>அவன் ஒரு பாடசாலை மாணவன். உயர்தர வகுப்பில் படிக்கிறான்.
அவனுக்கு அடிக்கடி காய்ச்சல் வந்து கொண்டிருந்தது.
அருகில் உள்ள மருத்துவரிடம் காட்டி மருந்தெடுக்க மாறிவிடும்.
விரைவில் உயர்தர வகுப்புப் பரீட்சை வர இருக்கிறது.
இந்த நேரத்தில் அடிக்கடி காய்ச்சல் வருவதால் படிப்பு கெடுகிறதே எனக் கவலையடைந்த தாயாருடன் வந்திருந்தான்.
விசாரித்த போது முன்பு போல உணவுகளை ஆசையோடு சாப்பிடுவதில்லை என்பது தெரியவந்தது.
சற்று எடையும் குறைந்திருந்தது.
இரத்தம் பரிசோதனை, சளிப் பரிசோதனை எடுத்த போது அவை வித்தியாசம் காட்டவில்லை. சாதாரணமாக இருந்தன.
எக்ஸ்ரே எடுத்த போது நுரையீரல் பாதிப்பின்றி இருந்தது. ஆனால் நுரையீரலுக்கு வெளியே நெஞ்சறையில் நீர் தேங்கியிருந்தது.
காசநோய் காரணமாக சுரந்த நீர்.
காசநோய் என்பது பெரும்பாலும் நுரையீரலைத் தாக்கும் நோய்
(Pulmonary Tuberculosis) ஆகும்.
ஆனால் நுரையீரலில் மட்டும் வருவதில்லை. இவனுக்கு வந்தது
இவற்றைத் தவிர சிறுநீரகம், எலும்பு, மூளை எனப் பல உறுப்புகளையும் தாக்க வல்லது.
இப்பொழுது நல்ல சிகிச்சை கிடைக்கிறது. பொதுவாக 6 மாதங்கள் வரை தொடர்ச்சியாக மருந்துகள் சாப்பிட முற்றாகக் குணமடைந்துவிடும்.
காசநோய், சயரோகம், ரீ.பீ எனப் பலவாறு அழைக்கப்படும் இந் நோய் தடிமன் போல காற்றினால் பரவும் நோயாகும். அதாவது ஒருவர் தும்மும் போதும் இருமும் போதும் வெளிப்படும் கிருமிகள் காற்றின் ஊடாக மற்றவருக்கும் பரவுகின்றன.
இன்று உலக காசநோய் தினமாகும்.
இந் நோய் பற்றிப் பூரணமாகத் தெரிந்து கொள்ள இதோ ஒரு இணைப்பைத் தருகிறேன்.
வடமாகாண காசநோய் விழிப்புணர்வுக்கான இணையதளம். வட இலங்கை காசநோய் தடுப்புச் சங்கத்தின் இணையத்தளமாகும்.
டொக்டர்.சி.யமுனானந்தாவின் தலைமைத்துவத்தில் இது இயங்குகிறது.
- காசநோய் என்றால் என்ன?
- காசநோயின் அறிகுறிகள்
- பரவும் விதம்
- காசநோய் வராதிருக்க
- காசநோய் வந்தால்
- காசநோயும் கர்ப்பிணிகளும்
- காசநோயும் போசாக்கும்
- டொட் என்றால்
போன்ற தலைப்புகளில் தெளிவான விளக்கங்கள் கிடைக்கின்றன.
வடமாகாண காசநோய் விழிப்புணர்வுக்கான இணையதளம் சென்று விபரமாகப் படிக்க இங்கே கிளிக் பண்ணுங்கள்
இலங்கையில் இந்நோய் பற்றிய தரவுகள் உலக சுகாதார இணையத் தளத்தில் கிடைக்கிறது. கிளிக் பண்ணுங்கள்
2007ல்இலங்கை சனத்தொகை 19 மில்லியனாகும். 100,000 பேரில் 79 பேருக்கு என்ற விகிதத்தில் இந்நோய் பரவியிருக்கிறது. இது ஏனைய கிழக்காசிய நாடுகளுடன் ஒப்பிடும்போது குறைந்ததாகும் என்றும் சொல்கிறது.
இந்நோய் பற்றி விளக்கமாக அறிந்து அது பராவாமலிருக்கும் முயற்சிக்குக் கைகொடுப்போம்.