவிரயம் செய்ய வேண்டியிருந்தது. இதனைக் கருத்திற் கொண்டு திரு.ஆ.சிவநாதன் தனது தாயாரான திருமதி. இந்திரா ஆறுமுகநாதன் நினைவாக பாடசாலைக்கு தொலைபேசி இணைப்பையும் அதற்கான ஒரு வருடக் கட்டணத்தையும் (ரூபா 20,000) வழங்கியுள்ளார்.

சைக்கிள் தரிப்பிடம்

    எமது பாடசாலை ஒரு உள்ளுர் சிறிய ஆரம்பப்பாடசாலையாக இருந்தபோதும் அதற்கும் ஒரு சைக்கிள் தரிப்பிடம் (பார்க்) அவசியமாக இருந்தது. பாடசாலைக்கு சைக்கிளில் வரும் சில மாணவர்களுக்காக மட்டுமன்றி ஆசிரியர்களது சைக்கிள்கள் மற்றும் வேறு தேவைகளுக்காக வரும் அதிகாரிகள், பெற்றோர்கள், நலன்விரும்பிகள் போன்றோரது வாகனங்களை விடுவதற்கும் இது அவசியம் என உணரப்பட்டது.

இப்பொழுது 40 அடி நீளமான வசதியான சைக்கிள் தரிப்பிடம் பாடசாலையின் பெரிய கதவிற்கு மேற்குப் புறமாக மதிலை அண்டிய நிலப்பரப்பில் கட்டி முடிக்கப்பட்டு பாவனையில் உள்ளது. இதற்காக நிதியை டென்மார்க்கில் வாழும் இரத்தினசபாபதி கிருஷ்ணராஜா அவர்களும் அவரது நண்பர்களுமாக இணைந்து சேர்த்துக் கொடுத்துள்ளார்கள்.  இதற்காக ரூபா 128,000 செலவிடப்பட்டுள்ளது.

மெல்லக்கற்கும் மாணவர்களுக்கான விஷேட வகுப்புகள்

மெல்லக் கற்கும் மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்துவதற்கான விஷேட வகுப்புகள் பாடசாலையில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. கல்வித் தரத்தில் மிகவும் பின்தங்கியிருந்த 8 மாணவர்கள் இவ்வருடம் இவ் வகுப்புக்கள் மூலம் முன்னேற்றமடைந்து வழைமையான வகுப்புக்களுக்கு மீளச் சேர்க்கப்பட்டுள்ளமை இத்திட்டத்தின் மிகப் பெரிய வெற்றியாகும்.

அண்மையில் வன்னியிலிருந்து இடம் பெயர்ந்த பல மாணவர்கள் எமது பாடசாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்கள். அவர்களில் சிலர் கல்வியியில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருப்பதால் அவர்கள் இப்போது விசேட வகுப்புக்களில் உள்வாங்கப்பட்டுள்ளனர். பிரபல வர்த்தகர்களான அமரர்.சி. திருச்செல்வம் மற்றும் அமரர் சி.சிவகுலசிங்கம் ஆகியோர் ஞாபகார்த்தமாக இத்திட்டத்தை தொடர்ச்சியாக நடத்துவதற்கான நிதியுதவிகளை திரு தி.செல்வமோகன் மற்றும் திரு சி.வசந்தன் ஆகியோர் வழங்கியுள்ளனர். இரண்டாம் கட்ட நிதியான ரூபா 20000 ம் வழங்கப்பட்டுள்ளது. இவ்வருடம் மொத்தமாக 40,000 வழங்கப்பட்டுள்ளது.

புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள்

 இவ்வருடம் எமது பாடசாலையில் இருந்து 8 மாணவர்கள் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்துள்ளனர். இவர்களுள் முன்னணியில் உள்ள மாணவர்கள் 165, 164, 162 என மிக நல்ல புள்ளிகளைப் பெற்றுள்ளனர். இம்முறை யாழ் மாவட்ட வெட்டுப்புள்ளி 140 புள்ளிகளாகும். 130-140 க்கும் இடைப்பட்ட புள்ளிகளை மேலும்8 மாணவர்கள் பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும். 100 க்கும் மேற்பட்ட புள்ளிகளை மேலும் 8 மாணவர்கள் பெற்றுள்ளனர்.

இந்த வகையில் எமது பாடசாலையின் பெறுபேறுகள் மிகவும் பாராட்டத்தக்கதாக அமைந்துள்ளது. பரீட்சையில் சித்தியெய்திய மாணவர்களுக்கு எமது பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொள்கிறோம். இவர்களது வெற்றிக்குக் காரணமாயிருந்த ஆசிரியர்களுக்கும் அதிபர்க்கும் எமது நன்றிகள். ஏனைய மாணவர்களும் நல்ல பெறுபேறினைப் பெற்றுள்ளனர். இவர்களுக்கும் எமது வாழ்த்துக்கள்.

புலமைப்பரீட்சையில் சித்தியெய்திய 8 பேரில் 7 பேர் புலமைப்பரிசில் உதவி நிதியைப் பெறத் தகுதியுள்ளவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்க்கு ‘இளஞானச் சுடர்’ விருதும் பணப்பரிசும்

புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு எமது பழைய மாணவர் ஒன்றியம் வருடாந்தம் ‘இளஞானச் சுடர்’ விருதும் பணப்பரிசும் அளித்து ஊக்குவித்து வருகிறது.

2009ல் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த 8 மாணவர்களுக்கும் தலா ரூபா 1000 பணப்பரிசாக வழங்கப்பட்டுள்ளது.  இதற்கான நிதியுதவியை  வழங்கியோர் விபரம் பின்வருமாறு

திரு.மு.சோமசுந்தரம் 1500
திரு.க.சிதம்பரநாதன் 1500
திரு.இராஜ் சுப்ரமணியம் 1500
டொக்டர்.எம்.கே,முருகானந்தன் 1500                                               

2008ல் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கும் தலா ரூபா 2000 பணப் பரிசாக வழங்கப்பட்டது. தனது தந்தையாரான திரு.நாகப்பர் நினைவாக திரு. நாகப்பர் சண்முகதாஸ் அவர்களால் இதற்கான நிதியுதவி ரூபா 20,000 வழங்கப்பட்டது.

2007ல் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கான பணப் பரிசு நிதியுதவிக்காவும் பரிசளிப்பு விழாவிற்காகவும் கொழும்பு ஆங்கத்தவர்கள் ரூபா 17,500ம் கண்டி மாத்தளை அங்கத்தவர்கள் ரூபா 15,000;ம் வழங்கியிருந்தனர். அவர்கள் விபரம் 2007ம் ஆண்டுக் கணக்கறிக்கையில் அங்கத்தவர்களுக்கு வழங்கப்பட்டது.

பாடசாலை நூலகத்துக்கான தளபாடங்கள்

பாடசாலை நூலகத்துக்கான ஒரு புதிய கட்டடம் பாடசாலையின் தெற்குப் பகுதியில் திறந்த அரங்கத்திற்கு மேற்குப்புறமாக அமைக்கப்பட்டுள்ளதை நீங்கள் அறிவீர்கள். அதற்கான நிதியை தன்னார்வத் தொண்டு நிறுவனம் வழங்கியிருந்தது. ஆயினும் தளபாடங்கள் இன்மையால் அது முழுமையாகச் செயற்படாதிருந்தது.

இப்பொழுது தளபாடங்களுக்கான நிதியை பிரபல வர்த்தகர் அமரர் திரு. நா.ம.பரஞ்சோதி அவர்களின் நினைவாக அவரது அருமைப்பிள்ளைகளும் மருமக்களும் தாமகவே முன்வந்து உதவியுள்ளனர். இந்த முயற்சியில்  ஈடுபட்டுழைத்த அமரரின் மகன் பரம்சோதி அருளானந்தம் (லண்டன்) மற்றும் மருமகன் இராசலிங்கம் சுந்தரலிங்கம் (இளைப்பாறிய தபாலதிபர். கனடா) ஆகியோர்; பாராட்டிற்குரியவராவர். அவர்கள் அளித்த ரூபா 150000 நிதியைக் கொண்டு மேசைகள், கதிரைகள், புத்தக அலுமாரி போன்ற தளபாடங்கள் பெறப்பட்டுள்ளன.

நூலகத்துக்கான நூல்கள்

சென்ற 2009 ஆண்டுப் வருடாந்தப் பொதுக் கூட்டத்தின் போது எமது ஒன்றிய பழைய மாணவர்களால் நூல்நிலையத்திற்கென கொழும்பில் சேர்க்கப்பட்ட நூல்கள் பாடசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

பாடசாலைக் கணனி வசதிகள்

கல்வியமைச்சின் அனுசரனையுடன் கணனிக்கூடம் ஒன்றை ஸ்தாபிப்பதற்கு இப்பாடசாலை அடையாளம் காணப்பட்டுள்ளது. பாடசாலை அதிபரின் கணனித் தேர்ச்சியார்வம் அதற்கான நேர்நிலையை ஏற்படுத்தியுள்ளமை காரணங்களாக அமைந்தன. இதற்கு வலு சேர்க்கும் வகையில் ரூபா 18,000 பெறுமதியான கணனியை எமது ஒன்றிய அங்கத்தவர்கள் நிதியுதவியுடன் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது.

இதற்கான நிதியுதவி அளித்தோர் விபரம் பின்வருமாறு

திருஆ.சிறிநாதன் ரூபா 5000
திருமு.சோமசுந்தரம் ரூபா 5000
திரு க. சண்முகசுந்தரம் ரூபா 2000
டொக்டர்.சு.அருள்குமார் ரூபா 3000

பரிசளிப்பு நூல்கள்

பாடசாலையில் வருடாந்த பரிசளிப்பு வழாவில் பரிசு பெறும் பிள்ளைகளுக்காக பல நல்ல நூல்களைப் பெறவேண்டியுள்ளது. இதனைக் கருத்திற்கொண்டு கண்டி பிரபல வர்த்தகர் அமரர் வே.க. கந்தையா அவர்களின் ஞாபகார்த்தமாக அவர் ஸ்தாபித்த வர்;த்தக நிறுவனமான எஸ்.கே கொம்பனி சார்பில் அவரது பிள்ளைகளான கந்தையா இராமச்சந்திரன், கந்தையா சிறீஸ்கந்தராஜா ஆகியோர் ரூபா 5000 வழங்கியிருந்தனர். இத்தொகையில் பல நூல்கள் பரிசுகளாக வழங்கப்பட்டன. அமரர் வே.க.கந்தையா எமது பாடசாலையின் வளர்ச்சியிலும் மேம்பாட்டிலும் அயராது முன்னின்று உழைத்தவர் என்பது யாவரும் அறிந்ததே. அன்னாரின் சேவைகளை நினைவுகூரும் வகையில் இது நடைபெறுகிறது.

நினைவுப்பரிசில்கள்

வருடாந்த நினைவுப்பரிசுகள்

 பல பழைய மாணவர்கள் எமது பழைய மாணவர் ஒன்றியத்தின் வேண்டுகோளுக்கு இணங்க தமது நினைவுக்கூகுரியவர்கள் ஞாபகமாக வருடாந்தம் நினைவுப்பரிசில்களை வழங்குவதற்கான நிதியை கொடுத்துள்ளார்கள். பாடசாலை அபிவிருத்திச் சங்கம் அவற்றை வங்கியில் வைப்புப் பணமாக இட்டு அதன் வட்டிப் பணத்தில் பரிசில்களை வழங்கவுள்ளது.
 1. சகலதுறையிலும் சிறந்து விளங்கும் மாணவர்க்கான         பரிசு அமரர் செல்லாச்சி இராசரத்தினம் நினைவாக வழங்கியவர் திரு இராஜ்சுப்ரமணியம் ரூபா 15000
 2. புலமைப்பரிசில் பரீட்சையில் அதிக புள்ளிகளைப் பெற்றவருக்கான பரிசு அமரர் முன்னாள் அதிபர் ந. சிவபாதசுந்தரம் நினைவாக வழங்கியவர் திரு பொ.கேதீஸ்வரன் ரூபா 15000
 3. ஆங்கில மொழித்திறனுக்கான பரிசு அமரர் கா.மு. காசிவிஸ்வநாதன் நினைவாக வழங்கியவர் திருமதி தேவாம்பிகை காசிவிஸ்வநாதன் ரூபா 15000
 4. திருக்குறள் மனனத்தில் சிறந்து விளங்குபவர்க்கான பரிசில் அமரர் முன்னாள் அதிபர மூத்தபிள்ளை பொன்னையா நினைவாக வழங்கியவர் திருமதி வேல்நந்தகுமார் ரூபா 15000
 5. வரவொழுங்கிற்கான பரிசு அமரர் பரமேஸ்வரி கதிரவேற்பிள்ளை நினைவாக வழங்கியவர் கதிரவேற்பிள்ளை மகேஸ்வரன் ரூபா 15000
 6. பொது அறிவில் சிறந்து விளங்குபவர்க்கான பரிசு அமரர் டொக்டர் த. பரமகுருநாதன் நினைவாக வழங்கியவர் திருமதி பரமகுருநாதன் தங்கம்மா ரூபா 15000
 7. சிறந்த விளையாட்டு வீரருக்கான பரிசு அமரர் டொக்டர் க. திருநாவுக்கரசு நினைவாக வழங்கியவர் திருமதி கௌரிமனோகரி மகேஸ்வரன் ரூபா 15000
 8. ஆக்கத்திறனுக்கான பரிசு அமரர் சுவாமிநாதன் மனோன்மணி நினைவாக வழங்கியவர் திரு சுவாமிநாதன் சிவபாலன் ரூபா 20000
 9. பண்பு விருத்திக்கான பரிசு அமரர் வ.துரைசாமிப்பிள்ளை நினைவாக வழங்கியவர் திருமதி.ராஜேஸ்வரி பரமேஸ்வரன், திரு து. இராஜசேகரம் ரூபா 20000
 10. சிறந்த நூலகப் பயன்பாட்டிற்கான பரிசு அமரர் திரு திருமதி சிதம்பரம் நினைவாக வழங்கியவர் திரு சிதம்பரம் வர்ணகுலசிங்கம் ரூபா 15000
 11. புலமைப்பரிசில் பரீட்சையில் அதிக புள்ளிகளைப் பெற்றவருக்கான பரிசு திரு. திருமதி கனகசபாபதி நினைவாக வழங்கியவர் டொக்டர் எம்.கே.இரகுநாதன் ரூபா 100,000
 12. வரவொழுங்கும் வினைத்திறனுமுள்ள ஆசிரியருக்கான பரிசு அமரர் திருமதி சின்னத்தங்கம் சுப்பி;ரமணியம்; நினைவாக வழங்கியவர் திரு  சுப்பிரமணியம் குணராஜா ரூபா 15000
 13. கல்வி ஊக்குவிப்பு நிதியை அமரர் பரமகுரு கதிரவேற்பிள்ளை நினைவாக வழங்கியவர் திரு  க. கதிரமலை ரூபா20000

நினைவுப் பரிசுகளுக்கான நிதி உதவிகளைச் செய்த அனைவருக்கும் பழைய மாணவர் ஒன்றியம் கொழும்பு தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறது.

பரிசளிப்பு விழா 2009

சென்ற நவம்பர் 22 ஆம் திகதி சனிக்கிழமை காலை 8.30 மணிக்கு பாடசாலையில் விழாவின் போது மேற்படி பரிசுகள் வழங்கப்பட்டன.

இம்முறை பரிசளிப்பு விழாவின் பிரதம விருந்தினராக எமது பாடசாலையின் பழைய மாணவரும், ஒன்றியத்தின் சிரேஷ்ட அங்கத்தவருமான திரு.ராஜ் சுப்பிமணியம் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. திருமதி உருத்திரேஸ்வரி ராஜ் சுப்பிமணியம் மாணவர்களுக்கு பரிசில்களை வழங்கிக் கௌரவித்தார்.

எமது பாடசாலைப் பரிசளிப்பு விழாக்களுக்கு, எமது பாடசாலையில் கல்வி கற்று மதிப்பிற்குரிய நல்ல நிலையில் இருக்கும் பழைய மாணவர்களையே அழைப்பதென்ற சம்பிரதாயத்தை உருவாக்க எமது அதிபர் விரும்புகிறார். இந்த வகையில் 2008ம் ஆண்டிற்கான பிரதம விருந்தினராக யாழ்தொழில்நுட்பவியல் நிறுவனப் பணிப்பாளரான திரு.கதிரவேல் கதிரமலை அவர்களும், 2007ம் ஆண்டு சிரேஷ்ட விரிவுரையாளர், கல்வியியற்றுறை, யாழ் பல்கலைக் கழகம் திருமதி கலாநிதி இ.ஜெயலக்ஷ்மி அவர்களும் கலந்து சிறப்பித்தனர்;.

பாலர் வளாக முற்புற இரும்பு வேலி

எமது பாடசாலையின் அபிவிருத்தியில் மற்றுமொரு விடயமாக பாலர் வளாகத்தின் முற்புறத்தில் புதிய இரும்பு வேலி அமைக்கப்பட்டுள்ளது. பாடசாலையின் பழைய மாணவியும், சுகாதார திணைக்கள பெருந்தோட்டப் பகுதிப் பணிப்பாளருமான மருத்துவ கலாநிதி உமா சிவபாதசுந்தரம் அவர்கள் தனது பெற்றோர்களான ஆ.சிவபாதசுந்தரம் தம்பதிகளின் நினைவாக ரூபா 60000 நிதியுதவியில் அந்த இரும்பு வேலி அமைக்கப்பட்டுள்ளது.

2009 வருட புலமைப்பரிசில் பரீட்சையில் பாடசாலையில் அதிக புள்ளிபெற்ற மாணவனின் தந்தையான ந.நாகேந்திரராஜா அவர்களால் ரூபா 20000 பெறுமதியான ஒலிபெருக்கி அன்பளிப்புச் செய்யப்பட்டுள்ளது. இம்மாணவன் பாடசாலையின் பரிசளிப்பு விழாவில் 17000 பரிசுபெற்றது குறிப்பிடத்தக்கது.

கண்டி இணைப்புக் குழு

சென்ற ஆண்டின் மிக முக்கிய பணியாக கண்டி மாநகருக்குச் சென்ற நாம் அங்குள்ள எமது பாடசலைச் சமூகத்தைச் சார்ந்தவர்களுடன் மேற்கொண்ட சந்திப்பைக் கூறலாம். அங்குள்ள இந்து வாலிபர் சங்கக் கட்டிடத்தில் நடந்த கலந்துரையாடலைத் தொடர்ந்து, எமது பாடசாலை பழைய மாணவர் ஒன்றியத்திற்கான இணைப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

தலைவர் : திரு.சி.வாசுதேவன்
செயலாளர்: திரு.க. பாலதாசன்
பொருளாளர்: திரு.சி. வசந்தன்
இணைப்பாளர்: திரு.கு.திலீபன்
ஆகியோருடன் நிர்வாகக் குழு உறுப்பினர்களாக மேலும் 13பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இன்று பாடசாலையை இந்நிலைக்குயர்த்தி தன்னலமற்ற சேவைசெய்துவரும் அதிபர் திரு கனகலிங்கம் அவர்களுக்கு தற்போது அதிபர் சேவை 2 ஐஐ கிடைத்துள்ளது. அவருக்கு எமது பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

இனிவரும் நிர்வாகக் குழுவும் பாடசாலையின் வளர்ச்சியில் அக்கறை செலுத்தி மேலும் பல செயற்பாடுகளை மேற்கொள்ளும் எனக்கூறி விடைபெறுகின்றேன்.

நன்றி

       தலைவர்                                                                     செயலாளர்
டாக்டர் மு.க.முருகானந்தன்                                   சு.சற்குணராஜா

Read Full Post »

>

மேலைப்புலோலி சைவப்பிரகாச வித்தியாலயம் – பருத்தித்துறை                      பழைய மாணவர் ஒன்றிய பொதுக்கூட்டம் 
 
2010 – 01 – 14ல்  தெரிவு செய்யப்பட்ட செய்குழு விபரம்
 
புதிய செயற்குழு

தலைவர்:- Dr.M.K.ரகுநாதன்

செயலாளர்:- திரு.சு சற்குணராஜா

பொருளாளர்:-  திரு.இரா.இரவீந்திரன்

சிரேஷ்ட உபதலைவர்:-  டாக்டர். M.K.முருகானந்தன்

உபதலைவர்கள்:-
திரு.மு.சோமசுந்தரம்,
திரு.ஆ.சிவநாதன்,
திரு.ஆ.சி.வாசுதேவன்,
டாக்டர் திருமதி S.வனிதா
டாக்டர் க.கேதீஸ்வரநாதன்

இணைச் செயலாளர்:- S.Kபிரபாகரன்

உபபொருளாளர்:- திருமதி வள்ளி பிரபாகர்

செயற்குழு உறுப்பினர்கள்:- 

  1. திருசு.இரத்தினசிங்கம், 
  2. திரு.உ.வரதராஜன், 
  3. திருமதி யோகேஸ்வரி சண்முகசுந்தரம், 
  4. திருமதி ராஜேஸ்வரி ஸ்ரீலிங்கம், 
  5. திரு.க.சிதம்பரநாதன், 
  6. திரு க.சிவசுந்தரம், 
  7. திரு. ஆ.சிறீநாதன், 
  8. திரு.சு ஜீவகுமார், 
  9. திரு.ஆ.நடராஜா, 
  10. திரு.க.இரத்தினவடிவேல், 
  11. திரு.சண்முகசுந்தரம்

  ஆலோசனைக்குழு உறுப்பினர்கள்:-

  1. திரு.து.ராஜசேகரன், 
  2. திரு.க.கலாகரன், 
  3. திரு.க.சச்திதானந்தம், 
  4. திரு உலகநாதபிள்ளை, 
  5. திருமதி நீலாம்பிகை கோபாலசிங்கம், 
  6. திரு.சிவர்ணகுலசிங்கம், 
  7. திரு.நா. இராமச்சந்திரன்
  8. திருமதி.ராஜேஸ்வரி பரமேஸ்வரன், 
  9. திரு.க.ஸ்ரீஸ்கந்தா ராஜா, 
  10. திருமதி.கெ.இராமச்சந்திரன்.

அவுஸ்திரேலியாவிற்கான இணைப்பாளர்:- திரு.கமுருகவேள்

கணக்காய்வாளர்:- திரு சி.தயாலிங்கம்

Read Full Post »

>

மேலைப்புலோலி சைவப்பிரகாச வித்தியாலய பழைய மாணவர் ஒன்றியம்(கொழும்பு)
வருடாந்த பொதுக் கூட்டம். 14.01.2010.
தலைமையுரை 2010

மேலைப்புலோலி சைவப்பிரகாச வித்தியாலயத்தின் பழைய மாணவர் ஒன்றியத்தின் அங்கத்தவர்கள், ஆசிரியர்கள், நலன் விரும்பிகள் உட்பட எமது பாடசாலைச் சமூகத்தைச் அனைவருக்கும் தைப்பொங்கல் வாழ்த்துக்களும்,
மாலை வணக்கங்களும்.

மீண்டும் ஒரு வருடாந்தப் பொதுக் கூட்டத்தில் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். 14.01.2007 ல் ஆரப்பிக்கபட்ட எமது ஒன்றியம் 3 வயதைக் கடந்து முழு வீச்சுடன் நடைபோடும் பருவத்தில் இருக்கிறது.

பழைய மாணவர் ஒன்றியம் என்ற இக் குழந்தை பிறந்த நாள் முதல் அதன் செயற்பாடுகளில் பங்கு பற்றி எமது பாடசாலையின் வளர்ச்சிக்கு உதவியும் உற்சாகமும் அளித்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.

நாம் கடந்து வந்த பாதையைத் திருப்பிப் பார்க்கும்போது பிரமிப்பாக இருக்கிறது. நாட்டு நிலை மிகவும் மோசமாக இருந்த நேரத்தில் எமது ஒன்றியம் ஆரம்பிக்கப்பட்டது.

தமிழர்கள் என்றாலே சந்தேகிகப்பட வேண்டிய பிராணிகள் என்று நினைக்கப்பட்ட நேரம் அது.

நாம் கூடுவதும், கலந்துரையாடுவதும், நிதி சேர்ப்பதும், வங்கிகள் ஊடாக பாடசாலைக் கணக்கிற்கு அனுப்புவதும் உயிரச்சம் விளைவிக்கக் கூடிய விடயங்களாக இருந்தன.

ஆயினும் அவற்றையும் தாண்டி எமது பாடசாலைக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற உங்கள் ஒவ்வொருவரதும் பாடசாலை மீதான பற்றுதலும், தன்னலங்கருதாத செயற்பாடுகளும் எமது பாடசாலையின் வளர்ச்சிக்கு நிறையவே உதவியுள்ளன.

பாடசாலையில் அண்மையில் ஏற்பட்ட வளர்ச்சிகள் பற்றியும், அதற்கு எமது ஒன்றியம் உங்கள் உதவிகள் ஊடாக எவ்வாறு கைகொடுத்தது என்பது பற்றியும் செயலாளர் தனது அறிக்கையில் விரிவாகக் கூறுவார்.

சென்ற ஆண்டின் முக்கிய பெறு ஆக எமது கண்டி விஜயமும் அங்கு ஒரு இணைப்புக் குழு அமைக்கப்பட்தையும் சொல்லலாம்.

இது பற்றிய விபரங்கள் அங்கத்தவர்கள் அனைவருக்கும் தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டதால் மேலும் விபரிக்கவில்லை.

பல பணிகள் செய்து முடிக்கப்பட்ட போதும் இன்றைய பாடசாலை மாணவர்களின் தற்காலத் தேவைகளுக்கு ஏற்ப இன்னும் பல விடயங்களைச் செய்து கொடுக்க வேண்டியிருக்கிறது.

மனதுக்கு இனிய ரம்யமான சூழலும்,
கற்றைக்குத் தேவையான கட்டட, தளபாட, நூலக, விளையாட்டு மைதான வசதிகள் செய்து கொடுக்க வேண்டியுள்ளது.
உள்ளவற்றை மேம்படுத்த வேண்டிய தேவையும் இருக்கிறது.

ஆற்ற வேண்டிய பணிகள்

புதிய கட்டிடம்

பாடசாலைக்கு ஒரு புதிய கட்டிடம் மிக அவசியத் தேவையாக இருக்கிறது. முன்பு ராஜ் சுப்பிரமணியம் கல்வித் திணக்களத்தில் இருந்து போது ஒதுக்கிய நிதியில் ஆரம்பிக்கபட்ட இரட்டை மாடிக் கட்டடம் நாட்டு நிலைகளால் பூர்த்தி செய்யப்படவில்லை. அந்த அத்திவாரத்தின் மீது இப்பொழுது புதிய கட்டடம் கட்ட முடியபா அளவிற்கு பழுதாகி உள்ளது. அதனை அகற்றிவிட்டு புதிய கட்டடம் கட்ட வேண்டியுள்ளது.

போர் முடிவுற்றதை அடுத்து வன்னிப்  பகுதியிலிருந்து பெருமளவு மாணவர்கள் வந்துள்ளார்கள். இதனால் 230 அளவில் இருந்த மாணவர் தொகை திடீரென 359ஆக அதிகரித்துவிட்டது. இடவசதி போதாது. விளையாட்டு மைதானத்தின் மேடையில் ஒரு வகுப்பை வைக்க வேண்டிய நிலை.

தளபாடங்கள்

மாணவர் தொகை அதிகரித்ததால் தளபாடங்கள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஆனால் புதிய கட்டிடம் இல்லாமல் தளபாடங்களைப் போட இடமில்லை. எனவே புதிய இரட்டை மாடிக் கட்டடம் பெறுவதே முதல் தேவையாக உள்ளது. இது தனியார் செய்யக் கூடியது அல்ல. சில தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள அணுகியுள்ளோம். ஆயினும் இன்னமும் எதுவும் கை கூடவில்லை.

நூல்கள்

நூலகம் தன்னார்வத் தொண்டு நிறுவனத்தால் அமைக்கப்பட்டது. தளபாடங்கள் பரம்சோதி அருளானந்தம் மற்றும் சுந்தரலிங்கம் நிதியுதவியில் கிடைத்துள்ளது. நூலகத்திற்கு 30106 கதிரைகள், வாசிப்பு மேசை 1, ஒவிஸ் டேபிள் 1

நூலகத்திற்கு நூல்கள் சென்ற வருடம் சேர்த்து அனுப்பினோம். இன்னமும் தேவை. 5ம் வகுப்பிற்கு உட்பட்ட மாணவர்களுக்கு ஏற்ற புதிய நூல்களைச் சேகரிப்பதில் அங்கத்தவர்கள் ஒத்துழைப்புத் தேவை

சிறுவர்களுக்கான சுவர் சித்திரங்கள்

பாடசாலையின் சுற்றுமதில் சுவரின் உட்பக்கங்கள் மற்றும் கட்டிடங்களின் வெளிச் சுவர்களிலும் சித்திரங்கள் வரையப்பட வேண்டும். இது மாணவர்களின் பொது அறிவு விருத்திக்கும், கற்றலுக்கு உதவும் விதமாகவும், பாடசாலையை அழுகுறுத்தவும் அவசியமானது.

ஒரு இடைவெளியை சிமெந்து பூசி சித்திரம் வரைய சுமார் பதினையாயிரம் (15,000) தேவைப்படும். பங்களித்தவர் விபரங்கள் அனுசரணை என்ற சிறுதலைப்பில் ஒவ்வொரு சித்திரத்திலும் எழுதப்படும். மறைந்தோர் ஞாபகமாகவும் செய்யலாம். 2-3 வருடங்களில் டச் அப் செய்ய வேண்டியிருக்கும்

சிறிய பாடசாலையின் முகரி முன்னுரிமை கொடுத்து செய்ய வேண்டியுள்ளது.
தளபாட பராமரிப்பும், வர்ணம் பூசுதலும்
பாடசாலை தளபாடங்களை பேணிப் பாதுகாப்பதற்கு பராமரிப்பு அவசியம். 2-3 வருடங்களுக்கு ஒரு முறை அவற்றைத் திருத்தி வர்ணம் பூச சுமார் ஐப்பதினாயிரம் தேவைப்படும்

சிறிய பாடசாலை சுற்று மதில்

சிறிய பாடசாலையின் முற்பகுதி அழகிற்காகவும் பாதுகாப்பிறகாகவும் இரும்புவலை வேலி அமைக்கப்பட்டுள்ளது. ஆயினும் ஏனைய மூன்று பக்கங்களையும் சுற்றி மதில் அமைக்க வேண்டியுள்ளது.

நெற் வசதி

கம்பியூட்டர் அறை செய்யப்பட்டுள்ளது. மேசை, கதிரை, கண்ணாடி அலுமாரி, தளபாடங்கள் அரச உதவியில் கிடைத்துள்ளன. விரைவில் கம்பியூட்டர்கள் கிடைக்கும். தொடரந்து நெற் வசதி செய்யப்பட வேண்டும்.

நிறுவனர் சிலை

பெரும்பாலன பாடசாலைகளின் முன்னறலில் அதனை ஸ்தாபித்த நிறுவனரின் சிலை வைக்கப்பட்டு தினமும் அதற்கு பூ மரியாதை செய்யும் வழக்கம் இருக்கிறது.

எமது பாடசாலை 1884 முதல் திரு.ஆ.ஆ.சிதம்பரப்பிள்ளை பராபரிப்பில் நடாந்து வந்தது. பின்னர் திரு.ஆ.சி.நாகலிங்கம்பிள்ளை பொறுப்பேற்றார். ஸ்தாபகர் சிலையை அவர்களது வழித்தோன்றலகள் செய்வது பொருத்தமாக இருக்கும் என நம்புகிறேன்.

பழைய மாணவர் பற்றிய தகவல் திரட்டி

சதாவதானி நா.கதிரவேற்பிள்ளை, பாரதியின் ஞானகுருவான அருளம்பல சுவாமிகள் போன்ற தமிழ் அறிஞர்களும், ஞானிகளும் கல்வி கற்ற பெருமைக்குரியது. பிற்காலத்தில் வே.தா.சி;.சிவகுருநாதன், கற்கண்டுப் பண்டிதர் பொன்.கிருஸ்ணபிள்ளை, கவிஞர் யாழ்ப்பாணன் (திரு.வே.சிவக்கொழுந்து), பிரபல சத்திரசிகிச்சை நிபுணர் ந.சண்முகலிங்கம், வை.கா.சிவப்பிரகாசம் போன்ற பெரியார்களையும் வளர்த்தெடுத்தது எமது பாடசாலையே.

ஆயினும் கல்வியாலும், தொழிலாலும், சமூகப்பணிகளாலும் பெருமை பெற்ற எமது பழைய மாணவர்கள் பற்றிய விபரங்கள் எமது பாடசாலையில் இல்லை. அத்தகைய ஒரு தகவல் திரட்டியைத் தயாரித்துப் பேணுவது மிகவும் அவசியம். அதற்கான ஒரு மாதிரிப் படிவம் தயாரிக்கப்பட்டுள்ளது.

நன்றி

கடந்த மூன்று வருடங்களாக எமது பணிகள் தொடர்கின்றன. இப் பணிகளின் போது என்னுடன் ஒத்துழைத்த செயற்குழு அங்கத்தவர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.

முக்கியமாக செயலாளர் திரு சற்குணராசா, பொருளாளர் இரவீந்திரன் ஆகியோர் பேருதவியாக இருந்தனர்.

பொருளாளர் இரவீந்திரன் இன்று கலந்துகொள்ள முடியாத சூழலில் சென்ற வருட கணக்கறிக்கையைத் தயாரிப்பதுடன் அதனை இன்று சமர்பிக்கவும் இருக்கும் வள்ளி பிரபாகர் அவர்களுக்கு எனது விசேட நன்றிகள்.

திருவாளர்கள் சற்குணராசா, ரவீந்திரன், சோமசுந்தரம், ஜீவகுமார், சண்முகசுந்தரம், இரத்தினசிங்கம், வரதராசன், சிதம்பரநாதன், சிவசுந்தரம், இராஜ் சுப்பிரமணியம், போன்றவர்கள் செயற்குழக் கூட்டங்களுக்கு வந்து தங்கள் ஒத்துழைப்பு வழங்கினர். இதில் இராஜ் சுப்பிரமணியம், சற்குணராசா, சண்முகசுந்தரம் ஆகியோர் 100 சதவிகிதம் பிரச்ன்னமாயிருந்தனர்.

திரு.இராஜ் சுப்பிரமணியம், சண்முகசுந்தரம் ஆகியோரின் ஆலோசனைகளும், ஒத்துழைப்புகளும் மிகமிக முக்கியமானவை. அவர்கள் எமது ஒன்றியத்தின் செயற்பாடுகளுக்கும் பாடசாலையின் வளர்ச்சியிலும் காட்டும் அக்கறை அதி விசேடமானவை. ஓன்றியத்தின் தலைவர் என்ற ரீதியல் நான் செயற்படுவதை விட ஆழமாகச் சிந்தித்து, வேகமாக செயற்படுபவர்கள் அவர்களே. அவர்களுக்கும் எனது விசேட நன்றிகள்.

எமது அதிபர் திரு.மு.கனகலிங்கம் அளப்பரிய பணியை செய்துவருகிறார். அவரின் தன்னலம் கருதாத, வேகமும் சமோசிதமும் கூடிய செயற்பாடுகள் காரணமாக எமது பாடசாலை கடந்த 4 ஆண்டுகளில் முன்னணி நிலைக்கு வந்திருக்கிறது. வடமராட்சிப் பிரதேசத்தின் முன்னணி ஆரம்பப் பாடசாலையாக கல்வித் திணைக்களத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. கல்வியிலும் பௌதீக வளத்திலும், அழகிய சுத்தமான சுற்றாலைப் பேணுவதிலும் அது முன்னணியில் இருக்க வைத்த பெருமை அவரையே சேரும்.

பழகுவதற்கு இனியவரான அவர், பட்ட மேற்படிப்புடன், யாழ் பல்கலைக்கழகத்தின் வருகைநிலை விரிவுரையாளராகவும் விளங்கும் கல்வித் தகமையும் உடையவராவார். எமது பாடசாலை அதிபராக பணியாற்றக் கிடைத்தது எமக்குக் கிடைத்த ஒரு அரிய வாய்ப்பாகும். அதனை நாமும் ஓரளவு பயன்படுத்தி பாடசாலை வளரச்சிக்கு உதவ முடிந்தது என்பதில் எமது ஒன்றிமும் பெருமை கொள்ளலாம். இப்பொழுது அவருக்கு தரம் 2 அதிபர் நிலைப் பதவி உயர்வு கிட்டியுள்ளது. அவருக்கு எனது சார்பிலும் உங்கள் எல்லோர் சாரப்பிலும் வாழ்த்துக் கூறுகிறேன்.

எமது ஒன்றியத்தின் வரவு செலவு கணக்கு உங்களுக்கு சற்று நேரத்தில் கிடைக்கும். அதனை அவதானதாகப் பார்த்தால் உங்களுக்கு சில விடயங்கள் புரியக் கூடும். முதலாவது எமது அங்கத்தவர்கள் அளித்த பெரும்பாலான நிதி உதவிகள் எம்மால் நேரடியாகக் கையாளப்படவில்லை. பாடசாலை அபிவிருத்திச் சங்க நிதிக்கு, நிதி உதவி வழங்கியர்களால் நேரடியாக அளிக்கப்பட்டுள்ளது. அதனால் அவை எமது கணக்கறிக்கையில் இடம்பெறவில்லை.

அடுத்த முக்கிய விடயம் சங்கத்தின் வழமையான நடைமுறைச் செயற்பாடுகளுக்கு சங்கத்தின் எந்த நிதியும் பெறப்படவில்லை.
கடித, டெலிபோன் செலவுகள், அறிக்கை அச்சடிப்பு செலவு, கண்டி விஜயத்திற்கான பிரயாணச் செலவுகள், ஆண்டு விழாச் சிற்றுண்டிச் செலவு எதுவுமே சங்க நிதியிலிருந்து பெறப்படவில்லை.

சேர்க்கப்பட்ட ஒவ்வொரு சதமும் பாடசாலை வளர்ச்சிக்கே சென்று அடைந்தது. அதற்கு ஒத்துழைத்த சங்க செயற்குழு அனைவருக்கும் எனது நன்றிகள்.

செயற்குழு என்று சொன்ன பொதும் பெரும்பாலான உதவிகள் திரு ராஜ் சுப்பிரமணியத்தின் உதவிகளே. அறிக்கைகளைப் போட்டோ பிரதி எடுத்து தபாலில் அனுப்புவதற்குமான செலவுகளையும், கண்டி பிரயாண வாகன வசதியும், இன்றைய சிற்றுண்டிகளுக்கான செலவுகளின் பெரும் பகுதியும் அவரது உதவிகளே.

கணக்கறிக்கையை தயாரித்தது மட்டுமின்றி போட்டோ பிரதிகள் எடுத்ததும் வள்ளி பிரபாகரின் உதவியாகும்.

எதிர்காலத்தில் இளைய தலை முறையினரின் ஈடுபாடும் பங்களிப்பும் மிக முக்கியம்.

பழைய மாணவர் ஒன்றியத்தின் வருடாந்த பொதுக் கூட்டம் அறிக்கைகளைச் சமர்பிப்தற்கும், உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான வழமையான நடவடிக்கையாக இருக்கிறது.

இதற்கு மேலாக இதனை பழைய மாணவர்கள் அனைவரும் ஒன்று கூடி தமக்கிடையே உறவுகளை புதுப்பித்து, பழைய நினைவுகளை மீள்நினைத்து மகிழவும் கொண்டாவும் வேண்டிய நிகழ்வாகவும் மாற்ற வேண்டிய பணி உள்ளது.

வெறும் வருடாந்தப் பணியாக இருக்கும் இதனை ஒன்று கூடலாகவும், தேநீர் அல்லது இராப் போசனத்துடன் கூடிய மகிழ்ச்சியான நிகழ்வாக்கும் பணியில் உங்கள் அனைவரது ஒத்தழைப்பையும் வேண்டுகிறேன்.
நன்றி.

எம்.கே.முருகானந்தன்.

Read Full Post »

>மேலைப் புலோலி சைப்பிரகாச வித்தியாலய பழைய மாணவர் ஒன்றியம் (கொழும்பு ) வருடாந்தப் பொதுக் கூட்டம் சென்ற பொங்கல் தினத்தன்று (14.01.2010) மாலை 4 மணிக்கு பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றமையானது நிகழ்ச்சி நிகரில் உள்ளவற்றை நிறைவேற்றும் வெறும் உத்தியோகபூர்வ நிகழ்வாக மட்டும் இருக்கவில்லை.

இன்று எங்கெங்கோ வாழ்ந்தாலும் எப்பணி ஆற்றினாலும் நாம் ஒன்று கூடி எமது பழைய நினைவுகளை மீட்டு, உறவுகளைப் புதிப்பித்து மகிழ்வுறும் நாளாகவும் அமைந்தது.

சில காட்சிகள் தொடர்கின்றன.

பார்த்து மகிழுங்கள், அடுத்த வருட நிகழ்வில் நீங்களும் கலந்து மகிழுங்கள்.

நிகழ்வுக்கான சிற்றுண்டிகளையும் குளிர் பானங்களையும் திரு ராஜ் சுப்பிரமணியம் அவர்கள் பொறுப்புணர்வுடன் கொண்டு வந்து சேர்த்தார்.

நிகழ்வுக்கு வந்தவர்களுக்கு சிற்றுண்டிகளும் குளிர் பானங்களும் வழங்குவதற்கு மன்ற அங்கத்தவர்களும், உறவினர்களும் உதவினர்.

கனகசுந்தரம் சிவசுந்தரம், சிதம்பரநாதன் சிவாகர், உலகநாதபிள்ளை வரதராசன், திருமதி யோகேஸ்வரி சண்முகசுந்தரம், திருமதி மணிமாதேவி முருகானந்தன் ஆகியோர் பணி பாராட்டுக்குரியது.

திரு.க.சிவசுந்தரம் அவர்களும், செல்வன் சிதம்பரநாதன் சிவாகர் அவர்களும் சிற்றுண்டி தட்டுகளை ஆயத்தம் செய்கின்றனர்.

சிற்றுண்டி தட்டுகளுடன் திரு.க.சிவசுந்தரம் மேடை அருகில்.

திருமதி மணிமாதேவி முருகானந்தன் பெண்களுக்கு முன் சிற்றுண்டித் தட்டுடன்…

ஒன்றிய அங்கத்தவர்கள் ஒருவரோடு ஒருவர் கலந்துரையாடுவதிலும், நட்புக்களையும் உறவுகளையும் புதுப்பிப்பதிலும் மகிழ்ந்தனர்.

திரு கனகசுந்தரம் சண்முகசுந்தரம் திருமதி வள்ளி பிரபாகரிடம் ஏதோ விளக்கம் பெறுகிறார். திருமதி கெங்காதேவி வரவுப் பதிவேட்டில் எழுத அருகிருந்து திருமதி நீலாம்பிகை கோபாலசிங்கம் அவதானிக்கிறார்.

வர்ணகுலசிஙம் ஆசிரியரும் ரட்ணவடிவேல் அவர்களும் கைலாகு கொடுத்து நலம் விசாரிக்கின்றனர்.

வனிதா, ரகுநாதன், ராஜ் சுப்பிரமணியம் உரையாட அருகிருந்து ஆறுமுகநாதன் அவதானிக்கிறார்.

சச்சிதானந்தன், ரட்ணசிங்கம், முருகானந்தன், சற்குணராசா ஆகியோர் ஏதோ விவாதிக்க பார்த்துக்கொண்டிருப்பவர் சற்குணராசாவின் மகள் சரண்யா.

சிறிநாதனும் வாசுதேவனும் சிரித்து மகிழ பின்னணியில் பாஸ்கரனும், சிவநாதனும்.

பாலதாசன், கஸ்தூரி, உமா ஒருபுறமாகவும், ராஜேஸ்வரியும் முருகவேளும் மற்றொரு புறமாகவும் உரையாடலில்.

முந்தைய போட்டோவில் உள்ளவர்கள் சிரித்து மகிழ்கின்றனர்.

சிறிநாதன், செல்வமோகன், பாஸ்கரன் மற்றும் சிவநாதன் பள்ளிக்கால அனுபவங்களை நினைந்து மகிழ்கிறார்களா?

நிகழ்வின் பின் எடுக்கப்பட்ட சில குறூப் போட்டோக்கள்.

மறக்க முடியாத நாளின் சில இனிய கணங்கள், நினைவுகள்…

நினைவுகளைப் பகிர்வதற்கு கூடியிருப்பதைத் தவிர வேறென்ன வழி…

ஒன்றியத்திற்கு தனியாக ஒரு பெண்கள் பிரிவு தேவைப்படுமா எதிர்காலத்தில்???

கண்டி, கொழும்பு, காலி, பருத்திதுறை என நாற்திசையும் எமது மேலைப் புலோலி சைப்பிரகாச வித்தியாலயத்திற்காக இணைந்த அற்புதமான நாள்.

கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்பார்கள்.

நாம் கூடிச் செயற்பட்டால் எமது பாடசாலை இன்றைய மாணவர்களின் எதிர்காலம் ஒளிமயமாகும்.

பாடசாலையின் புகழ் உலகெங்கும் ஓங்கும்.

Read Full Post »

>மேலைப் புலோலி சைப்பிரகாச வித்தியாலய பழைய மாணவர் ஒன்றியம் (கொழும்பு ) வருடாந்தப் பொதுக் கூட்டம் சென்ற பொங்கல் தினத்தன்று (14.01.2010) மாலை 4 மணிக்கு பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது.


மேலைப்புலோலி சமூகத்தைச் சேர்ந்த பலரும் கூட்டத்திற்கு வந்து சிறப்பித்தனர்.


கண்டி பிரதேச இணைப்புக் குழுவின் சார்பில் அதன் தலைவர் திரு.சி.வாசுதேவன், செயலாளர் திரு.க.பாலதாசன், பொருளாளர் சி.வசந்தன் மற்றும் க.செல்வமோகன், க.பாஸ்கரன் போன்ற பலரும் வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

அவுஸ்திரேலியாவிலிருந்து திரு.க.முருகவேள், திருமதி ஞானாம்பிகை முருகவேள்(உமா), அவர்களது மகள் கஸ்தூரி முருகவேள்ஆகியோர் கலந்து கொண்டமை சிறப்பம்சமாக இருந்தது.

பல பெண் அங்கத்தவர்களும் தமது வருகையால் கூட்டத்திற்குச் சிறப்பு ஊட்டினர்.


கூட்டத்திற்கு ஒன்றியத் தலைவர் டொக்டர்.எம்.கே.முருகானந்தன் தலைமை தாங்கினார்.

திரு.உலகநாதபிள்ளை வரதராஜன் கூட்டத்திற்கு வந்தவர்களை வரவேற்று வரவேற்புரையைவழங்கினார்.


வரவேற்புரையை அடுத்து டொக்டர்.எம்.கே.முருகானந்தன் தலைமையுரை ஆற்றினார்.


சென்ற வருட(2009) வருடாந்தப் பொதுக் கூட்டம்அறிக்கையை செயலாளர் திரு.சுப்பரமணியம் சற்குணராசா சமர்ப்பித்தார்.


அது சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்டதை அடுத்து ஒன்றியத்தின் 2009 வருடத்திற்கான செயலறிக்கையை மீண்டும் செயலாளர் திரு.சுப்பரமணியம் சற்குணராசா சமர்ப்பித்தார்.

சென்ற ஆண்டிற்கான நிதியறிக்கையை உதவிப் பொருளாளர் திருமதி.வள்ளி பிரபாகர் சமர்ப்பித்தார்.


இதைத் தொடர்ந்த கலையுரையாடலில்


திரு.க.கலாகரன்


டொக்டர் வதனி


திரு.க.பிரபாகரன்


திருமதி.வரதலக்சுமி ரகுநாதன்


திரு.க.ஈஸ்வரபாதம்


திரு.ராஜ் சுப்பிரமணியம்


போன்ற பலரும் தமது கருத்துக்களை முன் வைத்தனர்.

புதிய நிர்வாகக் குழுத் தெரிவை அடுத்து, புதிய தலைவராகத் தெரியப்பட்ட டொக்டர்.M.K.இரகுநாதன் ஏற்புரையை வழங்கினார்.

இறுதியில், மீண்டும் செயலாளராகத் தெரியப்பட்ட திரு.சு.சற்குணராசா நன்றியுரையை வழங்கினார்.


குறுப் போட்டோவில் பலர் காணப்படுகிறார்கள்.

Read Full Post »

>எமது பாடசாலையின் பழைய மாணவர் ஒன்றியத்தின் வருடாந்தப் பொதுக் கூட்டம் இன்று பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரியில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. கொழும்பு வாழ் பழைய மாணவர்களுடன், கண்டி சேர்ந்த பலரும் கலந்து கொண்டமை மிகவும் ஆரோக்கியமான விடயமாக இருந்தது.

புதிய செயற்குழு அங்கத்தவர் தெரிவு நடைபெற்றது.

தலைவர்:- Dr.M.K.இரகுநாதன் (பொது மருத்துவ நிபுணர்- கரகப்பிட்டிய போதனா வைத்தியசாலை.)
செயலாளர்:- திரு.சு.சற்குணராசா(Asst Director of Education)
பொருளாளர்:- திரு.இ.இரவீந்திரன்(Asst Director Rupavahini- Tamil Section)

கூட்டம் பற்றிய விபரமான பதிவு புகைப்படங்களுடன் சில தினங்களில் பதிவு ஏற்றப்படும்.

Read Full Post »

>

மேலைப்புலோலி சைவப்பிரகாச வித்தியாலய கொழும்பு பழைய மாணவர் ஒன்றியத்தின் வருடாந்தப் பொதுக் கூட்டம் 2010


மேலைப்புலோலி சைவப்பிரகாச வித்தியாலய கொழும்பு பழைய மாணவர் ஒன்றியத்தினரின் வருடாந்தப் பொதுக் கூட்டம் எதிர் வரும் தைப்பொங்கல் தினத்தன்று (14.01.2010) மாலை 4 மணிக்கு பம்பலப்பிட்டி இந்துக் கல்லாரியில் டொக்டர்.எம்.கே.முருகானந்தன் தலைமையில் நடைபெற உள்ளது.

தலைமையுரை, செயலாளரின் ஆண்டறிக்கை, பொருளாளர் அறிக்கை, ஆகியவற்றைத் தொடர்ந்து புதிய நிர்வாகக் குழு தெரிவும் இடம்பெறும்.

பெற்றோர், பழைய மாணவ மாணவிகள், ஆசிரியர்கள், நலன் விரும்பிகள் உட்பட மேலைப் புலோலி சமூகத்தைச் சேர்ந்த அனைவரையும் கூட்டத்தில் பங்கு பற்றி பாடசாலையின் எதிர்கால அபிவிருத்தி தொடர்பாக ஆலோசனைகளை வழங்கி ஒத்துழைக்குமாறு அன்புடன் அழைக்கிறோம்.

எம்.கே.முருகானந்தன் எஸ்.சற்குணராசா
தலைவர் செயலாளர்

Read Full Post »

Older Posts »