Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for the ‘சுயஇன்பம்.’ Category

கேள்வி:- கே.சு…..  மட்டுவல
எனது நண்பனுக்கு வயது 18. வாரத்துக்கு 5 தடவைகளாவது சுய இன்பத்தில் ஈடுபடுகின்றான். அத்தோடு அவனைவிட வயதில் மூத்த ஆண்களோடு தவறான உறவில் ஈடுபடுகின்றான். இதற்கு காரணம் என்ன? இதற்கான தீர்வு என்ன?


பதில்:- சுயஇன்பத்தில் ஈடுபடுவது அவன் மாத்திரமல்ல. ஆண் பெண் என்ற வேறுபாடு இன்றியும் வயது வேறுபாடு இன்றியும் பெரும்பாலனவர்கள் இதில் ஈடுபடுகிறார்கள். அல்லது முன்பு ஈடுபட்டிருப்பார்கள்.

இதை நான் வெளிப்படையாகச் சொல்வது பல தூய்மைவாதிகளுக்கு கோபத்தை ஏற்படுத்தலாம். இருந்தாலும் அதுதான் உண்மை. அமெரிக்காவில் செய்யப்பட்ட ஆய்வில் 95% சதவிகிதமான ஆண்களும் 89% மான பெண்களும் தாங்கள் சுயஇன்பத்தில் ஈடுபட்டுள்ளதாகச் சொல்லியுள்ளார்கள். எனவே உங்கள் நண்பன் ஏதோ தவறு செய்ததாக எண்ணாதீர்கள்.

ஒருவரது தனது பாலியல் தொடர்பான உளநெருக்கீட்டை தணிப்பதற்கான வடிகாலாகவே சுயஇன்பம் இருக்கிறது. பதின்ம வயதுகளில் பாலியல் எழுச்சி ஏற்படுவது அதிகம். அது இயற்கையின் நியதி. ஆயினும் கல்வி தொழில் வாய்ப்பு போன்ற காரணங்களால் அதை ஆண் பெண் உறவு மூலம் தீர்க்க சமூக ரீதியாக முடிவதில்லை. பதின்ம இதைத் தீர்ப்பதற்கு எதிர்பாலினர் கிடைப்பது சாத்தியம் இல்லை. திருமணம்கள் மிகவும் காலதாமதமாகின்றன. எனவேதான் தாமே தீர்த்துக் கொள்ள நேர்கிறது. உங்கள் நண்பரின் நிலையும் அதுதான்.

சுயஇன்பத்தால் உங்கள் நண்பருக்கு உடல்நலக்கேடு ஏற்பட வாய்ப்பில்லை. இரவில் தானே ஸ்கலதமாபவர்கள் நேய்ப்வாய்ப்படுகிறார்களா? இல்லையே!!!

இருந்தபோதும் அவரது கல்வி தொழில் போன்ற நாளந்த செயற்பாடுகளை அசட்டை செய்யும் அளவிற்கு அவரது சுயஇன்ப நாட்டம் அதிகமானால் உளவளத் துணையை நாட வேண்டும்.

உங்களது நண்பரது மற்ற பழக்கம் ஆபத்தானது.

மற்ற ஆண்களுடன் ஒருபால் புணர்ச்சியில் ஈடுபடுவதானது பாலியல் நோய்த் தொற்றுக்கு இட்டுச் செல்லலாம். சிபிலிஸ், கொனரியா, எச் ஐ வி, வைரஸ் வோர்ட் போன்ற பலவும் பாலியல் உறவுகளால் தொற்றும் நோய்களாகும்.

எயிட்ஸ் நோய் கண்டு பிடிக்கப்பட்ட 80களில் அந்நோய் தொற்றுவதற்க்கு ஒருபால் புணர்ச்சியே முக்கிய காரணமாக இருந்தது என்பதை அறிவீர்களா?

எந்த வயதுள்ள பிறருடன் உறவு வைத்தாலும் பாலியல் நோய்கள் தொற்றுவதற்கான வாய்ப்பு உண்டு.

அவரை விட மூத்த வயதுள்ளவர்கள் என நீங்கள் குறிப்பிட்டவர்கள் யார் யாருடன் எல்லாம் உறவு வைத்து நோய்க் காவிகளாக திரிகிறார்களோ தெரியாது. எனவே அதை நிறுத்துமாறு ஆலோசனை சொல்லுங்கள்.

பிகு

ஓரினப் புணர்ச்சி சரியானதா தவறானதா?
இயற்கையானதா இயற்கைக்கு மாறானதா? என்பது பற்றி
இங்கு நான் ஆராய முற்படவில்லை.

அது பற்றிய வாதப்பிரதிவாதங்கள் நடந்து கொண்டே இருக்கின்றன.

ஆனால் பல சிறார்களை ஓரின உறவிற்கு பல நெறிகெட்ட மனிதர்கள் ஆசை ஊட்டியோ அன்றி அதிகாரத்தைப் பயன்படுத்தியோ உட்படுத்தப்படுவதை
ஊடகங்கள் மூலமும் தொழில் ரீதியாகவும் அறிய முடிகிறது.

இது தவறான நெறிமுறை என்பதை எவரும் ஏற்றுக் கொள்வர்.

ஆனால் அதற்கு மேலாக அது பாலியல் தொற்று நோய்களுக்கும் வித்திடும்.

எனவே இது பற்றிய விழிப்புணர்வை இளம் சமூதாயத்தினருக்கு ஏற்படுத்துவது அவசியம்.
கேள்வி:- எனது உடல் தினசரி சோர்வாகவே உள்ளது. அடிக்கடி தாகம் (15 நிமிடத்திற்கு ஒரு தடவை) வருகிறது. அடிக்கடி சிறுநீர் வருகிறது. தோன்றுகிறது. சளி தொடர்ந்துள்ளது. தொடர் வயிற்றுவலியும் இருக்கின்றது. காரணம் என்ன?

பதில்:- உங்கள் வயதைச் சொல்லவில்லை. இருந்தாலும் உங்கள் நண்பரின் வயது 18 என்பதால் உங்களுக்கும் அதை ஒட்டியே இருக்கும் என எண்ணலாம். எவ்வளவு காலமாக இந்த அறிகுறிகள் உள்ளன என்பதும் தெரியவில்லை. சிறுநீர் மற்றும் இரத்தப் பரிசோதனைகள் செய்து பார்த்தாலே நோயைத் தெளிவாகக் கண்டறிய முடியும்.

உடற் சோர்வு, தண்ணீர் தாகம் மற்றும் அடிக்கடி சிறுநீர் கழிதல் என்றால் உடனடியாக நினைவிற்கு வருவது நீரிழிவு நோய்தான். இரத்தத்தில் சீனியின் அளவு அதிகரித்திருந்தால் உங்கள் சிறுநீரகம் கூடுதலாக தொழிற்பட்டு சீனி சிறுநீருடன் வெளியேறுவதைத் தடுக்க முயலும். இதனால் சிறுநீர் உற்பத்திஅதிகமாகி நீங்கள் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டிய நிலை ஏற்படலாம்.

எனவே உடனடியாக குருதிச் சீனியின் அளவைப் பரிசோதித்துப் பாருங்கள். குயளவiபெ டிடழழன ளுரபயச செய்து பார்ப்பது அவசியம்.
அத்துடன் சிறுநீர்ப் பரிசோதனை (ருசiநெ குரடட சநிழசவ) செய்து பார்க்கவும் வேண்டும். ஏனெனில் சிறுநீரில் கிருமித் தொற்று ஏற்பட்டிருந்தால் அடிக்கடி சிறுநீர் கழிவதுடன் அடிவயிற்றில் வலியும் ஏற்படலாம். ஆனால் பொதுவாகச் சலக் கடுப்பும் சேர்ந்திருக்கலாம்.

சளித்தொல்லையும் இருப்பதாகச் சொன்னீர்கள். சளி மூக்கடைப்பு, மற்றும் சைனஸ் தொல்லை இருந்தாலும் உடற் சோர்வு, தண்ணீர் தாகம் ஆகியவை ஏற்படும்.

இவற்றைத் தவிர மனப் பதற்றம், உளநெருக்கீடு, மனச் சோர்வு போன்ற பிரச்சனைகள் இருந்தாலும் உடற்சோர்வும் அடிக்கடி சிறுநீர் கழிதலும் ஏற்படலாம்.

அடிக்கடி கோப்பி குடிப்பவர்கள், தூக்கக் குறைபாடு, கபால வலி எனப்படும் மைக்கிரேன் தலைவலி என இன்னும் பல காரணங்களும் இருக்கலாம்.

எனவே இது ஏன்ன நோய் என நீங்களே யோசித்து மனப்பதற்றம் அடைவதைத் தவிர்த்து உங்கள் மருத்துவருடன் நேரில் சென்று கதைத்து வேண்டிய பரிசோதனைகள் செய்வதன் மூலம் நோயை சரியயாகக் கண்டறிவதே உசிதமானதாகும்.

0.00.0
இது போன்ற பல கேள்வி பதில்கள் எனது ஹாய் நலமா புளக்கில் வெளியாகின்றன

Read Full Post »


அந்தப் பையனுக்கு அடுத்த வாரம் திருமணமாக இருந்தது.

ஆயினும் முகத்தில் அதற்கான பூரிப்பைக் காண முடியவில்லை. ஏதேதோ சில்லறைப் பிரச்சனைகள், நோய்கள் பற்றியே பேசிக்கொண்டிருந்தான். இவன் மனத்தின் உள்ளே ஏதோ அரித்துக்கொண்டிருக்கிறது என்பதைப் புரிந்து கொண்டேன்.

திருமணமாக இருப்பதால் ஏதாவது பாலியல் பிரச்சனையா? அதனால்தான் சொல்ல வெட்கப்படுகிறானா? நேரிடையாகவே கேட்டேன்.

‘நான் சின்ன வயசிலை கெட்ட பழக்கம் பழகியிட்டன. இப்ப கைவிட்டிட்டன். அதான் அது அது …’ எனத் திணறினான்.

‘அது என்ன கெட்ட பழக்கம்?’

‘நான் என்ரை கையாலேயே …’ மீண்டும் திக்கினான்.

‘சுய இன்பமா?’ வினவினேன்.. தான் நினைத்ததை நான் சொல்லிவிட்டேன் என்பதில் அவன் முகம் மலர்ந்தது.

இவனைப்போல சுயஇன்பம் செய்ததையிட்டு குற்ற உணர்வூடன் வருபவர்கள் பலர். இரவில் தானாகவே ஸ்கல்தமாவதால் தனது ஆண்மை பாதிப்படையுமா என பயந்து வரும் இளைஞர்கள் தொகையும் அதிகம்.

உண்மையில் இவை எவையுமே பிற்காலத்தில் பாலியல் உறவில் பிரச்சனைகளை உண்டாக்கும் கெட்ட செயல்களல்ல. ஆபத்தான நோய்களுமல்ல. தன்னைத்தானே நொந்து கழிவிரக்கம் கொள்ள வேண்டிய ஈனச் செயல்களுமல்ல.

பதின்ம வயதுகளில் பையன்களின் ஆண் உறுப்பு வளர்ச்சியடைகிறது. விந்து உற்பத்தியும் தொடங்குகிறது. அது வெளியேற வேண்டும்தானே? பானை நிறைந்தால் நீர் வெளியே சிந்தும். இதுபோல உற்பத்தியாவது ஏதாவது வழியில் வெளியேறவே செய்யும்.

எனவே தூக்கத்தில் ஸ்கல்தமாவது என்பது இயற்கையான செயல்தான். அவ்வாறு வெளியேறும்போது ஒரு வகை இன்பத்தையும் உணர்கிறான். சற்று ஆராய்ச்சி மனமுள்ள பையன் தனது கையால் அதை வெளியேற்றிப் பார்க்கிறான். அதில் மேலும் ஆனந்தமடைகிறான்.

இதேபோல பெண்பிள்ளைகளும் தமது உறுப்புகளின் வளர்ச்சியை அவதானிக்கிறார்கள் தொட்டுப் பார்க்கிறார்கள். உறுப்பின் மொட்டை வருடுவதால் சுயஇன்பம் பெறுவதுண்டு.

இவை இயற்கையானவை, ஆபத்தற்றவை. எதிர்பாலத்தில் கணவன் மனைவி இடையேயான உடலுறவைப் பாதிக்கப் போவதில்லை.

மாறாக ஓரினப் பாலுறவு சர்ச்சைக்குரியது.

பலரும் தமது பதின்ம வயதுகளில் இதையும் பரீட்சித்துப் பார்த்திருக்கிறார்கள். இதுவும் இயல்பானதுதான்.

ஆனால் ஆபத்தற்றது என்று சொல்ல முடியாது.

காரணம் ஓரினச் சேர்க்கையோ ஈரினச் சேர்க்கையோ அங்கு ஒருவரிலிருந்து மற்றவருக்கு நோய் தொற்றுவதற்கான வாய்ப்பு உள்ளது என்பதை மறந்துவிடக் கூடாது. அதாவது ஹேர்பீஸ், கொனரியா, சிபிலிஸ் முதல் எயிட்ஸ்வரை எதுவுமே தொற்றக் கூடும். இது ஒரு சாத்தியம் மட்டுமே.

ஆயினும் எனக்கும் தொற்றியிருக்குமோ என மனத்துக்குள் மறுகி துன்பப்பட்டுக் கொண்டிருக்காது வைத்திய ஆலோசனை பெறுவது அவசியமாகும். இவற்றில் பலவற்றிற்கு நல்ல சிகிச்சைகள் கிடைக்கின்றன. வைத்தியரிடம் எதையும் சொல்ல தயங்கவோ, வெட்கப்படவோ, பயப்படவோ வேண்டியதில்லை. அவர்கள் இரகசியம் காப்பவர்கள்.

வெளிப்டையாகப் பேசி ஆலோசனை பெறாது மனத்துக்குள் அடக்கி வைப்பதால்தான் பலர் திருமணத்தின் பின் குற்ற உணர்வுக்கு ஆளாகி பீதி, பதகளிப்பு, மனச்சோர்வு, உடலுறவில் சிக்கல் போன்ற நோய்களுக்கு ஆளாகி தமது திருமண வாழ்வின் மகிழ்ச்சியையே தொலைத்து விடுகிறார்கள்.

பாலியல் பற்றி வெளிப்படையாகப் பேசாத எமது சமூகச் சூழலில் திருமணத்திற்கு முன்னான ஆற்றுப்படுத்தல் (Premarital Councilling) செய்வது ஆரோக்கியமான செயற்பாடாக இருக்கும் என எண்ணத் தோன்றுகிறது.

திருமணமாக இருக்கும் ஆண் பெண் இருபாலாருக்கும் இது அவசியம். ஆனால் இருவரையும் சேர்த்து வைத்து ஆற்றுப்படுத்துவதற்கு எமது சமுதாயம் தயாராகாத நிலையில் தனித்தனியாகவும் செய்யலாம்.

பாலியல் பிரச்சனைகளுக்கு மட்டுமே இது அவசியம் என்பதில்லை. வாழ்க்கைப் பயணத்தில் எத்தனையோ விதம் விதமான பிரச்சனைகளை, சவால்களை இருவரும் எதிர்நோக்க நேரிடும். அவற்றை திடமாக எதிர்கொள்ள ஆற்றுப்படுத்தல் உதவும்.

வைத்தியர்தான் இதைச் செய்ய வேண்டும் என்றில்லை. மத நிறுவனங்கள் மேலும் பொருத்தமாக இருக்கலாம். மதகுருமார்களுக்கு அதில் சிறு பயிற்சி அளித்தால் போதுமானது.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

Read Full Post »