காத்திருக்கிறார்
மிகிந்தலை ஏறும்
படியோர மரம் மீது.
ஆவல் மிக…
மர அணில் என்கிறார்கள்
சரியான பெயரை
கூறுவீரோ.
தலை ஆட்டுகிறார்
மேல் கீழாய்
தா தா தின்பதற்கு
என்னுமாப் போல.
கனிகள் பிடிக்க வில்லையோ !!
தேனும் சுவைக்கவில்லையோ!!!
முறுக்கி நொறுக்கி
வதக்கி பொரித்து
இனிப்பில் மூழ்கி
நோயுறும் மனிதரின்
நொறுக்கு தீனியை தான்
நாடுகிறாயோ.
கவனம்
நீரிழிவு கொலஸ்டரோல்
பிரஷர் வாதம்
மாரடைப்பு
புற்று நோய் யாவும்
உன்னை யும் தீண்டும்.
எம்.கே.முருகானந்தன்