>
மேலைப்புலோலி சைவப்பிரகாச வித்தியாலய பழைய மாணவர் ஒன்றியம்(கொழும்பு)
வருடாந்த பொதுக் கூட்டம். 14.01.2010.
தலைமையுரை 2010
மேலைப்புலோலி சைவப்பிரகாச வித்தியாலயத்தின் பழைய மாணவர் ஒன்றியத்தின் அங்கத்தவர்கள், ஆசிரியர்கள், நலன் விரும்பிகள் உட்பட எமது பாடசாலைச் சமூகத்தைச் அனைவருக்கும் தைப்பொங்கல் வாழ்த்துக்களும்,
மாலை வணக்கங்களும்.
மீண்டும் ஒரு வருடாந்தப் பொதுக் கூட்டத்தில் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். 14.01.2007 ல் ஆரப்பிக்கபட்ட எமது ஒன்றியம் 3 வயதைக் கடந்து முழு வீச்சுடன் நடைபோடும் பருவத்தில் இருக்கிறது.
பழைய மாணவர் ஒன்றியம் என்ற இக் குழந்தை பிறந்த நாள் முதல் அதன் செயற்பாடுகளில் பங்கு பற்றி எமது பாடசாலையின் வளர்ச்சிக்கு உதவியும் உற்சாகமும் அளித்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.
நாம் கடந்து வந்த பாதையைத் திருப்பிப் பார்க்கும்போது பிரமிப்பாக இருக்கிறது. நாட்டு நிலை மிகவும் மோசமாக இருந்த நேரத்தில் எமது ஒன்றியம் ஆரம்பிக்கப்பட்டது.
தமிழர்கள் என்றாலே சந்தேகிகப்பட வேண்டிய பிராணிகள் என்று நினைக்கப்பட்ட நேரம் அது.
நாம் கூடுவதும், கலந்துரையாடுவதும், நிதி சேர்ப்பதும், வங்கிகள் ஊடாக பாடசாலைக் கணக்கிற்கு அனுப்புவதும் உயிரச்சம் விளைவிக்கக் கூடிய விடயங்களாக இருந்தன.
ஆயினும் அவற்றையும் தாண்டி எமது பாடசாலைக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற உங்கள் ஒவ்வொருவரதும் பாடசாலை மீதான பற்றுதலும், தன்னலங்கருதாத செயற்பாடுகளும் எமது பாடசாலையின் வளர்ச்சிக்கு நிறையவே உதவியுள்ளன.
பாடசாலையில் அண்மையில் ஏற்பட்ட வளர்ச்சிகள் பற்றியும், அதற்கு எமது ஒன்றியம் உங்கள் உதவிகள் ஊடாக எவ்வாறு கைகொடுத்தது என்பது பற்றியும் செயலாளர் தனது அறிக்கையில் விரிவாகக் கூறுவார்.
சென்ற ஆண்டின் முக்கிய பெறு ஆக எமது கண்டி விஜயமும் அங்கு ஒரு இணைப்புக் குழு அமைக்கப்பட்தையும் சொல்லலாம்.
இது பற்றிய விபரங்கள் அங்கத்தவர்கள் அனைவருக்கும் தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டதால் மேலும் விபரிக்கவில்லை.
பல பணிகள் செய்து முடிக்கப்பட்ட போதும் இன்றைய பாடசாலை மாணவர்களின் தற்காலத் தேவைகளுக்கு ஏற்ப இன்னும் பல விடயங்களைச் செய்து கொடுக்க வேண்டியிருக்கிறது.
மனதுக்கு இனிய ரம்யமான சூழலும்,
கற்றைக்குத் தேவையான கட்டட, தளபாட, நூலக, விளையாட்டு மைதான வசதிகள் செய்து கொடுக்க வேண்டியுள்ளது.
உள்ளவற்றை மேம்படுத்த வேண்டிய தேவையும் இருக்கிறது.
ஆற்ற வேண்டிய பணிகள்
புதிய கட்டிடம்
பாடசாலைக்கு ஒரு புதிய கட்டிடம் மிக அவசியத் தேவையாக இருக்கிறது. முன்பு ராஜ் சுப்பிரமணியம் கல்வித் திணக்களத்தில் இருந்து போது ஒதுக்கிய நிதியில் ஆரம்பிக்கபட்ட இரட்டை மாடிக் கட்டடம் நாட்டு நிலைகளால் பூர்த்தி செய்யப்படவில்லை. அந்த அத்திவாரத்தின் மீது இப்பொழுது புதிய கட்டடம் கட்ட முடியபா அளவிற்கு பழுதாகி உள்ளது. அதனை அகற்றிவிட்டு புதிய கட்டடம் கட்ட வேண்டியுள்ளது.
போர் முடிவுற்றதை அடுத்து வன்னிப் பகுதியிலிருந்து பெருமளவு மாணவர்கள் வந்துள்ளார்கள். இதனால் 230 அளவில் இருந்த மாணவர் தொகை திடீரென 359ஆக அதிகரித்துவிட்டது. இடவசதி போதாது. விளையாட்டு மைதானத்தின் மேடையில் ஒரு வகுப்பை வைக்க வேண்டிய நிலை.
தளபாடங்கள்
மாணவர் தொகை அதிகரித்ததால் தளபாடங்கள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஆனால் புதிய கட்டிடம் இல்லாமல் தளபாடங்களைப் போட இடமில்லை. எனவே புதிய இரட்டை மாடிக் கட்டடம் பெறுவதே முதல் தேவையாக உள்ளது. இது தனியார் செய்யக் கூடியது அல்ல. சில தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள அணுகியுள்ளோம். ஆயினும் இன்னமும் எதுவும் கை கூடவில்லை.
நூல்கள்
நூலகம் தன்னார்வத் தொண்டு நிறுவனத்தால் அமைக்கப்பட்டது. தளபாடங்கள் பரம்சோதி அருளானந்தம் மற்றும் சுந்தரலிங்கம் நிதியுதவியில் கிடைத்துள்ளது. நூலகத்திற்கு 30106 கதிரைகள், வாசிப்பு மேசை 1, ஒவிஸ் டேபிள் 1
நூலகத்திற்கு நூல்கள் சென்ற வருடம் சேர்த்து அனுப்பினோம். இன்னமும் தேவை. 5ம் வகுப்பிற்கு உட்பட்ட மாணவர்களுக்கு ஏற்ற புதிய நூல்களைச் சேகரிப்பதில் அங்கத்தவர்கள் ஒத்துழைப்புத் தேவை
சிறுவர்களுக்கான சுவர் சித்திரங்கள்
பாடசாலையின் சுற்றுமதில் சுவரின் உட்பக்கங்கள் மற்றும் கட்டிடங்களின் வெளிச் சுவர்களிலும் சித்திரங்கள் வரையப்பட வேண்டும். இது மாணவர்களின் பொது அறிவு விருத்திக்கும், கற்றலுக்கு உதவும் விதமாகவும், பாடசாலையை அழுகுறுத்தவும் அவசியமானது.
ஒரு இடைவெளியை சிமெந்து பூசி சித்திரம் வரைய சுமார் பதினையாயிரம் (15,000) தேவைப்படும். பங்களித்தவர் விபரங்கள் அனுசரணை என்ற சிறுதலைப்பில் ஒவ்வொரு சித்திரத்திலும் எழுதப்படும். மறைந்தோர் ஞாபகமாகவும் செய்யலாம். 2-3 வருடங்களில் டச் அப் செய்ய வேண்டியிருக்கும்
சிறிய பாடசாலையின் முகரி முன்னுரிமை கொடுத்து செய்ய வேண்டியுள்ளது.
தளபாட பராமரிப்பும், வர்ணம் பூசுதலும்
பாடசாலை தளபாடங்களை பேணிப் பாதுகாப்பதற்கு பராமரிப்பு அவசியம். 2-3 வருடங்களுக்கு ஒரு முறை அவற்றைத் திருத்தி வர்ணம் பூச சுமார் ஐப்பதினாயிரம் தேவைப்படும்
சிறிய பாடசாலை சுற்று மதில்
சிறிய பாடசாலையின் முற்பகுதி அழகிற்காகவும் பாதுகாப்பிறகாகவும் இரும்புவலை வேலி அமைக்கப்பட்டுள்ளது. ஆயினும் ஏனைய மூன்று பக்கங்களையும் சுற்றி மதில் அமைக்க வேண்டியுள்ளது.
நெற் வசதி
கம்பியூட்டர் அறை செய்யப்பட்டுள்ளது. மேசை, கதிரை, கண்ணாடி அலுமாரி, தளபாடங்கள் அரச உதவியில் கிடைத்துள்ளன. விரைவில் கம்பியூட்டர்கள் கிடைக்கும். தொடரந்து நெற் வசதி செய்யப்பட வேண்டும்.
நிறுவனர் சிலை
பெரும்பாலன பாடசாலைகளின் முன்னறலில் அதனை ஸ்தாபித்த நிறுவனரின் சிலை வைக்கப்பட்டு தினமும் அதற்கு பூ மரியாதை செய்யும் வழக்கம் இருக்கிறது.
எமது பாடசாலை 1884 முதல் திரு.ஆ.ஆ.சிதம்பரப்பிள்ளை பராபரிப்பில் நடாந்து வந்தது. பின்னர் திரு.ஆ.சி.நாகலிங்கம்பிள்ளை பொறுப்பேற்றார். ஸ்தாபகர் சிலையை அவர்களது வழித்தோன்றலகள் செய்வது பொருத்தமாக இருக்கும் என நம்புகிறேன்.
பழைய மாணவர் பற்றிய தகவல் திரட்டி
சதாவதானி நா.கதிரவேற்பிள்ளை, பாரதியின் ஞானகுருவான அருளம்பல சுவாமிகள் போன்ற தமிழ் அறிஞர்களும், ஞானிகளும் கல்வி கற்ற பெருமைக்குரியது. பிற்காலத்தில் வே.தா.சி;.சிவகுருநாதன், கற்கண்டுப் பண்டிதர் பொன்.கிருஸ்ணபிள்ளை, கவிஞர் யாழ்ப்பாணன் (திரு.வே.சிவக்கொழுந்து), பிரபல சத்திரசிகிச்சை நிபுணர் ந.சண்முகலிங்கம், வை.கா.சிவப்பிரகாசம் போன்ற பெரியார்களையும் வளர்த்தெடுத்தது எமது பாடசாலையே.
ஆயினும் கல்வியாலும், தொழிலாலும், சமூகப்பணிகளாலும் பெருமை பெற்ற எமது பழைய மாணவர்கள் பற்றிய விபரங்கள் எமது பாடசாலையில் இல்லை. அத்தகைய ஒரு தகவல் திரட்டியைத் தயாரித்துப் பேணுவது மிகவும் அவசியம். அதற்கான ஒரு மாதிரிப் படிவம் தயாரிக்கப்பட்டுள்ளது.
நன்றி
கடந்த மூன்று வருடங்களாக எமது பணிகள் தொடர்கின்றன. இப் பணிகளின் போது என்னுடன் ஒத்துழைத்த செயற்குழு அங்கத்தவர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.
முக்கியமாக செயலாளர் திரு சற்குணராசா, பொருளாளர் இரவீந்திரன் ஆகியோர் பேருதவியாக இருந்தனர்.
பொருளாளர் இரவீந்திரன் இன்று கலந்துகொள்ள முடியாத சூழலில் சென்ற வருட கணக்கறிக்கையைத் தயாரிப்பதுடன் அதனை இன்று சமர்பிக்கவும் இருக்கும் வள்ளி பிரபாகர் அவர்களுக்கு எனது விசேட நன்றிகள்.
திருவாளர்கள் சற்குணராசா, ரவீந்திரன், சோமசுந்தரம், ஜீவகுமார், சண்முகசுந்தரம், இரத்தினசிங்கம், வரதராசன், சிதம்பரநாதன், சிவசுந்தரம், இராஜ் சுப்பிரமணியம், போன்றவர்கள் செயற்குழக் கூட்டங்களுக்கு வந்து தங்கள் ஒத்துழைப்பு வழங்கினர். இதில் இராஜ் சுப்பிரமணியம், சற்குணராசா, சண்முகசுந்தரம் ஆகியோர் 100 சதவிகிதம் பிரச்ன்னமாயிருந்தனர்.
திரு.இராஜ் சுப்பிரமணியம், சண்முகசுந்தரம் ஆகியோரின் ஆலோசனைகளும், ஒத்துழைப்புகளும் மிகமிக முக்கியமானவை. அவர்கள் எமது ஒன்றியத்தின் செயற்பாடுகளுக்கும் பாடசாலையின் வளர்ச்சியிலும் காட்டும் அக்கறை அதி விசேடமானவை. ஓன்றியத்தின் தலைவர் என்ற ரீதியல் நான் செயற்படுவதை விட ஆழமாகச் சிந்தித்து, வேகமாக செயற்படுபவர்கள் அவர்களே. அவர்களுக்கும் எனது விசேட நன்றிகள்.
எமது அதிபர் திரு.மு.கனகலிங்கம் அளப்பரிய பணியை செய்துவருகிறார். அவரின் தன்னலம் கருதாத, வேகமும் சமோசிதமும் கூடிய செயற்பாடுகள் காரணமாக எமது பாடசாலை கடந்த 4 ஆண்டுகளில் முன்னணி நிலைக்கு வந்திருக்கிறது. வடமராட்சிப் பிரதேசத்தின் முன்னணி ஆரம்பப் பாடசாலையாக கல்வித் திணைக்களத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. கல்வியிலும் பௌதீக வளத்திலும், அழகிய சுத்தமான சுற்றாலைப் பேணுவதிலும் அது முன்னணியில் இருக்க வைத்த பெருமை அவரையே சேரும்.
பழகுவதற்கு இனியவரான அவர், பட்ட மேற்படிப்புடன், யாழ் பல்கலைக்கழகத்தின் வருகைநிலை விரிவுரையாளராகவும் விளங்கும் கல்வித் தகமையும் உடையவராவார். எமது பாடசாலை அதிபராக பணியாற்றக் கிடைத்தது எமக்குக் கிடைத்த ஒரு அரிய வாய்ப்பாகும். அதனை நாமும் ஓரளவு பயன்படுத்தி பாடசாலை வளரச்சிக்கு உதவ முடிந்தது என்பதில் எமது ஒன்றிமும் பெருமை கொள்ளலாம். இப்பொழுது அவருக்கு தரம் 2 அதிபர் நிலைப் பதவி உயர்வு கிட்டியுள்ளது. அவருக்கு எனது சார்பிலும் உங்கள் எல்லோர் சாரப்பிலும் வாழ்த்துக் கூறுகிறேன்.
எமது ஒன்றியத்தின் வரவு செலவு கணக்கு உங்களுக்கு சற்று நேரத்தில் கிடைக்கும். அதனை அவதானதாகப் பார்த்தால் உங்களுக்கு சில விடயங்கள் புரியக் கூடும். முதலாவது எமது அங்கத்தவர்கள் அளித்த பெரும்பாலான நிதி உதவிகள் எம்மால் நேரடியாகக் கையாளப்படவில்லை. பாடசாலை அபிவிருத்திச் சங்க நிதிக்கு, நிதி உதவி வழங்கியர்களால் நேரடியாக அளிக்கப்பட்டுள்ளது. அதனால் அவை எமது கணக்கறிக்கையில் இடம்பெறவில்லை.
அடுத்த முக்கிய விடயம் சங்கத்தின் வழமையான நடைமுறைச் செயற்பாடுகளுக்கு சங்கத்தின் எந்த நிதியும் பெறப்படவில்லை.
கடித, டெலிபோன் செலவுகள், அறிக்கை அச்சடிப்பு செலவு, கண்டி விஜயத்திற்கான பிரயாணச் செலவுகள், ஆண்டு விழாச் சிற்றுண்டிச் செலவு எதுவுமே சங்க நிதியிலிருந்து பெறப்படவில்லை.
சேர்க்கப்பட்ட ஒவ்வொரு சதமும் பாடசாலை வளர்ச்சிக்கே சென்று அடைந்தது. அதற்கு ஒத்துழைத்த சங்க செயற்குழு அனைவருக்கும் எனது நன்றிகள்.
செயற்குழு என்று சொன்ன பொதும் பெரும்பாலான உதவிகள் திரு ராஜ் சுப்பிரமணியத்தின் உதவிகளே. அறிக்கைகளைப் போட்டோ பிரதி எடுத்து தபாலில் அனுப்புவதற்குமான செலவுகளையும், கண்டி பிரயாண வாகன வசதியும், இன்றைய சிற்றுண்டிகளுக்கான செலவுகளின் பெரும் பகுதியும் அவரது உதவிகளே.
கணக்கறிக்கையை தயாரித்தது மட்டுமின்றி போட்டோ பிரதிகள் எடுத்ததும் வள்ளி பிரபாகரின் உதவியாகும்.
எதிர்காலத்தில் இளைய தலை முறையினரின் ஈடுபாடும் பங்களிப்பும் மிக முக்கியம்.
பழைய மாணவர் ஒன்றியத்தின் வருடாந்த பொதுக் கூட்டம் அறிக்கைகளைச் சமர்பிப்தற்கும், உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான வழமையான நடவடிக்கையாக இருக்கிறது.
இதற்கு மேலாக இதனை பழைய மாணவர்கள் அனைவரும் ஒன்று கூடி தமக்கிடையே உறவுகளை புதுப்பித்து, பழைய நினைவுகளை மீள்நினைத்து மகிழவும் கொண்டாவும் வேண்டிய நிகழ்வாகவும் மாற்ற வேண்டிய பணி உள்ளது.
வெறும் வருடாந்தப் பணியாக இருக்கும் இதனை ஒன்று கூடலாகவும், தேநீர் அல்லது இராப் போசனத்துடன் கூடிய மகிழ்ச்சியான நிகழ்வாக்கும் பணியில் உங்கள் அனைவரது ஒத்தழைப்பையும் வேண்டுகிறேன்.
நன்றி.
எம்.கே.முருகானந்தன்.
Read Full Post »