>
“”””” வயசு போட்டுது, நடப்பு ஒண்டும் விளங்காது சும்மா பழங் கதைகளையே வழவழக்கினம்”
வயசானவர்களை இவ்வாறெல்லாம் எடுத்தெறிந்து இழக்கமாகப் பேசுவதைக் கேட்கிறோம்.
பெற்றோர்களையும் முதியோர்களையும் தெய்வமாக மதித்த எமது சமூகத்தில் இன்று இவ்வாறு பேசுவதைக் காண்பது சகஜமாகிவிட்டது..
வயதிற்கும் அனுபவத்திற்கும் மதிப்புக் கொடுக்காது வயதானவர்களை அவமதிப்பமதுடன், உதாசீனப்படுத்தவும் செய்கிறார்கள்.
இதனை நீங்களும் பல் வேறு சந்தர்ப்பங்களில்ம் கண்டிருக்கக் கூடும்.
என்றும் பெற்றோர்களுக்கு உரிய மதிப்பும் மரியாதையும் கொடுத்த தமிழ் சமுதாயம் இன்று அதே மரியாதையை மூத்தோர்களுக்குக் கொடுக்கத் தவறிவிட்டதா?
வயது முதிர்ந்தவர்களைப் பார்த்துக் காவோலை விழக் குருத்தோலை சிரிப்பது போல நடந்து கொள்கிறார்கள். குருத்தோலைகள் காவோலைகளாகும் காலம் வெகுதூரத்தில் இல்லை.
சில வேளைகளில் நிர்த்தாட்சண்யமாகக், கொடூர மனோபாவத்துடன் நடப்பவர்களும் இருக்கவே செய்கிறார்கள்.
என்று தமது பெற்றோரைப் பேசுவதைக்கூட என் காதால் கேட்டு மனம் வெதும்பியிருக்கிறேன்.
வயது போனவர்கள் வெறும் மரக்கட்டைகள் அல்ல!
அவர்களுக்கு ஆசைகளும், விருப்பங்களும் இருக்கும். உணர்வுகளும் உணர்ச்சிகளும் மரத்துவிடுவதில்லை என்பதைப் பலரும் மறந்து விடுகிறார்கள்.
பல வருடங்களுக்கு முன் ஒரு நாள் என்னிடம் வந்த முதியவரொருவர் சோகம் தோய்ந்த முகத்துடன் இருந்தார்.
வயோதிபத்தின் காரணமாக ஏற்படும் இயலாமைகள் பற்றி விரிவாகக் கூறிக்கொண்டிருந்தார்.
திடீரெனக் கூட வந்த மகள் பக்கம் திரும்பி,
அவளை வெளியில் அனுப்பி என்னுடன் தனிமையில் பேசும் ஆதங்கம்.
மருத்துவனால் செய்ய முடியாததைதக் கோரினார்.
மகள் வெளியேறிய மறுகணமே, –
என்று பரிதாபமாகக் கேட்டார். கேட்கவே மனது துடிக்கிறது.
உள்ளத்தில் துயரம் மூடியிருந்தால் மட்டுமே இத்தகைய வாரத்தைகள் எழுந்திருக்கும்.
எல்லாத்துக்கும் மற்றவையளின்ரை உதவி தேவையாக கிடக்கு,
கிணத்திலை அள்ள ஏலாது…
மகள் தான் குளிக்க தண்ணி அள்ளித் தாறவா.
அவவுக்கும் சரியான வேலை…
செத்துப் போனால் எனக்கும் கஷ்டம் இல்லை,
மற்றவையளுக்கும் கரைச்சல் இல்லை”
என்றார்.
தனக்கு குளிக்க உதவுவதுகூட மகளுக்கு அவசியமான, அக்கறைக்குரிய விஷயமாக இல்லை என்பதை சொல்லாமல் சொல்கிறாரா?
மகளில் குற்றம் சாட்டாது, அவளது வேலைப் பொறுப்புகளையும் உணர்ந்த அதே நேரம் தன் பிரச்சனையையும் முன் வைத்தார்.
இருந்தபோதும் இன்னும் பல விடயங்கள் அவர் மனத்தை அழுத்தியிருக்கும். இல்லையேல் இத்தகைய வார்த்தைகள் வந்திராது.
வெளியாரான எனக்குச் சொல்வதில் உள்ள தயக்கம் வாயைக் கட்டிப் போட்டிருக்கும்.
மனதிற்குள் அழுது கொண்டேன்.
வயதானவர்களுக்கும் நேரத்திற்கு நேரம் பசிக்கும்.
தூக்கம் வரும்.
குளித்துச் சுத்தமாக இருக்க வேண்டும் என்ற உணர்வு இருக்கும்.
அவர்களும் ஆசாபாசங்கள் நிறைந்த மனித ஜன்மங்கள் தானே!
எமக்குத் ‘தலைநிறைய வேலை’ இருக்கிறது என்பதற்காக அவர்களைக் கவனியாமல் விடுவது எந்த வகையில் நியாயம்?
முடியாவிட்டால் வயோதிபர் இல்லத்தில் விட்டுவிடுங்கள் எனச் சொல்லலாம்.
ஆனால் அப்படி விட்டால் ஊர் என்ன சொல்லும் என்ற போலிக் கௌரவம் பலருக்கு.
எவ்வாறு உரைப்பது கல் தோன்றி மண் தோன்றாக் காலத்திற்கு முன் தோன்றிய இந்தச் சமூகத்தின் பெருமையை?
>முதியோர் இல்லம் பற்றித் தவறான ஒரு எண்ணம் ஏன் நம் மக்களுக்கு இருக்கு என்பது புரியலை டொக்டர் ஐயா.ஏன் போலி கௌரவம்? நன் வசிக்கும் நியூஸியில் முதியோர் இல்லங்களில் இருப்பதை யாரும் தவறாகவோ, கேவலமாகவோ நினைப்பதில்லை.
>இன்றைய நிலையில் எம் சமுகத்தினரிடம் காணப்படும் கழையப்படவேண்டிய யதார்த்தங்களை, சில சொல்லாடல்கள் மூலம் வெளிப்படுத்தியிருந்தீர்கள். தாங்கள் குறிப்பட்ட சில சொல்லாடல்களை என் காதினால் சிலர் சொல்லவும் கேட்டிருக்கின்றேன். நான் பிறந்தவுடன் என்தாயை இழந்தவன் என்ற ரீதியில், அதற்காக இன்றும் ஏங்குபவன் என்ற ரீதியில் தாய்மார்மேல்அளவுகடந்த ஒரு உயிரோட்டமான எண்ணம் என்னிடம் உண்டு. அனால் தமது சொந்த தாயையே சுமையாக கருதும் மக்களை காணும்போதும்,அவர்களின் இவ்வாறான சொல்லாடல்களை கேட்கும்போதும் என்ன உணர்ச்சியோ தெரியவில்லை என் உடலும், உளமும், கூச்சமடைந்து கூனிவிடும் தன்மையை உணர்கின்றேன்.சிறுவயதில் தம்பாதுகாப்பான இடாக தாயின் மடியிலும், தந்தையின் தோழிலும் முகம்புதைத்து தனக்கு பாதுகாப்பு தேடிய ஒரு சந்ததி, அதே பெற்றோரின் இயலாமையின்போது ஏன் அவர்களை வெறுக்கின்றனர்? உலகிலேயே மிகப்பெரிய நன்றி கெட்டத்தனமும், துரோகமும் இதுவல்லவா?
>முதியவர்களை ஏளனமாக பார்ப்பதை நானும் பார்த்திருக்கிறேன்…. நாமும் ஒரு காலத்தில் இது போல் மாறுவோம் என்பதை மறந்து விடுகின்றனர்….. என்ன சொல்ல?…
>நன்றிடாக்டர்குழந்தை சண்முகலிங்கம் அவர்களின்,முதுமை பற்றிய நாடாக்கள்,டொக்டர் சிவஜோகன் ,டொக்டர் சோமசுந்தரம் ,போன்றோரின்,முயாசிகள்,எல்லாம் நாபகம்வருகிறது,நல்லமுயசிகள் தொடரட்டும்டொக்டர்
>@துளசி கோபால் அந்தச் சம்பவம் நடந்து பல வருடங்களாகிவிட்டன. ஆயினும் இன்னமும் முதியோர் இல்லங்கள் பற்றிய தவறான எண்ணங்களே பலரிடமும் இருக்கிறது.தாங்கள் தங்கள் பெற்றோர்களை பராமரிக்கத் தவறிவிட்டதாக மற்றவர்கள் கருதிவிடுவார்கள் என்பதே அவற்றில் பெற்றோர்களை சேர்க்கத் தயங்குவதற்கு முக்கிய காரணம் என எண்ணுகிறேன்.ஆயினும் பல முதியவர்கள் தங்கள் வீட்டில் இருப்பதை விட மகிழ்ச்சியாக முதியோர் இல்லங்களில் இருப்பதை மருத்துவன் என்ற முறையில் காண்கிறேன். தங்கள் வயது ஒத்தவர்களுடன் கலந்துரையாட வாய்ப்பு அங்குதான் கிடைக்கிறது.
>இங்கே தமிழ்நாட்டிலும் இப்படித்தான் ஒரூ எண்ணம் மக்களிடையே:(பிள்ளைகளா இல்லை? ஒரு மாசம் ஒருத்தர் வீட்டுலே இருந்தால் ஆச்சுன்னு கவுரவமா வெலியில் சொல்லிக்கிட்டு கால்பந்து மாதிரி அங்கேயும் இங்கேயுமா உதைத்து எறிஞ்சது போல் பயணத்திலேயே இருக்காங்க பலர்.தெரிந்த நண்பர் வீட்டில் இன்னும் மோசம். அம்மா ஒரு வீட்டிலும் அப்பா இன்னொரு மகன் வீட்டிலும்.வயசான காலத்தில் தன் மறுபாதியின் துணை ரொம்ப முக்கியமில்லையா ரெண்டு பேருக்கும்?இதுலே அம்மாவை வச்சுக்க மகன்களும் மருமகள்களும் ரெடி. வீட்டுவேலையைச் செய்வாங்களே! அப்பாதான் வேண்டாத விருந்தாளி:(
>ஒரு இளைஞனும் ஒரு முதியவரும் பேசிக்கொண்டிருக்கின்றனர்.இளைஞன்: "எமது காலத்தில் ஸ்டீரியோ, CD, இன்டர்நெட் வலையகம், 3-D இப்படிப் பல ஆக்கங்கள் உள்ளன. உங்களுடைய காலத்தில் இப்படி என்ன இருந்தது?"முதியவர்: "உண்மை தம்பி. ஆனால் உங்களுக்கு உபயோகமாயிருக்கும் என்று இவற்றை எங்கள் காலத்தை ஆராய்ச்சியில் செலவு செய்து உங்களுக்கு கொடுத்தோம். நீங்கள் உங்களுக்கு அடுத்த தலைமுறைக்கு என்ன கொடுக்க இருக்கிறீர்கள்?"
>ஒரு இளைஞனும் ஒரு முதியவரும் பேசிக்கொண்டிருக்கின்றனர்.இளைஞன்: "எமது காலத்தில் ஸ்டீரியோ, CD, இன்டர்நெட் வலையகம், 3-D இப்படிப் பல ஆக்கங்கள் உள்ளன. உங்களுடைய காலத்தில் இப்படி என்ன இருந்தது?"முதியவர்: "உண்மை தம்பி. ஆனால் உங்களுக்கு உபயோகமாயிருக்கும் என்று இவற்றை எங்கள் காலத்தை ஆராய்ச்சியில் செலவு செய்து உங்களுக்கு கொடுத்தோம். நீங்கள் உங்களுக்கு அடுத்த தலைமுறைக்கு என்ன கொடுக்க இருக்கிறீர்கள்?"
>காலத்துக்கு பொருத்தமான குரல்.இலங்கை முதியவர்களின் நாடாகிக்கொண்டிருக்கிறது.பொருத்தமான ஒரு திட்டத்தை நடைமுறைப்படுத்தவேண்டிய நிலை வந்துவிட்டது.ஆஸியில் முதியோர் இல்லங்கள் ஒரு பெரியதொரு சேவை வலைப்பினலின் ஒரு கூறாகத்தான் இருக்கின்றன. சமுகத்தில்/வீட்டில் அவர்கள் இருக்கும்படியாகவே ஆஸியில் பலசேவைகளை வழங்குகிறார்கள். முதியவர்களின் தேர்ந்தெடுக்கும் உரிமையில் தலையிடுவதில்லை பிள்ளைகள் இங்கு.முதியவர் பராமரிப்புக்கு இங்கு அரசு நிறைய நிதி ஒதுக்குகிறது.நன்றி டொக்டர்.
>@Jana ஆம். தம் பெற்றோரிடம் அன்பு பாராட்டாமலிருப்பதே வெறுக்கத்தக்கது. அவ்வாறிருக்க தூற்றுவது எவ்வளவு கேவலமானது.கணவனும் மனைவியும் வேலைக்குச் செல்லும் இன்றைய சூழலில் இயங்க முடியாத வயோதிபர்களை தாங்களே பராமரிப்பது சிரமாயிருக்கக் கூடும். ஆனால் அவர்களை உதவியாளை வைத்து அல்லது முதியோர் இல்லத்தில் சேர்த்தாவது மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டும் என நினைக்கிறேன்.
>நன்றி டொக்டர்.அ.கிருஷ்ணேந்திரன் http://www.varasiththan.comஆஸியில் முதியோர் இல்லங்கள் பற்றிய தகவல்களைத் தந்ததற்கு
>மிகுந்த சோகம் இது.நானும் என் பெற்றோரை என்னோடு வைத்திருக்கிறேன்.வாசிக்கக் கவலையாக இருக்கிறது.இது போல பல விடயங்களை குரலில்லாத அவர்களின் குரலாக நீங்கள் தர வேண்டும். அது ஒரு மனிதத்தின் குரலாகச் சுடர் விடும்.நன்றி டொக்டர்.
>நன்றி மணிமேகலா. வாழ்வளித்த அவர்கள்வாயில்லாச் சீவன்களாகவாழ்வது மற்றவர் மானத்தைக் காப்பதற்காகவே என்பதை உணர்த்திய கருத்துரைக்காக.