>
அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
வாழ்த்துச் சொல்வதில் கூட ஒரு சிக்கல் தமிழர்களாகிய எங்களுக்கு இருக்கிறது. தைப்பொங்கல் புத்தாண்டா, சித்திரை வருடம் புத்தாண்டா என்ற கேள்விக்கும், ஆராய்ச்சிகளுக்கும் என்றுமே குறைவில்லை.
தொடர்ந்து கொண்டே இருக்கும் விவாதம் இது. ஆராச்சியாளர்களும் இறுக்கமான இனப் பற்றாளர்களும் இவை பற்றிப் பேசிக் கொண்டே இருப்பார்கள்.
வாழ்க்கை என்பது வாழ்வதற்கு. துன்பங்கள் இருந்த போதும் அதனையும் மீறி மனத்தில் மகிழ்ச்சி பெற அவாவ வேண்டும். தாம் பெற்ற இன்பத்தை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும்.
இல்லையேல் மனச்சோர்வு பிடித்த சமூகமாகத் தாழ்ந்துவிடக் கூடிய அபாயம் உண்டு என்பதை மனோவியல் நிபுணர்கள் கூறுகிறார்கள்.
எனவே வாழ்த்துங்கள்!
வாழ்த்திக் கொண்டே இருங்கள்.
உங்கள், எங்கள் மனதுகளில் தோய்ந்திருக்கும் இருண்ட பக்கங்களை ஒதுக்கி வைத்துவிட்டு வெளிச்சத்திற்கு வாருங்கள்.
முதலில் உங்கள் உள்ளத்தில் ஒளியை ஏற்றுங்கள்.
ஒளி பரவட்டும்.
உங்களுக்குக் கிடைக்கும் மகிழ்ச்சியை மற்றவர்களுக்கும் பரவ விடுங்கள்.
உதவிக் கரம் நீண்டுவதுடன் நின்றுவிடாது அவர்களைப் பார்த்து புன்முறுவல் செய்யுங்கள். இறுகிக் கிடக்கும் முகத்தின் தசை நார்கள் இறுக்கம் தளர்ந்து இலேசாகும் போது மனமும் இறக்கை கட்டி வானில் பறக்கும்
மகிழ்ச்சியான நிறைவான வாழ்க்கை அனைவருக்கும் கிடைக்கப் பாடுபடுவோம். அதற்காக உழைப்போம்.
இது பற்றி மேலும் அறிய இங்கே கிளிக் பண்ணி‘மகிழ்வுட்டும் தொற்று நோய்’ என்ற எனது கட்டுரையை படித்துப் பாருங்கள்
இதனைப் பற்றிய ஆங்கில ஆராச்சிக் கட்டுரையின் சுருக்கத்தைப் படிக்க இங்கே கிளிக் பண்ணுங்கள்.