Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for the ‘செயலாளர் அறிக்கை’ Category

>

மேலைப் புலோலி சைவப்பிரகாச வித்தியாலயம் கொழும்பு
பழைய மாணவர் ஒன்றியம் கொழும்பு

 
2009ம் ஆண்டிற்கான செயலாளர் அறிக்கை

மேலைப் புலோலி சைவப்பிரகாச வித்தியாலய கொழும்பு பழைய மாணவர் ஒன்றியத்தின் 2009ம் ஆண்டிற்கான செயலாளர் அறிக்கையைச் சமர்ப்பிப்பதில் பெரு மகிழ்ச்சியடைகின்றேன். முதலில் இன்றைய கூட்டத்தில் கலந்து கொண்ட பாடசாலை வளர்ச்சியில் அக்கறை கொண்ட பழைய மாணவர்கள் அனைவருக்கும் நன்றி கலந்த பொங்கல் வாழ்த்துக்கள். அத்துடன் இப்பாடசாலை மண்டபத்தை எமக்குத் தந்துதவிய பாடசாலை அதிபருக்கும் எமது உளமார்ந்த நன்றிகள்.

எமது ஆரம்பப் பாடசாலையான மேலைப்புலோலி சைவப்பிரகாச வித்தியாலயத்திற்கான பல அபிவிருத்திப் பணிகள் நடப்பு ஆண்டில் நிறைவு செய்யப்பட்டுள்ளன. எமது ஒன்றிய அங்கத்தவர்களாகிய உங்களது ஒத்தழைப்பாலும், பொருள் உதவியாலும் இவற்றை நிறைவேற்ற முடிந்துள்ளது. பாடசாலையின் அபிவிருத்தி மற்றும் வளர்ச்சிப் பணிகளைப் பொறுத்த வரை இது மிகவும் திருப்தியான ஆண்டாகக் கருதலாம்.

அண்மையில் ஆரம்பிக்கப்பட்டுள்ள மற்றும் செய்து முடிக்கப்பட்டுள்ள சில பணிகள் பற்றிய தகவல்களை தருவதில் மகிழ்ச்சியடைகிறேன்.

முற்புற பெரிய கதவு

    வடக்குப்புறமாக பெரியவாசற்கதவு டாக்டர் மு.க.முருகானந்தன் அவர்களினால் தனது தாயாரான கதிரவேற்பிள்ளை பரமேஸ்வரி ஞாபகமாக வழங்கப்பட்ட ரூபா 25000 நிதியினைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. அதற்கு மேலுள்ள பாடசாலைப் பெயர் வளைவு திரு.கனகசாபதி மோகன் அவர்களால் அமைத்துக் கொடுக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

டெலிபோன் இணைப்பு

    எமது பாடசாலைக்கு இவ்வருட ஆரம்பம்வரை தொலைபேசி வசதி இல்லாதிருந்தது. இதனால் பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், கல்வி இலாகா அதிகாரிகள் பெற்றோர்கள் அனைவருமே தொடர்புகளுக்கு காலவிரயம் செய்ய வேண்டியிருந்தது. இதனைக் கருத்திற் கொண்டு திரு.ஆ.சிவநாதன் தனது தாயாரான திருமதி. இந்திரா ஆறுமுகநாதன் நினைவாக பாடசாலைக்கு தொலைபேசி இணைப்பையும் அதற்கான ஒரு வருடக் கட்டணத்தையும் (ரூபா 20,000) வழங்கியுள்ளார்.

சைக்கிள் தரிப்பிடம்

    எமது பாடசாலை ஒரு உள்ளுர் சிறிய ஆரம்பப்பாடசாலையாக இருந்தபோதும் அதற்கும் ஒரு சைக்கிள் தரிப்பிடம் (பார்க்) அவசியமாக இருந்தது. பாடசாலைக்கு சைக்கிளில் வரும் சில மாணவர்களுக்காக மட்டுமன்றி ஆசிரியர்களது சைக்கிள்கள் மற்றும் வேறு தேவைகளுக்காக வரும் அதிகாரிகள், பெற்றோர்கள், நலன்விரும்பிகள் போன்றோரது வாகனங்களை விடுவதற்கும் இது அவசியம் என உணரப்பட்டது.

இப்பொழுது 40 அடி நீளமான வசதியான சைக்கிள் தரிப்பிடம் பாடசாலையின் பெரிய கதவிற்கு மேற்குப் புறமாக மதிலை அண்டிய நிலப்பரப்பில் கட்டி முடிக்கப்பட்டு பாவனையில் உள்ளது. இதற்காக நிதியை டென்மார்க்கில் வாழும் இரத்தினசபாபதி கிருஷ்ணராஜா அவர்களும் அவரது நண்பர்களுமாக இணைந்து சேர்த்துக் கொடுத்துள்ளார்கள்.  இதற்காக ரூபா 128,000 செலவிடப்பட்டுள்ளது.

மெல்லக்கற்கும் மாணவர்களுக்கான விஷேட வகுப்புகள்

மெல்லக் கற்கும் மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்துவதற்கான விஷேட வகுப்புகள் பாடசாலையில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. கல்வித் தரத்தில் மிகவும் பின்தங்கியிருந்த 8 மாணவர்கள் இவ்வருடம் இவ் வகுப்புக்கள் மூலம் முன்னேற்றமடைந்து வழைமையான வகுப்புக்களுக்கு மீளச் சேர்க்கப்பட்டுள்ளமை இத்திட்டத்தின் மிகப் பெரிய வெற்றியாகும்.

அண்மையில் வன்னியிலிருந்து இடம் பெயர்ந்த பல மாணவர்கள் எமது பாடசாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்கள். அவர்களில் சிலர் கல்வியியில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருப்பதால் அவர்கள் இப்போது விசேட வகுப்புக்களில் உள்வாங்கப்பட்டுள்ளனர். பிரபல வர்த்தகர்களான அமரர்.சி. திருச்செல்வம் மற்றும் அமரர் சி.சிவகுலசிங்கம் ஆகியோர் ஞாபகார்த்தமாக இத்திட்டத்தை தொடர்ச்சியாக நடத்துவதற்கான நிதியுதவிகளை திரு தி.செல்வமோகன் மற்றும் திரு சி.வசந்தன் ஆகியோர் வழங்கியுள்ளனர். இரண்டாம் கட்ட நிதியான ரூபா 20000 ம் வழங்கப்பட்டுள்ளது. இவ்வருடம் மொத்தமாக 40,000 வழங்கப்பட்டுள்ளது.

புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள்

 இவ்வருடம் எமது பாடசாலையில் இருந்து 8 மாணவர்கள் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்துள்ளனர். இவர்களுள் முன்னணியில் உள்ள மாணவர்கள் 165, 164, 162 என மிக நல்ல புள்ளிகளைப் பெற்றுள்ளனர். இம்முறை யாழ் மாவட்ட வெட்டுப்புள்ளி 140 புள்ளிகளாகும். 130-140 க்கும் இடைப்பட்ட புள்ளிகளை மேலும்8 மாணவர்கள் பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும். 100 க்கும் மேற்பட்ட புள்ளிகளை மேலும் 8 மாணவர்கள் பெற்றுள்ளனர்.

இந்த வகையில் எமது பாடசாலையின் பெறுபேறுகள் மிகவும் பாராட்டத்தக்கதாக அமைந்துள்ளது. பரீட்சையில் சித்தியெய்திய மாணவர்களுக்கு எமது பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொள்கிறோம். இவர்களது வெற்றிக்குக் காரணமாயிருந்த ஆசிரியர்களுக்கும் அதிபர்க்கும் எமது நன்றிகள். ஏனைய மாணவர்களும் நல்ல பெறுபேறினைப் பெற்றுள்ளனர். இவர்களுக்கும் எமது வாழ்த்துக்கள்.

புலமைப்பரீட்சையில் சித்தியெய்திய 8 பேரில் 7 பேர் புலமைப்பரிசில் உதவி நிதியைப் பெறத் தகுதியுள்ளவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்க்கு ‘இளஞானச் சுடர்’ விருதும் பணப்பரிசும்

புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு எமது பழைய மாணவர் ஒன்றியம் வருடாந்தம் ‘இளஞானச் சுடர்’ விருதும் பணப்பரிசும் அளித்து ஊக்குவித்து வருகிறது.

2009ல் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த 8 மாணவர்களுக்கும் தலா ரூபா 1000 பணப்பரிசாக வழங்கப்பட்டுள்ளது.  இதற்கான நிதியுதவியை  வழங்கியோர் விபரம் பின்வருமாறு

திரு.மு.சோமசுந்தரம் 1500
திரு.க.சிதம்பரநாதன் 1500
திரு.இராஜ் சுப்ரமணியம் 1500
டொக்டர்.எம்.கே,முருகானந்தன் 1500                                               

2008ல் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கும் தலா ரூபா 2000 பணப் பரிசாக வழங்கப்பட்டது. தனது தந்தையாரான திரு.நாகப்பர் நினைவாக திரு. நாகப்பர் சண்முகதாஸ் அவர்களால் இதற்கான நிதியுதவி ரூபா 20,000 வழங்கப்பட்டது.

2007ல் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கான பணப் பரிசு நிதியுதவிக்காவும் பரிசளிப்பு விழாவிற்காகவும் கொழும்பு ஆங்கத்தவர்கள் ரூபா 17,500ம் கண்டி மாத்தளை அங்கத்தவர்கள் ரூபா 15,000;ம் வழங்கியிருந்தனர். அவர்கள் விபரம் 2007ம் ஆண்டுக் கணக்கறிக்கையில் அங்கத்தவர்களுக்கு வழங்கப்பட்டது.

பாடசாலை நூலகத்துக்கான தளபாடங்கள்

பாடசாலை நூலகத்துக்கான ஒரு புதிய கட்டடம் பாடசாலையின் தெற்குப் பகுதியில் திறந்த அரங்கத்திற்கு மேற்குப்புறமாக அமைக்கப்பட்டுள்ளதை நீங்கள் அறிவீர்கள். அதற்கான நிதியை தன்னார்வத் தொண்டு நிறுவனம் வழங்கியிருந்தது. ஆயினும் தளபாடங்கள் இன்மையால் அது முழுமையாகச் செயற்படாதிருந்தது.

இப்பொழுது தளபாடங்களுக்கான நிதியை பிரபல வர்த்தகர் அமரர் திரு. நா.ம.பரஞ்சோதி அவர்களின் நினைவாக அவரது அருமைப்பிள்ளைகளும் மருமக்களும் தாமகவே முன்வந்து உதவியுள்ளனர். இந்த முயற்சியில்  ஈடுபட்டுழைத்த அமரரின் மகன் பரம்சோதி அருளானந்தம் (லண்டன்) மற்றும் மருமகன் இராசலிங்கம் சுந்தரலிங்கம் (இளைப்பாறிய தபாலதிபர். கனடா) ஆகியோர்; பாராட்டிற்குரியவராவர். அவர்கள் அளித்த ரூபா 150000 நிதியைக் கொண்டு மேசைகள், கதிரைகள், புத்தக அலுமாரி போன்ற தளபாடங்கள் பெறப்பட்டுள்ளன.

நூலகத்துக்கான நூல்கள்

சென்ற 2009 ஆண்டுப் வருடாந்தப் பொதுக் கூட்டத்தின் போது எமது ஒன்றிய பழைய மாணவர்களால் நூல்நிலையத்திற்கென கொழும்பில் சேர்க்கப்பட்ட நூல்கள் பாடசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

பாடசாலைக் கணனி வசதிகள்

கல்வியமைச்சின் அனுசரனையுடன் கணனிக்கூடம் ஒன்றை ஸ்தாபிப்பதற்கு இப்பாடசாலை அடையாளம் காணப்பட்டுள்ளது. பாடசாலை அதிபரின் கணனித் தேர்ச்சியார்வம் அதற்கான நேர்நிலையை ஏற்படுத்தியுள்ளமை காரணங்களாக அமைந்தன. இதற்கு வலு சேர்க்கும் வகையில் ரூபா 18,000 பெறுமதியான கணனியை எமது ஒன்றிய அங்கத்தவர்கள் நிதியுதவியுடன் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது.

இதற்கான நிதியுதவி அளித்தோர் விபரம் பின்வருமாறு

திருஆ.சிறிநாதன் ரூபா 5000
திருமு.சோமசுந்தரம் ரூபா 5000
திரு க. சண்முகசுந்தரம் ரூபா 2000
டொக்டர்.சு.அருள்குமார் ரூபா 3000

பரிசளிப்பு நூல்கள்

பாடசாலையில் வருடாந்த பரிசளிப்பு வழாவில் பரிசு பெறும் பிள்ளைகளுக்காக பல நல்ல நூல்களைப் பெறவேண்டியுள்ளது. இதனைக் கருத்திற்கொண்டு கண்டி பிரபல வர்த்தகர் அமரர் வே.க. கந்தையா அவர்களின் ஞாபகார்த்தமாக அவர் ஸ்தாபித்த வர்;த்தக நிறுவனமான எஸ்.கே கொம்பனி சார்பில் அவரது பிள்ளைகளான கந்தையா இராமச்சந்திரன், கந்தையா சிறீஸ்கந்தராஜா ஆகியோர் ரூபா 5000 வழங்கியிருந்தனர். இத்தொகையில் பல நூல்கள் பரிசுகளாக வழங்கப்பட்டன. அமரர் வே.க.கந்தையா எமது பாடசாலையின் வளர்ச்சியிலும் மேம்பாட்டிலும் அயராது முன்னின்று உழைத்தவர் என்பது யாவரும் அறிந்ததே. அன்னாரின் சேவைகளை நினைவுகூரும் வகையில் இது நடைபெறுகிறது.

நினைவுப்பரிசில்கள்

வருடாந்த நினைவுப்பரிசுகள்

 பல பழைய மாணவர்கள் எமது பழைய மாணவர் ஒன்றியத்தின் வேண்டுகோளுக்கு இணங்க தமது நினைவுக்கூகுரியவர்கள் ஞாபகமாக வருடாந்தம் நினைவுப்பரிசில்களை வழங்குவதற்கான நிதியை கொடுத்துள்ளார்கள். பாடசாலை அபிவிருத்திச் சங்கம் அவற்றை வங்கியில் வைப்புப் பணமாக இட்டு அதன் வட்டிப் பணத்தில் பரிசில்களை வழங்கவுள்ளது.
 1. சகலதுறையிலும் சிறந்து விளங்கும் மாணவர்க்கான         பரிசு அமரர் செல்லாச்சி இராசரத்தினம் நினைவாக வழங்கியவர் திரு இராஜ்சுப்ரமணியம் ரூபா 15000
 2. புலமைப்பரிசில் பரீட்சையில் அதிக புள்ளிகளைப் பெற்றவருக்கான பரிசு அமரர் முன்னாள் அதிபர் ந. சிவபாதசுந்தரம் நினைவாக வழங்கியவர் திரு பொ.கேதீஸ்வரன் ரூபா 15000
 3. ஆங்கில மொழித்திறனுக்கான பரிசு அமரர் கா.மு. காசிவிஸ்வநாதன் நினைவாக வழங்கியவர் திருமதி தேவாம்பிகை காசிவிஸ்வநாதன் ரூபா 15000
 4. திருக்குறள் மனனத்தில் சிறந்து விளங்குபவர்க்கான பரிசில் அமரர் முன்னாள் அதிபர மூத்தபிள்ளை பொன்னையா நினைவாக வழங்கியவர் திருமதி வேல்நந்தகுமார் ரூபா 15000
 5. வரவொழுங்கிற்கான பரிசு அமரர் பரமேஸ்வரி கதிரவேற்பிள்ளை நினைவாக வழங்கியவர் கதிரவேற்பிள்ளை மகேஸ்வரன் ரூபா 15000
 6. பொது அறிவில் சிறந்து விளங்குபவர்க்கான பரிசு அமரர் டொக்டர் த. பரமகுருநாதன் நினைவாக வழங்கியவர் திருமதி பரமகுருநாதன் தங்கம்மா ரூபா 15000
 7. சிறந்த விளையாட்டு வீரருக்கான பரிசு அமரர் டொக்டர் க. திருநாவுக்கரசு நினைவாக வழங்கியவர் திருமதி கௌரிமனோகரி மகேஸ்வரன் ரூபா 15000
 8. ஆக்கத்திறனுக்கான பரிசு அமரர் சுவாமிநாதன் மனோன்மணி நினைவாக வழங்கியவர் திரு சுவாமிநாதன் சிவபாலன் ரூபா 20000
 9. பண்பு விருத்திக்கான பரிசு அமரர் வ.துரைசாமிப்பிள்ளை நினைவாக வழங்கியவர் திருமதி.ராஜேஸ்வரி பரமேஸ்வரன், திரு து. இராஜசேகரம் ரூபா 20000
 10. சிறந்த நூலகப் பயன்பாட்டிற்கான பரிசு அமரர் திரு திருமதி சிதம்பரம் நினைவாக வழங்கியவர் திரு சிதம்பரம் வர்ணகுலசிங்கம் ரூபா 15000
 11. புலமைப்பரிசில் பரீட்சையில் அதிக புள்ளிகளைப் பெற்றவருக்கான பரிசு திரு. திருமதி கனகசபாபதி நினைவாக வழங்கியவர் டொக்டர் எம்.கே.இரகுநாதன் ரூபா 100,000
 12. வரவொழுங்கும் வினைத்திறனுமுள்ள ஆசிரியருக்கான பரிசு அமரர் திருமதி சின்னத்தங்கம் சுப்பி;ரமணியம்; நினைவாக வழங்கியவர் திரு  சுப்பிரமணியம் குணராஜா ரூபா 15000
 13. கல்வி ஊக்குவிப்பு நிதியை அமரர் பரமகுரு கதிரவேற்பிள்ளை நினைவாக வழங்கியவர் திரு  க. கதிரமலை ரூபா20000

நினைவுப் பரிசுகளுக்கான நிதி உதவிகளைச் செய்த அனைவருக்கும் பழைய மாணவர் ஒன்றியம் கொழும்பு தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறது.

பரிசளிப்பு விழா 2009

சென்ற நவம்பர் 22 ஆம் திகதி சனிக்கிழமை காலை 8.30 மணிக்கு பாடசாலையில் விழாவின் போது மேற்படி பரிசுகள் வழங்கப்பட்டன.

இம்முறை பரிசளிப்பு விழாவின் பிரதம விருந்தினராக எமது பாடசாலையின் பழைய மாணவரும், ஒன்றியத்தின் சிரேஷ்ட அங்கத்தவருமான திரு.ராஜ் சுப்பிமணியம் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. திருமதி உருத்திரேஸ்வரி ராஜ் சுப்பிமணியம் மாணவர்களுக்கு பரிசில்களை வழங்கிக் கௌரவித்தார்.

எமது பாடசாலைப் பரிசளிப்பு விழாக்களுக்கு, எமது பாடசாலையில் கல்வி கற்று மதிப்பிற்குரிய நல்ல நிலையில் இருக்கும் பழைய மாணவர்களையே அழைப்பதென்ற சம்பிரதாயத்தை உருவாக்க எமது அதிபர் விரும்புகிறார். இந்த வகையில் 2008ம் ஆண்டிற்கான பிரதம விருந்தினராக யாழ்தொழில்நுட்பவியல் நிறுவனப் பணிப்பாளரான திரு.கதிரவேல் கதிரமலை அவர்களும், 2007ம் ஆண்டு சிரேஷ்ட விரிவுரையாளர், கல்வியியற்றுறை, யாழ் பல்கலைக் கழகம் திருமதி கலாநிதி இ.ஜெயலக்ஷ்மி அவர்களும் கலந்து சிறப்பித்தனர்;.

பாலர் வளாக முற்புற இரும்பு வேலி

எமது பாடசாலையின் அபிவிருத்தியில் மற்றுமொரு விடயமாக பாலர் வளாகத்தின் முற்புறத்தில் புதிய இரும்பு வேலி அமைக்கப்பட்டுள்ளது. பாடசாலையின் பழைய மாணவியும், சுகாதார திணைக்கள பெருந்தோட்டப் பகுதிப் பணிப்பாளருமான மருத்துவ கலாநிதி உமா சிவபாதசுந்தரம் அவர்கள் தனது பெற்றோர்களான ஆ.சிவபாதசுந்தரம் தம்பதிகளின் நினைவாக ரூபா 60000 நிதியுதவியில் அந்த இரும்பு வேலி அமைக்கப்பட்டுள்ளது.

2009 வருட புலமைப்பரிசில் பரீட்சையில் பாடசாலையில் அதிக புள்ளிபெற்ற மாணவனின் தந்தையான ந.நாகேந்திரராஜா அவர்களால் ரூபா 20000 பெறுமதியான ஒலிபெருக்கி அன்பளிப்புச் செய்யப்பட்டுள்ளது. இம்மாணவன் பாடசாலையின் பரிசளிப்பு விழாவில் 17000 பரிசுபெற்றது குறிப்பிடத்தக்கது.

கண்டி இணைப்புக் குழு

சென்ற ஆண்டின் மிக முக்கிய பணியாக கண்டி மாநகருக்குச் சென்ற நாம் அங்குள்ள எமது பாடசலைச் சமூகத்தைச் சார்ந்தவர்களுடன் மேற்கொண்ட சந்திப்பைக் கூறலாம். அங்குள்ள இந்து வாலிபர் சங்கக் கட்டிடத்தில் நடந்த கலந்துரையாடலைத் தொடர்ந்து, எமது பாடசாலை பழைய மாணவர் ஒன்றியத்திற்கான இணைப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

தலைவர் : திரு.சி.வாசுதேவன்
செயலாளர்: திரு.க. பாலதாசன்
பொருளாளர்: திரு.சி. வசந்தன்
இணைப்பாளர்: திரு.கு.திலீபன்
ஆகியோருடன் நிர்வாகக் குழு உறுப்பினர்களாக மேலும் 13பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இன்று பாடசாலையை இந்நிலைக்குயர்த்தி தன்னலமற்ற சேவைசெய்துவரும் அதிபர் திரு கனகலிங்கம் அவர்களுக்கு தற்போது அதிபர் சேவை 2 ஐஐ கிடைத்துள்ளது. அவருக்கு எமது பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

இனிவரும் நிர்வாகக் குழுவும் பாடசாலையின் வளர்ச்சியில் அக்கறை செலுத்தி மேலும் பல செயற்பாடுகளை மேற்கொள்ளும் எனக்கூறி விடைபெறுகின்றேன்.

நன்றி

       தலைவர்                                                                     செயலாளர்
டாக்டர் மு.க.முருகானந்தன்                                   சு.சற்குணராஜா

Read Full Post »

>மேலைப்புலோலி சைவப்பிரகாச வித்தியாலயம் – பழைய மாணவர் ஒன்றியம்
செயலாளர் அறிக்கை

முதற்கண் எமது அழைப்பை ஏற்று இங்கு வருகை தந்தவர்கள் எல்லோரிற்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள்.

அடுத்து எமது பழைய மாணவர் ஒன்றியக் கூட்டங்களை நடாத்த இப்பாடசாலை மண்டபத்தை எமக்கு வழங்கி வரும் இந்துக் கல்லூரி அதிபர் திரு.த.முத்துக்குமாரசுவாமி அவர்களுக்கும் ஒன்றியத்தின் சார்பில் எமது நன்றிகளைத் தெரிவிக்கின்றோம்.

15.01.2008 அன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் டாக்டர் மு.க.முருகானந்தன் அவர்களைத் தலைவராகக் கொண்டு செயலாளர், பொருளாளர், உபதலைவர், உப பொருளாளர், உப செயலாளார், கணக்காய்வாளர், போஷகர், பத்திராதிபர், 11 செயற்குழு உறுப்பினர்கள், 7 ஆலோசகர்கள் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.

பௌர்ணமி தினங்களில் மாலை 4 மணிக்கு பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரியில் 6 செயற்குழுக் கூட்டங்கள் நடாத்தப்பட்டுள்ளன.

தலைவர், மற்றும் செயற்குழு உறுப்பினர்கள், மற்றும் பாடசாலைக்காய் உழைக்கும் பழையமாணவர்கள் , பணஉதவிகளை நல்கியோர் , முன்னேற்றத்தில் அக்கறை கொண்ட அதிபர் போன்றோருக்கு எமது நன்றிகள்.

ஆற்றிய பணிகள்:

இவ்வருட பரிசளிப்பு விழாவிற்கு 12000 ரூபா பாடசாலைக்கு வழங்கப்பட்டது.

நினைவுப்பரிசில்களாக பெறப்பட்ட நிதி பாடசாலையின் வங்கிக்கணக்கில் வைப்பிலிடப்பட்டுள்து.
இதற்கு
திரு இராஜ் சுப்பிரமணியம்,
திருமதி காசி விசுவநாதர்,
திரு க.மகேஸ்வரன் ,
திருமதி பரமகுருநாதர்,
திரு வேல் நந்தகுமார்,
திரு.கேதீஸ்வரன்,
திருமதி கௌரிமனோகரி,
திரு வர்ணகுலசிங்கம்
ஆகியோர் ரூபா 15 ஆயிரமும் ,
திருமதி பரமேஸ்வரன் திரு இராஜசேகரம் இணைந்து 20ஆயிரமும்,
திரு சு.சிவபாலன் 20ஆயிரமும்,
திரு இரகுநாதன் ஒருலட்சமும் அன்பளிப்புச் செய்தனர்.

இம்முறையும் நா.சண்முகதாசன் 20 ஆயிரம் பரிசளிப்பு விழாவிற்கு வழங்கியிருந்தார். அப்பணமும் அதிபருக்கு அனுப்பப்பட்டது.

நூல் நிலையத் தளபாடங்களிற்காக திரு இராஜ் சுப்பிரமணியம் அவர்களின் வேண்டுகோளிற்கிணங்க அவரின் உறவினர்கள் உதவ முன்வந்துள்ளனர்.

உதவிகளுக்காக யாழ் அரச அதிபர், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோருக்குக் கடிதம் எழுதியுள்ளோம்.

கட்டிட உதவிக்காக பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா அவர்களுக்கும் கடிதம் எழுதியுள்ளோம்.

நினைவுப்பரிசில் வழங்கியவர்களைப் படங்களுடன் விபரங்கள் இட்டு காட்சிப்பலகை ஒன்றை ஆக்கிப் பாடசாலைக்கனுப்பி பொருத்தியுள்ளோம்.

மெல்லக் கற்பவருக்காக செயற்றிட்டம் ஒன்றைத் திட்டமிட்டு பண உதவிகள் கோரினோம். திரு.இ.சுவாமிநாதர் மட்டும் 5000 தந்திருந்தார். போதிய பணமின்மையால் 2009ம் ஆண்டிற்கு ஒத்திப் போட்டுள்ளோம். இதற்கு ஒரு வருடத்திற்கு 40000 தேவை என மதிப்பிடப்பட்டுள்ளது.

செய்ய வேண்டியவை:

கழிவறைகள் சுத்தம் செய்யும் செயற்பாட்டை 2009 இல் இருந்து ஆரம்பித்தல்.

ஆசிரியர்கள் சைக்கிள் நிறுத்துவதற்கு நிறுத்துமிடம் அமைத்தல்.

சிறிய பாடசாலையின் கிணற்றை மூடி வலையடித்தல்.

மெல்லக் கற்கும் மாணவர்களுக்கான திட்டத்தைத் தொடர்தல்.

எனவே இனிவரும் செயற்குழுத் திட்டங்களை நிறைவேற்ற வேண்டுமெனக் கேட்டுக்கொண்டு இங்கு சமூகமளித்தவர்கள் உட்பட இப்பாடசாலையின் பழைய மாணவர்கள் தொடர்ந்தும் பாடசாலையின் வளர்ச்சியில் கவனம் செலுத்தி உதவிகளை வழங்க வேண்டுமெனவும் கேட்டுக்கொள்கின்றோம்.

ஏ.எஸ்.சற்குணராஜா
செயலாளர்

Read Full Post »