மிஸ்டர் அன்ட் மிஸஸ் அய்யர்
வன்முறைகள் மலிந்துவிட்ட காலம் இது. மதரீதியாக, இனரீதியாக மொழிரீதியாக வன்முறைகள் மலிந்து கிடக்கின்றது. சகிப்புத்தன்மை என்பது தொலைந்தே போய்விட்டது. கிழக்கில் தமிழர்களுக்கும் முஸ்லீம்களுக்குமிடையே மோதல், காஸ்மீரில் இந்துக்களுக்குமிடையே முஸ்லீங்களுக்குமிடையே சண்டை, பாலஸ்தீனத்தில் இஸ்ரேலியர்களுக்கும் பாலஸ்தீனர்களுக்குமிடையே போர் என எங்கு பார்த்தாலும் வன்முறையே கோலோச்சுகிறது. மனித நேயமும், புரிந்துணர்வும் பரஸ்பர நம்பிக்கையும், உதவி ஒத்தாசைகளும், மங்கிமறந்துவிட மாற்றுக் கருத்துக்களை மதிப்பதே மதிப்பற்ற செயல் போலாகிவிட்டது. அடிதடி, கொலை கொள்ளை மூலம் பயப்பீதியைக் கிளப்பி மேலாதக்கம் செய்ய முனைவதே விதிபோலாகிவிட்டது.
ஆனால் வன்முறையானது வன்முறையாளர்களுக்கு மட்டும் உவப்பானது அல்ல. வன்முறைக்கு எதிரான கலையாக்கம் என்ற லேபலுடன் வன்முறைகளை விலாவாரியாகச் சித்தரித்து பணப்பை நிரப்ப முயலும் சினிமாக்காரர்களுக்கு அது பொன்முட்டையிடும் வாத்தாகும். தமிழ்ச் சினிமாவில் இதற்கு உதாரணங்க் சொல்லி அடங்காது.
மிஸ்டர் அன் மிஸஸ் அய்யர் கூட வன்முறை பற்றிய படம்தான். ஆனால் இது வன்முறையைச் சித்தரிக்கும் படம் அல்ல என்பது கவனிக்கத்தக்கது. வன்முறையை நேரடியாகக் காட்டாமலே அது பற்றிய உணர்வை எம் மனதில் சுட்டெரிக்கும் தீயாகக் கொழுந்துவிட்டு எரியச் செய்கிறார் இயக்குனரான அபர்ணா சென். அது வன்முறைக்கு எதிரான உணர்வை எம்மில் துளிர்விடச் செய்கிறார்.
ஒரு சிறிய உதாரணம் வன்முறைக்கும்பல் ஒன்று வயோதிபரான இஸ்லாமியரை பஸ்ஸிலிருந்து விசாரணைக்காக அழைத்துச் செல்கிறது. நடைபெறப் போகும் நிகழ்வின் தாக்கத்தை உணராத அவரின் மனைவி அவரது கண்ணாடியையும் பற்செற்றையம் அவசியத்துக்கு உதவுமே என அப்பாவித்தனத்துடன் அவரிடம் கொடுத்து விடுகிறாள். மற்ற எல்லோர் முகத்திலும் மரணபீதி தாண்டவமாடுகிறது.
இன்னோர் காட்சியில் பத்திரிகைக்காரன் செய்தி எழுதுகிறான். ‘முஸ்லீம் வயோதிபரின் கண்ணாடியும் பற்செற்றும் ஓரை ஓரத்தில் அனாதரவாய் விழுந்து கிடந்தன…’. அவர் கொலையுண்ட சம்பவம் எமக்கு எங்குமே காட்டப்படவில்லை. ஆனால் அவர் கொலைசெய்யப்பட்ட செய்தி புரிந்துவிட, அது தந்த சோகமும் அதன் கோரமும் எம்மனதை கனமாக அழுத்திப் பழிகிறது. வன்முறைக்கு குழந்தைகள், வயோதிபர், பெண்கள், நோயாளிகள் என்ற வேறுபாடே கிடையாது.
திரைப்படத்தின் கதை புதுமையானது என்று சொல்லிவிட முடியாது. வன்முறை நிகழ்வுகளின் இரு கோடிகளில் இருக்கும் சமூகங்களான இந்து முஸ்லீம் மதங்களைச் சேர்ந்த ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே சந்தேகங்கள் மலிந்த சூழ்நிலையின் மத்தியில் மொட்டவிழ்க்கும் உறவை மெல்லெனப் பேசுவதுதான் இத்திரைப்படம். ஆனால் வழமையான தமிழ்த்திரைப்படக் காதல் கதை போன்றது அல்லது என்பதும் குறிபபிடத்தக்கது.
அழகிய இளம் தாயான மீனாட்சி அய்யர் தனது ஒன்பது மாதக் குழந்தையான சந்தானத்துடன் பயணமாகிறாள். இந்தியாவின் கண்கவர் வட எல்லை மலைப்பிரதேசத்திலிருக்கும் தாய்வீட்டிலிருந்து கணவர் இருக்குமிடமான கல்கத்தாவிற்குப் பிரயாணம் செய்கிறாள். அவள் தாய்மொழி பேசும் பிராமணப் பெண். மகள் தனியே பயணமாகிறாளே என்ற கவலை அவளது தாய்க்கு. பஸ்நிலையத்தில் தற்செயலாகச் சந்தத்த நண்பர் மூலம் ராஐ¡ என்ற புகைப்படக் கலைஞனின் அறிமுகம் கிடைக்கிறது. அவனும் கல்கத்தாவிற்கே செல்ல இருப்பதால் வழியில் அவளுக்கு உதவியாக இருக்க ஒப்புக் கொள்கிறான்.
அழகிய மலைகளுடே பஸ் பயணிக்கிறது. உயர்ந்த மரங்களின் செழுமையும் நீ£ரோடைகளின் சலசலப்பும், மேகம் மூடிய வானின் குளிர்மையும் கண்ணுக்கு இதமளிக்கின்றன. ஹெயர்ப்பின் வளைவுகளுடே பஸ் ஒளிந்து மறைந்து பயணிக்கிறது. இயற்கையின் அழகையெல்லாம் கெளதம் கோரின் கமரா அற்புதமாகப் பதிவு செய்கிறது. இயற்கைக் காட்சிகளை மாத்திரமன்றி மனிதர்களின் உணர்வுகளையும் அவரது கமரா ரசனையோடு உள்வாங்குகிறது.
இளைஞர்கள், யுவதிகள், இளம் தம்பதியினர், வயோதிபர் என பலவகைப்பட்டவர்கள் நிறைந்த பஸ். ஆட்டம் பாட்டம் சரஸம் என அமைதியான இனிமையான சூழலில் அது பயணிக்கிறது.
பஸ்ஸில் நடக்கும பல விடயங்களையும் இயக்குநர் நிதானமாகவும் நுணுக்கமாகவும் பதிவு செய்கிறார். இளம் பெண்கள் அடிக்கும் கொட்டத்தைப் பொறுக்கமுடியாத முதியவர் மனைவிக்கு ‘எமது கலியாணத்தின் போது உனது கைகள் கூட பர்தாவுக்குள் மறைந்து கிடந்தன…’ என்று கூறுகின்றார். அந்தக் காலத்தின் மேன்மை பற்றி அவர் சொல்லும்போது அவளின் வெறுமையான கைகள் அவருக்கு எதையோ எடுத்துக் கொடுப்பது எமக்குத் தெரிகிறது.
அவர் காட்டியது அவ்வளவுதான்.
ஆனால் எமது சிந்தனை உலகம் உசுப்பிவிடப்படுகிறது.
‘காலம் மாறும் போது எமது எண்ணங்களும் செயல்களும் பண்பாடும் கூட மாறுகிறது. வயோதிபர்கள் கூட இதற்கு விதிவிலக்கல்ல. அவர்களும் மாறவே செய்கிறார்கள். அது படிப்படியான மாற்றம். ஆனால் இளைஞர்களின் துரித மாற்றம் வயதானவர்களுக்கு உவப்பானதாக இல்லை. தமது ‘பொற்காலம்’ பற்றிய உன்னத கனவுகளிலேயே வயதானவர்கள் வாழ்கிறார்கள்’ என்பதை சொல்லாமல் சொல்லி விடுகிறார்.
பிரயாணத்தின்போது மீனாட்சியின் குழந்தை அழுது முரண்டு பிடிக்கிறது. குழந்தையைப் பார்ப்பதற்கும், குழந்தைக்கு அவள் உணவு தயாரிப்பதற்கும் ராஐ¡ உதவுகிறான். அவள் மனத்தில் அவன் பற்றி நல்லெண்ணம் வளர்கிறது. நன்றியும் கூறுகிறாள்.
பஸ் ஓரிடத்தில் திடீரென நிறுத்தப்படுகிறது. தனிப்பட்ட காரணங்களுக்காக ஒரு முஸ்லீம் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து இனக்கலவரம் வெடித்துள்ளது. அங்கு பேசப்படுவதிலிருந்து தெரிய வருகிறது. மாற்று மதத்தவரை பழிவாங்கும் வெறி அப்பிரதேசத்தில் தலைவிரித்தாடுகின்றது. இவர்கள் பஸ் நின்றது ஒரு இந்துக் கிராமம். கலவரக்காரர்கள் எந்த நேரமும் வரலாம் என்பதால் எல்லோரையும் பஸ்சுக்குள்ளேயே இருக்கும்படி பாதுகாப்புத் தரப்பினர் கூறிச் செல்கின்றனர். அப்பொழுது ராஐ¡ தான் ஒரு முஸ்லீம் என்பதை அவளுக்கு வெளிப்படுத்தி, தான் அங்கிருந்து புறப்படுவதே தனக்கும் ஏனைய பிரயாணிகளுக்கும் பாதுகாப்பானதெனக் கூறி விடை பெற முயல்கிறான்.
அவள் முகத்தைத் திருப்பிக் கொள்கிறாள். கவலையினால் அல்ல! அவள் முகத்தில் இவ்வளவு நேரமும் இருந்த நட்புத் தன்மை விலக அந்நியத்தன்மை குடிகொள்கிறது.
‘அட ராமா, இவன் கொடுத்த தண்ணீரைக் குடித்தேனே…’
என்பதுதான் அக் கணத்தில் அப்பிராமணப் பெண்ணில் எழுந்த முதல் எதிர்வினையாக இருந்தது. அவனுக்கு ஏதும் ஆபத்தாக நடந்துவிடுமா என்ற அக்கறைக்கும் மனிதாபமானத்திற்கும் மேலாக தனது ஆசாரம் கெட்டுவிட்டதான உணர்வுதான் அவளது முதற் கவலையாக இருந்ததைக் காண்கிறோம்.
இதற்கிடையில் கலவரக் கும்பல் ஒன்று தீப்பந்தங்களுடன் இவர்கள் பஸ்ஸைச் சூழ்ந்து கொள்கிறது. பெயர்களைக் கேட்டு ஒவ்வொருவரையும் எந்த மதத்தைச் சார்ந்தவர்கள் என அடையாளம் காண முயல்னகின்றார்கள். பெயர்களில் சந்தேகம் ஏற்பட்ட போது சுன்னத் செய்திருக்கிறதா எனப் பரிசோதித்துப் பார்த்து அடையாளம் அளவிற்கு அவர்களின் குரோத உணர்வு உச்சத்திலிருக்கிறது. இஸ்லாமியர் என இனங்கண்ட வயோதிபரை விசாரணைக்காக இழுக்காத குறையாத அழைத்துச் செல்கிறார்கள். அது கண்டு இவன் பதைத்து எழ முயல எதுவும் பேசாது குழந்தையை அவன் கையில் திணிக்கிறாள் மீனாட்சி.
இதற்கிடையில் ஒரு வன்முறையாளன் இவர்கள் அருகே வந்து பெயரைக் கேட்க, அவன பதிலளிக்கத் தயங்க, மிஸ்டர் அன்ட் மிஸஸ் அய்யர் சுப்பிரமணிய அய்யர்’ எனத் தயக்கமின்றித் தெளிவாகப் பதில் சொல்கிறாள் அவள். கடும் சார உணர்வும் தான் பிராமண சமூகத்தைச் சார்ந்தவள் என்ற உயர் எண்ணம் கொண்ட அப்பெண்ணில் அக்கணத்தில் இயல்பாக எழுந்த மனிதாபிமான உணர்வை மிக அற்புதமாக தன் முகத்தில் வெளிப்படுத்துகிறார் கொங் கொணா சென். இவர் அபர்ணா சென்னின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது. தோற்றத்திலும் நடிப்பிலும் அசல் தமிழ்ப்பிராமணப் பெண்ணாகிவிடுகிறாள்.
இக்கட்டான தருணத்தில் இவ்வாறு அவனது உயிரை அவள் காப்பாற்றி விடுகின்றாள். இப்பொழுது அவளைப் பாதுகாக்க கல்கத்தாவிற்கு கொண்டு செல்வது கடமைபோல் ஆகிவிட்டது. இடையில் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்படுகின்றது. அங்கு சந்திக்க ஒரு காவல்துறை அதியாரி அவர்களை ஒரு காட்டுப் பங்களாவில் தங்க வைப்பதற்கும் பின் தங்கள் வாகன அணியில் கல்கத்தாவிற்கு கொண்டு செல்வதற்கும் உதவி செய்கிறான்.
இன்னும் நடக்கும் சின்னச்சின்ன சம்பவங்கள் அவர்கள் ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளவும், உணர்வுகளைப் பரிமாறிக் கொள்ளவும் நெருங்கிய சிநேகமாகவும் உதவுகிறது. இக்கட்டான சூழலில் அகப்பட்டுக் கொண்ட அவர்களின் நிஐ வாழ்வின் சோகமும் சோதனைகளும் கலந்த சில கணங்களை நம்பகத்தன்மையடனும் கலாபூர்வமாகவும் வெளிப்படுத்துவதில் அபர்ணா சென் வெற்றி காண்கிறார். கமெராவும் காவியம் படைக்கக் கைகொடுக்கிறது.
ராஐ¡வாக நடிப்பது ராகுல் போஸ். ஆர்ப்பாட்டம் இல்லை. மிக இயல்பான வாழ்வது போன்ற நடிப்பு. நடிகர், எழுத்தாளர், இயக்குநர் என பலதரப்பட்ட ஆளுமை கொண்டவர் ராகுல் போஸ் என அறிகிறேன்.
கல்கத்தாவில் ரயில் நிற்கிறது. நிஐ அய்யர் மனைவியையும் குழந்தையையும் அழைத்துச் செல்ல ரயில் நிலையத்திற்கு வந்திருக்கிறான். மீனாட்சி ரயிலிலிருந்து வெறுங்கையுடன் இறங்கி வருகிறாள். ‘எங்கே குழந்தை’ என்று கேட்ட கணவனுக்கு அவள் மறுமொழி சொல்வதற்கிடையில் ராஐ¡ குழந்தையுடன் இறங்கி வருகிறான். காத்து நிற்கும் தந்தையிடம் இவ்வளவு நேரமும் தந்தைபோல் இஇருந்து பாதுகாத்தவன் குழந்தையை ஒப்படைக்கின்றான். இறுதியில் மிஸ்டர் அய்யராக இவ்வளவு நேரமும் இருந்தவன் நிஐ அய்யரிடமும் மிஸஸ் அய்யரிடமும் குழந்தை சந்தானத்திடமும் விடைபெற்றுச் செல்லும் காட்சி பார்வையாளர்களின் உள்ளத்தை அழுத்திப் பிழிகிறது. அரிதான அனுபவம் எமக் கிடைக்கிறது. இன மத மொழி பேதங்களைக் கடந்ததுதான் அன்பும், நட்பும் என்பதைப் புரிந்து கொள்கிறோம்.
படம் மதரீதியான வன்முறை பற்றியது தான். ஆனால் அவை எழுவதற்கான காரணங்களை ஆராயவோ அல்லது அதன் நியாயஅநியாயங்களைப் பேசவோ அது முன்வரவில்லை. வன்முறையின் கோர முகம் எவ்வாறு தனிமனிதர்களையும் சமூகத்தையும கொத்திக் குதறிக் கூறுபோடுகிறது என்பதை கலா பூர்வமாக சித்தரித்துக் காட்டுகிறது. ஆனால் வன்முறையையும் மீறிய மனிதாபிமானம் மக்களிடையே இன்னமும் மரணித்து விடவில்லை என்பதைத் திரைப்படம் உணர்த்துவது நம்பிக்கையளிக்கிறது. படம் பிரச்சினைக்கான எந்த தீர்வையும் கூறி அதிமேதாவித்தனம் காட்ட முயலவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
படம் இந்தி நடிகர்களைக் கொண்டு வட இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஆங்கிலப்படம். ஆயினும் பாத்திரங்கள் தங்களுக்கிடையே தத்தமது தாய்மொழியிலே இயல்பாகப் பேசிக் கொள்கிறார்கள். வசனங்கள் மிகக் குறைவாக இருக்க காட்சிகள் ஊடாகவே படம் சொல்லப்படுவதனால் தெரியாத மொழிகளும் எமக்குப் புரிவதற்குத் தடையாக இல்லை. எனினும் ஆங்கில ளரடிவவைடநள காட்டப்படுவதால் மேலும் தெளிவாகப் புரிகிறது. இடையே மீனாட்சி தனக்குள்ளும், தனது பெற்றோருடனும், குழந்தையுடனும் தமிழிலேயே பேசிக்கொள்வது எமக்கு உவப்பாக இருக்கிறது.
இன்றைய சூழலில் மிஸ்டர் அன்ட் மிஸஸ் அய்யர் எமக்கு மிக முக்கியமான படம். தங்கள் மதமும் தங்கள் மொழியும் தங்கள் இஇனமுமே தமது அக்கறைக்கு உரியதாகவும் பெருமை சார்ந்ததாகவும் எண்ணிக்கொண்டு மற்றவர்களை இளக்கமாகவும் ஏளனமாகவும் பார்ப்பது இலங்கையர் எல்லோருக்கும் சகஐமாகி விட்டது. அடித்து உதைத்தேனும் மேலாண்மை பெற ஒவடவொரு இனமும் வெறியோடு முயல்கிறது. மற்றவர்களும் சமமான உரிமைகளும் பண்பாட்டுப் பெருமையும் கொண்டவர்கள் என்பதை எப்போது உணர்ந்து கொள்ளப் போகிறோமோ?. ஒவ்வொரு மனித உயிரும், மனிதாபிமான உணர்வும் எல்லாவற்றையும் விட பெறுமதிமிக்கது என்பதைக் கூறும் இப்படம் எமக்கு அவசியமானதுதான். இலங்கையில் திரை அரங்குகளில் வெளியாகவில்லை. ஆனால் வீடியோ ஆகவும் சீடி ஆகவும் கிடைக்கிறது. தப்பவிட்டு விடாதீர்கள்.
எம்.கே.முருகானந்தன் (கொழும்பு)
நன்றி- pathivukal.com