>
“இவன்ரை பேர் நோட்டிஸ் போட்டிலை இல்லை” ரின்பால் மாமா பிரகடனப்படுத்தினான்.
நந்தனுக்குக் களிசான் நழுவி விழ அம்மணமாக நின்றது போலாயிற்று.
கண்கள் தாழ்ந்தன. முகம் சோர்ந்தது. பேச்சு எழவில்லை.
டக்கெனத் திரும்பிப் பார்த்தான். ஏதோ பேசிக் கொண்டிருந்த அம்மாவும் சின்னக்காவும் இவனையே பார்ப்பது தெரிந்ததும் ஏமாற்றத்தின் சாயல் முகத்தில் படிய ஏக்கம் வலிவு கொண்டது.
சரியான வெக்கம்!
ஆனால் வெறும் வெக்கம்தான்.
களிசான் கீழே விழுந்தால் மானம் போகும் என்றெல்லாம் சிந்திக்க முடியாத பருவம் அது.
மேலும் படிக்க கிளிக் பண்ணவும்